Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முத்துக்களைத் தருவாயா ? நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 • Share
முத்துக்களைத் தருவாயா ? நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
முத்துக்களைத் தருவாயா ?
நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கீற்று வெளியீட்டகம் 142.வடக்கு வெளி வீதி .யானைக்கல் ,மதுரை .1
விலை ரூபாய் 60
அழகிய குழந்தை கண்களை கைகளால் முடிய அட்டைப்படம் மிக நன்று .இந்த நூலை
மிக வித்தியாசமாக காணிக்கை ஆக்கி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா
."சமர்ப்பணம் .சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தை முத்துக்களுக்கும்
,கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய குழந்தை மலர்களுக்கும் ...இதனை
படித்தவுடனேயே நூலை படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது .கவிஞர் நா
.காமராசன் அணிந்துரை மிக நன்று .முனைவர் சு .விஜயன் ஆய்வுரை நூலுக்கு
தோரணம் .
உள்ளத்தில் உள்ளது கவிதை! உள்ளத்து உணர்வு கவிதை ! கவிஞனின் கண்ணில் பட்ட
காட்சி கவிதை ! கண்ணில் பட்ட மனிதர்கள் கவிதை ! கவிதைக்கண் கொண்டு
கண்டால் கவிதை பிறக்கும் .சுரக்கும்
.பெரிய மனிதர்கள் பலர் நல்ல குணம் இன்றி , பரந்த மனம் இன்றி சின்னப்
புத்தியுடன் இருப்பதைக் கொண்டு வடித்த நுட்பமான கவிதை ஒன்று .
இதயம் சுருங்கி விரிவது உண்மையென்றால் !
பலரின் இதயமென் விரிவதேயில்லை !
ஆழிப்பேரலை பலரின் வாழ்க்கையை சூறாவளியாக சுழற்றிப் போட்டது .பெற்றோரை
இழந்த குழந்தைகள் உண்டு .குழந்தைகளை இழந்த பெற்றோரும் உண்டு .ஆழிப்பேரலை
நிகழ்த்திய சோகத்தை கவிதை .வடித்துள்ளார் .
சுனாமி பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார் .
.ஆழிப்பேரலை ( சுனாமி )
கடலில் முத்தெடுத்துப் பார்த்திருக்கிறேன் !
கடல் முத்தெடுத்த அதிசயம்
இதுவே முதல் முறை ! ஆம் !
நாம் பறி கொடுத்த ஒவ்வொரு குழந்தையும்
ஒவ்வொரு முத்துதானே !
கடல் அன்னையே !
உன்னிடமிருந்து நாங்களெடுத்த
முத்துக்களைத் தந்து விட்டால்
திருப்பி நீ எங்கள் முத்துக்களைத்
தருவாயா ?
கவிஞனுக்கு கற்பனை அழகு ! கவிஞன் கற்பனை மட்டுமே பாடாமல் நிஜத்தையும்
பாட வேண்டும். .கவிஞன் காதலையும் பாட வேண்டும் சமூகத்தையும் பாட வேண்டும்
.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலே ஒரே கவிதையில் காதலையும்,
சமூகத்தையும் பாடி உள்ளார் .பாராட்டுக்கள் .
பெண்ணே !
உனக்கு உன் உடம்பில் மட்டுமா
ஏற்றத்தாழ்வுகள்
சமூகத்திலும்தான் !
வண்டிச் சக்கரத்து அச்சாணியோடு நாட்டின் அச்சாணி விவசாயியை ஒப்பிட்டு
எழுதிய கவிதை நன்று !
நமது நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது பெருமை அல்ல இழுக்கு
.பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் கன்னத்தில் அறைவதுப் போல ஒரு கவிதை
.
பெற்றோர்களைப் புறகணிக்க
முடிந்தவர்களால்
புறகணிக்க முடியாததாய்
பெற்றோர்களின் முதலெழுத்துக்கள் !
மனிதன் பிணமானதும் வீட்டில் நடக்கும் மூட நம்பிக்கை சடங்குகள் பற்றி
பெரிய புத்தகமே எழுதலாம் .அவ்வளவு
சடங்குகள் நடக்கும் .
அதில் ஒன்று ஊதுபத்தி .அது பற்றி ஒரு கவிதை எள்ளல் சுவையுடன் !
ஊதுபத்தி !
மனிதர்களே நாங்கள் உண்மையான தியாகிகள்
உங்களில் யார் இறந்தாலும் '
நாங்கள்தானே முதலில் தீக்குளிக்கிறோம் !
பக்கம் 73 இல் வந்த கவிதையே பக்கம் 87 லிலும் வந்துள்ளது .அடுத்த
பதிப்பில் தவிர்த்திடுங்கள் .
கர்ம வீரர் காமராசர் பற்றி சொற்ச்சிக்கனத்துடன் மிகக் குறைந்த வரியில்
மிகப் பெரிய கருத்தை விதைத்துள்ளார் .
காமராசர் மறைவு !
மண்ணிலிருந்துதான் புதையல் எடுப்பார்கள் !
கிடைத்த புதையலை மண்ணில் புதைத
சோகச் சம்பவமிது !
காதலைப் பாடாத கவிஞர் இல்லை காதலைப் பாடி உள்ளார் .
மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டே செல்லும்
மின்சார ரயிலைப் போல்
உன் நினைவுகளைத் தொட்டுக் கொண்டே
வாழும் நான் !
இந்தக் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு , தங்கள் காதலியின் நினைவு
வரவழைத்து கவிஞர் மகா .ராசாவெற்றி பெற்றுள்ளார் .
இப்படி பல்வேறு பொருள்களில் பொருள் படை கவிதை வடித்துள்ள நூல் ஆசிரியர்
கவிஞர் மகா .ராசா அவர்களுக்கு பாராட்டுக்கள்
நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
கீற்று வெளியீட்டகம் 142.வடக்கு வெளி வீதி .யானைக்கல் ,மதுரை .1
விலை ரூபாய் 60
அழகிய குழந்தை கண்களை கைகளால் முடிய அட்டைப்படம் மிக நன்று .இந்த நூலை
மிக வித்தியாசமாக காணிக்கை ஆக்கி உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் மகா .ராசா
."சமர்ப்பணம் .சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தை முத்துக்களுக்கும்
,கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய குழந்தை மலர்களுக்கும் ...இதனை
படித்தவுடனேயே நூலை படிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கின்றது .கவிஞர் நா
.காமராசன் அணிந்துரை மிக நன்று .முனைவர் சு .விஜயன் ஆய்வுரை நூலுக்கு
தோரணம் .
உள்ளத்தில் உள்ளது கவிதை! உள்ளத்து உணர்வு கவிதை ! கவிஞனின் கண்ணில் பட்ட
காட்சி கவிதை ! கண்ணில் பட்ட மனிதர்கள் கவிதை ! கவிதைக்கண் கொண்டு
கண்டால் கவிதை பிறக்கும் .சுரக்கும்
.பெரிய மனிதர்கள் பலர் நல்ல குணம் இன்றி , பரந்த மனம் இன்றி சின்னப்
புத்தியுடன் இருப்பதைக் கொண்டு வடித்த நுட்பமான கவிதை ஒன்று .
இதயம் சுருங்கி விரிவது உண்மையென்றால் !
பலரின் இதயமென் விரிவதேயில்லை !
ஆழிப்பேரலை பலரின் வாழ்க்கையை சூறாவளியாக சுழற்றிப் போட்டது .பெற்றோரை
இழந்த குழந்தைகள் உண்டு .குழந்தைகளை இழந்த பெற்றோரும் உண்டு .ஆழிப்பேரலை
நிகழ்த்திய சோகத்தை கவிதை .வடித்துள்ளார் .
சுனாமி பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார் .
.ஆழிப்பேரலை ( சுனாமி )
கடலில் முத்தெடுத்துப் பார்த்திருக்கிறேன் !
கடல் முத்தெடுத்த அதிசயம்
இதுவே முதல் முறை ! ஆம் !
நாம் பறி கொடுத்த ஒவ்வொரு குழந்தையும்
ஒவ்வொரு முத்துதானே !
கடல் அன்னையே !
உன்னிடமிருந்து நாங்களெடுத்த
முத்துக்களைத் தந்து விட்டால்
திருப்பி நீ எங்கள் முத்துக்களைத்
தருவாயா ?
கவிஞனுக்கு கற்பனை அழகு ! கவிஞன் கற்பனை மட்டுமே பாடாமல் நிஜத்தையும்
பாட வேண்டும். .கவிஞன் காதலையும் பாட வேண்டும் சமூகத்தையும் பாட வேண்டும்
.ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலே ஒரே கவிதையில் காதலையும்,
சமூகத்தையும் பாடி உள்ளார் .பாராட்டுக்கள் .
பெண்ணே !
உனக்கு உன் உடம்பில் மட்டுமா
ஏற்றத்தாழ்வுகள்
சமூகத்திலும்தான் !
வண்டிச் சக்கரத்து அச்சாணியோடு நாட்டின் அச்சாணி விவசாயியை ஒப்பிட்டு
எழுதிய கவிதை நன்று !
நமது நாட்டில் முதியோர் இல்லங்கள் பெருகி வருவது பெருமை அல்ல இழுக்கு
.பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் கன்னத்தில் அறைவதுப் போல ஒரு கவிதை
.
பெற்றோர்களைப் புறகணிக்க
முடிந்தவர்களால்
புறகணிக்க முடியாததாய்
பெற்றோர்களின் முதலெழுத்துக்கள் !
மனிதன் பிணமானதும் வீட்டில் நடக்கும் மூட நம்பிக்கை சடங்குகள் பற்றி
பெரிய புத்தகமே எழுதலாம் .அவ்வளவு
சடங்குகள் நடக்கும் .
அதில் ஒன்று ஊதுபத்தி .அது பற்றி ஒரு கவிதை எள்ளல் சுவையுடன் !
ஊதுபத்தி !
மனிதர்களே நாங்கள் உண்மையான தியாகிகள்
உங்களில் யார் இறந்தாலும் '
நாங்கள்தானே முதலில் தீக்குளிக்கிறோம் !
பக்கம் 73 இல் வந்த கவிதையே பக்கம் 87 லிலும் வந்துள்ளது .அடுத்த
பதிப்பில் தவிர்த்திடுங்கள் .
கர்ம வீரர் காமராசர் பற்றி சொற்ச்சிக்கனத்துடன் மிகக் குறைந்த வரியில்
மிகப் பெரிய கருத்தை விதைத்துள்ளார் .
காமராசர் மறைவு !
மண்ணிலிருந்துதான் புதையல் எடுப்பார்கள் !
கிடைத்த புதையலை மண்ணில் புதைத
சோகச் சம்பவமிது !
காதலைப் பாடாத கவிஞர் இல்லை காதலைப் பாடி உள்ளார் .
மின்சாரத்தைத் தொட்டுக் கொண்டே செல்லும்
மின்சார ரயிலைப் போல்
உன் நினைவுகளைத் தொட்டுக் கொண்டே
வாழும் நான் !
இந்தக் கவிதை படிக்கும் வாசகர்களுக்கு , தங்கள் காதலியின் நினைவு
வரவழைத்து கவிஞர் மகா .ராசாவெற்றி பெற்றுள்ளார் .
இப்படி பல்வேறு பொருள்களில் பொருள் படை கவிதை வடித்துள்ள நூல் ஆசிரியர்
கவிஞர் மகா .ராசா அவர்களுக்கு பாராட்டுக்கள்
eraeravi- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 553
Similar topics
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» படிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை ! நூல் ஆசிரியர் கவிஞர் நீலம் மதுமயன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நிலா தேடும் ஆகாயம் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொள்ளாச்சி குமாரராஜன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» பட்டாம் பூச்சிகளின் கனவுகள் ! நூல் ஆசிரியர் சேலம் கவிஞர் ச .கோபிநாத் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|