தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

View previous topic View next topic Go down

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Empty காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Thu Jun 20, 2013 8:00 am

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

காதல் ! கவிஞர் இரா .இரவி .

நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும்
சொல் மட்டுமல்ல !
நெடிய உறவாகத் தொடர்ந்து
மெய்யான அன்பை பொழிவது !
இன்பங்கள் எத்தனையோ
இவ்வுலகில் இருந்தாலும்
இனிமையான காதல் இன்பத்திற்கு
இணை இவ்வுலகில் இல்லை !
கூடு விட்டு கூடு பாயும்
எண்ண அலை !
தனிமையில் பேச வைக்கும்
பாச வலை !
மகிழ்ச்சிப் போதையில்
மிதக்க வைக்கும் கலை !
கோடிப் பணம் தந்தாலும்
பிடிக்காத நிலை !
இறுதிவரை உறுதியாக இருந்தால்
அசைக்க முடியாத மலை !

அசை போடுகிறேன் ! கவிஞர் இரா .இரவி .

நீயும் நானும்
பேசிய நிமிடங்களும்
சந்தித்த நாட்களும்
மிகவும் குறைவுதான் !
மூச்சு இருக்கும் வரை
நினைவு இருக்கும் !
பசுமையான நினைவுகள் அவை !
மாடு என நானும் அடிக்கடி
அசை போடுகிறேன் நினைவுகளை!

சொல்வதில்லை ! கவிஞர் இரா .இரவி

பிரிந்து வருடங்கள்
பல கடந்தும்
மனதில் , நினைவில்
வருடி விட்டு செல்கிறாள் !
தனிமையான நேரங்களில்
நினைவில் வந்து செல்கிறாள் !
மறக்க நினைத்தாலும்
மறக்க முடிவதில்லை !
மூளையின் மூலையில் இருந்து
மூ்ழ்கடிக்கிறாள் !
மறந்து விட்டதாக
உதடுகள் சொன்னபோதும்
உள்ளம் ஒருபோதும்
சொல்வதில்லை !

மன்னிக்கட்டும் கலாம் ! கவிஞர் இரா .இரவி .

தூங்கும்போது காண்பதல்ல கனவு !
தூங்கவிடாமல் செய்வதே கனவு !
படித்தேன் கலாம் வாசகம் !
தூங்கும்போது காணும் கனவில் அவள் !
தூங்கவிடாமல் செய்யும் கனவிலும் அவள் !
கலாம் என்னை மன்னிக்கட்டும் !

இனிமை ! இளமை ! கவிஞர் இரா .இரவி .

உனக்கும் எனக்குமான
நட்பு காதலாகி
அடுத்தக் கட்டம்
அடைந்தபோது
சின்னச் சின்ன
தீண்டல் தொடங்கியது !
தீயாய் எரிந்தது !
எண்ணிக்கையில் குறைவு என்றாலும்
எண்ணங்களில் மிக நிறைவு !

உண்மை ! கவிஞர் இரா .இரவி .

பார்த்தும் காதலா ?என்று
பார்த்தவர்களிடம் கேலி பேசியவன் !
உன்னைப் பார்த்ததும் காதல் வந்தது
உன்னிடம் தாமதமாகத்தான் சொன்னேன் !
காதலை ஏற்றுக் கொண்ட நீயும் சொன்னாய் !
பார்த்த அன்றே காதல் மலர்ந்த உண்மையை !

நம்பிக்கை ! கவிஞர் இரா .இரவி .

தூக்குத் தண்டனை கைதியிடம்
நிறைவேறாத ஆசை என்ன ?
என்பார்கள் !
முடிந்தால் நிறைவேற்றுகள் !
நானும் தூக்குத் தண்டனை கைதியாக
விரும்புகின்றேன் !
உன்னை ஒரு முறை பார்க்க ஆசை
நிறைவேற்றுங்கள் என்பேன் !
உன்னை அழைத்து வந்து
என்னிடம் காடு்வார்கள் !
இறக்கும் முன் ஒரு முறை
உன்னை பார்த்து விடலாம் !

என்னவள் ! கவிஞர் இரா .இரவி .

அங்கிருந்து என்னை
இங்கு இயக்குகின்றாள் !
எங்கிருந்தபோதும்
என்னுள் இருக்கின்றாள் !
எழுச்சி தருகின்றாள் !
மனக்கவலை வரும்போது
மனத்தெம்பு தருகின்றாள் !
சோர்வு வரும்போது
சுறுசுறுப்பு தருகின்றாள் !
துன்பம் வரும்போது
இன்பம் தருகின்றாள் !
தடுக்கி விழும்போது
திரும்ப எழ வைக்கிறாள் !
விரக்தி வரும்போது
சக்தி தருகின்றாள் !
என்னுள் என் நினைவுள்
கலந்த இனியவள் !
அவள் என்னவள் !

பிடிக்காத புத்தர் கவிஞர் இரா .இரவி .

புத்தரை எல்லோருக்கும் பிடிக்கும் !
ஆனால் எனக்குப் புத்தரைப் பிடிக்காது !
என்னவளே உன் மீது அளவற்ற
ஆசை வைத்திருக்கும் எனக்கு
"ஆசையை அறவே அழி " என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை .அதனால்
புத்தரையும் பிடிக்கவில்லை !

இதமான மனசு ! கவிஞர் இரா .இரவி .

பேசும் போது உன் விரல் பட்டு
என் கண்கள் கலங்கியது !
உடன் நீ உன் கைக்குட்டை எடுத்து
உன் வாயில் வைத்து ஊதி விட்டு 
என் கண்ணில் ஒத்தினாய் !
இதமானது கண் மட்டுமல்ல
என் மனசும்தான் !
இப்படி ஒரு சுகத்திற்காக
எத்தனை முறையும்
விரல்கள் விழிகளில் படலாம் !
கல்வெட்டாகத் பதிந்தது
இந்த நிகழ்வும் நம் உறவும் !

கண்டுபிடித்தாள் கள்ளி ! கவிஞர் இரா .இரவி .

சேலை ஒன்று என்னவளுக்கு
வாங்கித் தந்தேன் !
எனக்காக வாங்கியதா ? என்றாள் !
உனக்காக நெய்தது ! என்றேன் !
கைத்தறிச்சேலை என்பதை
உயர்வாகச் சொல்கிறாய் !என்றாள் !
கைத்தறி உயர்வானதுதான் !என்றேன் !
பட்டுச்சேலை வாங்கப் பணம் 
இல்லை என்பது தெரியும் !என்றாள் !
மனதிற்குள் ! கண்டுபிடித்தாள் கள்ளி !
என்பதை நினைத்துக் கொண்டு
பட்டுச்சேலையை விட 
கைத்தறிச்சேலைதான்
உனக்கு அழகு என்றேன் !
பட்டுக்கு எதற்கடி பட்டு
என்றேன் !
பட்டென சிவந்து நின்றாள் !

தண்ணீர் குடிப்பாயாக ! கவிஞர் இரா .இரவி .

நான் சாப்பிடும் போது
பொறை ஏறியது !
என் அம்மா உடன்
தலையில் தட்டி
யாரோ நினைக்கிறார்கள் 
என்றார்கள் !
நினைப்பது நீ என்பது
எனக்குத் தெரியும் !
உடன் நான் உன்னை நினைத்தேன் !
உனக்கும் பொறை ஏறி இருக்கும் !
இங்கு நான் தண்ணீர் குடித்து விட்டேன்
அங்கு நீயும் தண்ணீர் குடிப்பாயாக 

விழிப்படம் ! கவிஞர் இரா .இரவி 

இருவரும் சேர்ந்து
ஒரே ஒரு திரைப்படம்தான்
பார்த்தோம் !
திரைப்படம் பார்த்த நேரத்தை விட
அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும்தான்
அதிகம் !
இதழ்களை விட 
விழிகள்தான் அடிக்கடி பேசிக் கொண்டன !
காதலர்கள் ஏன் ?
திரைப்படம் செல்கிறார்கள் என்பது
அன்றுதான் விளங்கியது எனக்கு !

விலைமதிப்பற்ற பரிசு ! கவிஞர் இரா .இரவி .

அவளிடம் பல முறை
பரிசு வாங்கி இருக்கிறேன் !
நானும் அவளுக்கு பல முறை
பரிசு வழங்கி இருக்கிறேன் !
உருவம் இல்லாத பரிசு !
உணர்ச்சி மிகுந்த பரிசு !
நினைக்கும் போதெல்லாம்
இனிக்கும் பரிசு !
சகாராவில் பாய்ந்த
நயாகராவாக
அவள் முத்தம்தான்
விலைமதிப்பற்ற பரிசு !

அறிவாளி அவள் !கவிஞர் இரா .இரவி .

என்னவள் அழகை விட
அறிவில் சிறந்தவள் ! என்றேன் .
நண்பன் இருக்காதே ! என்றான் .
அறிவில் சிறந்தவள் எப்படியடா
உன்னை காதலிப்பாள் !என்றான் .
பொறாமையில் பேசும் நண்பனை
பொருட்படுத்தவில்லை நான் !
என்னவள் அழகி என்பதை விட
அறிவாளி என்பதால்தான்
எனக்குப் பிடித்தது அவளை !
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by முரளிராஜா Thu Jun 20, 2013 9:15 am

காதலின் ஆழத்தையும் இனிமையையும் உங்கள் கவிதையில் காண முடிகிறது
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Jun 21, 2013 8:25 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by மகா பிரபு Fri Jun 21, 2013 9:12 am

அருமை சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Fri Jun 21, 2013 9:44 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 553

Back to top Go down

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! Empty Re: காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum