Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சுருங்கக் கூறி விளங்க வை!
Page 1 of 1 • Share
சுருங்கக் கூறி விளங்க வை!
உபதேசங்கள் எப்போதும் சுருக்கமாக அமைய வேண்டும். பேருரைகளாகவோ பெரும் சொற்போராக அமைந்தால் ‘சரியான மொக்கை’ என்று கூறி புறக்கணித்துவிடுவார்கள்.
கசையடி கொடுப்பதில் திறமை மிக்கவர் யார் தெரியுமா..? தனது பலத்தை நிரூபிப்பதற்காக சக்தியை ஒன்று திரட்டி ஓங்கி அடிப்பவர் அல்ல. மாறாக எங்கு அடித்தால் எப்படி வலிக்கும் என்று தெரிந்து அடிப்பவரே திறமைசாலி.
உபதேசங்களும் அவ்வாறுதான். சுருங்கக் கூறி விளங்க வைக்க வேண்டும். இல்லையேல் உபதேசம் என்ற பெயரில் செய்யப்படும் பேருரைகள் காற்றோடு காற்றாக கலந்து விடும். முடிந்தவரை சுருக்கமாக அமைய வேண்டும். அதிலும் குறிப்பாக நாம் யாரை உபதேசிக்கின்றோமோ அவர், தான் செய்தது தவறு தான் என்று உணர்ந்து வருந்தும் நிலையில் இருக்கும்போது.
‘நறுக்குத் தெறித்தார் போல்’ என்று கூறுகின்றோமே அவ்வாறு அமைய வேண்டும். தெளிவாகவும் அதேவேளை சுருக்கமாகவும் இருக்க வேண்டும்.
நபிகளாரின் உபதேசங்கள் அனைத்தும் நறுக்குத் தெறித்தால் போலத் தான் அமைந்திருந்தன. அண்ணலாரின் உபதேசங்கள் அனைத்தும் ஒரு வரி அல்லது இரண்டு வரி தான். இன்றைக்கு நாம் செய்வதைப் போன்று மணிக்கணக்கில் நீட்டி முழக்க மாட்டார்கள். தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் செய்த பின்வரும் உபதேசங்களைக் கவனியுங்கள்:
‘அலி! (அனுமதியற்ற ஒன்றை) தொடர் பார்வை பார்க்காதே! ஏனெனில், முதல் பார்வை உன்னுடையது. அடுத்த பார்வை உன்னுடையது அல்ல’.
‘அப்துல்லாஹ்! உலகில் ஓர் அந்நியன் போன்றோ அல்லது ஒரு பயணியைப் போன்றோ வாழ். அதி மோகம் கொள்ளாதே!’
‘முஆத்! இறைவன் மீது ஆணையாக! உன்னை நான் அதிகம் விரும்புகின்றேன். ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் இறைவனைப் புகழ மறந்துவிடாதே!’
‘உமரே! நீர் ஒரு பலசாலி. ஆகவே ஹஜருல் அஸ்வத் கல்லை (கஅபாவின் ஒரு மூலையில் இருக்கும் கருப்புக் கல்) முத்தமிடும் இடத்தில் பிறருக்கு சிரமங்களைக் கொடுக்காதீர்’.
அறிவாளிகளின் உபதேசங்கள் அனைத்தும் எப்போதும் இவ்வாறுதான் அமைந்திருக்கும். பிறரை உபதேசிக்கும்போது நபித்தோழர்களும் இவ்வழிமுறையையே கடைபிடித்தார்கள்.
மதீனாவின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர் அல்பர்தஸிக். இவர் தனது கவிதைகளில் கற்புக்கரசிகளைக் குறித்து புனைந்து கூறுவார். ஒருநாள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவரை சந்திக்கிறார். இவரது செய்கை குறித்து அபூஹுரைரா அவர்களுக்குத் தெரியும்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்களின் உபதேசம் எவ்வாறு இருந்தது தெரியுமா? ‘எனது சகோதரரின் மகனே! உமது பாதங்கள் மிகவும் சிறியவையாக உள்ளன. ஆகவே சுவனம் செல்லத் தகுதியற்றதாக அவற்றை மாற்றிவிடாதே!’.
உமர் (ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடக்கின்றார். பல நபித்தோழர்களும் அவரை நலம் விசாரிப்பதற்காகவும், அவருக்காக பிரார்த்தனை புரிவதற்காகவும் வரிசையாக வந்துகொண்டே இருக்கின்றனர்.
அப்போது ஓர் இளைஞர் அங்கே வருகின்றார். உமருக்காக பிரார்த்தனை புரிகின்றார். ஆறுதல் கூறுகின்றார். அவர் திரும்பிச் செல்லும்போது அவரது ஆடையை உமர் (ரலி) கவனிக்கின்றார். கரண்டைக் கால்களுக்குக் கீழாக இறங்கி இருக்கின்றது.
அந்த நேரத்திலும் உமர் (ரலி) அவர்களின் உபதேசம் இவ்வாறுதான் அமைந்திருந்தது: ‘சகோதரரின் மகனே! உமது ஆடையை உயர்த்துவீராக! அது, உமது ஆடைக்குப் பாதுகாப்பும், உமது இறைவன் குறித்த அச்சத்தின் அடையாளமும் ஆகும்’. (புகாரி)
உபதேசம் என்ற பெயரில் நிறைய நபர்கள் இன்று விவாதம் புரிகின்றனர். இது எப்பயனையும் ஏற்படுத்தாது.
குறிப்பாக நாம் பேசிக்கொண்டிருக்கும் நபர் நமது பேச்சைஅலட்சியம் செய்பவராகவோ கர்வம் கொண்டவராகவோ இருந்தால் விவாதத்தை முற்றிலும் தவிர்த்து கொள்வதே புத்திசாலித்தனம்.
ஏனெனில் உபதேசத்தின் நோக்கமே இதயங்களை வெல்வதுதானே தவிர, விவாதத்தில் வெற்றி காண்பது அல்ல.
நபிகளார் (ஸல்) அவர்களிடம் அன்றைய மக்கத்து மக்கள் இறைவனைக் குறித்து விவாதம் புரிந்தனர். அது குறித்து இறைவனே இவ்வாறு குறிப்பிடுகின்றான்: ‘அவர்கள் இந்த உதாரணத்தை முன்வைத்தது வெறும் வீண் வாதத்திற்குத்தான்’ (திருக்குர்ஆன் 43: 58)
ஏனெனில் உண்மை தான் என்று தெரிந்த பின்பும் கர்வத்தின் காரணத்தால் அதனை ஏற்காமல் இருக்கும் நபர்கள் பலர் உண்டு. அவர்களிடம் சென்று உபதேசிக்கிறேன் பேர்வழி என்று சொற்போர் நடத்தத் துவங்கினால் நமது நேரமும் முயற்சியும் வீணாகும்.
பிர்அவனுடைய கூட்டத்தைப் போன்று தலைக்கனம் கொண்ட கூட்டம் எவரும் இல்லை. உண்மையை அவர்களது உள்ளங்கள் ஏற்றிருந்தன. ஆனால் ஆணவமும், அதிகார மமதையும் அதனை ஒப்புக்கொள்ள விடாமல் தடுத்தன.
திருக்குர்ஆன் இது குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றது:
‘அவர்கள் முற்றிலும் அநியாயமான முறையிலும் ஆணவத்தினாலும் தான் அந்தச் சான்றுகளை மறுத்தார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளங்களோ அவற்றை ஏற்றுக்கொண்டிருந்தன’. (திருக்குர்ஆன் 27:14)
ஆகவே, இப்போது இல்லாவிட்டால் பிறகு எப்போதாவது மாறக்கூடும் என்ற சிந்தனையுடன் நமது உபதேசம் அமையவேண்டும். எப்பாடு பட்டேனும் எதிராளியை வெற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்கு இது ஒன்றும் மல்யுத்தக் களம் அல்லவே.
ஒருதடவை இரவு வேளையில் நபி (ஸல்) அவர்கள் தமது மகள் பாத்திமா (ரலி) மற்றும் அவரது கணவர் அலி (ரலி) ஆகியோரின் வீட்டிற்குச் சென்றார்கள். இரவு வணக்கத்திற்காக அவர்களை எழுப்பி விடுவதுதான் நபிகளாரின் நோக்கம்.
அங்கு சென்றதும் பெருமானார் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்: ‘இரவுத் தொழுகைக்காக இருவரும் எழும்பவில்லையா..?’
அப்போது அலி (ரலி) கூறினார்: ‘எங்களது உயிர் அந்த இறைவன் கைவசத்தில் உள்ளது. ஆகவே அவன் எங்களை எப்போது எழுப்ப வேண்டுமென்று நாடுகின்றானோ அப்போது எழுப்புவான்’.
இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் பின்வரும் இறை வசனத்தை கூறியவர்களாக அங்கிருந்து திரும்பினார்கள்: ‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 18:54)
எவ்வளவு சுருக்கமான உபதேசம் என்பதைக் கவனித்துப் பாருங்கள். அலி (ரலி) அவர்களுக்கு இதுவே போதும்.
ஆகவே உபதேசிக்கும்போது எப்போதும் சுருக்கமாக உணர்த்துங்கள். பேருரைகள் ஆற்றத் துவங்கிவிடாதீர்கள்.
மவ்லவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சுருங்கக் கூறி விளங்க வை!
உபதேசத்தின் நோக்கமே இதயங்களை வெல்வதுதானே தவிர, விவாதத்தில் வெற்றி காண்பது அல்ல.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:
» கைவிரல் நகங்களைப்போன்றே கால்விரல் நகங்களும் கவர்ச்சியானதாக விளங்க கடைப்பிடிக்கவேண்டியவை...
» நாம் தமிழர் அமைப்பு என்று கூறி தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டுவதாக
» போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
» கருப்புப் பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்குப் பதிவு
» கைவிரல் நகங்களைப்போன்றே கால்விரல் நகங்களும் கவர்ச்சியானதாக விளங்க கடைப்பிடிக்கவேண்டியவை...
» நாம் தமிழர் அமைப்பு என்று கூறி தன்னை சிலர் தொடர்ந்து மிரட்டுவதாக
» போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
» கருப்புப் பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்குப் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|