Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது புதிய சேவை!
Page 1 of 1 • Share
இது புதிய சேவை!
முதுமையில் தனிமை மிகவும் கொடுமை. கூடவே நோய்களும் சேர்ந்து கொண்டால், அதைவிடக் கொடுமை. நோயின் தீவிரப் பிடியில் இருந்தாலுமே, உதவிக்கு ஆட்கள் இல்லாத காரணத்தினால், உடல்நலத்தை அலட்சியப்படுத்தியபடி வாழ்கிற முதியவர்கள் எத்தனையோ பேர். பணம் கொடுத்தால் பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்ள ஆட்கள் கிடைப்பார்கள்தான். ஆனால், அவர்கள் மீதான நம்பிக்கை, திடீரென ஒரு மருத்துவ அவசரம் தேவைப்படுகிற போது சூழ்நிலையைக் கையாள்கிற விதம் என எல்லாமே கேள்விக்குறியவை.
‘‘அந்தப் பெரியவருக்கு திடீர்னு மூச்சு நின்னு போச்சு. கூட இருந்த நர்ஸ், சட்டுனு அவருக்கு செயற்கை சுவாசத்துக்கான வழிகளை செய்தாங்க. சட்டுனு ஆம்புலன்ஸை வரவழைச்சு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிற வரைக்கும், செயற்கை சுவாசத்தைத் தொடர்ந்துக்கிட்டே இருந்தாங்க. ஆஸ்பத்திரியில இருந்த டாக்டர்ஸுக்கே ஆச்சர்யம். அந்தப் பெரியவர் உயிர் பிழைச்சிட்டார். புத்திசாலித்தனமா செயல்பட்ட அந்தப் பெண்ணை தங்களோட ஆஸ்பத்திரியில சேரச் சொல்லிக் கேட்டாங்க... வயசானவங்களைப் பார்த்துக்க வேலைக்கு வைக்கிற எல்லாருக்கும் மருத்துவம் தெரிஞ்சிருக்காது. எந்த மாதிரி நேரத்துல எப்படி நடந்துக்கணும்னு விழிப்புணர்வு இருக்காது.
இதெல்லாம் தெரிஞ்ச டாக்டரை எந்நேரமும் தன் பக்கத்துல வச்சுக்கறதும் நடக்காத காரியம். மருத்துவம் தெரிஞ்ச, மனித நேயமுள்ள நபர்களை இந்த மாதிரி வேலைகளுக்கு அனுப்பற புது முயற்சியா தான் ‘ஆர்.எம்.டி. அப்னா கேர்’ தொடங்கினேன். ‘பேலியேட்டிவ் கேர்’னு சொல்ற வலி மற்றும் ஆதரவு சிகிச்சையில பல வருஷ அனுபவம் உள்ளதால, கூடுதலா இந்தச் சேவையையும் எங்களால சுலபமா செய்ய முடியுது...’’ என்கிறார் டாக்டர் ரிபப்ளிகா.
இவரது இந்தத் திட்டத்தில் பி.எஸ்சி. நர்சிங், அசிஸ்டெட் நர்ஸ் மெய்டென், டிப்ளமோ இன் நர்சிங் படித்த, வசதியற்ற ஆண், பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கும் வசதியுடன், இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை முடித்ததும், நாளொன்றுக்கு 500 முதல் 800 ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ‘‘வயசானவங்களையோ, பேஷன்ட்டுகளையோ பார்த்துக்க வேலைக்கு வர்றவங்க எல்லாரும் அவங்களுக்கு டயாப்பர் மாத்தவோ, அசிங்கம் பார்க்காம சுத்தப்படுத்தவோ மாட்டாங்க. பேலியேட்டிவ் கேர்ல இந்த விஷயங்களும் ஒரு முக்கியமான அம்சம்.
அந்தப் பயிற்சியும் பின்னணியும் இருக்கிறதால, எங்கக்கிட்ட ட்ரெயின் ஆகறவங்க எந்தத் தயக்கமும் இல்லாம இந்தச் சேவைகளைச் செய்வாங்க. தன்னைப் பார்த்துக்க ஆள் வேணும்னு கேட்கறவங்களைப் பத்தின முழுத் தகவல்களையும் முதல்ல சேகரிப்போம். அவங்க தேவை என்ன, அவங்களோட உடல்நிலை எப்படியிருக்கு, எந்தப் பிரச்னைகளுக்கு எந்த டாக்டரை பார்த்திட்டிருக்காங்கனு எல்லாத் தகவல்களையும் கேட்டுப்போம். அவங்களுக்கு உதவ அனுப்பற நபரைப் பத்தியும் முழு விசாரணை செய்து, நம்பிக்கையானவர்னு உறுதிப்படுத்திக்கிட்ட பிறகுதான் வேலைக்கு
அனுப்புவோம்.
சம்பந்தப்பட்ட நோயாளியோட பிள்ளைங் களோ, சொந்தக்காரங்களோ வெளியூர்லயோ, வெளிநாட்லயோ இருந்தா, அவங்களுக்கு அப்பப்ப பேஷன்ட்டோட ஹெல்த் கண்டிஷன், டாக்டரோட ப்ரிஸ்க்ரிப்ஷன்னு எல்லாத்தையும் மெயில் மூலமா தெரியப்படுத்துவோம். என்ன பிரச்னை, எந்த டாக்டரை பார்க்கறதுனு தெரியாதவங்களுக்கு எங்க டீம்ல உள்ள டாக்டர்ஸ் அதுக்கான வழிகாட்டுவாங்க. எந்நேரமும் தன் கூடவே, மருத்துவம் தெரிஞ்ச ஒருத்தர் இருக்காங்கன்ற நம்பிக்கையைக் கொடுக்கிறதும், பாதுகாப்பா ஃபீல் பண்ண வைக்கிறதும்தான் இந்தத் திட்டத்தோட நோக்கம்...’’ என்கிறார் ரிபப்ளிகா (044-33720566).
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» புதிய சிந்தனை,புதிய முயற்சி, புதிய பாதையிருந்தால் வெற்றி நிச்சயம்
» கூகுள் வழங்கும் புதிய சேவை உங்களுக்கு தெரியுமா?
» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
» குறைக்கப்படுமா கட்டுமானச் சேவை வரி?
» கூகுள் வழங்கும் புதிய சேவை உங்களுக்கு தெரியுமா?
» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
» குறைக்கப்படுமா கட்டுமானச் சேவை வரி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|