Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூளை நலமே நமது வாழ்க்கை நலம்
Page 1 of 1 • Share
மூளை நலமே நமது வாழ்க்கை நலம்
மூளை நலமே நமது வாழ்க்கை நலம் என்றால் மிகையில்லை. ஒருவர் அறிஞர் ஆவதும், கலைஞர் ஆவதும், கயவர் ஆவதும் அவரது மூளையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்துத் தான். மூளை பற்றிய ஆராய்ச்சிகள் சமீப காலமாகத் தான் விரிவடைய ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் அதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். ஒருவர் சிரிப்பதற்கு மூளையின் எந்த செல்கள் வேலை செய்கின்றன... பொறாமை எண்ணம் எங்கே உதிக்கிறது... கொலை எண்ணத்தால் மூளை எப்படி கொதிக்கிறது என்பது போன்ற விஷயங்கள் வெளியாகத் தொடங்கின.
1985-ம் ஆண்டு எம்.ஆர்.ஐ. (மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்) ஸ்கேனர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் மூளை ஆராய்ச்சி வேகம் பிடித்தது. அதற்கு முன்புவரை இறந்தவர்களின் மூளையை சோதனை செய்தே சில முடிவுகளை வெளியிட்டனர். இப்போதெல்லாம் ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது மூளை செயல்படுவதை அவரே பார்க்கும் வகையில் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஸ்கேனர், மரபணு ஆய்வுகள் மூளை பற்றிய பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.
மூளைக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. மூளை அதன் வெளிப்புறச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வடிவமைத்துக் கொள்கிறதாம். அதாவது பார்வை ஒளி, மொழி (ஒலி), மணம், தசைக்கட்டுப்பாடு மற்றும் காரணம் அறிதல் போன்ற தூண்டுதல் உணர்வுகளால் மூளையின் நிரான் செல்கள் புதுவடிவம் பெறுகின்றன. ஐம்புலன்களின் உணர்வுகளையும் புறச்சூழலில் இருந்து துளித்துளியாக ஏற்றுக்கொண்டு உணர்வு மண்டலத்தில் சேர்த்து மூளை தானாகவே புதிய பரிமாணத்திற்கு மாறுகிறது.
கர்ப்பப்பையில் சில நிரான் செல்கள் வளர்ந்து ஒருங்கிணைந்து மூளை உருவாகிறது. சில மாதங்களில் கருவிற்கு 20 ஆயிரம் கோடி நிரான்கள் உருவாகி மூளையாகிறது. இவை வளரும் போதே மற்ற உறுப்புகளோடு தொடர்பு கொள்கிறது. 12 வயது வரை மூளை வளர்ச்சி துரிதமாக நடப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப்பருவக் குழந்தைகளே புதிய விஷயங்களை எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். 4 வயது வரை மொழி, காட்சி, மனப்பான்மை, கற்கும் ஆர்வத்திற்கான மூளைக்களம் துல்லியமாக செயல்படுகிறது. அதன் பிறகு அறிவுப் பலகணி மூடிக்கொள்கிறது. பிறகு கட்டமைப்பு நிறைவடைந்து செயல்பாடுகளே தொடர்கிறது.
உணர்வுகளால் மூளையில் அனேக மாற்றங்கள் நிகழும். அதனால் வாழ்க்கையும் மாறக்கூடும். அதாவது தாயானவள் தன் குழந்தையிடம் கொஞ்சிப் பேசி மகிழ்விக்க வேண்டும். இதனால் குழந்தையின் மொழி அறிவும், பேச்சுத்திறனும் வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு பழகாவிட்டால் குழந்தை மந்தமானதாக இருக்கும். வளர்ந்த பிறகும் கற்கும் திறன் குறைந்துவிடும். இதேபோல பல காட்சிகளை காட்டி ஊக்கப்படுத்தினால்தான் காட்சி சார்ந்த பகுதி சிறப்பாக இயங்கும். இல்லாவிட்டால் காட்சிப் பணி நிரான்கள் வேறு பணிக்குத் தானாக மாறிவிடும்.
இளம் பருவத்தில் மன அழுத்தம், மனத்துயர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் போன்ற சுற்றுச்சூழல் தீங்குகள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளால் குழந்தைகள் வன்மையானவர்களாக வளரும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல கர்ப்பிணி தொடர்ந்து மன அழுத்தச் சீர்கேட்டுக்கு ஆளானால் அவளது கருவில் வளரும் குழந்தையின் மூளையில் பதட்டம், தவிப்பு போன்ற மன எழுச்சிப் பண்புகள் உருவாகி விடுகின்றன. இந்தப் பண்புகளை குழந்தை பிறந்தபின் தாயின் அன்பும், சீரான வளர்ப்பு முறையும் ஓரளவுக்கு மாற்றுகின்றன. தொடர்ந்து மோசமான சூழல் இருந்தால் குழந்தை வன்மையான குணத்துடனே வளரும்.
தினமலர்
1985-ம் ஆண்டு எம்.ஆர்.ஐ. (மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்) ஸ்கேனர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் மூளை ஆராய்ச்சி வேகம் பிடித்தது. அதற்கு முன்புவரை இறந்தவர்களின் மூளையை சோதனை செய்தே சில முடிவுகளை வெளியிட்டனர். இப்போதெல்லாம் ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது மூளை செயல்படுவதை அவரே பார்க்கும் வகையில் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஸ்கேனர், மரபணு ஆய்வுகள் மூளை பற்றிய பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.
மூளைக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. மூளை அதன் வெளிப்புறச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வடிவமைத்துக் கொள்கிறதாம். அதாவது பார்வை ஒளி, மொழி (ஒலி), மணம், தசைக்கட்டுப்பாடு மற்றும் காரணம் அறிதல் போன்ற தூண்டுதல் உணர்வுகளால் மூளையின் நிரான் செல்கள் புதுவடிவம் பெறுகின்றன. ஐம்புலன்களின் உணர்வுகளையும் புறச்சூழலில் இருந்து துளித்துளியாக ஏற்றுக்கொண்டு உணர்வு மண்டலத்தில் சேர்த்து மூளை தானாகவே புதிய பரிமாணத்திற்கு மாறுகிறது.
கர்ப்பப்பையில் சில நிரான் செல்கள் வளர்ந்து ஒருங்கிணைந்து மூளை உருவாகிறது. சில மாதங்களில் கருவிற்கு 20 ஆயிரம் கோடி நிரான்கள் உருவாகி மூளையாகிறது. இவை வளரும் போதே மற்ற உறுப்புகளோடு தொடர்பு கொள்கிறது. 12 வயது வரை மூளை வளர்ச்சி துரிதமாக நடப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப்பருவக் குழந்தைகளே புதிய விஷயங்களை எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். 4 வயது வரை மொழி, காட்சி, மனப்பான்மை, கற்கும் ஆர்வத்திற்கான மூளைக்களம் துல்லியமாக செயல்படுகிறது. அதன் பிறகு அறிவுப் பலகணி மூடிக்கொள்கிறது. பிறகு கட்டமைப்பு நிறைவடைந்து செயல்பாடுகளே தொடர்கிறது.
உணர்வுகளால் மூளையில் அனேக மாற்றங்கள் நிகழும். அதனால் வாழ்க்கையும் மாறக்கூடும். அதாவது தாயானவள் தன் குழந்தையிடம் கொஞ்சிப் பேசி மகிழ்விக்க வேண்டும். இதனால் குழந்தையின் மொழி அறிவும், பேச்சுத்திறனும் வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு பழகாவிட்டால் குழந்தை மந்தமானதாக இருக்கும். வளர்ந்த பிறகும் கற்கும் திறன் குறைந்துவிடும். இதேபோல பல காட்சிகளை காட்டி ஊக்கப்படுத்தினால்தான் காட்சி சார்ந்த பகுதி சிறப்பாக இயங்கும். இல்லாவிட்டால் காட்சிப் பணி நிரான்கள் வேறு பணிக்குத் தானாக மாறிவிடும்.
இளம் பருவத்தில் மன அழுத்தம், மனத்துயர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் போன்ற சுற்றுச்சூழல் தீங்குகள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளால் குழந்தைகள் வன்மையானவர்களாக வளரும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல கர்ப்பிணி தொடர்ந்து மன அழுத்தச் சீர்கேட்டுக்கு ஆளானால் அவளது கருவில் வளரும் குழந்தையின் மூளையில் பதட்டம், தவிப்பு போன்ற மன எழுச்சிப் பண்புகள் உருவாகி விடுகின்றன. இந்தப் பண்புகளை குழந்தை பிறந்தபின் தாயின் அன்பும், சீரான வளர்ப்பு முறையும் ஓரளவுக்கு மாற்றுகின்றன. தொடர்ந்து மோசமான சூழல் இருந்தால் குழந்தை வன்மையான குணத்துடனே வளரும்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூளை நலமே நமது வாழ்க்கை நலம்
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நமது மூளை, நமது எதிர்காலம்- முதல் உலக மூளை தினம்: ஜூலை 22
» நமது குழந்தைகள் நன்றாக இருக்க தூக்கி எறியுங்கள் ரெடி டு ஈட் உணவுகளை. நமது பார்ம்பரிய உணவை பழக்குங்கள்.
» நமது வெற்றியே நமது குறிக்கோள்
» நமது தமிழ்....நமது பெருமை...!
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» நமது குழந்தைகள் நன்றாக இருக்க தூக்கி எறியுங்கள் ரெடி டு ஈட் உணவுகளை. நமது பார்ம்பரிய உணவை பழக்குங்கள்.
» நமது வெற்றியே நமது குறிக்கோள்
» நமது தமிழ்....நமது பெருமை...!
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|