Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
Page 1 of 1 • Share
மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
மாம்பழம்... என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன. இந்த சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்களுக்கு இயங்கு உறுப்புகளை நடுநிலையாக்கும் சக்தி உள்ளது. இயங்கு உறுப்புகளால் அணுக்கள் பாதிக்கப்பட்டு ஏற்படும் நோய்களே இருதய நோய்கள், குறித்த காலத்திற்கு முன் வயதிற்கு வருதல், புற்று நோய் மற்றும் சிதைத்தல் நோய். சரி... மாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்களால் ஏற்படும் உடல் நல நன்மைகளை பார்க்கலாமா?
இரத்த அழுத்தம்
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுத்து உதவும். வளமான அளவு பொட்டாசியம் (146 மில்லிகிராமில் 4%) மற்றும் மெக்னீசியம் (9 மில்லிகிராமில் 2%) உள்ள மாம்பழம் அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.
கொலஸ்ட்ரால்
மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.
எடை அதிகரிக்க
உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.
செரிமானம்
செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும்.
இரத்த சோகை
மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.
கர்ப்பிணிகள்
கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது.
முகப்பரு
முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி. இந்த பயனை அனுபவிக்க எப்போதும் மாம்பழம் சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.
இளமை
மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும்.
புற்றுநோய்
மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் வருவதையும் தடுக்கும்.
மூளை வளர்ச்சி
மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின் பி6, மாம்பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
ஏற்கனவே சொன்னது போல் கேரட் மற்றும் மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா-கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த மாம்பழத்தில் உள்ள மேற்கூறிய தனிமங்கள் உதவி புரிகின்றன.
கண்களின் ஆரோக்கியம்
ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25 விழுக்காடு வைட்டமின் ஏ சத்தை, ஒரு கப் நறுக்கிய மாம்பழங்கள் தருகின்றன. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாலைக் கண் மற்றும் வறட்சியான கண்களை தடுக்கும்.
வெப்ப வாதம்
பச்சை மாங்காயை சாறு எடுத்து தண்ணீரில் கலந்து அதனுடன் இனிப்பை சேர்த்து பருகினால் உடல் குளிர்ச்சி அடையும். மேலும் உடலும் பாதுகாப்புடன் இருக்கும். ஆயுர்வேதத்தின் படி, மத்திய கோட்டிற்குரிய வெப்பநிலையில் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது அடிக்கடி சிறுநீர்ப் பெருக்கி ஏற்படவும், அயர்ந்து போகவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதிகப்படியான சூரிய ஆற்றல், உடல் மற்றும் தசைகளை சுட்டெரிப்பதால். இதன் விளைவாக சிறுநீரகத்தில் அதிகமான நச்சுத்தன்மை புகுந்து விடும் என்பதாலேயே தான், மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.
tamil.boldsky.com
இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது. இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன. இந்த சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்களுக்கு இயங்கு உறுப்புகளை நடுநிலையாக்கும் சக்தி உள்ளது. இயங்கு உறுப்புகளால் அணுக்கள் பாதிக்கப்பட்டு ஏற்படும் நோய்களே இருதய நோய்கள், குறித்த காலத்திற்கு முன் வயதிற்கு வருதல், புற்று நோய் மற்றும் சிதைத்தல் நோய். சரி... மாம்பழத்தில் உள்ள மருத்துவ குணங்களால் ஏற்படும் உடல் நல நன்மைகளை பார்க்கலாமா?
இரத்த அழுத்தம்
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் உள்ளடக்கம் மிகவும் அதிகம். இது நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுத்து உதவும். வளமான அளவு பொட்டாசியம் (146 மில்லிகிராமில் 4%) மற்றும் மெக்னீசியம் (9 மில்லிகிராமில் 2%) உள்ள மாம்பழம் அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.
கொலஸ்ட்ரால்
மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்.
எடை அதிகரிக்க
உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.
செரிமானம்
செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது மாம்பழம். மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயல்பான முறையில் செரிமானம் நடந்திட உதவும்.
இரத்த சோகை
மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரிப்படுத்தும்.
கர்ப்பிணிகள்
கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது.
முகப்பரு
முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி. இந்த பயனை அனுபவிக்க எப்போதும் மாம்பழம் சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.
இளமை
மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் புரதத்தை உடலில் சுரக்க உதவி புரிகிறது. இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி வைக்கும்.
புற்றுநோய்
மாம்பழத்தில் உள்ள பெக்டின், புரோஸ்டேட் புற்று நோய் வருவதையும் தடுக்கும்.
மூளை வளர்ச்சி
மூளையின் செயல்களை பாதுகாத்து மேம்படுத்த மிகவும் முக்கியமான வைட்டமின் பி6, மாம்பழங்களில் ஏராளமாக இருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
ஏற்கனவே சொன்னது போல் கேரட் மற்றும் மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா-கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த மாம்பழத்தில் உள்ள மேற்கூறிய தனிமங்கள் உதவி புரிகின்றன.
கண்களின் ஆரோக்கியம்
ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25 விழுக்காடு வைட்டமின் ஏ சத்தை, ஒரு கப் நறுக்கிய மாம்பழங்கள் தருகின்றன. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் இது மாலைக் கண் மற்றும் வறட்சியான கண்களை தடுக்கும்.
வெப்ப வாதம்
பச்சை மாங்காயை சாறு எடுத்து தண்ணீரில் கலந்து அதனுடன் இனிப்பை சேர்த்து பருகினால் உடல் குளிர்ச்சி அடையும். மேலும் உடலும் பாதுகாப்புடன் இருக்கும். ஆயுர்வேதத்தின் படி, மத்திய கோட்டிற்குரிய வெப்பநிலையில் இருக்கும் இடத்திற்கு செல்லும் போது அடிக்கடி சிறுநீர்ப் பெருக்கி ஏற்படவும், அயர்ந்து போகவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அதிகப்படியான சூரிய ஆற்றல், உடல் மற்றும் தசைகளை சுட்டெரிப்பதால். இதன் விளைவாக சிறுநீரகத்தில் அதிகமான நச்சுத்தன்மை புகுந்து விடும் என்பதாலேயே தான், மாம்பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.
tamil.boldsky.com
Re: மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
ருசிக்கு சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
முகப்பரு
முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது.
புதுசா தெரிஞ்சிக்கிட்டேன்... நன்றி
Similar topics
» காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
» இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...
» வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
» இளநீர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...
» வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» காலிஃப்ளவர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|