தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எப்போதுமே சிரிப்புதான் !!!!!

View previous topic View next topic Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by முழுமுதலோன் Tue Jul 09, 2013 3:35 pm

 நபர் - 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.
 
நபர் - 2: ஐயய்யோ! அப்புறம்?
 
நபர் - 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன்.
 
நபர் - 2 : என்னது!
 
நபர் - 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை
 
 
பிரபல நடிகை புதிய நகை கடை ஒன்றைத் திறந்து வைத்தார். கடைக்காரர் நினைவு பரிசாக லட்சம் பெறுமானமுள்ள நெக்லக்ஸ் பரிசளித்த போது நடிகை கோபமானாள். கடை திறப்பதற்குரிய கட்டணம் வாங்கிவிட்டேன். அதற்கு மேல் நெக்லக்ஸ் கொடுப்பது லஞ்சம் கொடுப்பது போல. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்றாள். கடைக்காரர் வற்புறுத்தி, எனது அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் உங்கள் திருப்திக்கு 100 ரூபாய் கொடுங்கள் என்றார். இது நல்ல டீலிங் என்ற கவர்ச்சி நடிகை 500 ரூபாயை எடுத்து நீட்டி 5 நெக்லக்ஸ் கொடுங்கள் என்றாள்!!???. ===========
 
நேத்து ராத்திரி எங்க வீட்ல எல்லாரும் டி.வி.சீரியல் பார்த்துக்கிட்டு இருந்தப்ப திருடன் புகுந்து எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போயிட்டான்! அப்புறம்..? சீரியல் முடிஞ்ச பிறகும் அழும்படி ஆயிடுச்சு! ==============
 
யாரோ , இறந்து போன அரசியல்வாதியின் கண்களை எனக்குப் பொருத்தியிருக்காங்கன்னு தோணுது! - எப்படிச் சொல்றே? - எங்கே காலி நாற்காலியைப் பார்த்தாலும் அதிலே உட்காரணும்னு ஆசையா இருக்கே! ==================
 
நர்ஸ் :டாக்டர்தியேட்டர் ரெடி.! டாக்டர் : இன்னிக்கு டிக்கெட் வாங்கப் போறது யாரு..? ===========
 
எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது. யானை ஆற்றில் குதித்தவுடன், எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!! அதைப் பார்த்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின.. அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள. ===============
 
 நிறைய டெஸ்ட் எடுத்துப் பார்த்ததுலே உங்க மனைவிக்கு கொழுப்புக் கொஞ்சம் அதிகமாவே இருக்குன்னு தெரியுது? இதுக்குப் போய் டெஸ்ட் ஏன் எடுத்தீங்க? அஞ்சு நிமிஷம் அவளோட பேசியிருந்தாலே தெரிஞ்சிருக்குமே டாக்டர்! ====================
 

எங்க தலைவர் தண்ணியை சிக்கனமா பயன்படுத்துவாரு! எங்க தலைவர் சிக்கனோட பயன் படுத்துவாரு! ================= 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by முழுமுதலோன் Tue Jul 09, 2013 3:37 pm

நிஜமாதான் சொல்றீங்களா....... டாக்டர்? என் மனைவியைக் காப்பத்த வழியே இல்லையா!? யோவ், உனக்கு இதைக் கேக்க கேக்க சந்தோஷமா இருக்லாம்அதுக்காக நான் எத்தனை தடவை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கிறது? ==================
 
இந்திரா காந்தி எப்போது பதவிக்கு வந்தார்? தெரியாது! இந்தியாவின் தேசிய பறவை எது? தெரியாது! பஞ்சாப் மாநிலத்தின் கவர்னர் யார்? தெரியாது! இந்தியாவின் தற்போதைய கிரிக்கெட் காப்டன் யார்? தெரியாது! எதுவுமே தெரியாதுன்னா எதுக்கப்பா இண்டர்வியூவுக்கு வந்தே? நான் இந்த ரூமுக்குள்ளே இருக்கிற பாத்ரூம் குழாயை ரிப்பேர் பண்ண வந்தேன்! ==================
 
ஒரு குடிகாரன் பாரில் உக்காந்து அழுது கிட்டிருந்தான். ...... அவன் முன்னால் ஒரு கிளாசில் நிறைய சரக்கு இருந்தது. அப்போ அங்க வந்த இன்னொருவன் அதை எடுத்துது மட மடன்னு குடிச்ச்சிட்டான். இந்தப் பையன் இன்னும் அதிகமா அழ ஆரம்பித்தான்,. வந்தவனும் ஓகே .....ஓகே .....எனக்கு அழுவது பிடிக்காது. உனக்கு வேண்டும் என்கிற அளவுக்கு வாங்கித் தருகிறேன் அழாதே என்றான். இவனோ, அது பிரச்சினை இல்லை. இன்று எனக்கு ஆபீசில் சரி பாட்டு. வீட்ட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. நானும் வீட்டுக்கு வர காரை எடுக்கப் போனேன். கார் திருட்டுப் போயிருந்தது. போலிசும் கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சரின்னு ஒரு வாடகை கார் பிடித்து வீட்டுக்குப் போனேன். வீடு போனதும் தான் தெரிந்தது என் பர்சை அந்த வாடகைக் காரில் விட்டுட்டேன்ன்னு,.... அதனால் எனக்கும் என் மனைவிக்கும் பெரிய சண்டை, அவளும் என்னை விட்டுட்டுப் போயிட்டா. சரின்னு தான் இந்த பாருக்கு வந்தேன். என் வாழ்கையை இத்தோட ..... முடிச்சுக்க்கலாம்ன்னு தான் சரக்கு முழுசும் விஷம் கலந்து வைத்து விட்டு..... காத்திருந்தேன். அப்போ தான் அதைநீ எடுத்து சொட்டு விடாம குடிச்ச, இப்போ உன்னை நினைத்துத் தான் அழுது கிட்டு இருக்கேன். ===============
 
ஒருவன் : எங்க போறீங்க? மற்றவன் : : முடி வெட்ட போறேன். ஒருவன் : அடா...டா....என்ன ஆச்சு உங்க தொழிலுக்கு... உங்க தொழில.... விட்டுட்டு ஏன் இந்த தொழிலுக்கு வந்துடீங்க? மற்றவன் : யோவ் நான் முடி வெட்டிக்க போறேன்....யா வெண்ணை... ஒருவன் : இப்படி ஒழுங்கா தமிழ் பேசுங்க! ================
 
மனைவி : நான் செஞ்ச ஸ்வீட்டை என்னாயே சாப்பிட முடியலைநீங்க எப்படி சாப்பிட்டீங்க? கணவன் : என்னது...ஸ்வீட்டா....? குடிபோதையில... ஊறுகாய்னு நினைச்சு மேஞ்சுட்டேன் செல்லம்மா..! =================
]
தனக்கு கொடுத்த டாக்டர் பட்டத்தை ஏன் தலைவர் வாங்க மறுத்துட்டார்..? ஹிஹி..கையெழுத்து போட்டுட்டு பட்டத்தை வாங்கிக்க சொன்னாங்களாம்! ==============
 
தலைவரே உங்களை அமைச்சர் பதவியிலேர்ந்து தூக்கிடுவாங்க போலிருக்கே? என்னய்யா சொல்றே? எதிர்கால முதல்வரே! னு எவனோ உங்களை வரவேற்று போஸ்டர் ஒட்டியிருக்கான்! ==================
 
திருடன் : தொந்தரவுக்கு மன்னிக்கணும்... பக்கத்து வீட்டுக்கு திருட வந்திருக்கோம்? பக்கத்து வீட்டு காரர் : அவங்க ஊர்ல இல்லையே! உங்க வீட்ல சாவி கொடுத்திருக்கேன்னு சொல்லிட்டுத்தான் போனாங்க..! ==============
 
 பையன் : அப்பா! எங்க ஸ்கூலில் தந்தையின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது என்ன எழுதுவது? அப்பா : நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது,.... வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே! =========
 

ஆசிரியர் : மின்சாரத்தைக் கண்டு பிடிச்சது யாரு? மாணவன் : மின்சாரம்னா என்ன சார்..?!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by முழுமுதலோன் Tue Jul 09, 2013 3:41 pm

ஒரு விவசாயி மாட்டுச் சந்தைக்குப்போய் பசுமாடு வாங்கப் போனான், கூட தன் ஐந்து வயதுப் பையனையும் அழைத்துப் போனான், ஒரு மாட்டைத் தேர்ந்தெடுத்து அதன் பல்லை, உதட்டைப் பரிசோதித்து, "எவ்வளவு பால் கொடுக்கும்" என மடியைப் பரிசோதித்து, பின் பக்கச் சுழியையும் சதைப் பிடிப்பையும் சோதித்து, கழுத்து முதல் அதன் வால்முதற்கொண்டு ஆய்வு செய்து மாட்டை விலை பேசி ஓட்டிக்கொண்டு வரும்போது தன் பிள்ளையிடம் சொன்னான், "மாடு வாங்கும்போது இப்படித்தான் மிகக் கவனமாக ஆய்வு செய்து வாங்க வேண்டும், இல்லையேல் ஏமாற்றிவிடுவார்கள்" என்றபடி மாட்டைத் தோட்டத்தில் கொண்டுவந்து கட்டினான். ஒரு வாரம் கழித்து அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் ஓடி வந்து, "அப்பா! அங்கே தோட்டத்தில் போய்ப் பாருங்கள், நம்ம அக்காவை எவனோ, வாங்க வந்திருப்பான் போல" என்றான்.
 
 
கலியாணம் ஆகிவிட்ட அழகான பணக்காரப் பையன், அவன், தனக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லை எனப் பொய் சொல்லி, ஒரு பெண்ணைக் கர்ப்பிணி ஆக்கிவிட்டான், நான்கு மாதம் ஆகிவிட்ட பின்பு அவள் அப்பனுக்கு செய்தி தெரிந்து, "அடிப்பாவி குடும்ப மானத்தை வாங்கிவிட்டாயே! யாரடி அவன் இப்போதே சொல் அவன் தலையை வெட்டிவிட்டு வருகிறேன்" என்று மிரட்டியதால் அவள் பயந்துபோய் அவனுடைய முகவரியைக் கொடுத்துவிட்டாள், பையனின் வீட்டைக் கண்டுபிடித்து, கதவைத் தட்டினான் அப்பன். "என்ன" என்று கேட்ட பையனிடம் பெண்ணின் அப்பன், "என் பெண்ணைக் கெடுத்துவிட்டாய், இப்போது உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என அரிவாளை ஓங்கினான். நிலைமை கட்டு மீறியதை அறிந்த இளைஞன், "ஐயா! ஏதோ! உணர்ச்சி வசப்பட்ட நிலையில் தப்பு நடந்து விட்டது, நமக்குள் சமரசம் செய்துக் கொள்வோம், உன் மகளுக்கு ஆண் பிறந்தால் ஒரு லட்சம் கொடுத்து விடுகிறேன், பெண் பிறந்தால் ஒன்றரை கொடுத்து விடுகிறேன்" என்றான். "இறந்தே பிறந்தால் என்ன செய்வது" என்றான் அப்பன், "அதற்கு நான் என்ன செய்யமுடியும்?" என்றான்,இளைஞன். "என் மகளுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடியுமா?" என்று கேட்டன் அப்பன்.
  
"எங்க பக்கத்து வீட்டுக்காரங்க ரொம்ப மாடர்ன் டைப்..."
 
"எப்படி...? எப்படி...?"
 

"எலிப்பொறியிலகூட பீட்சாவும், பர்கரும்தான் வைப்பாங்க!"
 
பைனல்ஸ்ல தான் நம்ம டீம் தோத்துப் போச்சே, அப்புறம் எதுக்கு பாராட்டு விழா பிரம்மாண்டமா நடத்துறாங்க...?"
 
"டாஸ் வின் பண்ணினதுக்காம் "


சமையல் சந்தேகம் நிகழ்ச்சியில் கலந்து
கிட்ட தலைவர் மானத்த வாங்கிட்டாரு!
 
ஏன், என்ன செஞ்சாரு?
 
சுண்டக் கஞ்சி எப்படி வைக்கறதுன்னு
கேட்கிறார்!


ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார்.
ஒரு வீட்டில்,"கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்"என்று எழுதிய பலகை இருந்தது. அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.
 
வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,
 
"உங்களுக்கு என்ன வேண்டும்?"என்று கேட்டார்.
 
கிராமத்து ஆளும்,
 

"எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்"என்றார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by முழுமுதலோன் Tue Jul 09, 2013 3:46 pm

குழந்தைக்குச் செல்லம் கொடுக்கலாமான்னு டாக்டரைக் கேளுங்க."
 
"அவரை எதுக்கு கேட்கணும்?"
 
"டாக்டரை கேட்காம குழந்தைக்கு எதுவும் தரக் கூடாதுன்னு உங்க அம்மா சொல்லி இருக்காங்க."


“”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?
 

“”பெருக்கினாலும் கூட்டினாலும் குப்பை தான் சார் வரும் !


இந்த டாக்டருக்கு மட்டும் நிறைய பேஷன்ட்ஸ் வர்றாங்களே... எப்படி?’’
 
‘‘.பி.எல் மேட்ச்களில் ஆடிய சியர் கேர்ள்ஸை நர்சுகளா வேலைக்கு வச்சிருக்காராம்...’’



தலைவர் தப்புக்கணக்கு எழுதி ஊழல் பண்றதா இருந்தா ஒரு டாக்டரை வச்சுத்தான் கணக்கு எழுதுவாரு...’’
 
‘‘ஏன்..?’’
 
‘‘அப்பதான் கையெழுத்து புரியாம சி.பி.ஐ தலையை பிச்சிக்குமாம்!’’


வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.
 
அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"
 
"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"
 
"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"
 
"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."


கணவன் ; சாமி கிட்ட என்ன மா வேண்டிகிட்ட?
 
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
 

கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்!!


தாஜ்மஹால்" எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?
 
"ஆக்ரா'வுல..."
 
"வெரிகுட்.....சார்மினார் எங்கே இருக்கு சொல்லு பார்க்கலாம்...?"
 
"அதோ உங்க "பாக்கெட்டுல"....







ஒரு விமான நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்தது அதாவது
பிஸினஸ் கிளாஸ்-ல் பயணம் செய்பவர்கள் இலவசமாக தங்கள்
மனைவியை அழைத்து செல்லலாம் என்று....
 
இச்சலுகை மிகுந்த வரவேற்பை பெற்றது
 
சில நாட்களுக்கு பிறகு விமான நிறுவனம் பயணம் செய்தவர்களின்
மனைவிகளுக்கு கடிதம் எழுதி பயண அனுபவம் பற்றி கேட்டது
 
எல்ல்லா மனைவிகளின் பதில்......
 
"எந்த பயணம்??" என்ன சலுகை?" எப்போ???"
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by முழுமுதலோன் Tue Jul 09, 2013 3:53 pm

முதலாளி : சர்வர் ... அங்கே என்ன சத்தம்?
 
சர்வர் : ஒண்ணுமில்லை சார் ... Full Meals கேட்டார் ...கொடுத்தோம்.
 
முதலாளி : அப்புறம் என்ன சத்தம்?
 
சர்வர் : Meals இங்கே இருக்கு ...Full எங்கேன்னு கேக்குறார்.
 

முதலாளி : ????


இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....
 
உடனே நான் அந்த கடையில ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,
 
அடிக்க வர்றாங்க...!!!
 

என்ன உலகம்டா இது!??!!


மகன்: அப்பா! எங்க காதலுக்கு தடை போடாதீங்க. எங்க காதல் தெய்வீகக் காதல்!
 
அப்பா: அது என்னடா தெய்வீகக் காதல்?
 

மகன்: என் பெயர் பரமசிவம். என் காதலி பெயர் பார்வதி. அதை வெச்சுத்தான்!


ஒரு வயசு பையன் அப்பாக்கிட்ட சொன்னானாம்..
 
"அப்பா உங்களுக்கு ஒரு good news ஒரு bad news சொல்லப் போறேன்"
 
"சரி மொதல்ல bad news சொல்லு"
 
"பக்கத்து வீட்டு ஆன்டி இனி நம்ம வீட்டுக்கு தண்ணி பிடிக்க வரமாட்டாங்களாம்"
 
"good news என்னடா?"
 
"அவங்க பொண்ணுதான் இனிமே வரப் போறாளாம்



என்னடா மாப்ளே இன்னைக்கு இவ்ளோ சந்தோசமா இருக்க?
 
காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என்மீது விழுந்ததுடா... அதான் எனக்கு பயங்கர சந்தோசம் -

வண்டி துடைக்க துணி கிடைத்து விட்டதுனு....


ஹிந்தி தெரியுமா?"
 
"ஓ...தெரியுமே"
 
"இந்த லெட்டரை கொஞ்சம் படிச்சுக்காட்டுங்களேன் ப்ளீஸ்..."
 
"ஹும்...இது பார்த்தா ஹிந்தின்னு தெரியும்... படிக்கவெல்லாம் தெரியாது"
 
- தமிழன் டா............



போலீஸ்காரர் தன் மகனிடம் : மடையா !!! எல்லா பாடத்திலும் கம்மியா மார்க் வைங்கி இருக்கிகேயே , உன்னை ...!!!
 

மகன் : சரி சரி....,இந்த 50 ரூபாயை வைத்துக்கொண்டு மேட்டரை அப்படியே குளோஸ் பண்ணுங்க ....!!!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by முழுமுதலோன் Tue Jul 09, 2013 4:06 pm

நண்பன் 1: கனவுக்கன்னி, கை நிறைய பணம், பெரிய வீடு, பென்ஸ் காரு எல்லாம் நான் நினைச்சது மாதிரியே என் வாழ்க்கையிலும் நடந்துச்சு... சந்தோசமாத்தான் இருந்தேன்,,,,அப்புறம் தான் நான் கொஞ்சம் கூட எதிர்பாராத அந்தக் கொடுமை நிகழ்ந்ததுடா..
 
நண்பன் 2: ஐய்யோ.. என்னாச்சுடா..?
 

நண்பன் 1: எல்லாம் என் பொண்டாட்டிக்கு தெரிஞ்சு போச்சுடா மச்சி...!!!!




மனைவி: ஏங்க கட்டிக்கிறதுக்கு உருப்படியா ஒரு புடவை இருக்கா? வீட்டுக்கு வர்றவங்கல்லாம் என்னை சமயல்காரின்னு நினைக்கிறாங்க...
 
கணவன்: கவலைப்படாத... உன் சமயலை சாப்புட்டப்புறம் அப்புடி நெனைக்க மாட்டாங்க...
 

மனைவி: ???!!!


போலீஸ்காரர்: "உம் மாமியார் தலையில ஏன் குழவிக்கல்லைத் தூக்கிப் போட்டீங்க?"
 
குற்றவாளி: "அம்மிக்கல்ல என்னால் தூக்க முடியலை சார், அதான்10



கணவன் கிட்டே மனைவி சொன்னா.." டார்லிங்.. கண்ணாடியை கழட்டிடுங்க.. அப்பதான் நீங்க அழகா இருக்கீங்க.."
 

கணவன் கண்ணாடியை கழற்றியபின் சொன்னான்.. " நீயும்தான்..




வேலை முடிந்து வீடு திரும்பிய IT expert கணவன்: Honey, I logged in.
 
மனைவி: ஏதாவது சாப்பிடுறீங்களா?
 
கணவன்: No Darling, the disk is full.
 

மனைவிகண்ணீர் வடிMind Voice - Then go and download...)


வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்





புதிதாக
திருமணம் ஆனவர் தன் மனைவிக்கு காது கேட்கிறதா என சோதிப்பதற்காக வெளியிலிருந்து மனைவிடம் இன்று என்னை குழம்பு என்று கேட்டார் பதில்
வரவில்லை.
 
வீட்டிற்குள் வந்து என்ன குழம்பு என்றார் மனைவிடமிருந்து பதிலில்லை. சமையலறைக்கு சென்று என்ன குழம்பு என்றார். மூன்றாவது முறையும்
பதிலில்லை.
 
அருகில் வந்தார் அதற்கு மனைவி நீங்கள் 3 முறை கூப்பிட்டதற்கு இன்று இன்று கருவாட்டுக் குழம்பு என்று சொனனானே கேட்க வில்லையா என்றாள்





 
தலைவர் ஓவரா மணல் அள்ள ஆரம்பிச்சிட்டாருன்னு எப்படிச் சொல்றே...?"
 
"முன்னெல்லாம் அவர் பேச்சுல கனல் தெறிக்கும்; இப்ப மணல் தெறிக்குதே...!"





ராஜேஷ்: என்னப்பா, மோஹன் ஹெல்மெட்டோ தூங்கறார்..?
 

சுமேஷ்: நேத்திக்கு கனவுல ஒரு தேங்கா தலைல விழறமாதிரி கனவு கண்டாராம்..இன்னிக்கு சேஃபா இருக்க, ஹெல்மெட்டோட தூங்கரார்போல!!!




குபேரன்: எங்க குடும்பத்துல எல்லாரும் 'நினச்சா புலியப்பிடிக்கிற' வீரர்கள்!
 
முருகன்:அப்பொ உங்க வீட்ல நிறைய புலித்தலையும், தோலும் இருக்கணுமே, ஒன்றைக்கூடக்காணோம்!??
 

குபேரன்: ம்ம்..என்ன பண்ணர்து..அவங்க கடைசிவரை நினைக்காமலே போய்ட்டாங்களே!!!


ஆசிரியர் : உன்கிட்ட உள்ள டேலன்ட் பற்றி சொல்லுப்பா!
 
மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.
 
ஆசிரியர் : அப்படியா! வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப?
 

மாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்.




டாக்டர் உங்க கன்சல்டிங் பீஸ் நூறு ரூபா தானே?
 
எதுக்கு இருநூறு ரூபா .கேக்குறீங்க?
 
வெளிய வெயிட் பண்ணும்போது நர்ஸ் கிட்ட உங்க
 
டாக்டர் என்ன பெரிய அப்பாடக்கரா இவ்வளவு
 
நேரம் காக்க வைக்கிராருன்னு கேட்டீங்கல்ல அதுக்கு
 

இன்சல்டிங் பீஸ் நூறு ரூபா
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by mohaideen Tue Jul 09, 2013 5:42 pm

அனைத்தும் நன்றாக சிரிக்க வைத்தனlaugh laugh laugh laugh
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by Muthumohamed Wed Jul 10, 2013 7:14 am

நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு நகைப்பு 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

எப்போதுமே சிரிப்புதான் !!!!! Empty Re: எப்போதுமே சிரிப்புதான் !!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum