தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

View previous topic View next topic Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:41 pm

பழமை புதுமை


பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் கருவிகள். (எழுத்தாளர் மாநாடு 26.11.1944)

எழுத்தாளர்கள்


எழுதுவது குழந்தை பிறப்பது போல்! கருவுறுவது போன்றது எண்ணம்! கருவுக்கு ஆண் - பெண் இருத்தல் போல எண்ணமும் பிறக்க காலமும் நோக்கமும் கூடவேண்டும். பிறகே எழுத்து! எழுத்தாளர் என்றால் இந்த இலட்சிய புருசனாக இருக்க வேண்டும்! (எழுத்தாளர் மாநாடு, திராவிட நாடு - 26,11,1944)

நன்றி ;மௌனம் பேசும் மொழிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:42 pm

சட்டம்


சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை! (வேலைக்காரி - நாடகம் - 1945)

பெண்


நிலவுக்கென்று தனி ஒளி இல்லை அதுபோலவே பெண்களுக்கென்று தனி வாழ்வில்லை அண்ணன், தம்பி, அப்பா, கணவன், மகன், பேரன் என்று இப்படித்தான் இரவல் வெளிச்சத்தில் வாழவேண்டியிருக்கிறது!

(ரங்கோன் ராதா - புதினம் - 1945)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:42 pm

ஆணிடம் சிக்கியப் பெண்


பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயில் சிக்கிவிடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியில் இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையில் தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா? அதற்கு தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எண்ணிக் கொண்டிருக்க முடியும்? எப்படியாவது வாயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக துடிக்கும், நெளியும். தலையை தூக்கும் பல்லியன் வாயிலிருந்து வெளிப்படுவதற்காக தன்பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். உவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலிமையை நாசமாக்கவும், உயிரை போக்கவும் பயன்படுமே ஒழிய விடுதலைக்கு வழியாக முடியாது, பல்லிக்குபூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவு அற்று இருக்க வேண்டியதுதான். பூச்சி போராடுவதாக கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு தானகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையில் நான் இருந்தேன். (சங்கோன் ராதாவில் - 1945)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:43 pm

பெண்


வெங்காயம் காய்கறிகளுடன் சேர்க்க சுவையான்ன பயன் தரும் உணவாகிறது. வெங்காயத்தை நறுக்கும் போதோ நம் கண்களிலிருந்து நீரைக் கொண்டு வருகிறது. எரிக்கிறது. பெண்ணும் அப்படித்தான்! அன்புடன் நடத்தினால் இனியவளாகிறாள். சிறிது சின உணர்வை தூண்டிவிட்டாலோ எழுப்பிவிட்டாலோ ஆணை எரித்தே அழிக்கிறாள். ஆண் அழுதுதான் தீர வேண்டும். ( ரங்கோன் ராதா - 1945)

» பணக்காரன் குளம் குட்டைக்குச் சமமானவன். முதலாளி ஊற்றுக்கு சமமானவன். மழை பெய்தால்தான் குளம் குட்டைகளில் நீர் இருக்கும். இன்றேல் வறண்டு விடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்துகொண்டே இருக்கும் இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும், முதலாளிக்கும்.


(பணத்தோட்டம் - 1946)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:43 pm

புத்தறிவு


ரயிலேறி ராமேசுவரம் போவதும் ரோட்டரிவிஷினில் ரமணர் நூல் அச்சாவதும் ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும் காமிரா கொண்டு கருட சேவையை படம் பிடிப்பதும் டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும் இவை போன்றவை இங்கு நித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இது சரியா? பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தனால், கல் உடைக்கும் கருவியைக் கொண்டு கனியைத் தாக்கினால், புலி வேட்டைக்குறிய துப்பாகியைக் கொண்டு எலியைக் கொல்லக் கிளம்பினால் என்ன எண்ணுவர்? என்ன கூறுவர்? அது போல புத்தறிவு தரும் சாதனங்களைக் கொண்டு பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவர்களைப் பற்றி என்ன எண்ணுவது? என்ன கூறுவது?

(ரயிலேறி - திராவிட நாடு - 21.12.1947)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:44 pm

பண்பாளன்


எருமைகன் சேற்றில் புரளும் அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தை கொத்தித்தின்கிறது. கிளி கொவ்வை கனியைதான் விரும்புகிறது. புளித்த காடியை பருகுவான் குடிகாரன். செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய மொழி பேசிடினும் தம்பி நீ கானம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். (17.07.66)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:44 pm

ஓட்டுரிமை


உலைக் கூடத்தான் அமைத்து தருவது வாள் ஆயின் அந்த வாள் அவன் தலை கொய்திடும் வலிவு பெறுகிறதல்லவா. மனிதன் குளம் வெட்டுகிறான். இடறி விழுந்தால் உயிரையே குடிக்கிறதல்லவா! தேன் பருகுகின்றோம் சில துளி உடலில் இருப்பின் எறும்பு மொய்த்து கடிக்கிறதல்லவா? அது போலவே தனிமனிதனின் ஓட்டுரிமையால் அமைக்கப்படும் அரசும், பயனுணர்ந்து செயலாற்றும் திறமையற்றவர்களிடம் சிக்கிவிட்டால், உயிர்காக்கவேண்டிய அரசு உயிர் கொல்லும் அரசாக நாட்டையே நடுங்கச் செய்கிறது.

(அகமும் புறமும் - 14.01.1966)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:44 pm

பெரிய மனிதர் - சிறிய குணம்


குற்றாலம் சென்று குழாயடியில் குளிப்பதுபோல், திருக்குளத்தில் இறங்கி பாசியை எடுத்து வருவதுபோல், சந்தனத்தை கரைத்து மாட்டுத் தொழுவத்தில் தெளிப்பதுபோல், கரும்பை கொண்டு வந்து அடுப்பெரிப்பது போல், இசைப்புலமை பெற்ற பிறகு கோட்டான் போல் கூவிட முனைவதுபோல், யானை மீது அம்பாரி அமைத்து அமர்ந்து பூனை பிடிக்க செல்வதுபோல், உடைவாளை வீசி உருளை கிழங்கை வெட்டுவதுபோல், பூந்தோட்டம் சென்று ஊமத்தும் பூ கேட்டதுபோல், கழநியை உழுதுவிட்டு கள்ளிச் செடியை நடுவதுபோல், சாமியார் ஆகிவிட்டு மாமியார் வீட்டுக்குச் சாப்பிடச் செல்வதுபோல், இளநீர் பருகிட மறுத்து கழுநீர் குடிக்க துடிப்பதுபோல், தங்கத் தாம்பாளத்தில் தவிடு கொட்டி வைப்பதுபோல் பெரும் பதவியில் அமர்ந்திருக்கும் பெருந்தலைவர் இழிமொழி பேசுவது.

(மரண அடி கொடுப்பாராம் - காஞ்சி - 25.09.1966)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:45 pm

அரசியல்


ரசம் கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான் முகம் சரியாகத் தெரியும். ஜனநாயகப் பண்பு கெடாத நிலை, ஆளுங்கட்சிக்கு இருந்தால் தான் எதிர்க் கட்சியின் தரம் தெரியும்.

(விழாவும் விளக்கமும - 28.04.1957)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:45 pm

ஊழல்


பாலை பூனை குடித்துவிட்டது என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூட புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே குழந்தையை முதுகில் அறைந்து விட்டு, அது வீறிட்டு அழ ஆரம்பித்ததும், பாலை குடித்த பூனை மியாவ் மியாவ் என்று கத்துவதை காட்டி, பாப்பா அழாதே! அதோ, கேள் பூனை பாடுகிறது! அதை கேட்டுக் கொண்டே தூங்கு! கண்ணல்ல தூங்கம்மா, தூங்கு என்று தாய் பேசினால் எப்படி இருக்கும்! அப்படி இருக்கிறது ஒவ்வொரு ஊழலைப் பற்றியும், சர்க்காரை நடத்துகிறவர்கள் சமாதானம் சொல்லும் போக்கு.

(கைராட்டை காவேரி - திராவிடநாடு - 02.04.1961)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:46 pm

பேதை


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார்! கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாதியார் கூறி காட்டவேண்டியதாயிற்று! அதற்குப் பிறகும் ஜாதிப்பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து பேதையொருவன் அதன் மீதே பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருக்கிறான், என்றால் அப்படி ஒரு கதை சொன்னால் வியப்படைகிறோம். அறிவுப் பேழை இங்கு - ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு! எனினும் பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டு பிடிவாதம், முரட்டுவாதம், சே! தம்பி இதனை எண்ணும்போது உள்ளபடியே வெட்கம் விலாவினை குத்திடுகிறது.

(காஞ்சி - 14.01.1965)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:46 pm

பணம் ஒரு சிலரிடம் போய் குவிந்து கொள்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷலிசம் பேசுவது கன்றுக் குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின் மீது, அதன் தோலைப் போர்த்தி வைத்து, அதைக் காட்டி பசுவை ஏய்த்து, பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.

(தம்பி - அனுபவி ராசா - 21.08.1966)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:46 pm

அலை எப்போதும் ஓய்வதில்லை. கடல் அலைகள் என்றும் இருந்துகொண்டே இருப்பதுபோல தி.மு.கழகத்தின் உணர்ச்சியும் நாட்டிலே ஓயாது பரவிக்கொண்டே இருக்கும்.




தி.மு.கழகத்தில் ஓட்டை விழுந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது நாயனத்தில் விழுந்துள்ள ஓட்டை. எந்த ஓட்டையை அடைத்துக்கொண்டு எந்த ஓட்டையை திறந்துவிட்டால் சங்கீதம் வருமென்று எனக்குத் தெரியும்.



சேலம் ஒகேனக்கல் அருகே, ஆடு தாண்டும் அளவுள்ள காவேரி, பிறகு அகண்ட காவேரியாகிறதே, வேறு ஜில்லாவில் அது போல் இடபேதம் இயல்பு பேதத்துக்குள்ள பல காரணங்களில் ஒன்று ஒரு இடத்தில் கோபத்தை காட்ட முடிவதில்லை. ஆனால் கோபமே ஏற்படவில்லை என்று பொருளில்லை. அது பிறகு கொதித்துக் கிளம்புகிறது வேறோரிடத்தில்.

(சாது - 1947 - சிறுகதை)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:47 pm

பூசை அறைக்குள்ளே இருப்பதாலேயே புலி சாதுவாகவா மாறிவிடும்? கதராடை அணிந்து கொண்டதாலேயே காதகர்கள் இரட்சகர்களாகவா மாறிவிடுகிறார்கள்? தங்கப் பூண் போட்டத் தடியால் தலையில் அடித்தால் வலி எடுக்காமல் மகிழ்ச்சியா பிறக்கும்? வாழ்வை அழிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் வந்தேமாதரம் பாடிவிட்டால் கொடுமைகளை மறந்துவிடவா முடியும்? (குன்றின் மேலிட்ட விளக்கு - 06.08.1961)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:47 pm

வைரத்திலுள்ள ஒளியிலே, சிலப்பகுதியை வேறாகப் பிரித்து எடுத்துச் செல்லமுடிகிறதா - பட்டை தீட்டி ஒளியேற்றியவன் வைரத்தை விட்டுவிட்டுச் செல்வானாகில் நான் பட்டை தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்றா கூறமுடியும்? அது போலத்தான் கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்படும் எழுச்சியிலிருந்து எந்த ஒரு அளவையும், எவரும் தனியாக்கி எடுத்துச் செல்ல முடியாது.


(இந்தியர் ஆகின்றனர் - 28.05.1961)
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 2:48 pm

எஃகு தயாரிக்க வேண்டிய முயற்சி மிகப் பெரியது. இரும்பைக் காய்ச்சி ஊட்டமும் அழுத்தமும் ஏற்றி எஃகு தயாரிக்கப்படுகிறது. பின்னர் அந்த எஃகு எதையும் தாங்கும் ஆற்றலும் வலிமையும் பெறுகிறதா. வளைவதில்லை; முறிவதில்லை. அது போலவே தம்பிகள் எதையும் தாங்கும் இதயமுடைய எஃகு கம்பிகளாக உருவாகவேண்டும்; விளங்கவேண்டும்.


(எண்ணப் பிணைப்பு இதயக் கூட்டு! வண்ணக்கலவை! - 19.03.1961)


Source: [You must be registered and logged in to see this link.]
நன்றி மௌனம் பேசும் மொழிகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by sawmya Sat Sep 07, 2013 6:33 pm

அருமை! அருமை! புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 7:12 pm

நன்றி நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by Muthumohamed Sun Sep 08, 2013 12:13 am

அண்ணாவின் பொன்மொழிகளின் பகிர்வு சூப்பர் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by சரண் Sun Sep 08, 2013 7:26 am

அருமை.

பகிர்வுக்கு நன்றி.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்) Empty Re: அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்(உவமைகள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum