தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கசப்பானதொரு உண்மை

View previous topic View next topic Go down

கசப்பானதொரு உண்மை Empty கசப்பானதொரு உண்மை

Post by நாஞ்சில் குமார் Thu Jul 24, 2014 10:30 pm

கசப்பானதொரு உண்மைசிறுகதை

போட்ட பட்ஜெட்டுக்கு மேலேயே இழுத்துக் கொண்டு போய்விட்டிருந்தது எங்கள் மகளின் கலியாணம்.

வீட்டைக் கட்டிப்பார். கலியாணத்தைப் பண்ணிப்பார்னு சும்மாவா சொன்னாங்க” என்று என் நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள் எனக்கு.

“நான் அது பத்தியெல்லாம் கவலைப்படலை’ என்று எப்படி அவர்களிடம் சொல்வது…?

வாழ்க்கைப்பட்ட இடத்தில் பெண் வசதியாய், மனநிறைவாய் வாழ்ந்தால் அது போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் என் சம்பந்தி அருகில் வந்தார்.

“கலியாணத்தை எந்தக் குறையும் வைக்காம பண்ணிட்டீங்க” என்று புன்முறுவலுடன் சொன்னார்.

“அது என் கடமை.”

“ஆனாலும்…”

“என்ன சொல்லுங்க. இன்னும் ஏதாவது நாங்க செய்யணுமா?” என்று நான் கேட்க, “என்ன சம்பந்தி இப்படி கேட்டுட்டீங்க?” என்றார்.

“தவறாயிருந்தா என்னை மன்னிச்சிடுங்க” என்றேன்.

“எங்களை என்ன ஈவிரக்கம் இல்லாதவங்கனு நினைச்சிட்டீங்களா சம்பந்தி” என்றார் கண்ணீருடன்.

“ஐயோ.. நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான். தேவையில்லாமல் ஒருத்தர் மனசைப் புண்படுத்திட்டேன்.” என்றேன்.

“மறுபடி மறுபடி ஏன் பெரியபெரிய வார்த்தையெல்லாம். நாம் ஒண்ணுக்குள் ஒண்ணாயிட்டோம். இந்த சம்பிரதாய மன்னிப்பெல்லாம் நமக்குள்ள தேவையா?” என்றவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை எனக்கு.

பிறகு அவரே தொடர்ந்தார். “இதபாருங்க நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்கக்கூடாது நீங்க”

“நான் ஏன் உங்களைத் தப்பா நினைக்கிறேன்.”

“எங்க ஒரே மகனுக்கு கலியாணம் பண்ண பெண் பார்த்தப்ப உங்க பெண் ஜாதகம் கிடைச்சது.. பொருத்தம் அருமையாயிருந்தது. பையனுக்குப் பெண்ணையும்,பெண்ணுக்குப் பையனையும் பிடிச்சுது. நமக்குள்ளயும் ஒரு புரிதல் இருந்திச்சி. நாங்க எதையும் உங்க கிட்டயிருந்து எதிர்பார்க்கலைன்னு பல முறைகள் சொல்லிப் பார்த்தோம். ஆனா நீங்க கேட்கலை. எங்க பெண்ணுக்கு நாங்க என்ன செய்யணுமோ அதை செய்ய அனுமதிக்கணும். இல்லைனா எங்க மனசு புண்பட்டுப் போகும்னு நீங்க வற்புறுத்தி கேட்டதாலதான் உங்க விருப்படியே செய்யுங்கனு விட்டோம் மனசேயில்லாம. நீங்க செஞ்ச எந்த சீர்செனத்தி பத்தியும் குற்றம், குறை சொல்லலை. மனநிறைவாதான் ஏத்துகிட்டோம். மத்தவங்க மாதிரியில்லை நாங்க. இந்தக் காலத்தில் பெண்கள் ஆண்களுக்கு சமமா நல்லா படிக்கிறாங்க. நல்ல வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கிறாங்க. ஆட்டோகூட ஓட்டுறாங்க. அப்பப்பா… கிரேட். ஐயா நான் பெண்களை மதிக்கிறவன்” என்றவர் சற்று நிறுத்தி,ஆம் ஐ போரிங் யூ சம்பந்தி?” என்றார்.

“நாட் அட்டால். ஆனா இப்ப என்ன சொல்ல வர்ரீங்கனு என் சிற்றறிவுக்கு எட்டலை. நாங்க ஏதாவது தெரிஞ்சோ, தெரியாமலோ தவறு செஞ்சிருந்தா எங்களை மன்னிச்சிரணும். கலியாணத்தில் உங்களைச் சேர்ந்தவங்களை எங்க பக்கத்தில் யாராவது தரக்குறைவா நடத்திட்டாங்களா?”

” நோ.. நோ.. ஏன் இப்படியெல்லாம் எதை எதையோ எண்ணி மறுகறீங்க.”

“நாங்க எல்லாருமே பூரண திருப்தியோடதான் இருக்கோம். நான்.. நான்.. மனப்பூர்வமா ஒரு கேள்வியை உங்ககிட்ட கேட்கப்போறேன். கேள்வி தவறாயிருந்தா என்னை மன்னிச்சிரணும். ஆனா அக்கேள்வியின் உள்அர்த்தம் உங்களுக்கு ஒருநாள் புரியவரும்.. அதனால் தயவுபண்ணி நான் கேட்கப்போற கேள்வியைத் தப்பா எண்ணக்கூடாது.”

“பரவாயில்லை சொல்லுங்க. ஏன் இவ்வளவு பீடிகை? நீங்க கேட்க நினைச்ச கேள்வியை எங்கிட்ட தாராளமா கேட்கலாம்”

“குட். உங்களுக்கு உங்க ஆபிசில் ஓய்வூதியம் உண்டா?”

“கிடையாது”

“அப்ப ரிடையர்ட்மென்டுக்குப் பிறகு நீங்களும் சம்பந்தியம்மாவும் எப்படி காலத்தை ஓட்டப் போறீங்க?” அவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டதும் அப்படியே நிலைகுலைந்து போனேன்.

சே.. என்ன மனிதர் இவர். பிள்ளையைப் பெற்றவன். பிள்ளை கைநிறைய சம்பாதிக்கிறான். பார்த்துப் பார்த்து பிள்ளைக்கும் ஒரு கலியாணம் பண்ணியாயிற்று.

என் பெண்ணும் படித்து நல்லவேலையில் இருப்பது இவர்களுக்குப் பிளஸ் பாயிண்ட்தான்- இதனால் ஏற்பட்ட ஆணவமா?

மெதுவாய் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல இப்படியொரு கேள்வி என்னிடத்தில் அவசியமா?

எனக்கு ஓய்வூதியம் வராவிட்டால் என்ன? எனக்கு உதவி செய் என்று மகள் வீட்டிலா வந்து டேரா போடப்போகிறேன்.

நான் ஏதாவது ஏடாகூடமாய் கேட்க, அது நிச்சயம் என் பெண் வாழ்க்கையைப் பாதித்துவிடக்கூடாது.

கடவுளே இவர்களை மன்னியுங்கள் அதாவது இவர்கள் அறியாமல் செய்த பிழைகளை மன்னித்தருள்க.. அதனால் மெளனம் காத்தேன்… வேறு என்ன செய்வது?

அவர்களை அக்கு வேறு,ஆணிவேறாக பிய்த்திருப்பேன்.

எங்களால் முடியாத அளவுக்குப் போகும் காலகட்டத்தில் ஏதாவதொரு முதியோர் காப்பகமா கிடைக்காமல் போய்விடும்.

அப்போதும் நிச்சயமா பெண்ணைக் கொடுத்தவன் வீட்டில் வந்து ஒண்டிக்கொள்ள மாட்டோம்.. மனம் இடங்கொடுக்காது.

இருந்தாலும் மனம் அமைதியின்றி தவித்தது.

ஆனால் காலம் போகும்.. வார்த்தைகள் நிற்கும் என்பது முதுமொழி.. அது மட்டுமா? பேசாத வார்த்தைக்கு நீ எசமான் என்றொரு கருத்தும் உண்டு..

கடவுளே எங்களை இப்படி நிர்கதியாய் படைத்தாய்?

படைத்தது உன்குற்றமல்லதான்…

நாங்கள் எங்கள் ஏழ்மையை வெளிச்சம்போட்டு காட்ட விரும்பவில்லை…

நாட்டில் எங்களைப்போன்றவர்கள் ஏராளம்…ஏராளம்…

ஒரு பெண்ணைக் கரையேற்றிடவே அரும்பாடுபட்டேனே,அதுவே 50/60களில் எப்படியெல்லாம் முன்னோர் அல்லல்பட்டிருப்பார்கள் என்ற எண்ண ஓட்டம் என் மனதில் வந்து போயிற்று.

“என்ன சம்மந்தி…யுஸீம்டு பி பெர்டர்ப்ட்” என்றார். அவர் கேள்வியின் தாக்கம் புரியாமல்…

நான் அப்போதும் பதில் சொல்லாமல் மழுப்பினேன்.

“விடுங்க..விடுங்க சம்பந்தி.. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணைம்பாங்க” என்று மேலும் சொல்லி மறுபடியும் என் மனப்புண்ணைக் கிளறிவிட்டார்.

கல்லினுள் தேரைக்கும்,கருப்பை அண்டத்துயிர்க்கும் படியளக்கிறவன் அந்தப் பரம்பொருள் இல்லையா” என்றேன் என் மன வருத்தத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.

“ஆமாமாம்.. சரியாச்சொன்னீங்க. விடுங்க. பெத்த பசங்க முதுமை காலத்தில் பெற்றவர்களைக் கவனிக்காட்டி என்ன.. எத்தனை,எத்தனை முதியோர் இல்லங்கள் பல்கிப்பெருகிக்கிடக்குது இன்னைக்கு. இது ஏதாவதொன்றில் அடைக்கலம் கிடைக்காமலா போயிடும் நம்மைப்போல் உள்ளவங்களுக்கு” என்றார்.

மிக மிக சிரமப்பட்டு பதிலே பேசாமல் அமர்ந்தேன் அங்கு.

பிறகும் தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில் மட்டுமே சம்மந்தி வீட்டுக்குச் சென்று பெண்,மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு ஒரு சில நொடிகளில் திரும்பிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். காலப்போக்கில் ஒரு நாள் திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் போயிற்று எனக்கும் என் மனைவிக்கும். உதவிக்கும் ஆள் இல்லை.

பக்கத்து வீட்டு மனிதர்கள் உதவியுடன் ஒரு முதியோர் இல்லத்தில் இடம் கிடைத்தது.

காலத்தை அங்கேயே கழித்துவிடுவதான் சாலச்சிறந்தது என்று தோன்றவே, அந்த முதியோர் இல்லம் செல்லத் தயாரானோம். எங்களது சொற்ப சாமான் செட்டுகள் எல்லாம் எடுத்துக் கொண்டு, போனிலேயே மகள், மருமகனுக்கு விபரம் சொன்னேன். அவர்களும் ஏன் இப்படியொரு முடிவு என்று எங்களைக் கேட்கவில்லை. ஊரிலும் கேட்கவேயில்லை.

ஒரு சுபயோக, சுபதினத்தில் முதியோர் இல்லத்து வாயிற் கதவைத் திறந்துகொண்டு எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்குப்போனால் அங்கு “வெல்கம் சம்பந்தி என்னைக்காவது ஒருநாள் இதுபோல இடத்துக்கு வருவீங்கனு நினைச்சேன். ஆனா இதே இல்லத்துக்கு நீங்களும் வருவீங்கனு நினைக்கல” என்றவர் குலுங்கி, குலுங்கி அழத் தொடங்கினார்.

பிறகு கண்களைத் துடைத்துக்கொண்டு சொன்னார்… “நாம் பெற்ற பிள்ளையோ, பெண்ணையோ குற்றம் குறை சொல்ல முடியாது. அவசரமான உலகம்.. இதில் வயசானவங்களை வீட்டில் வச்சு பராமரிக்கணும்னு நாம் நினைக்கக்கூடாது.

யதார்த்தம் புரிஞ்சு, சின்னஞ் சிறிசுகளுக்கு இடம் கொடுத்துட்டு நாம் விலகிடணும்.. அவங்க நல்லாயிருக்கணும்னு மட்டும் பிராத்தனை பண்ணுவோம் என்ன” என்றார் உலகம் போகும் போக்கைப் புரிந்து கொண்டவர் போல.

- கெளசல்யா ரங்கநாதன்


நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கசப்பானதொரு உண்மை Empty Re: கசப்பானதொரு உண்மை

Post by செந்தில் Fri Jul 25, 2014 11:29 am

மனிதனின் உதவிமனப்பான்மை,நன்றியுணர்வு,சகிப்புத்தன்மை குறைந்து வருவதை தெளிவாக உணர்த்தும் கதை.
 சோகம் சோகம் சோகம் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum