தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...

View previous topic View next topic Go down

நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  Empty நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...

Post by mohaideen Sun Nov 11, 2012 11:00 am

நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...






நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  %E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dதமிழகத்தில் உள்ள நீதிபதிகளில் 900 பேர் மீது புகார்கள் உள்ளன. இதில் 500 புகார்கள் மீது தீவிர பரிசீலனை நடந்து வருகிறது என்றும் ஊழல் குற்றச்சாட்டு வந்தால் கடும் நட வடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் எச்சரித் துள்ளார்.
சமீபத்தில் நடந்த சிவில் நீதிபதிகள் தேர்வில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் தேர்வு எழுதினர். இதில், 185 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் சிலர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதால் அவர்களின் தேர்வு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், 167 நீதிபதிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று உயர் நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி இக்பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி பிரமாணம் எடுத்து கொண்ட சிவில் நீதிபதிகளுக்கான பயிற்சியை தலைமை நீதிபதி இக்பால் தொடங்கி வைத்து பேசியதாவது:
இதுவரை நீங்கள் சுதந்திரப் பறவையாக செயல்பட்டுள்ளீர்கள். நினைத்ததை எல்லாம் செய்து முடித்திருப்பீர்கள். இப்போது நீங்கள் நீதிபதிகள். உங்கள் பணிக் காலத்தில் தொழில் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். உங்களுக்கு சொந்தப் பொறுப்புகளும் இருக்கும். ஆனால், விமர்சனத்துக்கு ஆளாகாதீர்கள்.
நீதிபதிகள் மீது வரும் மொட்டை புகார்கள் மீதும், நீதிமன்ற நடவடிக்கை மீதும் கூறப்படும் புகார்கள் மீது பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டோம். அதே நேரத்தில் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உயர் நீதிமன்றம் அதை சும்மா விட்டுவிடாது. தமிழகத்தில் உள்ள நீதிபதிகளில் 900 நீதிபதிகள் மீது புகார் வந்துள்ளன.
அவற்றில் 500 புகார்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன. புகார்கள் நிரூபிக்கப் பட்டால் சிவில் நீதிபதியாக இருந்தாலும், மாவட்ட நீதிபதியாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக் கப்படும். இப்படிதான் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தவறு செய்யும் அரசு ஊழியர்களோடு சேர்த்து நீதிபதிகளையும் பொதுமக்கள் குற்றம்சாட்டு கிறார்கள். அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால், அதை கண்காணிக்க ஊழல் தடுப்பு பிரிவு இருப்பது போல், நீதிபதிகள் தவறு செய்தால் அவர்களைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்திலும் விஜிலன்ஸ் பிரிவு செயல்படுகிறது.
தவறு செய்யும் அரசு ஊழியர்களோடு சேர்த்து நீதிபதிகளையும் பொதுமக்கள் குற்றம்சாட்டு கிறார்கள். அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால், அதை கண்காணிக்க ஊழல் தடுப்பு பிரிவு இருப்பது போல், நீதிபதிகள் தவறு செய்தால் அவர்களைக் கண்காணிக்க உயர் நீதிமன்றத்திலும் விஜிலன்ஸ் பிரிவு செயல்படுகிறது.
நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  Blind+judgeஉங்கள் ஒட்டுமொத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும், பணிகளும் கண்காணிக்கப்படுகிறது. 50 வயதில் பணி நீக்கம் செய்யப்பட்டால், உங்கள் குழந்தைகளின் மனநிலை என்ன பாடுபடும் என்ற எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும். எனவே, நீதிபதியின் மாண்பை காப்பாற்றும் வகையில் பணியாற்றினால் உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை நீங்கள் செல்ல லாம்.
ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமக்களும் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் தோன்றியுள்ளன. மக்கள் உரிமைக்காக குரல் கொடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். எனவே, நீதிபதிகளாகிய நீங்கள் ஊழல் என்ற சிக்கலில் மாட்ட கூடாது.
நீதிமன்றத்தின் மாண்பையும் நீங்கள் காக்க வேண்டும். மூத்த நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகளுடன் நீங்கள் இணக்கமான சூழலை உருவாக்கி கொண்டு செயல்பட வேண்டும். இன்னும், சில மாதங்களில் நீங்கள் பயிற்சி முடித்து நீதிபதிகளாக பணியாற்ற உள்ளீர்கள். நான் கூறியதை கடைபிடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு தலைமை நீதிபதி இக்பால் பேசினார்

எந்த வெகுஜன பத்திரிகையிலும், நாளிதழ்களிலும்நீதிபதியின் இந்த பேச்சு வரவில்லை. பகுத்தறிவு ஏடு விடுதலை தான் பிரசுரித்துள்ளது. பாராட்டுக்கள். நீதிபதியின் பேச்சை மட்டும் பிரசுரித்தால் போதாது. தலைமை நீதிபதி உரையில் சொன்ன - நீதிபதிகள் மீதான ஊழல் புகாரை - விடுதலையும், சுயமரியாதைகாரர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். ​

மேற்கண்ட நீதிபதியின் பேச்சை பெருமையாக போடும் பகுத்தறிவு புள்ளிகள் தாம் - நீதிபதி தினகரன் மீது முறைகேடு புகார் வந்ததுமே - அதில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்று பகுத்தறிய வேண்டும் என்று தோன்றாமல், "நீதியரசர் தினகரன் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவதூறு வீசுகிறார்கள்" என்றார்கள். அது பற்றிய முழுமையான பதிவு - இங்கே. பிறகு வழக்கில் சொல்லப்பட்ட புகார்கள் உண்மை தான் என்று அறிந்து விசாரனை இறுகிய போது மெளனித்தது பகுத்தறிவு.

தலைமை நீதிபதி இக்பால் என்ன சொல்கிறார் பாருங்கள். "நீதிபதிகள் மீது வரும் மொட்டை புகார்கள் மீதும், நீதிமன்ற நடவடிக்கை மீதும் கூறப்படும் புகார்கள் மீது பெரிய அளவில் கவனம் செலுத்த மாட்டோம். அதே நேரத்தில் ஊழல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உயர் நீதிமன்றம் அதை சும்மா விட்டுவிடாது." மொட்டை புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆதாரமில்லாத எந்த குற்றச்சாட்டையும் கண்டு கொள்வதும் இல்லை.

அப்படி இருக்க, குற்றப்பின்னணி குறித்த பெருமளவு ஆதாரத்துடன் ஒருவர் மீது விசாரனையை துவக்கினால் - அவர்களுக்கொரு தவறான பாதுகாப்பு தருவதா பகுத்தறிவுக்கு பெருமை. ​தவறு செய்தவர்களை விட மோசமானவர்கள் - தவறு செய்தவரை சாதி, மத காரணம் சொல்லி காப்பாற்ற முனைவது அல்லது சப்பைக்கட்டு கட்டுவது. அதை அறிவாளர்களே செய்வது தான் வெட்கக்கேடு.

சாமியார்கள், மந்திரிமார்கள் மற்றும் உயர் பதவி அரசு அதிகாரிகள் போன்றோர் "நாம் என்ன தவறு செய்தாலும் நம்மை ஒரு கும்பல் எப்படியும் காப்பாற்றிவிடும்" என்று கொண்டிருக்கும் எண்ணமே பல தவறுகளுக்கு தூண்டுகோளாக அமையாதா? அதற்கு தான் சொல்கிறோம். "சாதீக்குக்கொரு நீதி... கட்சிக்கொரு காட்சி... மதத்துக்கொரு வாதம்..." போன்றவை பகுத்தறிவுக்கு வேண்டாம் என்று.
நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  %E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
நாட்டிலுள்ள சாமானியர்களுக்கு நீதிமன்றமே கடைசி நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசி இருக்கிறார் தலைமை நீதிபதி இக்பால். இன்றைக்கு நீதியை நம்பும் மக்களுக்கும் அது தான் தேவை. அத்தகைய நம்பிக்கைகளுக்கு கை கொடுக்காமல் அரசியல்வாதிகளோடு கை கோர்த்து பகுத்தறிவாதிகளும் - அரசியல் காரணங்களுக்காக மக்களின் நம்பிக்கையில் வேட்டு வைத்து விடக்கூடாது.

http://oosssai.blogspot.com/2012/10/blog-post_15.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...  Empty Re: நீதிபதி சொல்லும், பகுத்தறிவாதி செயலும்...

Post by ஸ்ரீராம் Sun Nov 11, 2012 11:14 am

நல்ல விசயம்தான். நன்றி தம்பி பகிர்வுக்கு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum