தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

View previous topic View next topic Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 3:05 pm

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.....
   
            
மக்களாட்சி

நூறுக்கு பாதி மேல் கழுதையை குதிரை என்றால் அது சட்டமாகும்
நூறுக்கு பாதி மேல் பழுதையை பாம்பு என்றால் அதுவும் சட்டமாகும்




தேர்தல்கள்தான் நடந்தன மாறுதல்கள் தான் நடக்கவில்லை
ஆட்சிகள் தான் மாறு கின்றன ஆறுதல்கள்தான் கிடைக்கவில்லை




அறிஞர் நிறைந்த நாட்டின் சனநாயகம் திரட்டு பால் போல‌
கயவர் நிறைந்த நாட்டின் சனநாயகம் திரிந்த பால் போல‌




உண்மை நடந்து போய் சேர்வதற்குள் 
கயமை பறந்து சென்று கடைவிரிக்கிறது
அறிஞன் நடந்து போய் அமர்வதற்குள் 
கயவன் பறந்து சென்று பதவி பறிக்கின்றான்




வைக்கோல் கன்று காட்டி பால் கறப்பார் இடையர்
வாக்குறுதி பந்தல் போட்டு வாக்கு பறிப்பார் கடையார்




அரசியல் வர்க்கம் பதவி மோகத்தை துறந்தால் தேசம் விடுதலை பெறும்
அதிகார வர்க்கம் பண மோகத்தை துறந்தால் தேசம் விடுதலை பெறும்




ஒரு வருடத்துக்கு ஒரு முறை சூர்யனை சுற்றி வரும் பூமி
அய்ந்து வருடத்துக்கு ஒரு முறை தொகுதியைச் சுற்ற வரும் கட்சி




தலைவர்கள் கையிலே நாகரிகமும் நாணயமும் இருந்ததன்று
வெடுக்கென்று பேசி துடுக்காக மிரட்டி மக்களை அடக்குகின்றார்இன்று




வியாபாரிகள் காசோலை நிறைவேறா விட்டால் சிறையே பரிசு
தலைவர்கள் வாக்குறுதி நிறைவேற்றா விட்டால் பதவியே பரிசு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty Re: பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 3:24 pm

பொதுஉடைமை

கண்கள் அருகே இமையிருக்கும் 
அந்த விழிகள் இமையை பார்த்ததில்லை
பொன்னை தோண்டி விரலெடுக்கும்
அந்த விரல்கள் நகையை போட்டதில்லை


மனிதரையெல்லாம் கரை சேர்க்கும் அந்த தோணி கரை சேர்வதில்லை
மனிதருக்கெல்லாம் பயிர் வளர்க்கும் அந்த ஏழை பசி தீர்வதில்லை


ஆற்று நீரை தேக்க அணைகள் கட்டியது அவர் கைகளே
ஆடையின்றி மானம்  காக்க மறைத்து நிற்பதும் அந்தக் கைகளே


களை எடுத்து நீர்பாய்ச்சி நெல்விதைத்த நெஞ்சங்கள்
பசி எடுத்து பட்டினிகிடந்து பரிதவிக்கும் பஞ்சங்கள்


ரயில் பயணத்தில் வாங்கிய சீட்டு பயணம் முடிந்ததும் செல்லாது
உயிர் பயணத்தில் வாங்கிய சொத்து மரணம் முடிந்ததும் செல்லக்கூடாது


நிலவின் ஒளியை தனக்கு உரிமையாக்கும் சட்டமில்லையே
நிலத்தின் பரப்பை வாரிசுக்கு உரிமையாக்குவது நியாயமில்லையே


சகோதரத்துவம் என்பது ஒரு அன்னையின் சமதர்மமாகும்
சமத்துவம் என்பது நம் ஆண்டவனின் சமதர்ம்மாகும்


வீழ்த்தப்பட்டவருக்கு முதலில் விடுதலை வேண்டும்
தாழ்த்தப்பட்டவருக்கு உடனே தன்னிறைவு வேண்டும்


தனியுடைமை வறுமை வளர்க்கும் வன்முறை வெடிக்கும்
பொதுவுடைமை ஒற்றுமை வளர்க்கும் உயர்வைக்கொடுக்கும்


எவர்க்கும் நியாயமானதை மட்டும் பேசினால் உலகில் யுத்தமில்லை
தனக்கு தேவையானதைமட்டும்தேடினால் உலகில் வறுமையில்லை
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty Re: பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 3:31 pm

சமத்துவம்




சிவப்பு நிறத்தில் பேசினார் மார்க்ஸ் சமத்துவம் மசியவில்லையே
கருப்பு நிறத்தில் பேசினால் பெரியார் சமதர்மம் இசையவில்லையே


மேடு பள்ளமுள்ள சாலையின் பயணம் சுகம் தாராது
ஏற்றத் தாழ்வுள்ள சமூகத்தின் வாழ்வில் இன்பம் இருக்காது


ஒருவர் மட்டும் உயர்ந்தால் நூறு பேர் கள்வராவார்
ஙாறு பேரும் உயர்ந்தால் எவரும் கள்வராவதில்லை


சத்தியம் நம் தேகம் காக்கும் தத்துவமாகும்
சமத்துவம் நம் தேசம் காக்கும் தத்துவமாகும்


பிறந்தவரின் பயன் பெற்றவர்க்கில்லைன்றால் இல்லம் இனிக்குமா?
உழைத்த‌தின்பயன் உழைத்தவர்க்கில்லையென்றால் உலகம் உருபடுமா?


சத்தியமே தத்துவமென்றால் அது நல்லரசு
சமத்துவமே கொள்கையெனக் கொண்டால் அது வல்லரசு


பசியே நிறைவேறாத உடலிலே பண்பு எப்படி வளரும்
பாதுகாப்பே கிடையாத உயிரிலே பாசம் எப்படி மலரும்


நிலத்தினிலே மேடு பள்ளம் அது இயற்கையின் எழில்காட்சி
இனத்தினிலே மேடு பள்ளம் அது சதிகாரரின் சதிக்கு சாட்சி


நெருப்புக்கு நடுவே உயிர்கள் வாழ்வது அரிது
வறுமைக்கு நடுவே சுதந்திரம் வாழ்வது அரிது


சனநாயகம் என்பது மதிகொண்டவர்கள் மக்களுக்காக ஆள்வது
பணநாயகம் என்பது நிதிகொண்டவர்கள் தங்களுக்காக ஆள்வது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty Re: பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 3:32 pm

சீர்திருத்தம்






நாம் ஒருவன் கற்றால் நமக்குள்ளே மாற்றம் வரும்
நாம் ஒருவனுக்கு கற்பித்தால் நாட்டுக்குள்ளே மாற்றம் வரும்


சத்தியமாக நாம் எழுதியதை நாம் கடைபிடித்தால்
நிச்சயமாக நாம் எழுதியதை மற்றவர்க்கும் பிடிக்கும்


ஏற்ற தாழ்வுகள் உள்ள இடத்தில் நீர் நிலை நிற்பதில்லை
ஏற்ற தாழ்வுகள் உள்ள மதத்தில் நீதி நிலை நிற்பதில்லை


வாலில்லா மந்தி போல தலைவனிருந்தால் 
தலையில்லா உடல் போல நாடாகும்
ஆளில்லா படகு போல நாடு போனால்
தாயில்லாத உயிர் போல காடாகும்


எழுதும் கணக்கு கறுப்பு
வாங்கும் பணமும் கறுப்பு சிரிக்கும் பல் மட்டும் வெள்ளை
அடிக்கும் நோட்டும் கள்ளம்
விற்கும் சந்தை கள்ளம் உடை ம்ட்டும் வெள்ளை


துணி நெய்தவன் பசியிலே
அணை கட்டியவன் பட்டினியிலே
ஆடை அவிழ்த்தவன் அரங்கிலே
ஆயுதம் ஏந்தியவன் பதவியிலே


கெட்டதை பேசாதே என்றார் அவர்
நல்லதையும் பேச மறுக்கிறார் இவர்
கெட்டதையும் பாராதே என்றார் அவர்
நல்லதையும் பார்க்க மறுக்கிறாரே இவர்


அன்று மண்ணடிமை பெண்ணடிமை போக்க போராடினார்பெரியோர்
இன்று மதுவடிமை மாதடிமை போக்க போராடுகிறார் பெற்றோர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty Re: பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 3:34 pm

புரட்சி




மூச்சடங்கிய காற்று புயலானால் நம் மூச்சை நிறுத்தும்
பேச்சடங்கிய ஏழை புயலானால் நம் பேச்சை நிறுத்தும்


மாறுதல் என்பது வக்ரங்கள் ஒழிந்து வளமை பூப்பது
ஆறுதல் என்பது அக்ரமங்கள் அழிந்து நீதி மலர்வது


ஆற்றிலே வெள்ளம் வந்தாலே அழக்குகள் துடைக்கப்படும்
மக்களின் வெள்ளம் வந்தாலே அநீதிகள் அகற்றப்படும்


ஒடி ஒழியும் நாகமும் ஒரு மூலையிலே எதிர்க்கத் துணியும்
வாடி வதங்கும் ஏழையும் ஒரு எல்லையிலே எதிர்க்கத் துணிவான்


கையேந்தி நிற்கும் காலம் வரை மனிதம் தலை நிமிராது
கையூட்டு மாறும் காலம் வரை தேசம் தலை நிமிராது


வறுமை நிறைந்தால் கல்வி கற்ற மாணவரும் 
கையேந்தும் நிலை வருமே
பொறுமை இழந்தால் வளையேந்தும் மாதரும் 
வாளேந்தும் நிலை வருமே


கெஞ்சுபவர்கள் கெஞ்சும் வரை 
மிஞ்சுபவர்கள் மிஞ்சிக் கொண்டிருப்பார்கள்
அஞ்சுபவர்கள் அஞ்சும் வரை 
அடக்குபவர் அடக்கிக் கொண்டிருப்பார்கள்


கதவை தட்டுங்கள் கொடுக்கப்படும் என்பது ஆன்மீகம்
முதுகை தட்டினாலே கொடுக்கப்படும் என்பது முதலாளித்துவம்


ஆளுண்டு தோளுண்டு துவளாத கை வாளுமுண்டு
மனமுண்டு மார்க்கமுண்டு மயங்காத மக்கள் மகாசக்தியுண்டு


காய்ந்த வயிற்றில் சுரக்கும் அமிலம் ஒருநாள் ஊரை அழிக்குமே
ஓய்ந்த அடிப்பில் உறங்கும் நெருப்பு ஒருநாள் உலகை புரட்டுமே
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty Re: பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 3:35 pm

போராட்டம்
 


இளமையில் வறுமையில் நல்லவன் கவிஞனாகிறன்
இளமையில் கொடுமையில் வாடிய கோபக்காரன் தீவிரவாதியாகிறன்


நிலையான கொள்கைக்காக உயிரை விட்டு விடு
நிலையாத உயிருக்காக கொள்கையை விட்டு விடாதே


பால் பொங்கி எழுந்தால் விஷக்கிருமிகள் அழியும்
மக்கள் பொங்கி எழுந்தாலே ஊழல் கிருமிகள் ஒழியும்


உரிமைக்காக வலியவருடன் போராடு
எளியவருக்காக வளமையுடன் போராடு
உடமைக்காக இயற்கையுடன் போராடு
கடமைக்காக உறக்கத்துடன் போராடு


தாளெடுத்து கவிஞர் எழுதினால் ஒடுமே மூடப் பேய்களுமே
வாளெடுத்து இளைஞர் போராடினால் ஒடுமே ஊழல் நோய்களுமே


வாழும் வரை நீதியோடு வாழ‌
சாகும் வரை நீதிக்காக போராடு
விழும் வரை வெற்றியோடு வாழ‌
தாழும் போதும் தலைவணங்காது போராடு


கடல் நீர் ஆவியான பின்பு உப்புகல் பாளமாக படிகிறது
புரட்சிப்புனல் காலமான பின்பு தப்புகள் பாவமாக படிகிறது


சுகாதார கற்றில்லாமல் மூச்சு கூட விட முடியாது
சுதந்திர கற்றில்லாமல் பேச கூட முடியாது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty Re: பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by முழுமுதலோன் Wed Aug 21, 2013 3:36 pm

சுரண்டல்


வியாபாரியோ தந்திரத்தை விற்கிறார்
அதிகாரியோ சட்டத்தை விற்கிறார்
அரசியலாரோ தேசத்தை விற்கிறார்
அவளிடமிருந்து உடல் மட்டுமே விற்பதற்கு


தொழிலாளிகளே பெண்கள் உயிரை உடலை வதைக்கிறார்கள்
முதலாளிகள் தொழிலாளிகள் முதுகில் சவாரி செய்கிறார்கள்
அதிகாரிகளோ முதலாளிகள் தலையில் சவாரி செய்கிறார்கள்
ஆட்சியாளர்களோ அதிகாரிகள் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள்


அரசர்கள் ஆட்சி முறை முடிந்தது
அரசின் அடக்கு முறை மாறலையே
அகங்கார மன்னர் லீலை முடிந்தது
அதிகார மன்மதலீலை மாறலையே


நானென்ற அகங்காரம் ஏனென்று கேட்க யாருக்கும் வாயில்லை
தானென்ற அதிகாரம் வீனென்று சொல்ல யாருக்கும் வீரமில்லை


தலையே ஊழலில் ஊறிக்கிடக்கும் போது யாரிடத்தில் கேள்வி கேட்காது
தர்மமே கயமையில் வீழ்ந்து கிடக்கும் போது யாரை குற்றம் சொல்ல‌


அவமானத்தில் பிறந்த வருமானம் தன் மானம் தகர்ததிடுமே
சன்மானத்தில் வளர்ந்த வெகுமானம் அவமானம் தந்திடுமே


பெரும் பணக்காரர்கள் பெரிய பெரிய கடன் வாங்குகிறார்கள்
பெரிய மனிதர்கள் பெரிய பெரிய தவறு செய்கிறார்கள்


பசுவிடம் கன்றை காட்டி பாலை கறக்கிறார்கள்
நீதியிடம் நிதியை காட்டி நியாயத்தை மாற்றுகிறார்கள்


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx





Posted by DrBALA SUBRA MANIAN 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது................. Empty Re: பூவைத் தாங்கும் வேர்கள் புகழ் இல்லாது பூமிக்குள் கிடைக்கிறது.................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum