Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திருக்குறள் - சென்ரியூ 8
Page 1 of 1 • Share
திருக்குறள் - சென்ரியூ 8
குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
கலைஞர் உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
கலைஞர் உரை:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
மு.வ உரை:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
பரிமேலழகர் உரை:
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.)
Re: திருக்குறள் - சென்ரியூ 8
ம. ரமேஷ் சென்ரியு
ஒரு ரூபாய்
பிச்சையிடு
இறைவன் திருவடி
இறைவன் திருவடி
கசக்கத்தான் செய்கிறது
கோயில்
முத்தி
கிடைப்பதில்லை
எந்தச் சாமியார்க்கும்
கடவுளின்
திருவடித் தொழாதவர்
சாமியார்
ஒரு ரூபாய்
பிச்சையிடு
இறைவன் திருவடி
இறைவன் திருவடி
கசக்கத்தான் செய்கிறது
கோயில்
முத்தி
கிடைப்பதில்லை
எந்தச் சாமியார்க்கும்
கடவுளின்
திருவடித் தொழாதவர்
சாமியார்
Re: திருக்குறள் - சென்ரியூ 8
ஹிஷாலியின் சென்ரியு :
கடலளவு துன்பம்
கடுகளவு
இறைவன் திருவடி...!
சொர்க்கம்
கசக்கிறது
முனிவர் ...!
மாற்றான் துன்பம்
அகற்றும் மருந்து
தானம் ...!
கடலளவு துன்பம்
கடுகளவு
இறைவன் திருவடி...!
சொர்க்கம்
கசக்கிறது
முனிவர் ...!
மாற்றான் துன்பம்
அகற்றும் மருந்து
தானம் ...!
Re: திருக்குறள் - சென்ரியூ 8
தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 8
ஓடக்கூலி உயரத்தில்ஏற்றம்
மாறவில்லை மனிதர் கூட்டம்
கோவில்களில் நீண்ட வரிசை
இறைவனை காண கட்டணங்கள் உயர்ந்தாலும் பக்தர்களுக்கு குறைவில்லை.
இதயத்தில் அன்பு
ஏற்றி விடுமே
இறைவன் திருவடி!
உள்ளத்தே அன்பு நிறைந்தவனுக்கு இறைவனின் திருவடி எளிதாக எட்டிவிடும்
ஓடக்கூலி உயரத்தில்ஏற்றம்
மாறவில்லை மனிதர் கூட்டம்
கோவில்களில் நீண்ட வரிசை
இறைவனை காண கட்டணங்கள் உயர்ந்தாலும் பக்தர்களுக்கு குறைவில்லை.
இதயத்தில் அன்பு
ஏற்றி விடுமே
இறைவன் திருவடி!
உள்ளத்தே அன்பு நிறைந்தவனுக்கு இறைவனின் திருவடி எளிதாக எட்டிவிடும்
Re: திருக்குறள் - சென்ரியூ 8
உண்மைதான்... பூசாரி கூட வணங்குவதில்லை... தட்டில் விழும் பணத்தின் மீதே கவனமாக இருக்கிறான்...
Re: திருக்குறள் - சென்ரியூ 8
அனைத்தும் அருமை... எனக்குத்தான் சென்ரியூ வரமாட்டேன்கிறது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருக்குறள் - சென்ரியூ 8
ஸ்ரீராம் wrote:அனைத்தும் அருமை... எனக்குத்தான் சென்ரியூ வரமாட்டேன்கிறது
சொம்மா எழுத துவங்குங்கள் பின்னர் தானா வரும் பாருங்கள்... ஆச்சரியப்பட்டுப்போவீர்கள்!
Re: திருக்குறள் - சென்ரியூ 8
கூர்ந்து கவனித்து வருகிறேன்... விரைவில் எழுதுவேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: திருக்குறள் - சென்ரியூ 8
ஸ்ரீராம் wrote:கூர்ந்து கவனித்து வருகிறேன்... விரைவில் எழுதுவேன்
மகிழ்ச்சி...
இனியன் எழுதுவதாகச் சொன்னார்... புதிய வடிவம் என்பதால் சற்று தயங்குகிறார் போல... தொடர்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
Re: திருக்குறள் - சென்ரியூ 8
நீங்கள் கூறுவதில் உண்மையும் இருக்கலாம் ...
எனக்கு ஒரு பரீட்சை வருகிறது MA economics
வரும் ஜூன் மாதம் ..அதுதான் சற்று காலதாமதம்
ஆகிறது திருக்குறல் சென்ரியூக்கு
varuvEn sila kaalam thEvai
எனக்கு ஒரு பரீட்சை வருகிறது MA economics
வரும் ஜூன் மாதம் ..அதுதான் சற்று காலதாமதம்
ஆகிறது திருக்குறல் சென்ரியூக்கு
varuvEn sila kaalam thEvai
Re: திருக்குறள் - சென்ரியூ 8
மகிழ்ச்சி நண்பரே... நேரம் கிடைக்கும்போது தொடருங்கள்... எதிர்பார்த்திருக்கிறோம்... நன்றி
Similar topics
» திருக்குறள் - சென்ரியூ 3
» திருக்குறள்- சென்ரியூ 31
» திருக்குறள்- சென்ரியூ 45
» திருக்குறள்- சென்ரியூ 57
» திருக்குறள்- சென்ரியூ 72
» திருக்குறள்- சென்ரியூ 31
» திருக்குறள்- சென்ரியூ 45
» திருக்குறள்- சென்ரியூ 57
» திருக்குறள்- சென்ரியூ 72
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|