தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வஞ்சப் புகழ்ச்சி

View previous topic View next topic Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty வஞ்சப் புகழ்ச்சி

Post by முரளிராஜா Sun Nov 18, 2012 8:36 am

தமிழில் வஞ்சப் புகழ்ச்சி, வஞ்சப் புகழ்ச்சி அப்டின்னு (ரெண்டணி இல்லீங்க)
ஒரு அணியிருக்கிறது. அது என்னான்னா மற்றவரைப் புகழ்வது போல் இகழ்ந்தும்
இகழ்வதுபோல் புகழ்ந்தும் பாடுவது.

இம்முறையில் பாடப்படும் பாடல்கள் வஞ்சப் புகழ்ச்சியணி வகையைச் சார்ந்தவை.

பொதுவாக
இம்முறையை மாந்தர்கள் மேலேற்றிப் பாடுவது வழக்கம். ஆனால் ஓர்
குறும்புக்காரப் புலவன் இவ்வணியைக் கடவுள் மேலேற்றிப் பாடுகிறான்.

கடவுளைப் புகழ்ந்துப் பாடலாம். இகழ்வதுபோல் புகழ்ந்தும் புகழ்வதுபோல் இகழ்ந்தும் பாடுவதா? என்கிறீர்களா?

நாம்,
"அப்பனே! முருகா!" என விளித்து முருகனை வழிபடுகிறோம். இதில் அப்பனே!
எனுஞ்சொல்லின் பொருளென்ன? தந்தையைத்தானே அப்பா என்றழைப்போம். இதில், "அப்ப" என்று முருகனைத் தந்தையாக உயர்த்தியும் னே[/என்று ஏகாரமிட்டு சகத் தோழனைப் போல ஒருமையிட்டுத் தாழ்த்தியுமல்லவா அழைக்கிறோம்.

இப்படி
நாம் உயர்த்தியும் ஒருமையில் தாழ்த்தியும் அழைப்பதன் காரணமென்ன? கடவுளின்
மீது நாம்கொண்டுள்ள ஈடுபாடு, பற்று, இரண்டறக் கலந்த நிலை இதுவே கடவுளை
நம்மை ஒருமையிட்டு அழைக்க வைக்கிறது.

அதே ஈடுபாட்டோடும் கடவுள்
மீதுள்ள உரிமையிலும் தான் அப்புலவனும் வஞ்சப் புகழ்ச்சி செய்துவிட்டான்.
அப்படிப் பாடிய பக்தனைக் கடவுளே கோபித்துக்கொள்ள வில்லை. நாம் கோபித்துக்
கொள்வானேன்? சற்றே பொருட்சுவையைத் துய்ப்போமே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by முரளிராஜா Sun Nov 18, 2012 8:37 am

ஓர்நாள் அந்திப்போழ்தில் தன்வீட்டுத் திண்ணையில் அமந்திருந்த புலவனைப் பார்த்த அவ்வூரார் புலவனைக் கவிதை பாடச்சொல்லிக் கேட்டுமகிழலாம் எனநினைத்து அவனைச் சூழ்துகொள்கின்றனர்.

புலவனும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்று அமரச்செய்து என்ன பாடுவது? யாரைப் பாடுவது? நீங்களே சொல்லுங்கள் என்று அவர்கள் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறான்.

கூட்டத்திலிருதோர் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு இறைவனை வழிபடுபவர்களாதலால் சிலர் "என் தெய்வமாகிய திருமாலைப் பாடுங்கள்!" "இல்லை, இல்லை எங்கள் தெய்வம் ஈசனைப் பாடுங்கள்!" ,"அதெல்லாம் முடியாது. எமது தெய்வம் கணபதியைப் பாடுங்கள்!" என்று அவரவர் விருப்பத்தை வெளியிடுகின்றனர்.

புலவன் பார்த்தான், "உங்கள் அனைவரின் விருப்பத்தையும் ஒரு பாடலிலேயே நிறைவேற்றுகிறேன்!" எனக்கூறிப் பாடலுற்றான்.

மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்கப்பெண் டாயினாள் -கேட்டிலையோ
குட்டி மறிக்கஒரு கோட்டானை யும்பெற்றாள்
கட்டிமணி சிற்றிடைச்சி காண்
!


எனப் பாடி நிறுத்தினான் புலவன் கவி காலமேகம்.

குழுமியிருந்தோர், "அய்யா! நீவிர் பெரும் கல்விமானாக இருக்கலாம். நாடுபோற்றும் பெரும் புலவராயிருக்கலாம். அதற்காய் எங்கள் கடவுள்களை இப்படியா தரக்குறைவாகப் பாடுவது?" எனக் கொந்தளித்து விட்டனர்.

"நானெங்கே உங்கள் கடவுள்களைப் பழித்துப் பாடினேன்?" புகழ்ந்தல்லவா பாடியிருக்கிறேன் என்றான் புலவன்.

"ஏனய்யா பொய் கூறுகிறீர் நீர் எம் பானை வயிற்றோனை ஈற்ற மதுரை மீனாட்சியாகிய பார்வதியை பசுவின் கன்றுகளையும் ஆட்டுக்கடாக்களையும் மறித்து மேய்க்க கோட்டானைப் பெற்றாள் எனப்பாடி எம் கணபதியையும் அவன் தாயையும் பழிக்கவில்லையா?"

"நான் எப்பொழுதய்யா அப்படிப்பாடினேன்? நீங்கள் கணபதிக் கோயிலுக்குச் சென்று அவனை வணங்குகையில் இரு கைகளையும் பெருக்கல் குறிபோல் மறித்துத் தலையில் குட்டிக்கொள்கிறீர்கள் அல்லவா? அதைத்தானய்யா குட்டி மறித்து என்று கூறினேன்"

"அதிருக்கட்டுமையா கோட்டான் என்று இழிந்துப் பாடினீர்களா? இல்லையா? முதலில் அதற்கு விளக்கம் சொல்லும்"

"ஆமாம் சொன்னேன். நீங்களெல்லாம் குட்டி மறிக்க ஒரு கோட்டு ஆனை (ஒரு தந்தத்தை உடைய யானை) யைப் பெற்றாள் என்றல்லவா பாடினேன்"

"அதிருக்கட்டும். முதலில் நீர் எமக்கு விளக்கம் சொல்லும். எம்பெருமானை நீர் எப்படி மாடுமேய்ப்பவன் என்று பாடலாம்?"

"ஆமாம் சொன்னேன். உங்கள் பெருமாள் கண்ணன் அவதாரம் எடுத்து மாட்டிடையர்களோடு சேர்ந்துகொண்டு மாடுகளை மேய்ந்து ஆவுடையான் எனப் பெயரெடுக்கவில்லையா? அதைத்தான் மாடுகளின் அரசன் என்று கூறினேன்"

இப்பொழுது சிவ பக்தகோடிகள் எழுந்து "ஆம்! ஆம்! தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மாட்டிடையன் தானே கண்ணன். ஆனால் எங்கள் இறைவன் எந்த ஆடுகளை மேய்த்தார்? அவரை எப்படி நீங்கள் ஆட்டிடையன் என்று சொல்லலாம்?" என்று பிடித்துக் கொண்டனர்.

"சிவபக்தர்களே! ஆட்டிடையன் என்றால் ஆடுகளை மேய்ப்பவன் என்பது மட்டும்தான் பொருளா? உங்கள் சிவன் தில்லையில் ஒற்றைக் காலைத்தூக்கிக் கொண்டு முக்காலமும் ஆடிக்கொண்டேயிருக்கிறானே! முத்திரை பிடிப்பவனுக்கு (அபினயம்) ஆட்டன் என்றல்லவா பெயர்.
அதனால்தான் ஆடும் இடையை உடையவன் என்று சொன்னேன்"

இத்துணை நேரம் கோபத்தணலில் வெந்துகொண்டிருந்த மக்கள் இப்பொழுது சற்றே தணிந்து எமது கடவுள்களையெல்லாம் தன் புலமைத்திறத்தால் ஒரே பாடலில் ஒன்றிணைத்துப் பாடிய புலவர் நாவுக்கரசர் "வாழ்க! வாழ்க!" என ஆராவாரம் எழுப்பிக்கொண்டே தங்கள் வீடுகளை நோக்கிச் செல்லத் துவங்கினர்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by பித்தன் Sun Nov 18, 2012 10:26 am

இந்த பாடல் கூட அதே வகை தானே!

அப்பன் இரந்துஉண்ணி; ஆத்தாள் மலைநீலி;
ஒப்பரிய மாமன் உறிதிருடி; - சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன்; ஆறுமுகத் தானுக்குஇங்கு
எண்ணும் பெருமை இவை.

(முருகக் கடவுளைத் தரிசித்துப் பழிப்பதுபோலப்
புகழ்ந்து பாடியது)
இது வஞ்ச புகழ்ச்சி இல்லை, நெஞ்சத்து நெருக்கத்தால் வந்த புகழ்ச்சி. கடவுளை வணங்கும் போது சாதாரண மக்கள் கூட "அடேய் முருகா, அடி தாயே, டேய் அப்பா , ஆண்டவனே " என அழைப்பது இல்லையா அது போல் தான். நக்கல்
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by முரளிராஜா Sun Nov 18, 2012 10:35 am

பாடலுக்கு அழகான விளக்கத்தை பித்தனிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by பித்தன் Sun Nov 18, 2012 6:45 pm

முருகப்பெருமானின் தந்தை யை குறிப்பிடும் போது இரந்து(பிச்சை எடுத்தது பற்றி , அவதார நிலை பற்றி) உண்ணி என்றும், அவனின் தாய் மலை நீலி எனவும் , அவனது மாமன் அதாவது திருமால் ஒரு அவதாரத்தில் வெண்ணை திருடி யதையும்,(சக்தியின் சகோதரனாக திருமால் வழங்க படுகிறார் ). முருகனின் அண்ணன் சப்பை காலும், பெருவயிறும் கொண்டவன் என்பதை எல்லாம் காளமேகம் முருகனை வணங்கும் பொருட்டு கூறுகிறான்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by Manik Sun Nov 18, 2012 6:48 pm

அருமையான பதிவு முள்ளி அண்ணா.........

அருமையான விளக்கம் பித்தன் அவர்களே
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by ஜோர்பா Sun Nov 18, 2012 8:19 pm

ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by மகா பிரபு Mon Nov 19, 2012 10:57 am

நம்ம முரளி அண்ணன் மாதிரி அறிவாளி யாருமே இல்லை.. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by ஜோர்பா Mon Nov 19, 2012 12:31 pm

மகா பிரபு wrote:நம்ம முரளி அண்ணன் மாதிரி அறிவாளி யாருமே இல்லை.. நக்கல்
அணியை பற்றி எடுத்துக்காட்டு தந்தமைக்கு நன்றி நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 12:35 pm

ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:நம்ம முரளி அண்ணன் மாதிரி அறிவாளி யாருமே இல்லை.. நக்கல்
அணியை பற்றி எடுத்துக்காட்டு தந்தமைக்கு நன்றி நக்கல்
இந்த இரண்டு பின்னுட்டங்களும் என் அறிவின் திறமையை பார்த்து ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடே நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by மகா பிரபு Mon Nov 19, 2012 5:15 pm

முரளிராஜா wrote:
ஜோர்பா wrote:
மகா பிரபு wrote:நம்ம முரளி அண்ணன் மாதிரி அறிவாளி யாருமே இல்லை.. நக்கல்
அணியை பற்றி எடுத்துக்காட்டு தந்தமைக்கு நன்றி நக்கல்
இந்த இரண்டு பின்னுட்டங்களும் என் அறிவின் திறமையை பார்த்து ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடே நக்கல் நக்கல் நக்கல்
அதெல்லாம் உங்களுக்கு இருக்கா?நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by முரளிராஜா Mon Nov 19, 2012 5:45 pm

அறிவு என்கிட்டே இருக்கு பொறாமை உங்ககிட்ட இருக்கு [You must be registered and logged in to see this image.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by இம்சை அரசன் Mon Nov 19, 2012 7:22 pm

முரளிராஜா wrote:அறிவு என்கிட்டே இருக்கு பொறாமை உங்ககிட்ட இருக்கு [You must be registered and logged in to see this image.]


அறிவு உன்கிட்ட இருக்குதான்....ஆனால் அதை வெச்சு நாலு பேருக்கு நல்ல வார்த்தைகள் சொல்லனும் மாப்ளே......நீயோ....குதுகலமான குடும்பத்துல குத்தாட்டம்ல போட்டுவிட்டு போயிடுறே. ரொம்ப ஜாலி ..!!!!!!!
இம்சை அரசன்
இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 304

Back to top Go down

வஞ்சப் புகழ்ச்சி Empty Re: வஞ்சப் புகழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum