தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்று.. கணவனை இழந்தவர்களுக்கான சர்வதேச தினம்

View previous topic View next topic Go down

இன்று.. கணவனை இழந்தவர்களுக்கான சர்வதேச தினம் Empty இன்று.. கணவனை இழந்தவர்களுக்கான சர்வதேச தினம்

Post by நாஞ்சில் குமார் Mon Jun 23, 2014 11:03 pm

உழைப்பால் வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பெண்கள்:   இன்று.. கணவனை இழந்தவர்களுக்கான சர்வதேச தினம்

கணவனை இழந்தோருக்கான சர்வதேச தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

கணவரை இழந்த நிலையிலும் உழைப்பால் வாழ்க்கையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பெண்கள் தங்கள் அனுபவங்களை தெரிவிக்கின்றனர்.

சூளைமேடு நமச்சிவாய புரத்தில் இட்லி கடை வைத்திருக்கும் தேன் மொழி தனது கணவரை 4 ஆண்டுகளுக்கு முன்பு இழந்துவிட்டார். குடி பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த அவரது கணவர் மஞ்சள் காமாலையால் இறந்துவிட்டார். தனது 3 குழந்தைகளையும் தனியாளாக இருந்து காப்பாற்றி வருகிறார். தேன்மொழி கூறுகையில், “எனது பெற்றோர் இறந்து விட்டனர். எனது கணவர் வீட்டிலிருந்து யாரும் உதவுவதில்லை. எனது பிள்ளைகளுக்கு தாத்தா பாட்டி சேர்த்து வைத்த சொத்து என்று எதுவும் இல்லை. ஆனால், எனது பேர குழந்தைகளுக்கு அந்த நிலை வரக்கூடாது. அதற்காக, நான் யாரிடமும் உதவி கேட்டு நிற்க மாட்டேன். எனது இட்லி கடை எனக்கு கை கொடுக்கும். பத்தாவது படிக்கும் எனது மகள் கலெக்டராக வேண்டும் என்கிறாள். எட்டாவது படிக்கும் மகள் டாக்டராக வேண்டும் என்கிறாள். ஆண்டவன் துணையோடு அவர்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

கணவனை இழந்தவர்கள் வாழ தகுதியற்றவர்கள் என்ற கருத்து பல இடங்களில், பல வடிவங்களில் இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால்,அதையும் தாண்டி, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் இவர்கள்.

ஏழு ஆண்டுகளாக கணவனை இழந்து வாழும் கலைச்செல்வி கூறுகையில், “எனது கணவர் குடிப்பழக்கத்தால்தான் உயிரிழந்தார். அவர் இருக்கும் போது அவரால் ஏற்பட்ட துன்பங்கள் அதிகம். எனினும், அவர் இறந்த பிறகு அக்கம் பக்கத்தில் உள்ள ஆண்களின் பார்வை தவறாக இருக்கிறது. நான் கணவனை இழந்திருப்பதால், இரவு நேர காப்பாளர் வேலைக்கு அழைக்கிறார்கள். ஆனால், நான் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு எனது 2 பிள்ளைகளுக்காக வாழ்வேன். அவர்கள்தான் எனது வாழ்க்கையின் நம்பிக்கை” என்கிறார்.

தமிழக விதவைப் பெண்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சா. பால் மைக்கேல்ராஜ் கூறுகையில், “கணவனை இழந்தவர்கள் பற்றிய சமூகப்பார்வை மாற வேண்டும். அவர்களுக்கான தனி சட்டம் இயற்ற வேண்டும். அரசு உதவித் தொகையை பெறுவதற்கு 40 வயதாகி இருக்க வேண்டும், 18 வயதுக்கு மேல் உள்ள மகன் இருக்கக் கூடாது, குடும்ப அட்டைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை களைய வேண்டும்” என்றார்.

லயோலா கல்லூரியின் இளம் விதவைகளுக்கான வாழ்வாதாரத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரியா கூறுகையில், “சென்னையின் குடிசைப் பகுதிகளில் அதிக விதவைகளை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். இதில் 90 சதவீதம் குடும்பங்களில் குடிப்பழக்கத்தினால்தான் கணவர்கள் உயிரிழக்கின்றனர். இளம் விதவைகளுக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் இருப்பதால், அவர்களுக்கான பொருளாதார சுதந்திரம் மிகவும் அவசியமாகிறது” என்றார்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum