Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முடியாது... முடியாது
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
Re: முடியாது... முடியாது
நம் வருங்கால சந்ததியினர்களுக்காக இந்த பதிவை வேதனையுடன் பதிகிறேன்,,
தென்னை மரத்தில தேள்
கொட்டினால் பனை மரத்தில்
நெறி கட்டியதாம் என்ற
ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில்
இருக்கிறது.
அது இப்போது தமிழ்நாட்டின்
நெற்களஞ்சியமான
தஞ்சை விடயத்தில்
உண்மையாகி போய் இருக்கிறது.
தேவையில்லாத
பாதுகாப்பு துறை செலவீனங்கள் ,
இமயம் அளவு ஊழல்கள்,
இந்தியாவுக்குப் பொருந்தாத
சந்தைப் பொருளாதாரம் என
சூறையாடப்பட்ட இந்தியாவின்
பொருளாதாரம் இப்போது அதல
பாதாளத்திற்குப் போய்
கொண்டிருப்பது அனைவருக்கும்
தெரியும்.
இதில் இருந்து தப்பிக்க
வழக்கம் போல
இந்தியா தனது மக்களுக்குச்
சொந்தமான இயற்கை வளங்களைக்
கொள்ளை அடிக்க
முடிவு செய்து விட்டது.
“என்னடா சிக்கும்” என அது தேடும்
போது அதற்கு சிக்கி இருப்பது தான்
தஞ்சை திருவாரூர் மாவட்டத்தில்
கண்டறியப்பட்டு இருக்கும் மீத்தேன்
எனப்படும் இயற்கை எரிவாயு.
இந்தப் பகுதியில் மக்கள் மிக
அதிகமாக வசிக்கிறார்கள் என்ற
உணர்வு சிறிதும் இன்றி,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான
தஞ்சைப் பகுதியின் விவசாயம்
அடியோடு பாதிக்கப்படும்
என்பது குறித்த அக்கறை சிறிதும்
இன்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம்
அடியோடு சீர்குலையும் என்ற
கவலையும் இன்றி மத்திய
அரசு தஞ்சை, திருவாரூர்
மாவட்டங்கள் முழுக்க
ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன்
எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
தஞ்சை மற்றும் திருவாரூர்
மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக
பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும்
அனுமதி மூன்று
நிறுவனங்களுக்கு
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
நிறுவனங்களின் பெயர்கள்
1. இந்திய எண்ணை மற்றும்
எரிவாயு நிறுவனம் ( Oil and Natural
Gas Corporation Ltd ONGC ) ,
2. இந்திய
எரிவாயு மேலாண்மை நிறுவனம்
( Gas Authority of India Ltd GAIL )
3. கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம்
( Great Eastern Energy Corporation Ltd
GEECL ).
இந்த நிறுவனங்கள்
மூன்றுமே இந்தியாவில்
அதிகமாக லாபம் சம்பாதிக்கும்
நிறுவனங்களில்
முதன்மையானவை.
இவர்களுக்கு மக்களைப் பற்றிச்
சிறிதும் அக்கறை கிடையாது.
இந்த நிலத்தில் என்ன
கிடைத்தாலும் , அந்த நிலத்தில்
எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள்
அத்தனை பேரையும்
அப்புறப்படுத்தி விட்டு அந்த
நிலத்தில் கிடைக்கும்
இயற்கை வளங்களைச்
சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.
இந்தத் திட்டம்
எண்ணிலடங்கா சிக்கல்களை
உருவாக்கும். சில முக்கியப்
பிரச்சினைகளை மட்டும்
இங்கே பட்டியலிடுகிறோம்.
1
நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக
உறிஞ்சப்படுவதால் விவசாயம்
செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச
நீரும் கிடைக்காது.
2
மீத்தேன் எடுப்பதற்காக
உறிஞ்சி வெளியே கொட்டப்படும்
நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத்
தன்மையுடையது. இந்த நீர்
தற்போதுள்ள ஆறுகளிலும் ,
குளங்களிலும் கலக்கும்
போது விவசாய நிலம் உப்பளமாக
மாறும்.
3
மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில்
எற்படும் மாற்றங்களால்
குடிநீரோடு இந்த மீத்தேன்
எரிவாயு கலக்கும்
ஆபத்து இருக்கிறது. சமீபத்தில்
சென்னையில் எண்ணைக்
குழாய்களில் ஏற்பட்ட கசிவால்
குடிநீர் குழிகளில் வந்த நீர்
தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில்
படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய
எண்ணைக் கசிவால் ஏற்பட்ட
விளைவு. மாவட்டங்கள் முழுக்க
எண்ணைக் குழாய்கள்
அமைக்கப்பட்டால் என்னவாகும் என
யோசித்துப் பாருங்கள்.மீத்தேன்
எடுக்கும் பணியில் குழாயில்
கசிவு ஏற்பட்டு மீத்தேன்
வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும்
ஆபத்து இருக்கிறது. (அத்துடன்
மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக்
கூடிய வாயு – அதாவது அதன்
பண்பு நிலையானது மிகக்
குறைந்த வெப்பத்திலேயே,
தானே தீ பற்றிக்கொள்ளும்
தன்மை உடையது.
இதனை ஆங்கிலத்தில் – Highly
inflammable, Lower flash point என்பர்.)
அப்படிக் கலந்தால்
தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த
மாவட்ட மக்களின் சுகாதாரம்
பெருமளவில் பாதிக்கப்படும். நாம்
சுவாசிக்கும் காற்று முழுக்க
நஞ்சாக மாறும்.
4
நிலத்தின் அடியே குறுக்கும்
நெடுக்குமாக
தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை
, திருவாரூர் மாவட்டம்
முழுவதும் பூகம்ப
ஆபத்து உருவாகும்.
5
இந்தத் திட்டத்தின் மூலம்
நமது வழிபாட்டுத் தலங்கள் ,
தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட
சரித்திர சின்னங்கள், பறவைகள்
சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும்
ஆபத்துக்குளாகும்.
6
மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள்
உள்ளூரில் வேலை கொடுப்பதாகச்
சொன்னாலும் அவர்கள் இந்த
எரிவாயு எடுக்கும் அனுபவம்
உள்ளவர்களையே பணியில் அமர்த்த
முடியும்.இதன் மூலம் தஞ்சை ,
திருவாரூர் மாவட்டங்களில்
பெருமளவு வெளிமாநில மக்கள்
குடியேற்றப்படுவார்கள்.
7
தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின்
மக்கள் தங்கள் சொந்த
மண்ணிலேயே அகதிகளாக வாழும்
சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
8
இந்த நிறுவனங்கள் தங்கள்
எரிவாயுவை கொண்டு செல்லக்
குழாய் பதிப்பது , சாலை
அமைப்பது போன்ற பணிகளைச்
செய்யும்
போது ஏற்கனவே விவசாயம் செய்ய
நமக்கு இருக்கும்
கட்டமைப்புக்களான ஆறுகள்,
குளங்கள் போன்றவை இந்த
நிறுவனங்களால் அழிக்கப்படும்.
9
இந்தக் குழாய்களில்
கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக
மாறுவது மட்டுமல்ல , இந்தக்
குழாய்களில் ஏற்படும்
சேதத்திற்கு நம் மீது தவறுதலாக
தீவிரவாத வழக்குப் போடவும்
வாய்ப்பு இருக்கிறது.
(அது மட்டுமல்ல நமது நாட்டில்
உள்ள கால் நடைகள்
அதாவது குறிப்பாக மாடுகளும்,
பசு,எருது,எருமை)
போன்றவைகளின் சாணம்
என்பது ஏற்கனவே மீத்தேன்
எரிவாயுவைத்
தன்னகத்தே கொண்டுள்ளது.
இது தான் சில வேளைகளில்
நமது தட்வெட்ப நிலைகளில்
கிராமப் புறங்களில் அதனில்
இருந்து வெளியேறும் மீத்தேன்
வாயுவானது திடீரென்று தானே தீ
ப்பற்றிய அந்த நாட்களில் மக்கள்
கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்தேன்
என்பர்.
இதனை இன்று ஓரளவு விஞ்ஞானத்தின் வாயிலாக
உண்மை உணர்த்தி கோபார் காஸ்
என்று மக்களிடம்
விளக்கி அதனையே சாணத்தை சேகரித்து அந்தத் தொட்டியிலிருக்கும்
மீத்தேன்
வாயுவிலிருந்து வீட்டிற்கான
சமையல் வாயுவாகப் பயன்படுத்த
1970 -களில்
இந்திரா காந்தி அம்மையாரின்
அரசாங்கம்
முயன்று ஓரளவு வெற்றி பெற்றது.
மண்ணிற்குள் பதிக்கப்படும்
குழாய்கள் நம் போன்ற Tropical
நாடுகளில் மிக எளிதில்
துருப்பிடித்து மண்ணுக்கடியிலேயே துருப்பிடிக்கும் வெறும்
சாணத்திலிருந்து வெளியேறும்
மிகச் சிறிய
வாயுவிற்கே தீப்பிடிக்கும் ஆற்றல்
இருக்கும்
போது பாதிக்கப்பட்டு கசிவு பெரு
ம் குழாய்களில் வரும்
பேராபத்து என்பது ….?????
இவையெல்லாம்
அதிமேதாவி விஞ்ஞானிகளால் 15
நாளில் சரி செய்யப்படும்
என்பது நமது நாட்டு மேதைகள்
தரும் உத்திரவாதம், இதற்கு நாம்
ஒப்புக்கொண்டு என்னதான் நடக்கும்
என்று பார்க்க முனைந்தால்
அதனை விட மிகக்
கொடியதொரு தவிர்க்க இயலாத
பின் விளைவு, இல்லை. உடனடிப்
பக்க விளைவு என்பது என்ன
தெரியுமா ?
ஒட்டு மொத்த இந்திய
துணைக்கண்டத்திலேயே மிகப்
பரந்துபட்ட விளை நிலங்களும், கடந்த
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
குறுக்கு நெடுக்காய் பாசனக்
கால்வாய்களைக் கொண்ட
நெற்களஞ்சியம், நெற்பயிர் சாகுபடி,
தொன்று தொட்ட விவசாயப்
பண்பாடு என்பதெல்லாம் தமிழ்
நாட்டிலும், குறிப்பாக சோழ
மண்டலத்திலும் தான்.
ஆகவே தான்
சோழ
நாடு சோறு உடைத்து என்றனர்.
இந்தியாவில் தமிழகத்தை தவிர
வேறு எந்த மாநிலத்திலும்
மலைகளும் குன்றுகளும்
இடைமறிக்காத ஒரு பரந்துபட்ட
சமவெளி என்பது காணக்கிடைக்காது
இதனை உணர்ந்த
கரிகால்பெருவளத்தான்
நமக்கு சோழமண்டலத்தை வலைப்
பின்னலாக மிகப்பெரிய பாசனக்
கால்வாய்த்திட்டம்
அன்றே செயல்படுத்தி அவனது குடி
மக்களுக்கு மிக நீண்ட செயல்
திட்டத்தை விட்டுச் சென்றான்.
அதுதான்
இன்றுவரை சோறு போடுகின்றது.
விதி அவன் சமைத்த பாசனக்
கால்வாய்களில்
இன்று எரிவாயு அரக்கர்கள் உவர் நீர்
இறைத்து ,மீண்டும்
நிலத்தடி நீரையும்,பாசனக்
கால்வாய்களையும் ஒரு சேரச்
சுற்றுச் சூழல்,
நிலத்தடி பாதிப்பினை ஏற்படுத்தப்
போகின்றனர். வரும் முன்
காப்பது மனித இயல்பு. வந்த
பின்பு ஊரைக் காலி செய்தால்
நாம் எல்லாம் வெறும் அகதிகளே.
இன்றைய காலங்களில்
அகதிகளுக்கும் பெரும்
சோதனை என்பதனை மறக்க
வேண்டாம். அதனை நம் பிள்ளைகள்
சந்திக்க நாம் காரணமாய் இருக்க
வேண்டாம்.
தமிழர்
நலன் சார்ந்த சில அரசியல் கட்சிகள்
போராட
ஆரம்பித்து இருப்பது ஒரு ஆறுதல்.
இந்தத்
திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து
நிறுத்த
வேண்டியது ஒவ்வொரு தமிழனின்
கடமை.
இந்தத் திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டால்
தமிழினம் உணவிற்காக நிரந்தரமாக
அடுத்த நாடுகளிடம் கையேந்தும்
நிலை ஏற்படும். ஒவ்வொருவரும்
நம்மால் முடிந்த அளவு மட்டுமல்ல,
முழுமையாகவும் இந்தத்
திட்டத்தை எதிர்த்து வேலை செய்வோம்.
தென்னை மரத்தில தேள்
கொட்டினால் பனை மரத்தில்
நெறி கட்டியதாம் என்ற
ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில்
இருக்கிறது.
அது இப்போது தமிழ்நாட்டின்
நெற்களஞ்சியமான
தஞ்சை விடயத்தில்
உண்மையாகி போய் இருக்கிறது.
தேவையில்லாத
பாதுகாப்பு துறை செலவீனங்கள் ,
இமயம் அளவு ஊழல்கள்,
இந்தியாவுக்குப் பொருந்தாத
சந்தைப் பொருளாதாரம் என
சூறையாடப்பட்ட இந்தியாவின்
பொருளாதாரம் இப்போது அதல
பாதாளத்திற்குப் போய்
கொண்டிருப்பது அனைவருக்கும்
தெரியும்.
இதில் இருந்து தப்பிக்க
வழக்கம் போல
இந்தியா தனது மக்களுக்குச்
சொந்தமான இயற்கை வளங்களைக்
கொள்ளை அடிக்க
முடிவு செய்து விட்டது.
“என்னடா சிக்கும்” என அது தேடும்
போது அதற்கு சிக்கி இருப்பது தான்
தஞ்சை திருவாரூர் மாவட்டத்தில்
கண்டறியப்பட்டு இருக்கும் மீத்தேன்
எனப்படும் இயற்கை எரிவாயு.
இந்தப் பகுதியில் மக்கள் மிக
அதிகமாக வசிக்கிறார்கள் என்ற
உணர்வு சிறிதும் இன்றி,
தமிழகத்தின் நெற்களஞ்சியமான
தஞ்சைப் பகுதியின் விவசாயம்
அடியோடு பாதிக்கப்படும்
என்பது குறித்த அக்கறை சிறிதும்
இன்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம்
அடியோடு சீர்குலையும் என்ற
கவலையும் இன்றி மத்திய
அரசு தஞ்சை, திருவாரூர்
மாவட்டங்கள் முழுக்க
ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன்
எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
தஞ்சை மற்றும் திருவாரூர்
மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக
பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும்
அனுமதி மூன்று
நிறுவனங்களுக்கு
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த
நிறுவனங்களின் பெயர்கள்
1. இந்திய எண்ணை மற்றும்
எரிவாயு நிறுவனம் ( Oil and Natural
Gas Corporation Ltd ONGC ) ,
2. இந்திய
எரிவாயு மேலாண்மை நிறுவனம்
( Gas Authority of India Ltd GAIL )
3. கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம்
( Great Eastern Energy Corporation Ltd
GEECL ).
இந்த நிறுவனங்கள்
மூன்றுமே இந்தியாவில்
அதிகமாக லாபம் சம்பாதிக்கும்
நிறுவனங்களில்
முதன்மையானவை.
இவர்களுக்கு மக்களைப் பற்றிச்
சிறிதும் அக்கறை கிடையாது.
இந்த நிலத்தில் என்ன
கிடைத்தாலும் , அந்த நிலத்தில்
எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள்
அத்தனை பேரையும்
அப்புறப்படுத்தி விட்டு அந்த
நிலத்தில் கிடைக்கும்
இயற்கை வளங்களைச்
சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.
இந்தத் திட்டம்
எண்ணிலடங்கா சிக்கல்களை
உருவாக்கும். சில முக்கியப்
பிரச்சினைகளை மட்டும்
இங்கே பட்டியலிடுகிறோம்.
1
நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக
உறிஞ்சப்படுவதால் விவசாயம்
செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச
நீரும் கிடைக்காது.
2
மீத்தேன் எடுப்பதற்காக
உறிஞ்சி வெளியே கொட்டப்படும்
நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத்
தன்மையுடையது. இந்த நீர்
தற்போதுள்ள ஆறுகளிலும் ,
குளங்களிலும் கலக்கும்
போது விவசாய நிலம் உப்பளமாக
மாறும்.
3
மீத்தேன் எடுக்கும் போது நிலத்தில்
எற்படும் மாற்றங்களால்
குடிநீரோடு இந்த மீத்தேன்
எரிவாயு கலக்கும்
ஆபத்து இருக்கிறது. சமீபத்தில்
சென்னையில் எண்ணைக்
குழாய்களில் ஏற்பட்ட கசிவால்
குடிநீர் குழிகளில் வந்த நீர்
தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில்
படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய
எண்ணைக் கசிவால் ஏற்பட்ட
விளைவு. மாவட்டங்கள் முழுக்க
எண்ணைக் குழாய்கள்
அமைக்கப்பட்டால் என்னவாகும் என
யோசித்துப் பாருங்கள்.மீத்தேன்
எடுக்கும் பணியில் குழாயில்
கசிவு ஏற்பட்டு மீத்தேன்
வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும்
ஆபத்து இருக்கிறது. (அத்துடன்
மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக்
கூடிய வாயு – அதாவது அதன்
பண்பு நிலையானது மிகக்
குறைந்த வெப்பத்திலேயே,
தானே தீ பற்றிக்கொள்ளும்
தன்மை உடையது.
இதனை ஆங்கிலத்தில் – Highly
inflammable, Lower flash point என்பர்.)
அப்படிக் கலந்தால்
தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த
மாவட்ட மக்களின் சுகாதாரம்
பெருமளவில் பாதிக்கப்படும். நாம்
சுவாசிக்கும் காற்று முழுக்க
நஞ்சாக மாறும்.
4
நிலத்தின் அடியே குறுக்கும்
நெடுக்குமாக
தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை
, திருவாரூர் மாவட்டம்
முழுவதும் பூகம்ப
ஆபத்து உருவாகும்.
5
இந்தத் திட்டத்தின் மூலம்
நமது வழிபாட்டுத் தலங்கள் ,
தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட
சரித்திர சின்னங்கள், பறவைகள்
சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும்
ஆபத்துக்குளாகும்.
6
மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள்
உள்ளூரில் வேலை கொடுப்பதாகச்
சொன்னாலும் அவர்கள் இந்த
எரிவாயு எடுக்கும் அனுபவம்
உள்ளவர்களையே பணியில் அமர்த்த
முடியும்.இதன் மூலம் தஞ்சை ,
திருவாரூர் மாவட்டங்களில்
பெருமளவு வெளிமாநில மக்கள்
குடியேற்றப்படுவார்கள்.
7
தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின்
மக்கள் தங்கள் சொந்த
மண்ணிலேயே அகதிகளாக வாழும்
சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
8
இந்த நிறுவனங்கள் தங்கள்
எரிவாயுவை கொண்டு செல்லக்
குழாய் பதிப்பது , சாலை
அமைப்பது போன்ற பணிகளைச்
செய்யும்
போது ஏற்கனவே விவசாயம் செய்ய
நமக்கு இருக்கும்
கட்டமைப்புக்களான ஆறுகள்,
குளங்கள் போன்றவை இந்த
நிறுவனங்களால் அழிக்கப்படும்.
9
இந்தக் குழாய்களில்
கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக
மாறுவது மட்டுமல்ல , இந்தக்
குழாய்களில் ஏற்படும்
சேதத்திற்கு நம் மீது தவறுதலாக
தீவிரவாத வழக்குப் போடவும்
வாய்ப்பு இருக்கிறது.
(அது மட்டுமல்ல நமது நாட்டில்
உள்ள கால் நடைகள்
அதாவது குறிப்பாக மாடுகளும்,
பசு,எருது,எருமை)
போன்றவைகளின் சாணம்
என்பது ஏற்கனவே மீத்தேன்
எரிவாயுவைத்
தன்னகத்தே கொண்டுள்ளது.
இது தான் சில வேளைகளில்
நமது தட்வெட்ப நிலைகளில்
கிராமப் புறங்களில் அதனில்
இருந்து வெளியேறும் மீத்தேன்
வாயுவானது திடீரென்று தானே தீ
ப்பற்றிய அந்த நாட்களில் மக்கள்
கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்தேன்
என்பர்.
இதனை இன்று ஓரளவு விஞ்ஞானத்தின் வாயிலாக
உண்மை உணர்த்தி கோபார் காஸ்
என்று மக்களிடம்
விளக்கி அதனையே சாணத்தை சேகரித்து அந்தத் தொட்டியிலிருக்கும்
மீத்தேன்
வாயுவிலிருந்து வீட்டிற்கான
சமையல் வாயுவாகப் பயன்படுத்த
1970 -களில்
இந்திரா காந்தி அம்மையாரின்
அரசாங்கம்
முயன்று ஓரளவு வெற்றி பெற்றது.
மண்ணிற்குள் பதிக்கப்படும்
குழாய்கள் நம் போன்ற Tropical
நாடுகளில் மிக எளிதில்
துருப்பிடித்து மண்ணுக்கடியிலேயே துருப்பிடிக்கும் வெறும்
சாணத்திலிருந்து வெளியேறும்
மிகச் சிறிய
வாயுவிற்கே தீப்பிடிக்கும் ஆற்றல்
இருக்கும்
போது பாதிக்கப்பட்டு கசிவு பெரு
ம் குழாய்களில் வரும்
பேராபத்து என்பது ….?????
இவையெல்லாம்
அதிமேதாவி விஞ்ஞானிகளால் 15
நாளில் சரி செய்யப்படும்
என்பது நமது நாட்டு மேதைகள்
தரும் உத்திரவாதம், இதற்கு நாம்
ஒப்புக்கொண்டு என்னதான் நடக்கும்
என்று பார்க்க முனைந்தால்
அதனை விட மிகக்
கொடியதொரு தவிர்க்க இயலாத
பின் விளைவு, இல்லை. உடனடிப்
பக்க விளைவு என்பது என்ன
தெரியுமா ?
ஒட்டு மொத்த இந்திய
துணைக்கண்டத்திலேயே மிகப்
பரந்துபட்ட விளை நிலங்களும், கடந்த
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
குறுக்கு நெடுக்காய் பாசனக்
கால்வாய்களைக் கொண்ட
நெற்களஞ்சியம், நெற்பயிர் சாகுபடி,
தொன்று தொட்ட விவசாயப்
பண்பாடு என்பதெல்லாம் தமிழ்
நாட்டிலும், குறிப்பாக சோழ
மண்டலத்திலும் தான்.
ஆகவே தான்
சோழ
நாடு சோறு உடைத்து என்றனர்.
இந்தியாவில் தமிழகத்தை தவிர
வேறு எந்த மாநிலத்திலும்
மலைகளும் குன்றுகளும்
இடைமறிக்காத ஒரு பரந்துபட்ட
சமவெளி என்பது காணக்கிடைக்காது
இதனை உணர்ந்த
கரிகால்பெருவளத்தான்
நமக்கு சோழமண்டலத்தை வலைப்
பின்னலாக மிகப்பெரிய பாசனக்
கால்வாய்த்திட்டம்
அன்றே செயல்படுத்தி அவனது குடி
மக்களுக்கு மிக நீண்ட செயல்
திட்டத்தை விட்டுச் சென்றான்.
அதுதான்
இன்றுவரை சோறு போடுகின்றது.
விதி அவன் சமைத்த பாசனக்
கால்வாய்களில்
இன்று எரிவாயு அரக்கர்கள் உவர் நீர்
இறைத்து ,மீண்டும்
நிலத்தடி நீரையும்,பாசனக்
கால்வாய்களையும் ஒரு சேரச்
சுற்றுச் சூழல்,
நிலத்தடி பாதிப்பினை ஏற்படுத்தப்
போகின்றனர். வரும் முன்
காப்பது மனித இயல்பு. வந்த
பின்பு ஊரைக் காலி செய்தால்
நாம் எல்லாம் வெறும் அகதிகளே.
இன்றைய காலங்களில்
அகதிகளுக்கும் பெரும்
சோதனை என்பதனை மறக்க
வேண்டாம். அதனை நம் பிள்ளைகள்
சந்திக்க நாம் காரணமாய் இருக்க
வேண்டாம்.
தமிழர்
நலன் சார்ந்த சில அரசியல் கட்சிகள்
போராட
ஆரம்பித்து இருப்பது ஒரு ஆறுதல்.
இந்தத்
திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து
நிறுத்த
வேண்டியது ஒவ்வொரு தமிழனின்
கடமை.
இந்தத் திட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்டால்
தமிழினம் உணவிற்காக நிரந்தரமாக
அடுத்த நாடுகளிடம் கையேந்தும்
நிலை ஏற்படும். ஒவ்வொருவரும்
நம்மால் முடிந்த அளவு மட்டுமல்ல,
முழுமையாகவும் இந்தத்
திட்டத்தை எதிர்த்து வேலை செய்வோம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» முடியாது, முடியாது, முடியாது
» முடியாது..!
» முடியாது முடியாது...
» யாரும் படிக்க முடியாது
» கதவு திறக்க முடியாது ..!
» முடியாது..!
» முடியாது முடியாது...
» யாரும் படிக்க முடியாது
» கதவு திறக்க முடியாது ..!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|