Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அடிமை தேசம்
Page 1 of 1 • Share
அடிமை தேசம்
அது புகையிலை, சர்க்கரை மற்றும் பருத்தி தாவரங்கள் பெரிய அளவில் உற்பத்தி செய்ய தொடங்கப்பட்ட காலம். அந்த காலத்தில் இந்த பெரிய உற்பத்தி பணிகளை செய்ய அமெரிக்கா மற்றும் கரீபிய பகுதிகளுக்கு அதிகப்படியான வேலை ஆட்கள் தேவைப்பட்டனர்.
ஐரோப்பிய வியாபாரிகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை, சிறைப் பிடிக்கவும் அல்லது வாங்கவும் விருப்பப்பட்டனர். ஆப்பிரிக்க ஆளுநர்களோ தாங்கள் போரில் பிடித்த அடிமைகளை விற்க விருப்பமாய் இருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டப்பட்டோ, விலங்கிடப்பட்டோ கட்டாயப்படுத்தி, மொத்தமாக ஒரு கப்பலின் வரவிற்காக கரையில் காத்திருக்க, இழுத்து செல்லப்பட்டனர். அப்படி கப்பலில் ஏற்றப்பட்டு, நீண்ட கப்பல் பயணத்தில் தப்பி உயிர் பிழைத்தவர்கள், மேலே குறிப்பிட்ட பயிர்களின் சாகுபடி உற்பத்தியாளர்களுக்கு விற்கப்பட்டனர்.
அடிமைத் தனத்தை தடுத்த தட்டுகள்!
இந்த இரண்டு தட்டுகளும் மத்திய ஆப்பிரிக்காவின் சாரா இன பெண்கள் தங்கள் மேல்- கீழ் உதடுகளில் அணிந்து கொள்வதாகும். இது சாரா மக்களால் மிக கவர்ந்து இழுக்கும் அம்சமாக கருதப்பட்டது. ஆனால், ஐரோப்பியர்களை இது கவரவில்லை. அதனால் ஆப்பிரிக்காவிலிருந்து பிடிக்கப் பட்டு, நாடு கடத்தப்பட்டு விற்கப் பட்டவர்களில் இவர்கள் இடம் பெறவில்லை.
பொருளாதார பாதிப்பு!
1500 முதல் 1850 ஆண்டுகளின் காலகட்டத்தில் ஆப்பிரிக்க ஆளுநர்களிடயே ஏற்பட்ட போர்களில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டோ அல்லது பிடிக்கப்பட்டு அடிமைகளாகவோ விற்கப்பட்டனர். இது போன்று கம்பிகளால் பிணைக்கப்பட்டு பயணப்பட ஏராளமானோர் காத்திருப்பர். இது அம்மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையிலும், மக்கள் தொகையிலும் மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
விலங்கிடப்பட்டு!
குதிரைகளில் குழுக்களாய் படை வீரர்கள் மேற்கு ஆப்பிரிக்க காடுகளில் சுற்றி சுற்றி வந்து, எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பிடித்து வருவர். அவர்கள் அனைவரும் மொத்தமாய் விலங்கிடப்பட்டு கப்பல் பயணத்திற்காக கரைக்கு இழுத்து செல்லப்படும்போது கொடூரமாக நடத்தப்படுவர். அந்த கொடூரம் கரையில் கப்பலிற்காக காத்திருக்கம் போதும் தொடரும். குழந்தைகள் பெற்றோருடன்தான் சிறைப்பிடிக்கப் படுவர். ஆனால், குடும்பத்து உறுப்பினர்கள் ஒன்றாக வைக்கப் பட்டிருக்கின்றனரா என்பது பற்றி எந்த அக்கறையும் செலுத்தப்படாது. அடிமைகள் வயது, உருவம் மற்றும் உடல் வலுவைக்கொண்டு பிரிக்கப்படுவர்.
பொருளாய் விற்கப்பட்டனர்!
அடிமையை விற்பவர்கள் அடிமைகளின் நலனில் பெரிதாக அக்கறை கொள்ள மாட்டார்கள். அவர்கள் விற்கும் வரை அடிமைகள் உயிரோடு இருந்தால்போதும் என்பதுதான் அவர்களின் ஒரே கவலை. ஆடு மாடுகள் போல் அடைக்கப்பட்டு விற்கப்படுவர். வாங்கியவர், அடிமைகள் தன் சொந்தம் என்பதை அறிவிக்க முத்திரை குத்துவார்.
அடிமைகளின் ஏலம்!
அமெரிக்காவின் வர்ஜீனியாவின் கரைகளிலோ, கரீபிய கரைகளிலோ விற்கப்பட வேண்டிய இடத்திற்கு ஏற்ப அடிமைகள் ஏலத்திற்காக இறக்கப் படுவர். ஏலத்தில் எடுக்க வந்தவர்கள் ஒவ்வொரு அடிமையாய் அவர்கள் எப்படி இருக்கின்றனர். உடல் வலிமை, ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்த பின்தான் ஏலம் எடுப்பர். வயதை அறிய அடிமைகளின் பற்கள் கணக்கெடுக்கப் பட்டது. அடிமைகள் மனிதர்களாகவே கருதப்படவில்லை. வயதானாலோ, உடல்நலமின்றி போனாலோ, கிளர்ச்சி செய்தாலோ மாற்று ஏற்பாடு செய்யப் பட வேண்டிய ஜந்து என்றே கருதப்பட்டனர்.
அடிமைத்தனத்தின் எழுச்சியும், சரிவும்!
1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்பதை பிரபலமாக்கியது அராபிய வணிகர்கள்தான். பின்னர், ஐரோப்பியர்களும் இதில் இறங்க, 1800-ஆண்டு வாக்கில் இந்த அடிமை விற்பனை தொழில் கொடிக்கட்டி பறந்தது. அடிமைத் தளைக்கு எதிரான போராட்டம் பலம் பெற்று பெரிய அளவில் விழிப்புணர்வை 18ம் நூற்றாண்டில் ஏற்படுத்தியது. 1833ம் ஆண்டு பிரிட்டனின் பாராளுமன்றம் அடிமைத்தனத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றியதோடு அந்த ஆண்டிலேயே எல்லா அடிமைகளையும் விடுதலை செய்ய வைத்தது.
கப்பலில் அடிமைப்பயணம்!
அடிமைகளை ஏற்றி செல்லும் கப்பல் எப்பொழுதும் வழக்கத்துக்கு அதிகமான ஆட்களை ஏற்றி செல்லும். 400 பேர் பயணிக்கும் கப்பலில் 600 அடிமைகள் அடைக்கப்படுவர். பயணத்தில் பல அடிமைகள் இறந்து விடுவர். சிலபேர் அடிமை வாழ்வை வெறுத்து உணவை மறுத்தோ, கடலில் குதித்தோ மடிவர்.
தினமலர்.
ஐரோப்பிய வியாபாரிகள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை, சிறைப் பிடிக்கவும் அல்லது வாங்கவும் விருப்பப்பட்டனர். ஆப்பிரிக்க ஆளுநர்களோ தாங்கள் போரில் பிடித்த அடிமைகளை விற்க விருப்பமாய் இருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கட்டப்பட்டோ, விலங்கிடப்பட்டோ கட்டாயப்படுத்தி, மொத்தமாக ஒரு கப்பலின் வரவிற்காக கரையில் காத்திருக்க, இழுத்து செல்லப்பட்டனர். அப்படி கப்பலில் ஏற்றப்பட்டு, நீண்ட கப்பல் பயணத்தில் தப்பி உயிர் பிழைத்தவர்கள், மேலே குறிப்பிட்ட பயிர்களின் சாகுபடி உற்பத்தியாளர்களுக்கு விற்கப்பட்டனர்.
அடிமைத் தனத்தை தடுத்த தட்டுகள்!
இந்த இரண்டு தட்டுகளும் மத்திய ஆப்பிரிக்காவின் சாரா இன பெண்கள் தங்கள் மேல்- கீழ் உதடுகளில் அணிந்து கொள்வதாகும். இது சாரா மக்களால் மிக கவர்ந்து இழுக்கும் அம்சமாக கருதப்பட்டது. ஆனால், ஐரோப்பியர்களை இது கவரவில்லை. அதனால் ஆப்பிரிக்காவிலிருந்து பிடிக்கப் பட்டு, நாடு கடத்தப்பட்டு விற்கப் பட்டவர்களில் இவர்கள் இடம் பெறவில்லை.
பொருளாதார பாதிப்பு!
1500 முதல் 1850 ஆண்டுகளின் காலகட்டத்தில் ஆப்பிரிக்க ஆளுநர்களிடயே ஏற்பட்ட போர்களில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டோ அல்லது பிடிக்கப்பட்டு அடிமைகளாகவோ விற்கப்பட்டனர். இது போன்று கம்பிகளால் பிணைக்கப்பட்டு பயணப்பட ஏராளமானோர் காத்திருப்பர். இது அம்மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையிலும், மக்கள் தொகையிலும் மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
விலங்கிடப்பட்டு!
குதிரைகளில் குழுக்களாய் படை வீரர்கள் மேற்கு ஆப்பிரிக்க காடுகளில் சுற்றி சுற்றி வந்து, எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை பிடித்து வருவர். அவர்கள் அனைவரும் மொத்தமாய் விலங்கிடப்பட்டு கப்பல் பயணத்திற்காக கரைக்கு இழுத்து செல்லப்படும்போது கொடூரமாக நடத்தப்படுவர். அந்த கொடூரம் கரையில் கப்பலிற்காக காத்திருக்கம் போதும் தொடரும். குழந்தைகள் பெற்றோருடன்தான் சிறைப்பிடிக்கப் படுவர். ஆனால், குடும்பத்து உறுப்பினர்கள் ஒன்றாக வைக்கப் பட்டிருக்கின்றனரா என்பது பற்றி எந்த அக்கறையும் செலுத்தப்படாது. அடிமைகள் வயது, உருவம் மற்றும் உடல் வலுவைக்கொண்டு பிரிக்கப்படுவர்.
பொருளாய் விற்கப்பட்டனர்!
அடிமையை விற்பவர்கள் அடிமைகளின் நலனில் பெரிதாக அக்கறை கொள்ள மாட்டார்கள். அவர்கள் விற்கும் வரை அடிமைகள் உயிரோடு இருந்தால்போதும் என்பதுதான் அவர்களின் ஒரே கவலை. ஆடு மாடுகள் போல் அடைக்கப்பட்டு விற்கப்படுவர். வாங்கியவர், அடிமைகள் தன் சொந்தம் என்பதை அறிவிக்க முத்திரை குத்துவார்.
அடிமைகளின் ஏலம்!
அமெரிக்காவின் வர்ஜீனியாவின் கரைகளிலோ, கரீபிய கரைகளிலோ விற்கப்பட வேண்டிய இடத்திற்கு ஏற்ப அடிமைகள் ஏலத்திற்காக இறக்கப் படுவர். ஏலத்தில் எடுக்க வந்தவர்கள் ஒவ்வொரு அடிமையாய் அவர்கள் எப்படி இருக்கின்றனர். உடல் வலிமை, ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்த பின்தான் ஏலம் எடுப்பர். வயதை அறிய அடிமைகளின் பற்கள் கணக்கெடுக்கப் பட்டது. அடிமைகள் மனிதர்களாகவே கருதப்படவில்லை. வயதானாலோ, உடல்நலமின்றி போனாலோ, கிளர்ச்சி செய்தாலோ மாற்று ஏற்பாடு செய்யப் பட வேண்டிய ஜந்து என்றே கருதப்பட்டனர்.
அடிமைத்தனத்தின் எழுச்சியும், சரிவும்!
1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக விற்பதை பிரபலமாக்கியது அராபிய வணிகர்கள்தான். பின்னர், ஐரோப்பியர்களும் இதில் இறங்க, 1800-ஆண்டு வாக்கில் இந்த அடிமை விற்பனை தொழில் கொடிக்கட்டி பறந்தது. அடிமைத் தளைக்கு எதிரான போராட்டம் பலம் பெற்று பெரிய அளவில் விழிப்புணர்வை 18ம் நூற்றாண்டில் ஏற்படுத்தியது. 1833ம் ஆண்டு பிரிட்டனின் பாராளுமன்றம் அடிமைத்தனத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றியதோடு அந்த ஆண்டிலேயே எல்லா அடிமைகளையும் விடுதலை செய்ய வைத்தது.
கப்பலில் அடிமைப்பயணம்!
அடிமைகளை ஏற்றி செல்லும் கப்பல் எப்பொழுதும் வழக்கத்துக்கு அதிகமான ஆட்களை ஏற்றி செல்லும். 400 பேர் பயணிக்கும் கப்பலில் 600 அடிமைகள் அடைக்கப்படுவர். பயணத்தில் பல அடிமைகள் இறந்து விடுவர். சிலபேர் அடிமை வாழ்வை வெறுத்து உணவை மறுத்தோ, கடலில் குதித்தோ மடிவர்.
தினமலர்.
Similar topics
» உன் அழகால் அடிமை -- முஹம்மத் ஸர்பான்
» யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்
» மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்
» இதுதான் நம் தேசம்.!
» 108 திவ்விய தேசம்
» யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்
» மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம்
» இதுதான் நம் தேசம்.!
» 108 திவ்விய தேசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|