தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு

View previous topic View next topic Go down

பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு Empty பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு

Post by முழுமுதலோன் Tue Jul 29, 2014 3:25 pm

எல்லா பொருட்களுக்கும் இலக்கணம் உண்டு.
அதே போல் பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு. 

அந்த இலக்கணம் இந்தப் பொருள் இத்தன்மையது; இன்ன குணம் உடையது என்று வரையறுத்துச் சொல்லும். அப்படி பரம்பொருளுக்கும் இன்னின்ன குணங்கள் உண்டு என்று வரையறை செய்வதே பரம்பொருள் இலக்கணம். அதன்படி அந்தப் பரம்பொருளுக்கு எட்டுக் குணங்கள் இருக்க
வேண்டும்.
அவையாவன.

1. தன்வயத்தனாதல்,
2. தூய உடம்பினனாதல்,
3. இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்,
4. இயற்கை உணர்வினன் ஆதல்,
5. பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை,
6. வரம்பில்லாத ஆற்றல் உடைமை,
7. வரம்பில்லாத அருள் உடைமை,
8. வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்.

இந்த எட்டு குணங்களை உடையவன்தான் பரம்பொருள் என்பதை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஒன்பதாவது குறளில்
'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.' 

என்று கூறினார். அதாவது கடவுளின் தாளை வணங்காத் தலை என்று கூறுவதற்குப் பதிலாக எண்குணத்தான் தாளை வணங்காத தலை என்று எண்குணங்களைக் காட்டிப் பரம்பொருளாகிய கடவுளை உணர்த்தினார்.
சிவாகமம் கூறும் அந்த எண்குணங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

-1-தன்வயத்தனாதல்
ஒரு கடவுள் என்றால் அவன் வேறு ஒருவர் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. அதனைச் சுதந்திரன் அதாவது தன்வயத்தனாதல் என்று கூறுவர்.

-2- வரம்பில்லாத ஆற்றல் உடைமை
ஒரு கடவுள் என்றால் அவன் எல்லையில்லாத ஆற்றல் உடையவனாய் இருத்தல் வேண்டும். காரணம், பரந்து விரிந்துள்ள பிரபஞ்சம் எல்லையில்லாதது; எல்லையில்லாத பிரபஞ்சத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளின் ஆற்றலும் எல்லையில்லாத ஆற்றலாக இருக்க வேண்டும். எனவே வரம்பில்லாதா ஆற்றலுடைமையைக் கடவுளின் குணங்களில் ஒன்றாகக் கூறினர்.

-3- பேரறிவுடைமை அல்லது முற்றறிவுடைமை
அடுத்து பரந்து விரிந்த எல்லையில்லாத பிரபஞ்சத்தினைப் பற்றிய அறிவும் பரந்து விரிந்ததாக இருத்தல் வேண்டும். எனவே அதைப் படைக்கும் ஆண்டவனது அறிவு பிரபஞ்சம் முற்றும் அறிகிற முற்றறிவாக இருத்தல் வேண்டும். எனவே முற்றறிவும் கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

-4- இயற்கை உணர்வினன் ஆதல்
அதோடு இறைவன் அறிகின்ற அறிவெல்லாம் அவனே உணர்ந்த அறிவாக இருக்க வேண்டும். இன்னொருவர் கற்றுக் கொடுத்து இறைவன் அறிவை உணர்கிறான் என்றால் அவன் இறைவனாக இருக்க இயலாது. எனவே தானே அறியும் அறிவை இறைவன் பெற்றிருத்தல் வேண்டும். இது இயற்கை உணர்வினன் ஆதல் என்று கடவுளின் குணங்கள் எட்டில் ஒன்றாக வைக்கப்பட்டது.

-5- வரம்பில்லாத அருள் உடைமை
இறைவன் எல்லையற்ற அறிவையும், ஆற்றலையும் பெற்று இருப்பதால் யாருக்கு என்ன பயன்? அவன் நம்மையெல்லாம் உயர்வு பெற கருணை பாலிக்க வேண்டும்; அருள் புரிதல் வேண்டும். அந்த அருளும் சில காலங்களில் சில பேர் மீது மட்டும் செலுத்துவதாக இருத்தல் கூடாது. அப்படி ஒருதலைப் பட்சமான இறைவனை யார் ஏற்றுக் கொள்வார்கள்? எனவே எல்லாக் காலங்களிலும் வற்றாத எல்லோருக்கும் செய்கின்ற அருளை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். ஆகவே பேரருள் உடைமை என்பதை இறைவனது எண்குணங்களில் ஒன்றாக வைத்தனர்.

-6- வரம்பில்லாத இன்ப வடிவினன் ஆதல்
அடுத்து ஆண்டவனின் அருளைப்பெற எல்லோருக்கும் ஒரு விருப்பம் ஏற்பட ஒரு காரணம் வேண்டும். ஓராயிரம் வேறுபாடுகளை உடைய உயிர்கள் அனைத்தும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக எண்ணுகின்றன. அதாவது ஈ, எறும்பு முதல் யானை வரை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் இன்பமே வேன்டும் என்பதில் மட்டும் ஒற்றுமையாக உள்ளன.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்” 
என்பது தொல்காப்பியம்.
ஆகவே ஆண்டவனிடம் உயிர்கள் சென்றடைய அவை விரும்பும் காரணத்தை இறைவன் உடையவனாக இருத்தல் வேண்டும். அவை விரும்புவது இன்பமாதலின் இறைவன் இன்பம் உடையவனாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் அவனைச் சென்றடைய விருப்பம் எப்படி ஏற்படும்? அந்த இன்பமும் எளிதில் தீர்ந்து விடுவதாக இல்லாமல் வரம்பில்லா இன்பமாய் இருத்தல் வேண்டும். எனவே வரம்பில்லா இன்பம் உடைமை என்பதை இறைவனது எட்டுக்குணங்களில் ஒன்றாக்கினர்.

-7- தூய உடம்பினனாதல்
இனி, நம்முடைய உடம்போ துன்பம் மிகுந்தது. கண்ணில் ஊளை, காதில் குறுமி, மூக்கில் சளி, வாயில் ஊத்தை, உடம்பில் வேர்வை நாற்றம் என வரும் இந்த உடம்பின் நிலைமையை எண்ணிப்பார்த்து,

ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை ஊன்பொதிந்த
பீற்றல் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய
காற்றில் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே ஏற்றுத் திரிந்துவிட்டேன்இறைவா கச்சி ஏகம்பனே என்று பாடினார் பட்டினத்தார்.

இந்த உடம்பு போல ஒரு துன்பப் பொட்டலம் இறைவனுக்கு இருக்குமானால் அதில் கட்டுண்டு இறைவனும் நம்மைப் போல அவதியுறுபவனாக இருப்பான். அப்படி இருந்தால் அவன் வரம்பில்லாத இன்பம் உடையவன் ஆவது எப்படி?. எனவே அடியார்க்கு அருள் செய்ய உருவம் எடுக்க வேண்டி இருக்குமானால் அவன் சுதந்திரன் ஆதலினாலே அவனே உருவம் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்தால் அந்த உடம்பு எவ்வித துன்பத்தின் சம்பந்தமும் இல்லாதிருக்க வேண்டும். இதனைத் தூய உடம்பினன் ஆதல் என்ற எண்குணங்களில் ஒன்றாகச் சான்றோர் காட்டினர்.

-8-இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கி நிற்றல்
அடுத்து ஆன்மாக்கள் ஆகிய உயிர்கள் பேரா இயற்கை பேரின்பத்தை வேண்டி இறைவனைச் சென்றடையும் செம்மை நெறி பற்றிச் சென்றடைகின்றன என்று கூறுவர் ஆன்றோர். ஆகவே ஆண்டவன் இருக்கும் இடத்திலே துன்பங்கள் எள்ளளவும் இருக்கக் கூடாது. நமது உடம்பு போன்றவை பாசங்கள், தளைகள் எனப்படும். ஆண்டவனது உடம்பு தூய உடம்பாதாலினாலே, துன்பம் மிக்க பாசங்கள் எனப்படும் நம் உடம்பு போன்றவை ஆண்டவனை நெருங்கவே கூடாது. அவற்றிலிருந்து அவன் நீங்கி நிற்பதை இயல்பாகக் கொண்டிருத்தல் வேண்டும்.

இங்கே ஒன்றை ஒன்றாகக் கவனித்தல் வேண்டும். இறைவன் துன்பமே மிக்க பாசங்களை நீக்கிக் கொள்பவன் என்று கூறவில்லை; நீங்கி நிற்பவன் என்று கூறினர். அதாவது நீக்குதல் பிறவினை; நீங்குதல் தன்வினை. இறைவன் ஏற்கனவே துன்பமிக்கப் பாசங்களை உடையவனாய் இருந்து பின்னர் அரிய முயற்சிகள் பல ஆற்றி அவற்றிலிருந்து நீங்கியவன் அல்லன். அப்படியானால் ஒரு கேள்வி வரும். அதாவது ஒரு முறை பாசங்களை நீக்கிக் கொண்டான் என்பது சரி; மறுமுறை பாசங்கள் அவனைக் கட்டிவிடாது என்பது என்ன நிச்சயம்? எனவேதான் மிகவும் எச்சரிக்கையாக இயற்கையாகவே – இயல்பாகவே இறைவன் பாசங்களினின்றும் நீங்கி நிற்பதை ஒரு குணமாக உடையவன் என்று அவனது எண்குணங்களில் ஒன்றாக இதையும் வைத்தனர்.

by: சாமி



பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு 10423877_687414114646107_4234726086708963439_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு Empty Re: பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு

Post by ஸ்ரீராம் Wed Aug 13, 2014 9:47 am

வாவ் அருமை...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு Empty Re: பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 13, 2014 11:37 am

நிறைந்து... அழிவில்லாமல் இருப்பவன்... பரம்பொருளே போற்றி!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு Empty Re: பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum