தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

View previous topic View next topic Go down

 நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை Empty நான்கு நாட்களில் 2,000 கிலோ தங்கம் விற்பனை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 17, 2013 7:41 pm

தங்கம் விலை சரிவடைந்து வருவதால், கடந்த நான்கு நாட்களில், 560 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 கிலோ தங்கம், சென்னையில் மட்டும் விற்பனையாகி உள்ளது. நேற்றும், ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு அதிரடியாக, 544 ரூபாய் சரிவடைந்து, 19,528 ரூபாய்க்கு விற்பனையானது.
சரியும் தங்கம்:

கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி, முதல்முறையாக, 22 காரட் ஆபரண தங்கத்தின், ஒரு கிராம் 3,022 ரூபாய்க்கும், சவரன் 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. பின், தங்கத்தின் விலை அதிகபட்சமாக, ஒரு கிராம் 3,068 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், சர்வதேச நிலவரங்களால், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை, கடந்த வாரம் முதல், கடும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. கடந்த வாரம், 8ம் தேதி, ஒரு கிராம் தங்கம் 2,759 ரூபாய்க்கும், ஒரு சவரன் 22,072 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று இதன் விலை கிராமுக்கு 2,441 ரூபாய்க்கும், சவரனுக்கு 19,528 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, தங்கம் விலை கிராமுக்கு 318 ரூபாயும், சவரனுக்கு, 2,544 ரூபாயும் சரிவடைந்துள்ளது.இதே காலத்தில், 24 காரட், 10 கிராம் சொக்க தங்கத்தின் விலை, 3,405 ரூபாய் வீழ்ச்சிகண்டு, 29,510 ரூபாயிலிருந்து, 26,105 ரூபாயாக குறைந்து உள்ளது. வெள்ளி விலை, கிராமுக்கு, 6.40 ரூபாய் குறைந்து, 55.10 ரூபாயிலிருந்து, 48.70 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை, 6,040 ரூபாய் சரிவடைந்து, 51,535 ரூபாயிலிருந்து, 45,495 ரூபாயாக குறைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடும் போது, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு, 68 குறைந்து, 2,441 ரூபாய்க்கும், சவரனுக்கு, 544 ரூபாய் சரிவடைந்து, 19,528 ரூபாய்க்கும் விற்பனையானது.இதற்கு முன், கடந்த, 2011ம் ஆண்டு நவம்பர் மாதம், ஒரு சவரன் தங்கம், 19,976 ரூபாய்க்கு விற்பனையானது.
25 சதவீதம் உயர்வு:

சென்னையில், நாள்தோறும் சராசரியாக, 120 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ (ஒரு கிலோ - 27-28 லட்சம் ரூபாய்), தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன.தங்கத்தின் விலை, தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதால், சென்னையில், கடந்த நான்கு நாட்களில் மட்டும், 560 கோடி ரூபாய் மதிப்பிலான, 2,000 கிலோ தங்கம் விற்பனையாகிஉள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, தினசரி விற்பனை, 25 சதவீதம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தங்க நகை வியாபாரி ஒருவர் கூறுகையில், ""அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் ஒரு சில நாடுகளின் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது. இருப்பினும், கடந்த, 12 ஆண்டுகளாக தங்கத்தின் விலை செயற்கையாக உயர்த்தப் பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக, சர்வதேச முதலீட்டாளர் தாங்களாகவே விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இனி விலை உயர்ந்தாலும், பெரிய அளவிற்கு உயர வாய்ப்பில்லை'' என்றார்.

இப்போது தங்கம் வாங்கலாமா?

கடந்த, 12 ஆண்டுகளாக பெரும்பாலும் தளர்வு இல்லாமல் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாக அதிரடி வீழ்ச்சி கண்டு வருகிறது. இது, முதலீட்டாளர்கள் மற்றும் ஆபரண தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில், ஒரு சவரன் ஆபரண தங்கம், 24 ஆயிரம் ரூபாயை தாண்டி இருந்தது. இது, தற்போது, 20 ஆயிரம் ரூபாயாக உள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், சவரனுக்கு, 2,600 ரூபாய் விலை குறைந்து உள்ளது.

காரணம் என்ன?


தங்கம் விலை வீழ்ச்சி, நடுத்தர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள போதிலும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
*இப்போது தங்க நகைகளை வாங்கலாமா?
*தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதா?
*"கோல்டு இ.டி.எப்' போன்ற, தங்கம் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய, இது சரியான தருணமா போன்ற, பல கேள்விகளுக்கான விடை, வரும் நாட்களில் உருவாகக் கூடிய சர்வதேச நிலவரங்களை பொறுத்து உள்ளது.குறிப்பாக, கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சைப்ரஸ் நாடு, கடனை அடைக்க, எந்த நேரத்திலும் தங்கத்தை விற்பனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நாடு, 14 டன் தங்கத்தை இருப்பில் வைத்துள்ளது. இதை விற்பனை செய்தால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் சரிவடையும்.சைப்ரஸ் நாட்டை பின்பற்றி, நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள, ஸ்லோவீனியா, ஹங்கெரி, போர்ச்”கல் ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளும், தங்கத்தை விற்பனை செய்யக்கூடும் என்ற, வதந்திகளும் கிளம்பி உள்ளன.சைப்ரஸிடம், 14 டன் தங்கம் தான் உள்ளது, ஆனால், இத்தாலியிடம் மட்டும், 2,452 டன் தங்கம் உள்ளது. மற்ற நாடுகளிடம் நூற்றுக்கணக்கான டன் தங்கம் இருப்பு உள்ளது.இப்படி நிதி நெருக்கடியில் உள்ள ஒவ்வொரு நாடும் தங்கத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ துவங்கினால், தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி அடையும் என்ற பீதியில், சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கள் தங்க முதலீடுகளை விற்க துவங்கி உள்ளனர்.

இந்த நாடுகள், சிறிதளவு தங்கத்தை விற்பனை செய்தால் கூட, விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி காண வாய்ப்பு உள்ளது என, கூறப்படுகிறது.மேலும், அமெரிக்க பொருளாதாரம் சீரடைந்து வருவதாக கருதப்படுவதால், தங்க முதலீட்டாளர்கள் பலர், டாலருக்கு தங்கள் முதலீடுகளை திருப்பி விடுவதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், சந்தையின் மறுபக்கத்தில், உலகளவில் தங்க நுகர்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது சீனா. நேற்று முன்தினம் வெளியான சீன பொருளாதார புள்ளிவிவரங்களின் படி, எதிர்பார்த்த அளவை விட சீனாவின் வளர்ச்சி குறைந்து இருந்ததால், அந்த நாட்டில் தங்கத்தின் நுகர்வு குறையுமோ என்ற, வதந்தியும் முதலீட்டாளர்களை பீதியடைய செய்தது.

லாபம் கிடைக்குமா?

ஆனால், ஐரோப்பிய நாடுகள் தங்கத்தை விற்கும் சூழல் உருவாகுமா என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியின் பொருளாதார உதவி திட்ட சரத்துகளில் தங்கம் விற்பனை ஒரு முக்கிய சரத்தாக இருந்தாலும், இதை பற்றி சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மவுனமாகவே உள்ளன. இதனால், இந்த விலை வீழ்ச்சி தொடருவது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.தங்க நகைகளை பொறுத்தவரை, தற்போது வாங்குவது லாபகரமானது என்றே கூறலாம். திருமண காலம் நடந்து கொண்டு இருப்பதாலும், தங்கம் வாங்க சிறப்பு நாளாக கருதப்படும் அட்சய திருதியை, மே 13ம் தேதி வரவுள்ளதாலும், தங்க நகை வாங்குவது அதிகரிக்கும் என்பதால், விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது.முதலீடுகளை பொருத்தவரை, முன்பேர சந்தையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கான தருணம் இதுவல்ல. தங்கம் விலையின் திடீர் சரிவால், தரகு நிறுவனங்கள், இழப்பை குறைக்கும் நோக்கில், வாடிக்கையாளர்களின் ஒப்பந்தங்களை உடனடியாக முடித்து, அதாவது தங்கத்தை விற்பனை செய்து வருகின்றன.

இதுகுறித்து, பங்கு சந்தை ஆய்வு மற்றும் தரகு சேவைகளை அளித்து வரும், எக்ட்ரா நிறுவனத்தின் தலைவர், டி.ஆர். அருள்ராஜன் கூறியதாவது:உள்நாட்டில், எம்.சி.எக்ஸ் முன்பேர சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன், 10 கிராம் தங்கத்தின் விலை 28,900 ரூபாயாக இருந்தது. இது, 25,700 ரூபாயாக குறைந்துள்ளது. இது மேலும் குறைந்து, 25 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாக சரிந்தால், 22,500 - 23,000 ரூபாய் வரை வீழ்ச்சி காண வாய்ப்புள்ளது. அதனால், முதலீட்டாளர்கள், தற்போது, ஓரளவு விலை வீழ்ச்சி காணும்போது, பகுதி பகுதியாக முதலீடு செய்வது சிறந்தது. அதே சமயம் வர்த்தகர்கள், தற்போதுள்ள நிலையில், சந்தையில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.முன்பேர வர்த்தகத்தில் தங்கத்தை உடனடியாக விற்பது சிறந்தது. விலை குறைந்துள்ளதென்று, மேலும் தங்கத்தை வாங்கி, இழப்பை ஈடு செய்ய நினைத்தால், அது பெருத்த இழப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.சர்வதேச அளவில், சிறந்த முதலீடுகளில் ஒன்றாக தங்கம் கருதப்பட்ட நிலை மாறி வந்தாலும், நீண்ட காலம் தங்கத்தை வைத்துக்கொள்ளும் நோக்கில் வாங்கும் நுகர்வோருக்கு இது நல்ல நேரம்.

விலை வீழ்ச்சி ஏன்?

சென்னை தங்க விற்பனையாளர்கள் நலச் சங்க பொருளாளர், எம்.குமார் கூறியதாவது: இந்தியாவை பொறுத்தவரை, தங்கம் விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில், எம்.சி.எக்ஸ் போன்ற முன்பேர சந்தைகளில், வர்த்தகர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், சர்வதேச முன்பேர சந்தைகளில் தங்கம் விலை வீழ்ச்சி கண்டதால், உள்நாட்டு வர்த்தகர்கள், ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர்.இழப்பை குறைத்துக் கொள்ளும் நோக்கில் அவர்கள் தங்கத்தை விற்பனை செய்வதால், அதன் விலை குறைந்துள்ளது.மேலும், பரஸ்பர நிதி நிறுவனங்களின், "கோல்டு இ.டி.எப்' திட்டங்களில் இருந்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடு வெளியேறி வருகிறது. இதன் காரணமாகவும், தங்கத்தின் விலை சரிவடைந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum