Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
Page 1 of 1 • Share
இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா - படியுங்கள்!!!
“நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு
வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு
விருப்பமான ஒலிநாடாவை வைத்துக்
கேட்கிறீர்கள். சட்டென்று உங்களுக்குள் ஒரு
புத்துணர்வு முளைத்து, மனம், “ரிலாக்ஸ்’ ஆகிறது.
-
இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ்
மாறுதல்களை ஏற்படுத்துகின்றது’ என்கிறார்கள்
வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு
இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள்
பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில்
போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம்,
நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குண
நலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
-
பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத்
அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி
குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.
-
சில குறிப்பிட்ட ஸ்வரங்கள், ஜதிகள், ராகங்கள்
உடல் ரீதியான மாறுதல்களை விளைவிக்கின்றன.
வட இந்திய டாக்டர் ஒருவர் கூறுகிறார்.
-
“இசையை ரசிக்கும்போது, எண்டார்ஃபின் என்கிற
திரவம் ஊற்றெடுத்து அது கேட்பவரின் மன
நிலையை மாற்றுகிறது. ஹார்மோன் மாற்றங்களும்
மனோபாவமும் தொடர்பு கொண்டதால் சில
சிக்கல்களைத் தீர்க்கிறது. ஆனால், ஒன்று
நோயாளியின் ரசனைக் கேற்றபடியான சங்கீதத்தை
மனத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறார் டாக்டர்
படேல்.
-
“உடல் நலம், தெளிவான உரையாடல், மனப்படிமம்
போன்ற அம்சங்களைக் கணக்கிட்டு சிகிச்சையை
மேற்கொள்கிறோம். உதாரணமாக, இந்திய
சங்கீதத்தில் காபி ராகத்துக்கு அமைதிப்படுத்துகிற
குணம் உண்டு.
-
பூர்வ தனஸ்ரீ என்கிற (இந்துஸ்தானி) ராகத்துக்கு
குழம்பும் மனதை நிலைப்படுத்துகிற சக்தி உண்டு.
-
இதுபோன்ற சிகிச்சையைக் காலையிலோ,
மாலையிலோ அல்லது இரவிலோ செய்யலாம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் கெடுவுக்குள் இதைப்
பிரிக்கவும் செய்யலாம். நீண்ட நேரம் கூடாது.
காலியான வயிற்றுடன் இருக்கக்கூடாது. இதற்குக்
கொஞ்சநாள் முன்பாகவே நோயாளியைத் தயார்ப்
படுத்திவிட வேண்டும்’ என்கிறார்.
-
அல்ஸைமர் வியாதி, மூளைக் காயங்கள், கர்ப்பிணிப்
பெண்களுக்கு வரும் பிரசவ வேதனை ஆகிவற்றுக்கு
எல்லாம் இது போன்ற சிகிச்சைகளினால் பலனுண்டு.
சிறுவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை
நன்றாக எதிர்கொள்கிறார்கள். “ஆட்டிஸம்’ – கற்கிற
குறைபாடு போன்ற சிலவற்றிற்கு இது பயனானது
என்கிறார் பாக்டர்.
-
“மியூசிக் தெரபி’ குறித்து மேலை நாட்டில் ஆராய்ச்சிகள்
செய்து சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.
“அமெரிக்கன் மியூசிக் தெரபி சங்கங்கள்’ இவற்றுக்கு
ஆதரவு அளிக்கின்றன.
-
சென்னை சூளைமேட்டில், நாட்டியாச்சார்யா
இசை – நாட்டியப் பள்ளி ஒன்றிருக்கிறது. இதை
நடத்தி வரும் பாலச்சந்திர ராஜு நாற்பது ஆ
ண்டுகளுக்கும் மேலாக ராக ஆராய்ச்சியில்
ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு ராகத்துக்கும் ஓர் இயல்பு உண்டு.
பல நோய்களும் குணமாக ராகங்கள் இருக்கின்றன
என்பதை விளக்குகிறார்.
-
“நாட்டை – ஆஸ்துமா குணமாகிறது.
வாசஸ்பதி – நாசி பிரச்சினை தீரும்.
ஹம்சவர்த்தினி – தலைச் சுற்றில் நீங்கும்.
நாத நாமக்கிரயா – வயிற்றுவலி தீரும்.
பேகடா – ரத்த அழுத்தம் சரியாகும்.
ஆனந்த பைரவி, சிந்து பைரவி – உயர் ரத்த அழுத்தம்
சீராகும்.
மத்தியமாவதி – ஒற்றைத் தலைவலி நீங்கும்.
-
ஒரு வலியைப் பற்றிய அனுபவமுண்டு. வயிற்று வலி
சிறிது அதிகமாக இருக்கையில் உருக்கமான
நாதநாமக் கிரியாவும், ஆனந்த பைரவியும் போக்க உ
தவியிருக்கின்றன,’ என்கிறார்.
-
இது சில ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியிருக்கிறது.
பல தனிமனித அனுபவங்களால் உறுதி
செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ, இசை
இறைவனின் மகாவஸ்து என்பது மட்டும் மாறாத கருத்து.
-
(கர்நாக சங்கீதத்தை ரசியுங்கள் நூலில் இருந்து)
-
———————————————
- வாதூலன்
நன்றி: கல்கி
“நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு
வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு
விருப்பமான ஒலிநாடாவை வைத்துக்
கேட்கிறீர்கள். சட்டென்று உங்களுக்குள் ஒரு
புத்துணர்வு முளைத்து, மனம், “ரிலாக்ஸ்’ ஆகிறது.
-
இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ்
மாறுதல்களை ஏற்படுத்துகின்றது’ என்கிறார்கள்
வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு
இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள்
பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில்
போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம்,
நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குண
நலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
-
பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத்
அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி
குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.
-
சில குறிப்பிட்ட ஸ்வரங்கள், ஜதிகள், ராகங்கள்
உடல் ரீதியான மாறுதல்களை விளைவிக்கின்றன.
வட இந்திய டாக்டர் ஒருவர் கூறுகிறார்.
-
“இசையை ரசிக்கும்போது, எண்டார்ஃபின் என்கிற
திரவம் ஊற்றெடுத்து அது கேட்பவரின் மன
நிலையை மாற்றுகிறது. ஹார்மோன் மாற்றங்களும்
மனோபாவமும் தொடர்பு கொண்டதால் சில
சிக்கல்களைத் தீர்க்கிறது. ஆனால், ஒன்று
நோயாளியின் ரசனைக் கேற்றபடியான சங்கீதத்தை
மனத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறார் டாக்டர்
படேல்.
-
“உடல் நலம், தெளிவான உரையாடல், மனப்படிமம்
போன்ற அம்சங்களைக் கணக்கிட்டு சிகிச்சையை
மேற்கொள்கிறோம். உதாரணமாக, இந்திய
சங்கீதத்தில் காபி ராகத்துக்கு அமைதிப்படுத்துகிற
குணம் உண்டு.
-
பூர்வ தனஸ்ரீ என்கிற (இந்துஸ்தானி) ராகத்துக்கு
குழம்பும் மனதை நிலைப்படுத்துகிற சக்தி உண்டு.
-
இதுபோன்ற சிகிச்சையைக் காலையிலோ,
மாலையிலோ அல்லது இரவிலோ செய்யலாம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் கெடுவுக்குள் இதைப்
பிரிக்கவும் செய்யலாம். நீண்ட நேரம் கூடாது.
காலியான வயிற்றுடன் இருக்கக்கூடாது. இதற்குக்
கொஞ்சநாள் முன்பாகவே நோயாளியைத் தயார்ப்
படுத்திவிட வேண்டும்’ என்கிறார்.
-
அல்ஸைமர் வியாதி, மூளைக் காயங்கள், கர்ப்பிணிப்
பெண்களுக்கு வரும் பிரசவ வேதனை ஆகிவற்றுக்கு
எல்லாம் இது போன்ற சிகிச்சைகளினால் பலனுண்டு.
சிறுவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை
நன்றாக எதிர்கொள்கிறார்கள். “ஆட்டிஸம்’ – கற்கிற
குறைபாடு போன்ற சிலவற்றிற்கு இது பயனானது
என்கிறார் பாக்டர்.
-
“மியூசிக் தெரபி’ குறித்து மேலை நாட்டில் ஆராய்ச்சிகள்
செய்து சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.
“அமெரிக்கன் மியூசிக் தெரபி சங்கங்கள்’ இவற்றுக்கு
ஆதரவு அளிக்கின்றன.
-
சென்னை சூளைமேட்டில், நாட்டியாச்சார்யா
இசை – நாட்டியப் பள்ளி ஒன்றிருக்கிறது. இதை
நடத்தி வரும் பாலச்சந்திர ராஜு நாற்பது ஆ
ண்டுகளுக்கும் மேலாக ராக ஆராய்ச்சியில்
ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு ராகத்துக்கும் ஓர் இயல்பு உண்டு.
பல நோய்களும் குணமாக ராகங்கள் இருக்கின்றன
என்பதை விளக்குகிறார்.
-
“நாட்டை – ஆஸ்துமா குணமாகிறது.
வாசஸ்பதி – நாசி பிரச்சினை தீரும்.
ஹம்சவர்த்தினி – தலைச் சுற்றில் நீங்கும்.
நாத நாமக்கிரயா – வயிற்றுவலி தீரும்.
பேகடா – ரத்த அழுத்தம் சரியாகும்.
ஆனந்த பைரவி, சிந்து பைரவி – உயர் ரத்த அழுத்தம்
சீராகும்.
மத்தியமாவதி – ஒற்றைத் தலைவலி நீங்கும்.
-
ஒரு வலியைப் பற்றிய அனுபவமுண்டு. வயிற்று வலி
சிறிது அதிகமாக இருக்கையில் உருக்கமான
நாதநாமக் கிரியாவும், ஆனந்த பைரவியும் போக்க உ
தவியிருக்கின்றன,’ என்கிறார்.
-
இது சில ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியிருக்கிறது.
பல தனிமனித அனுபவங்களால் உறுதி
செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ, இசை
இறைவனின் மகாவஸ்து என்பது மட்டும் மாறாத கருத்து.
-
(கர்நாக சங்கீதத்தை ரசியுங்கள் நூலில் இருந்து)
-
———————————————
- வாதூலன்
நன்றி: கல்கி
vraman- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
என்னைப் பொருத்தவரை இசை கேட்கும்போது மனதுக்கு அமைதியும் சாந்தமும் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன்.. என் சந்தோஷங்களையும் வேதனைகளையும் பாடல்களில் உணர்ந்திருக்கிறேன்! பதிவுக்கு நன்றி நண்பா!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
நானும்தான்kanmani singh wrote:என்னைப் பொருத்தவரை இசை கேட்கும்போது மனதுக்கு அமைதியும் சாந்தமும் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன்.. என் சந்தோஷங்களையும் வேதனைகளையும் பாடல்களில் உணர்ந்திருக்கிறேன்! பதிவுக்கு நன்றி நண்பா!
Re: இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
முரளிராஜா wrote:நானும்தான்kanmani singh wrote:என்னைப் பொருத்தவரை இசை கேட்கும்போது மனதுக்கு அமைதியும் சாந்தமும் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன்.. என் சந்தோஷங்களையும் வேதனைகளையும் பாடல்களில் உணர்ந்திருக்கிறேன்! பதிவுக்கு நன்றி நண்பா!
நானும்தான்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இசைக்கு மருத்துவ குணம் உ ண்டா!!!
எனக்குத் தலைவலி என்றால் உடனே மெலடி பாடல்கள் கேட்பேன்... இதற்காகவே ஒரு பத்துப் பாடல்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ளேன். அவைற்றை கேட்பதற்குள் நிச்சயமாத் தலைவலி போய்விடுகிறது.
ஆனால் ஏன் என்று தெரியவில்லை.
ஆனால் ஏன் என்று தெரியவில்லை.
Similar topics
» ச்யவனபிராசத்தின் மருத்துவ குணம்
» "டீ"யின் மருத்துவ குணம்! ! !
» புடலங்காயில் உள்ள மருத்துவ குணம்
» சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!
» காளானின் மருத்துவ குணம் !!! (மஷ்ரூம்')
» "டீ"யின் மருத்துவ குணம்! ! !
» புடலங்காயில் உள்ள மருத்துவ குணம்
» சுண்டக்காயின் மருத்துவ குணம் !!!!
» காளானின் மருத்துவ குணம் !!! (மஷ்ரூம்')
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|