Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மழையிலிருந்து காக்கும் மஞ்சள்!
Page 1 of 1 • Share
மழையிலிருந்து காக்கும் மஞ்சள்!
மழையிலிருந்து காக்கும் மஞ்சள்!
வெயிலிலும், மழையிலும் நம் உடலைக் காக்கும் அருமருந்து மஞ்சள். இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் துவங்கப் போகிறது. உடலின் வெளி அழகையும், உள் ஆரோக்கியத்தையும் பதம் பார்க்கும் இந்த மழைப் பருவத்தை எளிதில் கையாள கண்கண்ட மருந்து தான் மஞ்சள்.
மஞ்சளின் மருத்துவ குணத்தை நெடுங்காலத்திற்கு முன்பே அறிந்த இந்தியர்கள், அதை தினசரி உணவில் சேர்த்து வந்தனர். மஞ்சள் தூள் இல்லாத இந்திய சமையல் அறையே இல்லை எனலாம். அதுமட்டுமின்றி, காலங்காலமாக பெண்கள் தங்கள் மேனி எழிலுக்கும் மஞ்சளை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மஞ்சள் பலவிதமான நோய்களை குணமாக்குகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பழமையான மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில், மூட்டு வீக்கம், தசைநார் கோளாறுகள் போன்ற நோய்களை குணப்படுத்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, வயிறு சம்பந்தமான பலவித கோளாறுகள், படர்தாமரை போன்ற நோய்களுக்கும் மஞ்சள் அருமையான மருந்து.
இந்தியாவில் பாரம்பரிய மூலிகை மருந்தாக கருதப்படும் மஞ்சள் குறித்து, அமெரிக்காவில் உள்ள எண்ணற்ற அறிவியல் கழகங்கள் ஆராய்ந்து வருகின்றன. பல்வேறு வகையான புற்றுநோய் பரவுவதை மஞ்சள் எவ்வாறு தடுக்கிறது என்பது குறித்தும் ஆராய்ச்சி நடைபெறுகிறது.
புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் "கீமோதெரபி" சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளையும் மஞ்சள் குணப்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகிலேயே மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய சமையலில் அன்றாடம் மஞ்சள் இடம் பெறுவதால், நாட்டின் உற்பத்தியில் 80 சதவீதம் உள்நாட்டு தேவைக்கே சரியாகி விடுகிறது.
இரத்தத்தை சுத்தப்படுத்தவும், சருமத்தை பாதுகாக்கவும், இருமல் கபத்தை வெளிக் கொணரவும் மற்றும் தீக்காயங்கள், தட்டம்மை, சொறி சிரங்கு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
கடுமையான வயிற்று போக்கு இருந்தால், மஞ்சள் தூளை மோர் அல்லது சுத்தமான குடிநீரில் கலந்து பருகினால், உடனடியாக பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால், அதை ஒழிக்கவும் மஞ்சள் உதவுகிறது.
சிறிதளவு மஞ்சள் தூளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்து, அந்த கரைசலை 20 சொட்டுகள் என்ற அளவில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால், பூச்சித் தொல்லை ஒழியும்.
"அனீமியா" எனப்படும் ரத்த சோகை நோயை குணப்படுத்த, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். தட்டம்மை நோய்க்கு, கசப்பான சுரைக்காய் இலைச் சாறுடன் சில சொட்டு தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உட்கொள்ளலாம். நாள்பட்ட இருமல் மற்றும் தொண்டை கரகரப்பையும் இது போக்கும்.
இருமலுடன் சுவாசக் கோளாறு இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அருந்தினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சுளுக்கு ஏற்பட்டால், மஞ்சள் தூளுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, அந்தக் கலவையை சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவினால், விரைவில் குணம் அடையலாம்.
மஞ்சளின் மகத்துவத்தை உணர்ந்து, நமது முன்னோர்கள் அதை நெடுங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தினமலர்
வெயிலிலும், மழையிலும் நம் உடலைக் காக்கும் அருமருந்து மஞ்சள். இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் துவங்கப் போகிறது. உடலின் வெளி அழகையும், உள் ஆரோக்கியத்தையும் பதம் பார்க்கும் இந்த மழைப் பருவத்தை எளிதில் கையாள கண்கண்ட மருந்து தான் மஞ்சள்.
மஞ்சளின் மருத்துவ குணத்தை நெடுங்காலத்திற்கு முன்பே அறிந்த இந்தியர்கள், அதை தினசரி உணவில் சேர்த்து வந்தனர். மஞ்சள் தூள் இல்லாத இந்திய சமையல் அறையே இல்லை எனலாம். அதுமட்டுமின்றி, காலங்காலமாக பெண்கள் தங்கள் மேனி எழிலுக்கும் மஞ்சளை பயன்படுத்தி வருகின்றனர். இப்போது, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், மஞ்சள் பலவிதமான நோய்களை குணமாக்குகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பழமையான மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில், மூட்டு வீக்கம், தசைநார் கோளாறுகள் போன்ற நோய்களை குணப்படுத்த மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா, வயிறு சம்பந்தமான பலவித கோளாறுகள், படர்தாமரை போன்ற நோய்களுக்கும் மஞ்சள் அருமையான மருந்து.
இந்தியாவில் பாரம்பரிய மூலிகை மருந்தாக கருதப்படும் மஞ்சள் குறித்து, அமெரிக்காவில் உள்ள எண்ணற்ற அறிவியல் கழகங்கள் ஆராய்ந்து வருகின்றன. பல்வேறு வகையான புற்றுநோய் பரவுவதை மஞ்சள் எவ்வாறு தடுக்கிறது என்பது குறித்தும் ஆராய்ச்சி நடைபெறுகிறது.
புற்றுநோய்க்கு பரிந்துரைக்கப்படும் "கீமோதெரபி" சிகிச்சையினால் ஏற்படும் பக்க விளைவுகளையும் மஞ்சள் குணப்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகிலேயே மஞ்சள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்திய சமையலில் அன்றாடம் மஞ்சள் இடம் பெறுவதால், நாட்டின் உற்பத்தியில் 80 சதவீதம் உள்நாட்டு தேவைக்கே சரியாகி விடுகிறது.
இரத்தத்தை சுத்தப்படுத்தவும், சருமத்தை பாதுகாக்கவும், இருமல் கபத்தை வெளிக் கொணரவும் மற்றும் தீக்காயங்கள், தட்டம்மை, சொறி சிரங்கு ஆகியவற்றில் இருந்து நிவாரணம் பெறவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
கடுமையான வயிற்று போக்கு இருந்தால், மஞ்சள் தூளை மோர் அல்லது சுத்தமான குடிநீரில் கலந்து பருகினால், உடனடியாக பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால், அதை ஒழிக்கவும் மஞ்சள் உதவுகிறது.
சிறிதளவு மஞ்சள் தூளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீரில் கரைத்து, அந்த கரைசலை 20 சொட்டுகள் என்ற அளவில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பருகினால், பூச்சித் தொல்லை ஒழியும்.
"அனீமியா" எனப்படும் ரத்த சோகை நோயை குணப்படுத்த, மஞ்சள் தூளுடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். தட்டம்மை நோய்க்கு, கசப்பான சுரைக்காய் இலைச் சாறுடன் சில சொட்டு தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உட்கொள்ளலாம். நாள்பட்ட இருமல் மற்றும் தொண்டை கரகரப்பையும் இது போக்கும்.
இருமலுடன் சுவாசக் கோளாறு இருந்தால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அருந்தினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சுளுக்கு ஏற்பட்டால், மஞ்சள் தூளுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, அந்தக் கலவையை சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவினால், விரைவில் குணம் அடையலாம்.
மஞ்சளின் மகத்துவத்தை உணர்ந்து, நமது முன்னோர்கள் அதை நெடுங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» படித்து ரசித்தது! - கவிஞர் வைரமுத்து அவர்களின், பெய்யென பெய்யும் மழையிலிருந்து.
» மஞ்சள் மகிமை
» மஞ்சள் மகிமை....
» கஸ்தூரி மஞ்சள்
» மஞ்சள் மருத்துவம்
» மஞ்சள் மகிமை
» மஞ்சள் மகிமை....
» கஸ்தூரி மஞ்சள்
» மஞ்சள் மருத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|