தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம்

View previous topic View next topic Go down

பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம் Empty பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:06 pm

பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம் Aysha9

கடல்களையும், கடல்சார் உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 8ம் தேதி, சர்வதேச கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'கடலை காக்க அனைவருக்கும் அதிகாரம்' என்பது இந்த ஆண்டு கடல் தினத்தின் மையக்கருத்தாக உள்ளது.
பூமி ஒரு பங்கு நிலத்தாலும், மூன்று பங்கு தண்ணீராலும் சூழப்பட்டுள்ளது. உலகில் உள்ள மொத்த தண்ணீரில் 97 சதவீதம் கடல் நீர். இதனால், வானில் இருந்து பூமியை பார்த்தால் ஊதா நிறத்தில் தெரிகிறது. கடலால், மனிதர்களுக்கு பலவிதமான நன்மை கிடைக்கிறது. தற்போது அவை வேகமாக மாசடைந்து வருகின்றன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, பிரச்னைகளை கடல் சந்திக்கிறது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில், 70 முதல் 80 சதவீதம் கடல் மூலமாக உருவாகிறது. நமக்குத் தேவையான குடிநீரும், கடலில் இருந்து மழையாக கிடைக்கிறது. கடல் மூலம் தான் அதிகளவு வணிகம் நடக்கிறது. உலகில் பல கோடி மக்கள் தினமும், உணவு, வருமானம் ஆகியவற்றுக்காக கடலை நம்பி தான் உள்ளனர். மீனவர்களுக்கு கடலில் தான் வாழ்க்கையே. உலக மக்களில் பெரும்பகுதியினர் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கடல் மூலம் பயன் பெறுகின்றனர்.
கடலில் பல அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறைகள், பனிப்பாறைகள் உள்ளன. பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்கிறது. இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது.செயற்கை கழிவுகளை கடலில் கொட்டுவதாலும், எண்ணெய், கழிவுகள் கலப்பதாலும் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. கடல்களில் குறிப்பிட்ட சதவீத பவளப்பாறைகள் அழிந்து விட்டன. மேலும் உள்ள பவளப்பாறைகள், வேகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கடலை நாம் கண்டுகொள்ளாவிடில், கண்டிப்பாக பெரிய பாதிப்புக்கு உள்ளாவோம். கடலின் வளத்தை பேண, உலக மக்கள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.
குப்பையால் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள்: இன்று, பெருங்கடல் தினம்...
உலகை ஆட்சி செய்வதில், கடல்களுக்கு பெரும்பங்கு உண்டு. கடல்கள், பல்லுயிர் பெருக்கத்தின் ஆதித் தாய்; உயிர் வாயு உருவாக்கத்தின் மூலம்; அழகின் அதிசயம். கடற்கரை... மனிதர்களை வசியமாக்கும் ரகசியம்.
அப்படிப்பட்ட கடலையும், கடற்கரையையும் காப்பாற்றுவதும், கொண்டாடுவதும், தூய்மையாக வைத்திருப்பதும் நம் கடமை. நம் கடல் உயிரிகளைப் பற்றியும், அவற்றின் பாதுகாப்பு குறித்தும், கடல் உயிரியல் மையத்துக்குட்பட்ட, விலங்கியல் ஆய்வகத் துறை விஞ்ஞானி ராஜ்குமார் என்ன சொல்கிறார்...
* சென்னை பகுதிக்குட்பட்ட கடலின் பல்லுயிர் பெருக்கம் எப்படி இருக்கிறது?ஏறத்தாழ, 40 கி.மீ., அளவுள்ள, சென்னைப் கடற்கரைப் பகுதியிலும், அதன் கழிமுகப் பகுதிகளிலும், ஏறக்குறைய, 1,270 வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அதில், 200 வகை க்ரஸ்டேசியன்கள், 273 வகை மொலாஸ்க்கள், 493 வகை மீன்கள், 19 வகை ஊர்வன, ஆறு வகை பாலூட்டிகள் அடக்கம். ஊர்வன இனத்தைப் பொறுத்தவரை, சென்னை பகுதியில், கடல் பாம்புகள், கடல் ஆமைகள் அதிகம் உள்ளன.
* தற்போது, இந்த உயிரிகளின் பெருக்கம் உயர்ந்திருக்கிறதா?நம் நாட்டில், நிலவாழ் உயிரிகளின் பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, கடல் உயிரினப் பாதுகாப்புக்கு, குறைவான முக்கியத்துவமே கொடுக்கப்படுகிறது. அதனால், கடற்பஞ்சு, கடற்பசு, கடற்குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட பல்லுயிர் பெருக்கம் குறைந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
* பல்லுயிர் பெருக்கம் குறைவதற்கான காரணங்களாக எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள்?அதற்கு, பல்வேறு காரணங்களை சொல்லலாம். பொதுவாக, எண்ணூர் துறைமுகத்தை அடிக்கடி ஆழப்படுத்துவதால், வடசென்னையின் பல்வேறு பகுதிகளில், மணல் அரிப்பு ஏற்படுகிறது. மேலும், ஆழப்படுத்தும் போது, நீர் குழம்புவதாலும், வெளியேறும் வண்டல் படிவு, விலங்குகளின் வாழ்விடங்களில் படிவதாலும், அவற்றின் வாழ்க்கைப் பெரிதும் பாதிக்கிறது. அதனால், அந்த பகுதிகளில் பல்லுயிர்ப் பெருக்கம் குறைகிறது. வீட்டுக் கழிவுகளும், குப்பைகளும் தான், சென்னையின் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றன. இந்த கழிவுகள், அடையாறு, கூவம் ஆறுகளின் வழியாக, கடலை வந்தடைவதால், கடல்வாழ் உயிரினங்கள் மிகுதியாக பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு உயிரினங்கள், அழியும் நிலைக்கே சென்று விட்டன. சென்னை நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதி களில், நவம்பர் முதல் மார்ச் வரையில், சில அரிய வகை கடல் ஆமைகள் வந்து, முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், அந்த பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்குவதால், ஆமைகள் மிகுந்த குழப்பமடைவதோடு, அதன் இனப்பெருக்கமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.
இந்தியாவின், முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில், பல சிறு, குறு தொழிற்சாலைகள், தங்களின் கழிவுகளை சுத்திகரிக்காமல், ஆறுகளின் வழியே திறந்து விடுவதாலும், உர, பெட்ரோலிய தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்கள், ஆறுகளில் கலப்பதாலும், கோவளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் வாழும் உயிர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. மீனவர்கள் பயன்படுத்தும் சிலவகை வலைகளில், டால்பின், கடல் ஆமைகள் போன்ற, மீனவர்களுக்குத் தேவையில்லாத, 90 சதவீத உயிரினங்கள் சிக்கி உயிரிழக்கின்றன. கேளிக்கை பூங்காக்கள், தனியார் நிறுவனங்கள், கடற்கரை சார்ந்த உணவகங்கள் உள்ளிட்டவை, புதிது புதிதாய், மாமல்லபுரம் வரையில் உள்ள கிழக்கு கடற்கரையில் முளைக்கின்றன. ஆனால், அந்த இடங்கள், ஏற்கனவே பல்வேறு உயிர்களின் இனப்பெருக்க பிரதேசங்களாக இருந்தவை.
* பெருங்கடல் தினத்தில் மக்களுக்கு விடுக்கும் செய்தி?கோவா, கேரளம் உள்ளிட்ட இந்திய கடற்பகுதிகளோடு ஒப்பிடும்போது, சென்னை கடற்கரையில் தான் அதிக அளவு, பிளாஸ்டிக் கழிவுகள் போடப்படுகின்றன. இந்த பெருங்கடல் தினத்தில் இருந்து, கடற் கரைக்கு வருபவர்கள், 'பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன்' என, சபதமெடுத்தால், நம் சந்ததிக்கும், பல்லுயிர்களின் சந்ததிக்கும் செய்யும் உபகாரமாக இருக்கும்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம் Empty Re: பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம்

Post by ஜேக் Mon Jun 09, 2014 2:23 am

பிளாஸ்டிக் ஆபத்தை நம் மக்கள் இன்னும் சரிவர அறியாதிருப்பது இதிலிருந்து தெரிகிறது...

இன்னும் இது பற்றிய விழிப்புணர்வு நம்மக்களிடம் பலமாக உணர்த்தப்பட அரசு வழிவகை செய்ய வேண்டும்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம் Empty Re: பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம்

Post by செந்தில் Mon Jun 09, 2014 12:15 pm

அவசியமான விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம் Empty Re: பூமித்தாயின் நீலச்சோலை: சர்வதேச கடல் தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum