தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இருப்பதை உணர்வோம்...

View previous topic View next topic Go down

இருப்பதை உணர்வோம்... Empty இருப்பதை உணர்வோம்...

Post by முழுமுதலோன் Thu Feb 27, 2014 3:13 pm

தனக்குள்ளே ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனித படைப்பும் வீணான படைப்பு இல்லை. நாம் நம்முடைய பலவீனங்களை மிக பலமாகவும், பலத்தை மிக பலவீனமாகவும் பிடித்திருக்கிறோம்.

‘இழக்கும்வரை நம்மிடம் இருப்பதன் அருமை நமக்குத் தெரிவதில்லை’ என்று பொதுவாக நாம் அனைவருமே பேசிக் கொள்கிறோம். ஒன்றின் முக்கியத்துவத்தை உணராமல், இழப்பைச் சந்தித்த பின்னர்தான், அதன் ஆழத்தையே நாம் உணர்கிறோம். வீட்டின் நிகழ்வுகள் தொடங்கி, அலுவலகச்சூழல் உட்பட, நமது முன்னேற்றத்துக்கான முயற்சிகள் வரை, மூன்று நிலைகளில், ‘இருப்பதை உணர்தல்’ என்பது அவசியத் தேவையான ஒன்று.

ஒரு சில விதிவிலக்குகள் தவிர, பொதுவாக எல்லா வீடுகளிலுமே ஆண்கள் வீட்டில் தங்களுக்கான அனைத்துத் தேவைகளுக்கும், பெண்களைத்தான் எதிர் நோக்கியிருக்கிறார்கள். அவர் அம்மாவாக இருக்கலாம்; சகோதரியாக இருக்கலாம்; மனைவியாக இருக்கலாம் அல்லது மகளாகக்கூட இருக்கலாம். தான் அணியும் துணிகளைத் துவைத்து சலவை செய்து வைப்பதில் தொடங்கி, உணவுண்ட பாத்திரத்தைக் கழுவிக்காய வைப்பதுவரை அனைத்திற்கும் பெண்களைத்தான் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், இவற்றை ஒரு பொருட்டாகவே பெரும்பாலான ஆண்கள் எடுத்துக் கொள்வதில்லை. ‘இவையெல்லாம் தானாக நடக்கின்றன…’ என்பது போலத்தான் நடந்து கொள்வார்கள். இவர்கள் யாரைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர், ஒரு வார காலம் எங்கேனும் ஊருக்குப் போய்விட்டால், அப்போது தெரியும் இவர்கள் நிலை. காலையில் படுக்கையில் இருந்து எழுந்து போது படுக்கை எப்படி இருந்ததோ, அப்படியேதான் இரவுவரை கிடக்கும். பெருக்காமல் கிடப்பதால், நடக்கும்போது வீட்டில் காலில் அழுக்கு ஒட்டும். குடித்து வைத்த தண்ணீர் குவளை வைத்த இடத்திலேயே இருக்கும். மூன்றாம் நாளில் ஓட்டல் சாப்பாடு தன் வேலையை வயிற்றில் காட்டும். ‘எப்போது வருவார்கள்…’ என்று மனம் ஏங்கத் தொடங்கும். இரண்டு நாட்களில் வீட்டில் மறுபடி பழைய கதைதான்!

அதனாலேயே எல்லாவீடுகளிலும் பெண்கள், ‘நான் ரெண்டு நாள் இல்லைன்னா தெரியும் உங்கள் லட்சணம்’ என்பார்கள். சில வீடுகளில் இது வேடிக்கைப் பேச்சாக இடம் பெறும். ஆனால், சில வீடுகளில் ஆழமான கருத்து வேறுபாடுகளுக்கும் இது இடம் தந்துவிடும்.

அதேபோல், குடும்பத்துக்கான பணம் தேடுதலில், கணவன் படும் சிரமங்களை உணராத பெண்களும் உண்டு.

கணவன் மனைவி இருவருமே, ஒருவரின் சுமையை மற்றவர் உணராத நிலையில்தான், சண்டை சச்சரவுகள் குடும்பத்தில் நிலை கொள்கின்றன. இதற்கு இடம் இல்லாதவாறு, கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரால் பெறும் பயனை உணர்ந்து, அவ்வப்போது அதற்கு நன்றி பாராட்டியும், அன்பும் மரியாதையும் காட்டியும் நடந்து கொள்ளும் வீடுகளில் மகிழ்ச்சி நிலைக்கிறது.

அலுவலகங்களிலும் இந்த நிலையைக் காணலாம். இருப்பதிலேயே குறைவாக சம்பளம் பெறும் அலுவலக உதவியாளரை பொதுவாக எவரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. ‘இதெல்லாம் ஒரு வேலையா?’ என்பது போலத்தான் கடைநிலை ஊழியர்களைக் எண்ணுவார்கள்.

ஒரு நாள் அவர் விடுமுறை எடுத்துவிட்டால், அலுவலகத்தின் முக்கியமான அல்லது பெரிய வேலைகள் நடப்பதில்கூட தடுமாற்றம் ஏற்பட்டு விடும். முக்கியமான ஆவணத்தை நகல் எடுக்க முடியாது;

அவசரமாக அஞ்சல்நிலையம் போக ஆளிருக்காது; கோப்பினை ஒரு மேசையிலிருந்து மற்றொன்றுக்குக் கொடுத்து அனுப்பமுடியாது. சரியான நேரத்தில் தேநீர் குடிக்கமுடியாது.

நம்மைவிட எவ்வளவு குறைந்த நிலையில் இருப்பவரின் அவசியத்தையும் உணரும் மனநிலை நமக்கு இருந்தால், அவர் இல்லாததால் வேலையில் ஏற்படும் தடுமாற்றங்கள் கோபத்தைத் தராது. இல்லாவிட்டால், மறுநாள் அவர் அலுவலகம் வந்ததும் அவர்மீது எரிந்து விழுவோம்.

வீடு, அலுவலகம் என்று மேலே சொன்ன இரண்டும் பிற மனிதர்கள் தொடர்பானவை. அடுத்தவரின் உழைப்பினை உணர்ந்து கொள்ள வேண்டியதன் அவசியத்திற்காகச் சொல்லப் பட்டவை.

நமது முன்னேற்றத்திற்கான முயற்சிகளுக்கு யாருடைய உணர்வுகளை நாம் புரிந்து கொள்ளவேண்டும்? அது பிறர் தொடர்பானதல்ல. நமக்குள்ளே புதைந்து கிடக்கும் நமது உணர்வு களை நாம் புரிந்து கொள்ளலே, வெற்றிக்கான ஆரம்பம்.

‘உனக்குள்ளே அனைத்து ஆற்றல்களும் புதைந்து கிடக்கின்றன’ என்று வீரத் துறவி விவேகானந்தரின் சொற்கள் மந்திர சக்தி கொண்டவை. ‘புதைந்து கிடக்கின்றன’ என்றால் என்ன பொருள்? நமக்குள்ளே இருக்கும் ஆற்றல் நமக்கே தெரியாதபடி, எவையெவையோ அதை மூடிக் கிடக்கின்றன. அதை முதலில் நாம் உணர வேண்டும்.

நமக்குள் நாமே பயணம்போய் ஆழமாகப் பள்ளம் தோண்டி, உள்ளே இருக்கும் ஆற்றலைக் கண்டு பிடிக்கவேண்டும். அயராத முயற்சி களினால், ஆழத்தில் புதைந்து கிடக்கும் ஆற்றலை அகழ்ந்து வெளியே கொண்டு வரவேண்டும்.

ஒவ்வொரு மனித மனத்துக்குள்ளும், அவனை அழிக்கும் பலவீனங்களும் உண்டு. ஆக்கும் ஆற்றல்களும் உண்டு.

பொதுவான நமது வளர்ப்பு முறையும் சரி அல்லது சமூகச்சூழலும் சரி, நமது பலவீனங்களையே வளர்த்தெடுக்கின்றன.

நீங்கள் பத்து பேரிடம் பேசிப் பாருங்கள். அதில் ஒன்பது பேர், அடுத்தவர்களைக் குறை சொல்வார்கள். அல்லது புறம் சொல்வார்கள். பல நேரங்களில், இந்த ஒன்பது பேரில் ஒருவராகவே நாமும் இருக்கிறோம். இது மிகப்பெரிய குற்றமில்லைதான்.

ஆனால், கிழப்பருவம் எய்தும்போதும் இந்தக்குறை நம்மை விட்டுப் போகவில்லை என்றால், நமது உணர்வுகளை நாம் ஆராய்ந்து பார்க்கவில்லை என்றுதானே பொருள்?

தனக்குள்ளே ஓர் ஆற்றல் இல்லாதவர் என்று ஒருவருமே இல்லை. எந்த ஒரு மனிதப் படைப்பும் வீணான படைப்பில்லை.

http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இருப்பதை உணர்வோம்... Empty Re: இருப்பதை உணர்வோம்...

Post by kanmani singh Thu Feb 27, 2014 4:50 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி நண்பா..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

இருப்பதை உணர்வோம்... Empty Re: இருப்பதை உணர்வோம்...

Post by sreemuky Thu Feb 27, 2014 9:29 pm

பிறரையும் தன்னை போல மதிப்பவன் தான் மனிதன். அவன் வாழ்வில் உயர்வை கண்டிப்பாக எட்டிவிடுவான்.

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

இருப்பதை உணர்வோம்... Empty Re: இருப்பதை உணர்வோம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum