தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 9:29 am

யோகாசனம் ஒரு அறிமுகம்!
தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_155506000000
யோகேன சித்தஸ்ய பதேன வாசாம்; மலம் சரீரஸ்ய து வைத்ய கேன
யோபாகரோத்தம் ப்ரவரம் முனீனாம்; பதஞ்சலீம் ப்ராஞ்ஜலி ராநதோஸ்மீ

குரு வணக்கம்:

குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு

சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியின் யோகசூத்திரம் என அழைக்கபடினும் சாஸ்திரம் என்று கூறுவதே மேன்மையாகும். "அத யோகானுசானம்"- என்று முதல் சூத்திரம் துவங்கி

புருஷார்த்த சூன்யானம் குணானம் ப்ரதி-ப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப-பிரதிஷ்டா வாசுதி-சுக்தே : இதி

என முடியும் 196 சூத்திரங்களில் ஓர் யோக வேதத்தை உலகுக்கு தந்துள்ளார். இந்த யோகசூத்திரத்தை பயில்வது என்பது ஆழ்ந்து தொடர்ந்து உணர்வதும் பயிற்சி செய்வதும் ஆகும். ஏனைய சாஸ்திரங்களைப் போல் கற்பதும் விவாதிப்பதுமல்ல.யோக என்ற சமஸ்க்ருத சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  யோகம் என்றால் இணைவித்தல், அதாவது, பலவற்றின் செயல்பாட்டை ஒருமிப்புவித்தல் (சிங்க்ரோனைஸ்) என்பது ஒரு பொருள். சைக்கிள் ஓட்டும் போது, நம் கையும் காலும், கண்ணும் காதும் இணைந்து செயல்படுகின்றன. அதுபோலவே, முதலில், உடலையும் உள்ளத்தையும் ஒன்றுவித்து, பிறகு, அவ்விரண்டையும் உண்மைப் பொருளோடு ஒன்றுவித்தல் (யுனிபிகேஷன்) என்பது யோகத்தின் இன்னொரு அர்த்தமாகும்.

பதஞ்சலி யோக சூத்திரம்

காலங்காலமாக நமக்குக் கிடைத்திருக்கின்ற, பல நல்வாழ்முறைகளில் ஒன்று தான் பதஞ்சலி மாமுனிவர் அருளிய யோக சூத்திரம் என்ற நூலாகும். இவர் அன்றாட வாழ்செயல்பாட்டை யோக சூத்திரத்தில் பகுத்தருளியுள்ளார். இதில் கூறப்படும் வாழ்முறைக்கு அஷ்டாங்க யோகம் (எட்டு படிகள் உடைய வாழ்முறை, என்று பெயர்)இதில் 3வது படியே ஆசனம்.

உலகில் 84 லட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில் 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன. எனினும் இவைகளில் 18 வகை ஆசனங்கள் தான் மிக முக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும்.

யோக சூத்திர அஷ்டாங்கங்கள் சுருக்கமான விளக்கம்

அஷ்டாங்கங்கள் என்றால் 8 பகுதிகள். அவை

1. யமம்; 2. நியமம்; 3. ஆசனம்; 4. பிராணாயாமம்; 5. பிரத்யாகாரம்; 6. தாரணம்; 7. தியானம்; 8. சமாதி

1. யமம்: யமம் என்றால் சுயக்கட்டுப்பாடு என்று பொருள். அக்கட்டுப்பாடுகளில் முக்கியமானவை அஹிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மசர்யம், அபரிக்ரஹம் ஆகியவை.

அ) அஹிம்சை: (அ+ஹிம்சை) துன்பம்/வேதனை ஏற்படுத்தாதிருத்தல் என்று அர்த்தம்.

ஆ) சத்யம் (உண்மை): உண்மை என்பது நாம் அறிந்ததை, அறிந்தவாறு, அப்படியே தெரிவிப்பதுடன், உண்மை நிøலையை உணர்ந்து உண்ணையாக வாழ்வதை குறிக்கும்.

இ) அஸ்தேயம் :  தம்மிடம் இருப்பதை முழுமையாக தனக்காகவும், முடிந்தவரை  பிறருக்காகவும் பயன்படுத்துவது.

ஈ) பிரம்மசரியம் : தனியாகவோ, இல்லறத்தில் இருந்து கொண்டோ பரம்பொருளை அடைய நினைப்பது.

உ) அபரிக்ரஹம் : மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது.

சிறு வயதிலிருந்து, படிப்படியாக, உணவை, படிப்பை, செயல்களைக் கூட்டுவது போல, சுயக் கட்டுப்பாடுகளையும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனக்கட்டுப்பாடு வசப்பட்டு, உடல் பாதுகாப்பு எளிதாவதால் தான், யமத்தை அடுத்து நியமம் வருகிறது.

2. நியமம்: நியமம் என்றால் நெறிமுறை என்று பொருள். இறைவனை அடைய விரும்புவர்களுக்கு சௌச்சம், சந்தோஷம், தமாஸ், ஸ்வாத்யாயம், ஈசுவரப்ராயதானம் என  5 நெறிமுறைகள் அவசியம்.

அ) சௌச்சம் என்றால் தூய்மை. இதில் எங்கும் தூய்மை, எதிலும் தூய்மை மிக அவசியம்.

ஆ) சந்தோஷம் : உள்ளத்தில் மனநிறைவு என்று பொருள். போதுமென்ற மனதே பொன் செய்யும்.

இ) தமாஸ் (தபஸ்) :  ஒரு செயல் (எண்ணம்) நிறைவடையும் வரை தொடர்ந்த முயற்சி என்று பொருள், சொல், செயல், சிந்தனை என்ற மூன்று நிலையிலும் இத்தொடர் முயற்சி இருக்க வேண்டும்.

ஈ) ஸ்வாத்யாவம் : தானே அறிவது; தன்னை அறிவது என்பன முக்கிய அர்த்தங்கள்.

உ) ஈசுவரப்ராயதானம்: எல்லாமே இறைவன் அருளால் தான் நிகழ்கிறது. அணு முதல் அண்டம் வரை, யாவுமே, கடவுள் என்ற ஏதோ ஒரு அளப்பரிய சக்தியினால் இயங்குகின்றன என்ற எண்ணம் வளர வேண்டும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கு, முதல் படியே, ஈசுவர அர்ப்பணம். ஈசுவரனுக்கு அர்ப்பணிக்கின்ற போக்கு வளர வளர, யோகத்தில் கடைசிப் படியான சமாதி. இறைவனுடன் ஐக்கியமாவது எளிதாகிவிடும்.

3. ஆசனம்: ஆசனம் என்றால் ஒரு நிலை என்று பொருள். அதாவது நம் உடலை, உடல் உறுப்புக்களை, ஒரு குறிப்பிட்ட வகையில், அசைவின்றி நிலைப்பித்த நிலை என்று பொருள். ஆனால் தேகத்தை சமச்சீர் நிலையில் வைத்திட தேகப் பயிற்சியும், அதைவிட நுண்ணிய ஆசனமும் தேவை ஆகும். ஆனால் ஆசனத்திற்கும், தேகப்பயிற்சிக்கும் வித்தியாசம் உள்ளது
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 9:31 am

ஆசனம் - தேகப்பயிற்சி - ஒரு ஒப்புமை:

ஆசனம்        

1. ஒரு அசைவற்ற நிலை  
2. சக்தியைத் தேக்கிடுவது  
3. குறிப்பாக நரம்பு மண்டலத்தைப் பேணுவது
4. உடலுக்கும், மனதுக்கும் பணி ஓய்வு அளிப்பது
5. சுகம். அதாவது, ஆழ்ந்த உடல், மன மகிழ்வுக்கே முக்கியத்துவம்
6. திட உணவுப் பொருளை நம்பியிருப்பதைக் குறைப்பது
7. நோய்வாய்ப்பட்டிருப்போரும் சில ஆசனங்களைச் செய்யலாம்
8. தற்சார்வையும், தன்னுள் ஆழ்வதையும் வளர்ப்பது
9. இறையிடம் இட்டுச் செல்லும் நோக்கினால் உருவானது
10. உடலைக் குளிர்விக்கின்றது
11. உடல் உள் உறுப்புகளைப் பிசைந்து விட்டு இயங்க செய்கின்றது
12. நாடி நரம்புகளையும், தசைகளையும் ஒன்றாக இயக்குகிறது
13. இதயத்திற்கு நல்ல ஓய்வு
14. எவ்வயதினரும் செய்யலாம்
15. சக்தி உருவாகும்
16. மனஅழுத்தம் முற்றிலும் நீங்கும்

தேகப்பயிற்சி

1. அசைவிக்கும் செயல்பாடு
2. சக்தியைப் பயன்படுத்துவது
3.உடல் தசையமைப்பை மேம்படுத்துவது
4.உடலைப் பணிக்கு தயாரக்கிடுவது
5. கடுமையான பணிகளில் வலி,சிரமத்தை தாங்கிட முக்கியத்துவம்
6. மென்மேலும் திடஉணவை நம்பியிருக்கச் செய்கிறது.
7. நோய்வாய்ப்பட்டிருப்பின் செய்திட இயலாது
8. போட்டிமனப்பான்மையையும் அதனால் பிணக்கையும் கூட்டிடலாம்
9.இகவாழ்வில் நலம்பேணும் நோக்கு
10.உடலை உஷ்ணப்படுத்துகின்றது
11.வெளித்தோற்ற உறுப்புக்கு மட்டுமே பயன் தருவது
12.உடலின் புறத்தசைகளை மட்டுமே இயங்கச் செய்கின்றது
13.இதயத்தில் இரத்தஓட்டம் மிகுந்து வேகமாக துடிக்க வைக்கும்
14.முதியோர் செய்யக்கூடாது
15.சக்தி விரயமாகும்
16.மனஅழுத்தம் மிகும்

ஆசனம் பழகலில் நியதிகள் சில: நரம்புகள் பாதிக்கப்பட்ட நோயுடையவர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, நெடு நாட்களாக உடலில் ஏதாவது உறுப்புகளில் புண் மற்றும் தோலில் நோயுள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள், உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பயிற்சி ஆசிரியரின் ஆலோசனையின்றி எந்த ஆசனமும் செய்தல் கூடாது. குறிப்பாக புத்தகங்களை படித்து அதன்படி செய்து பழகுவதும் கூடாது. முதன் முதலாகப் பயிலும்போது, புத்தகங்களை அல்லது பிரசங்கங்களை மட்டும் ஆதாரமாக்கி ஆசனங்களைத் தாமாகச் செய்வதைத் தவிர்க்கவும். துவக்கத்தில் சில நாட்களாவது, அன்றாடம், சிறிது நேரமாயினும், யோகாசனம் கற்பிப்பவரிடம் பயில்வதே நல்லது. பின்னர், ஒவ்வொரு ஆசனம் செய்வதிலும் தேர்ச்சி பெறுவதற்கு வீட்டிலேயே, அவரவர்களே பழகிவிடலாம்.

ஆசனம் பயிலவும், பழகவும் காலை நேரமே உகந்தது. இயன்றவரை, மலஜலம் கழித்து, நீராடிய பின் செய்தல் மேன்மை, இரவுப் - பணி (நைட் - ஷிப்ட்) உடையவர்கள், கண்விழிப்பாலும், பணியாலும் ஒய்ந்து போயிருக்கையில், காலைக்குப் பதிலாக மாலை நேரம் செய்யலாம். எனினும், மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும் மாலை ஆசனம் பழகும் நேரத்துக்கும் 4 மணி நேரமாவது இடைவெளி அவசியம். வயிற்றில் ஜீரணிக்கப்பட வேண்டியது இருக்கையில் ஆசனம் செய்தல் கூடாது. காபி, டீ, திரவம் தானே என்று அவற்றை அருந்திய உடனும் ஆசனம் செய்தல் கூடாது. உண்மையில், திடமான சாப்பாடு, டிபனை விட, காபி, டீ போன்றவற்றையே ஜீரணிக்கப்பட அதிக நேரம் பிடிக்கின்றன.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 9:32 am

காற்றோட்டமுள்ள இடம் நல்லது. கை, கால், மற்றும் உடலை நீட்டித் திருப்பி வளைப்பதைத் தடுக்காத தளர்வான உடையே நல்லது. இறுக்கமான உடையைத் தவிர்க்கவும். ஆசனங்களை, சற்று கனமான விரிப்பின் மேல் செய்வது நல்லது. கை, கால் உடம்பின் அசைவு மிக மிக மெதுவாகவே  இருக்க வேண்டும்.  தினமும் எல்லா ஆசனங்களையும் செய்வதை விட, அவசரமின்றி சிலவற்றை செய்வதே நல்லது.தலை, கழுத்துப்பகுதி, மார்பு, வயிறு, முதுகு, கைகால்கள் அனைத்து உடல் பகுதிகளும் உட்படுத்திய ஆசனமோ அல்லது குறிப்பிட்ட தனி உறுப்புகளுக்கோ பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது, எந்த ஒரு உடலுறுப்பும் விறைப்பின்றி, தளர்த்திய நிலையிலும் மென்மையாகவும், நிதானமாகவும், மிக இயல்பாகவும் இருக்கும்படி பழக வேண்டும். பரபரப்பில்லாத மனநிலைக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

யோக சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதாவில் சாத்வீக உணவு உண்பவர்கள் தான் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இயலும் என கூறுகிறது. சாத்வீக உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், சமைத்த காய்கறி கலவை, இலையுணவு, பால், தயிர், உலர்ந்த பழங்கள், தேன், அரிசி மற்றும் முளை கட்டிய தானிய உணவுகள் அடங்கும். எந்த ஆசனமாயினும், உடலை ஒருநிலைப்படுத்தும் போது, இரண்டு முக்கிய செய்திகளை மறந்திடக் கூடாது.

1. அசைவின்மை:  எவ்வளவு  நொடிகள் அல்லது நிமிடங்கள் உடல் உறுப்புக்கள் அசையாமல் இருக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு ஒரு ஆசனத்தில் இருந்தால் போதும். மிகச் சிரமப்பட்டு அசைவைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம். நாள் செல்லச் செல்ல அசைவு குறைந்து நின்று விடும்.

2. சுகம்: ஒவ்வொரு ஆசனத்திலும் நமக்கு சுகமான உணர்வு ஏற்பட வேண்டும். விழித்த நிலையிலேயே, சுகமான உறக்கத்தின் அனுபவத்தை, பயனை அளிப்பதாக ஆசனம் அமைய வேண்டும். ஆசனம் பழகும் முன் செய்யப்படும்; கபாலபாதி போன்ற மூச்சுப்பயிற்சிகள் வேறு; பிராணாயாமம் என்ற சுவாசக்கட்டுப்பாடு வேறு. நம் எண்ணப்படி, காற்றை இழுத்து, நிறுத்தி வெளியிடும் திறனை அளிக்கின்ற பிராணாயாமத்தை ஆசனங்களில், ஓரளவு தேர்ச்சி பெற்ற பின் பழகிவிடுவதே நல்லது.

பெண்களுக்கான சில செய்திகள் : ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர். இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும்உடைய ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 9:34 am

பிராணயாமம்

பிராண சக்தி : பிராணயாமம் உயிர் பலம் சக்தி -தேஜஸ் ஒளி என்ற இரண்டும் பிராணன் ஆகும். உயிர் சக்தி (விடல் ஃபோர்ஸ்) பிராணன் என்ற சக்தியினை சமமாக்கி, உடலில் இருத்தி பஞ்சகோசங்களை அறிந்து இயற்கையினை விருப்பம் போல் இயங்க வைக்கும் முறை.

பந்தங்கள் : பிராணனைத் தேவைப்படும் போது தேவைப்படும் இடத்தில் வைக்க, அல்லது தடுத்து மாற்றிடங்களுக்குப் பரவச் செய்ய பந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முத்திரைகள் : பல முத்திரைகள் ஆசனங்களோடு இணைந்ததாகவே இருக்கின்றன. உடலையும், கை விரல்களையும் குறிப்பிட்ட வகையில் வடிவமைத்துக் கொண்டு இணைப்பது முத்திரையாகும். ஆசனங்கள், பந்தங்கள், முத்திரைகளை முறையே கற்காமல் நேரடியாக பிராணயாமத்திற்குச் செல்வது தவறாகும். உள நோயும், உடல் நோயும் வராதிருக்க மனம் அமைதியுற பிராணசக்தி, ஜீவசக்தி இத்தூல சரீரத்தில் பெருக, தொடர்ந்து ஜபம், தவம் செய்வோம். மன ஆற்றலுக்கு யோகமும் உடலாற்றலுக்கு ஆசனமும் எனப் புதிய இருவினை செய்வோம். இன்புறுவோம்.

அர்த்தமுள்ள யோகம் + ஆசனம்

யோகம்                                 ஆசனம்

உளவியல்                          உடலியல்
அகத்தூய்மை                   புறத்தூய்மை
புலன் கட்டுக்கோப்பு      உடலாற்றல் மேம்பாடு
மனஆற்றல்                       உட்சுரப்பிகள் உயிர்ப்பித்த
நினைவாற்றல்                 செயலாற்றல் துலக்கம்
உணர்வாற்றல்                  வளர்சிதைமாற்ற செயல்பாடு

தியானம்                                           பிராணயாமம்

ஆழ் மனத்தடவியல்                       உயிரியல்
நீள் நினைவு நோற்றல்                  உயிர் பரவல்
அறிவு வடிவு                                      உயிர்க்காற்றின் உலா
ஆத்மா தரிசனம்                               உயிர்க்காற்றின் உலா
ஆன்ம நிவேதனம்                            உலகுயிர் உடலுயிர் ஒற்றுமை

யோகாசனம் பழகுவதற்கு இங்கு சில முக்கிய ஆசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

இது தவிர இன்னும் பல ஆசனங்களையும் கற்றுப் பழகிட முயலவும். முக்கிய ஆசனங்கள் என்பது பொதுவாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரவர் தேக நலன் பராமரிக்க, வேறு சில ஆசனங்கள் மேலும் முக்கியமாக, அவசியமாக இருக்கலாம். ஒவ்வொருவரும் தத்தமக்கு உகந்ததை தவறாமல் செய்து நன்மை பெறவும். ஆசனங்கள் செய்யும் முன்பும், செய்திடும் போதும் அவசரப்படாது இருப்பது போலவே, செய்த பின்னரும் சில நிமிடங்களாவது அமைதியாக, வேறு பணியில் ஈடுபடாமல், இறைவனை தியானித்திருப்பது நல்லது. குறிப்பாக உடனே குளிப்பதையும், திரவ உணவையும் கூட தவிர்க்கவும்.

நன்றி:

டி.எஸ்.கிருஷ்ணன், ஸ்வார்த்தம் சத்சங்கம் மகரிஷி ஸ்ரீபதஞ்சலி யோக கேந்திரம்
அருள்மிகு ஈஸ்வரன் திருக்கோயில், பழங்காநத்தம், மதுரை-625 003.



நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Oct 15, 2013 9:40 am

நாளை முதல் ஒவ்வொருநாளும் ஒரு யோகாசனம் பற்றிய பதிவு பதிவு செய்யப்படும் . படித்து யோகாசனம் பயின்று பயன் பெறுங்கள் .  உடலையும் மனதையும் ஆரோக்கியமாக  வைத்து கொள்ளுங்கள். நாளை சந்திப்போம் ....... தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Smilie%20face13
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by sawmya Tue Oct 15, 2013 12:11 pm

யோகாசனம் முழித்தல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Wed Oct 16, 2013 9:50 am

சூரிய நமஸ்காரம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_172502000000

எந்த ஒரு ஆசனம் செய்வதற்கு முன்பும் சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் முக்கியம். சூரிய நமஸ்காரம் என்பது மந்திரமும் ஆசனமும் சேர்ந்த ஒரு அபூர்வ அதிசக்தி அளிக்கும் படைப்பாகும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன. சூரிய நமஸ்காரம் செய்தபின் இயல்பான மூச்சு வரும் வரை ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மற்ற ஆசனங்கள் செய்ய வேண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Mon Oct 21, 2013 12:33 pm

தாளாசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_172834000000
மனம் : நரம்பு மண்டலம் முழுவதும்

மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு

ஆன்மீக பலன்கள் : மனம் ஒருமைப்படும்

எச்சரிக்கை : குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது.

,தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Oct 22, 2013 10:19 am

உட்கட்டாசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_173157000000

மனம் : முழங்கால்கள்

மூச்சின் கவனம் : இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள் : பிராண சக்தியினை உயர்த்தும். ஒரு நிமிடம் செய்தால் 4 கி.மீ., தூரம் நடந்த பலன் கிடைக்கும்.

குணமாகும் நோய்கள் : மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலி, முழங்கால் வலி, குதிகால் வலி, சர்க்கரை நோய், யானைக்கால் வியாதி போன்ற வியாதிகள் நீங்கும்.

ஆன்மீக பலன்கள் : குண்டலினி சக்தியினை எழுப்பும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by செந்தில் Tue Oct 22, 2013 1:19 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Wed Oct 23, 2013 8:25 am

அர்த்த சக்ராசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_173348000000


மனம் : முதுகெலும்பு

மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.

குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குகிறது.

ஆன்மீக பலன்கள் : உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கின்றது.

எச்சரிக்கை : இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதைத் தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக்கொண்டு செய்யலாம். முதுகெலும்பு தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by செந்தில் Wed Oct 23, 2013 10:56 am

கைதட்டல் பயன்மிக்க பகிர்வுக்கு நன்றி அண்ணா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Thu Oct 24, 2013 9:33 am

பத்ம ஹஸ்தாஸனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_173520000000


மனம் : வயிற்றுப்பகுதி, முதுகு எலும்பு, கால்கள்

மூச்சின் கவனம் : கீழே குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் உள்ள எல்லாத் தசைகள், இடுப்பு நரம்பு தொடையில் உள்ள எலும்பைப் பிணைக்கும் தசை நார்கள், தசையைப் பிணைக்கும் தசை நார்கள், கால்கள் ஆகியவை நன்றாக நீட்டப்படுகின்றன. முதுகுத்தண்டு மற்றும் இடுப்பில் உள்ள நரம்புகள் முறுக்கேறுகின்றன. தலைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஜீரண சுரப்பிகள் நன்கு சுரக்கின்றன. உடலின் சுற்றளவைக் குறைக்கிறது. இடுப்பு மற்றும் இடுப்புக்குக் கீழ் உள்ள அதிக சதைப்பகுதியினை மெலிய வைக்கிறது.

குணமாகும் நோய்கள் : ஜீரண சம்பந்தமான இரைப்பை, மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்லது. நீரிழவு நோய் சிகிச்சையில் பலன் அளிக்கிறது. கல்லீரலின் இயக்கம் சீராகிறது.

ஆன்மீக பலன்கள் : படர் விழிப்புணர்வு அதிகரிக்கிறது. தலைக்கு இரத்தம் பாய்வது உணரப்படுகிறது.

எச்சரிக்கை : அதிக இரத்தஅழுத்தம் அல்லது இதயநோய் உள்ளவர்கள், கழுத்துவலி இடுப்புபிடிப்பு உள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Fri Oct 25, 2013 10:10 am

அர்த்தகடி சக்ராசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_173712000000
மனம் : இடுப்பு பகுதி

மூச்சின் கவனம் : கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது. பக்கவாட்டு மார்புத்தசைகள் நன்கு நீட்டப்பட்டு இரத்தஓட்டம் அதிகரிக்கிறது. இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறுகின்றன. நுரையீரல்கள் கொள்ளளவு அதிகரித்து இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைகின்றது. பாதத்திற்கு நல்லது.

குணமாகும் நோய்கள் : முதுகுவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது.

ஆன்மீக பலன்கள் : பக்கவாட்டு விழிப்புணர்வு அதிகரிக்கின்றது. ஓய்வான உணர்வு ஏற்படுகின்றது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Sat Oct 26, 2013 9:10 am

திரிகோணாசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_142955000000

மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்

மூச்சின் கவனம்: குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: உடம்பு முழுவதும் குறிப்பாக முதுகுத்தண்டும் முதுகுத் தசைகளும் நீட்டப்படுகின்றன. மார்பு எலும்புகளுக்கு இடையில் உள்ள தசைகள், தொடைகள், கெண்டைக் கால்கள், முழங்காலுக்குப் பின்புறம் உள்ள தசைகள் முதலியன நன்கு நீட்டப்பட்டு தளர்த்தப்படுகின்றன. அட்ரினல் சுரப்பிகள் நன்கு தூண்டப்படுகின்றன. கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்கள், கணையம் முதலியவை நன்கு அழுத்தப்படுகின்றன. இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.

குணமாகும் நோய்கள்: பாதம், நீரிழிவு நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகக் கோளாறுகள் ஆகியவற்றிற்கு நல்லது. மலச்சிக்கலை நீக்கி, பசியினை உண்டு பண்ணுகின்றது. முதுகு, கழுத்து, முழங்கை, இடுப்புப் பகுதி, முழங்கால் முதலியவற்றில் உள்ள வலியினைப் போக்குகிறது. வாயுப்பிடிப்பு, கூன்முதுகு முதலியவற்றிற்கும் பலனளிக்கிறது.

எச்சரிக்கை: கீழ்முதுகுவலி முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாகச் செய்யவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Sun Oct 27, 2013 10:07 am

பரிவ்ருத்த திரிகோணாசனம்


தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_143345000000
மனம் : இடுப்பு பகுதி மற்றும் கைகள்

மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படுகின்றன. முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையினை அதிகரிக்கின்றது. வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்புப் பகுதியினை மெலிதாக்குகிறது. முதுகுத் தண்டு சுழற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன. உடல் இலேசாக, புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது. இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப்படுகிறது.

குணமாகும் நோய்கள் : பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு, மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது. உடம்புப் பகுதியில் உள்ள தசைகளை இறுக்க தன்மை நீங்கி தளர்கிறது.

எச்சரிக்கை : தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப்படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 9:37 am

ஏக பாதாசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_145503000000

மனம் : இரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்கள்

மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்.

குணமாகும் நோய்கள்: சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும். கூடுதல் தொடை சதை குறையும். கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும். தோள் பட்டை, முதுகு சதைகள் அழகு பெறும். சுவாசப் பணிகள் விலகும். முகம் பொலிவு பெறும்.

ஆன்மீக பலன்கள் : கண்களை மூடிச் செய்ய பழகினால் பிரபஞ்சத்தையே கட்டி ஆளலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Oct 29, 2013 8:14 am

அர்த்த சிராசனம்


தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_145904000000
விரிப்பின் மீது அமர்ந்து பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோத்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும, இடுப்பிலிருந்து கால்களை நேராக தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம்.

பலன்: மூளை நரம்பு செல்களின் அழிவைத்தடுக்கும், நுண் ரத்தக்குழாய் அடைப்புகள் நீங்கும். தலைக்கு தேவையான ரத்த ஓட்டம் அளிக்கும். கண்பார்வை கோளாறு மறையும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை, பாதிப்புகள் அகலும். ஞாபகத்திறன் கூடும். பீனியல், பிட்யூட்ரி, தைராய்டுகளின் சுரப்பிகள் இயக்கம் சீர் பெறும்.

குறிப்பு: இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும், படபடப்பு, இதயத்தின் ரத்த அழுத்த கோளாறு உள்சளவர்கள், முகம், தலை சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனம் செய்யக் கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Wed Oct 30, 2013 9:45 am

சக்ராசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_145412000000

விரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும். பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி தலை, மூக்கு, இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரைவட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும், 15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஓய்வு எடுத்து கொள்ளவும். இதே போல இருமுறை  இந்த ஆசனத்தை பயிலலாம்.

பலன்: உடம்பின் அனைத்து உறுப்புகளும் சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது. ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Thu Oct 31, 2013 9:43 am

பர்வதாசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_145609000000
தரையில் கவிழ்ந்து படுக்கவும், கைகளை நெஞ்சருகே பக்கவாட்டில் கொண்டு வரவும். உள்ளங்கை பகுதியையும், பாதங்கள் இரண்டையும் தரையில் பதித்த படியும் உடலை மேல் நோக்கியபடி முக்கோண வடிவத்தில் உயர்த்தவும். பின் தலையை இரு கைகளுக்கிடையே தொங்க விடவும். இப்படி 20 வினாடிகள் இருந்த பின் நிதானமாக உடலை பழைய கவிழ்ந்த நிலைக்கு கொண்டு வரவும். ரத்த அழுத்தம் உள்ளவர்களும், ஒரு தலை வலி, கண்நீர் முட்டல் போன்ற கண் நோய் உள்ளவர்களும் இதை செய்யக்கூடாது.

பலன் : தலை, மூளைப்பகுதி, கழுத்து, மார்பு, நுரையீரல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக அமையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். கண்பார்வை சீராகும். கை, கால்களின் மூட்டு பலனடையும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Fri Nov 01, 2013 10:50 am

வஜ்ராசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_145952000000
மனம் : அடிவயிறு, தொடைப்பகுதி

மூச்சின் கவனம்: இயல்பான மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: உடல் உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும். தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.

ஆன்மீக பலன்கள்: மனம் உறுதி அடைய இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனத்தில் தியானம், பிராணயாமம் செய்யலாம்.

சிறப்பு: இந்த ஆசனத்தை எல்லா நேரத்திலும் செய்யலாம். சாப்பிட்ட பின்னரும் செய்யக்கூடிய ஆசனம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 9:50 am

உஷ்டிராசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_145507000000
விரிப்பில் முழங்காலிட்டு அமரவும். முட்டுக்களை அகலமாக விரித்து உட்காரவும். மார்பு, கழுத்தை சிறிது பின் நோக்கி வளைத்து தலையை பின்புறம் தொங்க விட்ட நிலையில் ஒவ்வொரு கையாக உடலின் பின் பகுதிக்கு கொண்டு சென்று விரல்களை ஊன்றிய குதிகால் பகுதிகளை பிடிக்கவும். வாய்மூடிய நிலையில் மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிடவும். 15 வினாடிகள் இவ்விதம் இருந்த பின்பு ஒவ்வொரு கையாக முன் கொண்டு வந்து முழங்காலிட்டு அமரவும். இரண்டு நிமிட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஒரு முறை இந்த ஆசனம் செய்யலாம். முழங்கால் மூட்டுக்களிலுள்ள நச்சு நீர் குறையும். ஆஸ்த்துமா நோய் குறையும். இது ஒரு மருத்துவ ஆசனமாகும். தைராய்டு கிளாண்டுகள் இயக்கம் சீர்பெற உதவும்.

மனம் : இடுப்பு பகுதி மற்றும் கழுத்து

மூச்சின் கவனம்: வளையும் போது வெளி மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. வயிற்றின் உள்ளுறுப்புகள் பலமடைந்து விலா எலும்புகள் நன்கு விரிவடைகின்றன.

குணமாகும் நோய்கள்: முதுகுவலி, சுவாசக் கோளாறுகள், முழங்கால் வலி, இடுப்பு வலி இடுப்பு வாயு பிடிப்பு, கீழ் வாயு வாயுக் கோளாறு, இரைப்பை கோளாறுகள், முதலியவற்றிற்கு நல்லது. தன்னம்பிக்கையினை வளர்க்கிறது. சோம்பலை நீக்கி பயிற்சியாளரைச் சுறுசுறுப்பாகவும் செய்கிறது.

எச்சரிக்கை: இதய நோயுள்ளவர்கள் கவனமாகச் செய்யவும். குடல்வாயு நோயுள்ளவர்கள் இதைச் செய்தல் கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Mon Nov 04, 2013 9:51 am

வஜ்ரா முத்ரா (சசாங்கசனம்)

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_151325000000
மனம் : வயிறுபகுதி, தலைப்பகுதி

மூச்சின் கவனம்: குனியும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு.

உடல் ரீதியான பலன்கள்: காலிலுள்ள மூட்டு தசைகளை தளர்த்துகிறது. வயிற்றின் கீழ்ப்புற பகுத அதிக இரத்தஓட்டம் பெறுகின்றது. சிறுநீரகம் வலிமை அடையும். முதுகெலும்பு நெகிழ்வுத் தன்மை பெறும். தலைப்பகுதியில் இரத்தஓட்டம் மிகும். நினைவாற்றல் கூடும். பிட்யுட்டரி, பீனியல், தைராய்டு பாராதைராய்டு போன்ற சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாளை அதிகரிக்கும். தாது பலவீனத்தை சீராக்கும்.

குணமாகும் நோய்கள் : அதிக இரத்த அழுத்தம், இடுப்பு, வாயுப்பிடிப்பு, இரைப்பை குடல் சம்பந்தமான கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் நீங்கும். வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

ஆன்மீக பலன்கள் : குண்டலினி சக்தி மேல் எழும்பும். உடல் குளிர்ந்து மனம் அமைதியடைகிறது.

எச்சரிக்கை : தீவிர முழங்கால் வலி உள்ளவர்கள் கவனமாக செய்யவும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பில் வாயுப்பிடிப்பு, கழுத்துவலி உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Tue Nov 05, 2013 9:27 am

சுப்த வஜ்ராசனம்

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_151526000000
மனம் : தொடைப்பகுதி

மூச்சின் கவனம்: சாயும்போது வெளிமூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு

உடல் ரீதியான பலன்கள்: முதுகுத்தண்டு, வயிற்று புற உறுப்புகள், இடுப்புப்பகுதி நன்கு நீட்டப்பட்டு உரம் பெறுகின்றது. கூன் முதுகு நிமிரும். தொடை புட்டப்பகுதி நல்ல இரத்த ஓட்டம் பெறுகின்றது. தொடை மற்றும் காலின் விறைப்பு மற்றும் கடினத்தன்மையினை குறைக்கிறது. இடுப்பு கணுக்கால், கீழ்முதுகு ஆகியவை நல்ல இயக்கத்திற்குத் தயாராகும்.

குணமாகும் நோய்கள்: வெகு நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிக நல்லது. வாயுத்தொல்லை நீங்கும். மலச்சிக்கல் நீங்கும்.

ஆன்மீக பலன்கள்: முதுகெலும்பின் அடிப்பகுதியில் மறைந்து இருக்கும் ஆற்றல்கள் செயல்படத் தொடங்குகின்றன. தொடர்ந்த பயிற்சியினால் ஓய்வு ஆழமானதாகின்றது.

எச்சரிக்கை: கழுத்துப் பிடிப்புள்ளவர்கள் இதயக்கோளாறு உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 9:18 am

பஸ்சி மோத்தாசனம்


தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} TN_155317000000
மனம் : முதுகெலும்பு, வயிறு, கால் நரம்புகள்

மூச்சின் கவனம் : குனியும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு நிமிரும்போது உள்மூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் பின்புறம் முழுவதும் மற்றும் வயிற்றின் முன் பகுதியில் உள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு வலுவடைகின்றன. இடுப்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உரம் பெறுகின்றது. உடல் பொதுவாக நல்ல வடிவமைப்பினை பெறுகின்றது. கல்லீரல், கணையம், குடல் இவற்றின் ஜீரணசக்தி தூண்டப்பட்டு அதிகரிக்கிறது. வளரும் வயதினரின் உயரத்தைக் கூட்டுவதில் துணைபுரிகின்றது.

குணமாகும் நோய்கள்: அஜீரணம், மலச்சிக்கல், இடுப்பு, வாயுப் பிடிப்பு, விந்தணு பலவீனம், மூலநோய், ஜீரணக்கோளாறுகள் முதலியவற்றிற்கான சிகிச்சையில் பலனளிக்கிறது. வயிற்றுப்புறத்தில் உள்ள அதிகபடியான கொழுப்பை குறைக்கிறது.

ஆன்மீக பலன்கள்: மறைந்திருக்கும் ஆன்மீக சக்தியினை எழுப்புகிறது. சுழுமுனை நாடி சக்தியினை உயர்த்தும்.

எச்சரிக்கை : அதிக இரத்த அழுத்தம் கழுத்துப் பிடிப்பு, நாட்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் இதை செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை அதிக நேரம் செய்தால் ஜீரணக்கோளாறுகளுக்கு வழி வகுக்கும். குறைந்த நேரம் மட்டுமே செய்ய வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்} Empty Re: தினம் ஒன்று!! வாழ்க்கை நன்று!! {யோகாசனம்}

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum