Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
மூலவர் : அர்த்தநாரீஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : திரிபுர சுந்தரி
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : எழும்பூர்
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
-
தல சிறப்பு:
மூலவர் அர்த்தநாரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக வழிபடப்படுகிறார். இந்த லிங்கம் மிகப் பெரியது. மூன்றரை அடி விட்டமுள்ள ஆவுடையார் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11 மணி வரை, திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர், சென்னை.
பொது தகவல்:
சுவாமியின் கருவறைக்கு வெளியே விநாயகரும், சுப்ரமணியரும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். மேலும் லட்சுமி நாராயணப் பெருமாள், கருடாழ்வார் சன்னதிகளும் உள்ளன.
பிரார்த்தனை
கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்க, குடும்பச் சிக்கல்கள் விலக, மணப்பேறு, மகப்பேறு அமைய, நோய் நொடி நீங்க, கேட்டதெல்லாம் கிடைக்க என சகல நற்பேறுகளையும் அருளும் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் அர்த்தநாரீஸ்வரர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கிழக்கு நோக்கிய கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்தால் மகா மண்டபம், பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது. கருவறை வெளியே விநாயகரும் சுப்பிரமணியரும் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் அர்த்தநாரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக வழிபடப்படுகிறார். சிவ-சக்தியை ஒரு சேர வழிபட்ட பலன் இவரை வணங்குவதால் கிட்டும் என்கின்றனர். இந்த லிங்கம் மிகப் பெரியது. மூன்றரை அடி விட்டமுள்ள ஆவுடையார் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.
சிவபெருமானுக்குரிய மகேஸ்வர வடிவங்களில் சத்யோ ஜாதம் (மேற்கு திசை) எனும் முகத்துக்கு உரிய மூர்த்தியாக விளங்குபவர் அர்த்தநாரீஸ்வரர். சிவசக்திவடிவமான இந்த லிங்க வடிவை பூஜிப்போர் இம்மை மறுமை இரண்டிலும் விருப்பப்படுகின்ற அனைத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். இந்த லிங்கம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றொரு தகவலும் நிலவுகிறது. எனவே இங்கே வழிபாடு செய்வது, பல புண்ணியத்தலங்களை தரிசித்த பலனைத் தரக்கூடியது.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் அருள்கின்றனர். சுவாமிக்கு இடதுபுறம், தெற்கு நோக்கி தனிச் சன்னதியில் அம்மன் திரிபுர சுந்தரி காட்சி தருகிறாள். அருகே நவகிரக சன்னதியும் உள்ளது. மூலவருக்கு வலதுபுறம் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவனும் பெருமாளும் அருகருகே அமைந்து அருள்பாலிப்பது சிறப்பு. லக்ஷ்மிநாராயணப் பெருமாள் சன்னதிக்கு எதிரே தனிச் சன்னதியில் கருடாழ்வார் சேவை செய்கிறார். மேலும் அனுமன், விநாயகர் ஆகியோருக்கும் தனிச்சன்னதிகள் உள்ளன. உற்சவர்களாக சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் அருள்கின்றனர்.
தல வரலாறு:
சுமார் இருநூறாண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வசித்த பெரியவர் ஒருவரின் தோட்டத்துக் குளத்தில் நீர் வற்றியபோது தூர் எடுக்கச் செய்தார். அச்சமயம் இக்கோயில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. உடனே சிலைகள் சுத்தம் செய்யப்பட்டு, அருகில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து அதில் வைக்கப்பட்டு தினசரி விளக்கேற்றி வழிபாடு செய்து வந்துள்ளனர். சில காலத்திற்குப் பின்னர் கோயில் அமைத்துள்ளனர். நீண்டகாலமாக ஜலத்திலேயே வாசம் செய்ததால் இவருக்கு ஜலகண்டேஸ்வரர் என்றொரு பெயரும் உண்டாம். இவரை வழிபட்டால் சிவனையும், சக்தியையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இந்த சிவனை அர்த்தநாரீஸ்வரர் என அழைக்கின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தாஷ்பிரகாஷ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள ஆராவமுதன் கார்டன் முதல் தெருவில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வடதிருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» வடதிருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» கோயம்பேடு அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில்,சென்னை
» அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் =சென்னை
» வடதிருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» கோயம்பேடு அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில்,சென்னை
» அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் =சென்னை
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|