தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:33 pm

பாகற்காய் கெடாமல் இருக்க

பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி – தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

சுவையான முறுக்கு செய்ய

மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

தயிர் புளிக்காமல் இருக்க

தயிர் புளித்துவிடும் என்ற நிலை வருகிறபோது அதில் ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் புளிக்காது.

எண்ணெய்க் காறலை போக்க

எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:34 pm

முட்டை கெடாமல் இருக்க...

அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய எளிமையான, அத்தியாவசியமான கிச்சன் டிப்ஸ் இதோ... 

முட்டை கெடாமல் இருக்க...

முட்டைகளை 30-40 நாட்கள் வரை கெடாமல் வைப்பதற்கு, அதன் மேல் ஒரு பிரஷால் சமையல் எண்ணையை தடவவும்.

உருளைக்கிழங்கு கெடாமல் இருக்க...

உருளைக்கிழங்குகளை வெங்காயங்களுடன் வைத்தால் அவை சீக்கிரமாக கெட்டுப்போய்விடும். அவ்வாறு அவை கெடாமல் இருப்பதற்கு, அந்த உருளைக்கிழங்குகள் இருக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தை வைக்கவும்.

ஸ்வீட் செய்த பின்...

ஸ்வீட் செய்து இரும்பு அல்லது அலுமினியத் தட்டில் தான் கொட்ட வேண்டும். எவர்சில்வர் தட்டு சரிப்படாது.

குலோப்ஜாமூன் செய்யும்போது...

குலோப்ஜாமூன், ஜிலேபி, ஜாங்கிரி முதலியவைகளுக்கு ரொம்ப கம்பி பதம் தேவையில்லை. பிசுக்குப் பதம் இருந்தால் போதும் கைகளில் பிசுக்காக ஒட்ட வேண்டும் கம்பிப்பதம் ஆரம்பிக்கும் முன் எடுத்துவிட வேண்டும்.

மைசூர் பாகு செய்யும்போது...

மைசூர் பாகு, காஜு கட்லி, பாதாம் கேக் முதலியவைகளில் கடலை மாவு அல்லது முந்திரி அல்லது பாதம் போட்டுக் கிளறும் ஸ்வீட்டுகளுக்கு, பாகு, ஒற்றைக் கம்பிப் படியாக இருக்க வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:35 pm

பொங்கல் மீந்துவிட்டதா..?

வீட்டில் இரவு உணவிற்காக தயார் செய்யும் பொங்கல், சாம்பார் போன்றவை மீந்துவிட்டால், அதை என்ன செய்வது எனத் தெரியாமல் கவலைப்படும் இல்லதரசிகளுக்காக இதோ சில சுவாரஸ்யமான டிப்ஸ்

சாம்பார், ரசம் 

 இரவு உணவுக்காக சமைத்த சாம்பார் அல்லது ரசம் மீந்துவிட்டால், அதனை வடிகட்டி, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்தால் சுவையான, ருசியான மசாலா சப்பாத்தி ரெடி.

பொங்கல் - 

மீதமுள்ள பொங்கலை சிறிதளவு அரிசி மாவுடன் பிசைந்து அந்த கலவையில் துருவிய கேரட், நறுக்கிய புதினா போன்றவற்றை சேர்த்து அடையாகவோ அல்லது சிறு வடைகளாகவோ சுட்டால் ருசியாக இருக்கும்

ச‌ர்‌க்கரை ‌பாகு 

மைதா மா‌வி‌ல் ச‌ர்‌க்கரை ‌ஜீரா/ பாகை ஊ‌ற்‌றி கரை‌த்து இ‌னி‌ப்பு தோசை சு‌ட்டு‌க் கொடு‌க்கலா‌‌ம். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:35 pm

சமையலறை பாதுகாப்பு டிப்ஸ்

1. தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன் குக்கர் மூடியிலுள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது நல்லது. இல்லையென்றால் சமைக்கும்போது ஏதாவது பிரச்னை வரலாம்.

2. கேஸ் அடுப்பு ஒரு பக்கம் எரிந்துகொண்டு இருக்கும்போதே மற்ற பாகங்களைத் துடைத்து சுத்தம் செய்யக்கூடாது. ஸ்டவ் எரியாமல் இருப்பதோடு……..கேஸ் சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும்.

3. கடுகு தாளிக்கும்போது குமிழ் வைத்த மூடி ஒன்றால் மூடியபடி தாளித்தால் அது தெறித்து விழுந்து நம்மை தொந்திரவு செய்யாமல் இருக்கும். குறிப்பாக கண்கள் பாதிப்பாகாமல் இருக்கும்.



4. சமையலறையில் இரண்டு கிடிக்கிகளை நல்ல நிலையில் எப்போதும் வைத்திருங்கள். அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்க இவை பயன்படும்.இதற்கு பதில் புடவைத் தலைப்பு துண்டு காகிதம் போன்றவற்றை சூடான பாத்திரங்களை இறக்க பயன்படுத்தாதீர்கள்.

5. மூன்று நாலு பர்னர்கள் கொண்ட அடுப்பை உபயோகிக்கும்போது அதிகம் கிளறத் தேவையில்லாத பாத்திரங்களை பின்புறமும் அடிக்கடி கிளற வேண்டிய பொரியல் அப்பளம் பொரிக்கும் கடாய் போன்றவற்றை முன்புறமாகவும் வைப்பதோடு பாத்திரங்களின் சைஸூம் தேவையான அளவே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:36 pm

கிரைண்டர் பாதுகாப்பு டிப்ஸ்.

மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்தும் சாதனம் கிரைண்டர். தானியங்கள் அதிகம் போடாமல், சிறிதளவு தானியங்கள் போட்டோ அரைப்பதால் கூட கிரைண்டர் வீணாக தேய்வு அடையும்.

முதலில் சிறிதளவு தானியங்களைப் போட்டு கிரைண்டரை சில வினாடிகள் ஓடவிட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதமிருக்கும் தானியங்களைச் சேர்க்க வேண்டும் அரைத்துக் கொள்ளலாம்.

கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும். கிரைண்டரில் உளுந்து அரைத்த பிறகு  அரிசியை அரைக்கலாம் ஏனெனில் கல்லின் வழவழப்பு நீங்கும். உளுந்தும் கணிசமாக இருக்கும். இட்லியும் பூப்போல இருக்கும்.

கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் பலகை டிரம்மில் ஒட்டாதபடியும், வட்டையில் உள்ள கல்லிலும் படாதபடியும் சிறிதளவு இடைவெளி விட்டு மாட்டி இருக்க வேண்டும். இல்லையெல் பலகை விரைவில் தேய்ந்துவிடக்கூடும்.

குழவியல் உள்ள கட்டை தண்ணீரில் ஊறி இற்றுப் போய்விட்டால் உடனே மாற்ற வேண்டும். கிரைண்டர் வீட்டின் மூலையில் இருந்தால், எலி சில சமயங்களில் ஒயர்களைக் கடித்துவிடும். இதனால் சமயங்களில் கிரைண்டர் ஷாக் அடிக்கும் அபாயம் ஏற்படும். ஆதலால் கிரைண்டர் இருக்குமிடம் தனியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை இறுக்கமாக மாட்டப்பட்டு இருக்க வேண்டும். லூசாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது. கிரைண்டரில் உள்ள கல்லும், குழவியும் வழ வழ என்று வழவழப்பாக இருந்தால் மாவு அரைக்க அதிக நேரமாகும். இதைத் தவிர்க்க இரண்டுக் கல்லையும் கொத்திக் கொள்ள வேண்டும்.

கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றி விட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.

கொர, கொர என்ற சத்தம் அதிகம் வந்தால் பேரிங் பழுதடைந்து இருக்க நேரிடும். உடனே பேரிங்க்கை மாற்ற வேண்டும். மோட்டார் சுழன்று டிரம் சுழவில்லை எனில் பெல்ட் பழுது அடைந்து இருக்கும். இதற்கு புதிய பெல்ட் மாற்ற வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:41 pm

சின்ன சமையல் டிப்ஸ்கள் இதன் மூலம் வேலையை சுலபமாக்கி கொள்ளலாம்.

1. எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு 300 கிராம் அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
ச‌மைய‌லை ரொம்ப‌ சுல‌ப‌மாக‌ முடிக்க‌லாம், நேர‌த்தையும் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்

2. புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.

3. தேங்காய் நிறைய‌ இருந்தால் அதில் உப்பை த‌ட‌வி வைப்பார்க‌ள், அத‌ற்கு ப‌தில் ப‌த்தைக‌ளாக‌ போட்டோ (அ) பொடியாக‌ அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜ‌ரில் வைத்து கொள்ள‌லாம். தேவையான‌ போது ச‌ட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேர‌ம் த‌ண்ணீரில் போட்டுவைத்தால் உட‌னே க‌ழ‌ண்டு வ‌ந்துவிடும்.

4.ஆப்ப‌த்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட‌ பால் எடுக்கும் போது அத்துட‌ன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ந‌ல்ல‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.

5. தின‌ம் இஞ்சி டீ குடிப்ப‌வ‌ர்க‌ள் அதை போட்டு த‌ட்டி கொண்டு இருக்காம‌ல் ஒரு பெரிய‌ துண்டு அள‌விற்கு கொர‌ கொர‌ப்பாக‌ ஏல‌க்காய் சேர்த்து அரைத்து ஒரு ட‌ப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தின‌ம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அள‌விற்கு எடுத்து போட்டு கொள்ள‌லாம்.அல்ல‌து கேர‌ட் துருவியில் தின‌ம் ஒரு துண்டு துருவிக்கொள்ள‌லாம்

6.பொரித்த‌ எண்ணை ம‌றுப‌டி ப‌ய‌ன் ப‌டுத்தும் போது அதை வ‌டிக‌ட்டி கொள்ளுங்க‌ள். முடிந்த‌ வ‌ரை கொஞ்ச‌மா எண்ணை ப‌ய‌ன் ப‌டுத்தி பொரிக்க‌வும். மீதியை முன்று நாட்க‌ளுக்குள் முடிக்க‌ பாருங்க‌ள்.

7.அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.

8. முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள்.அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.

9. குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.

10 . கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:42 pm

* அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும்.

* இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது.

* ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது.

* கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும்.

* எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது.

* குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும்.

* காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது.

* தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக உபயோகித்தால் கூடுதலாக இருக்கிற கொழுப்பு வெளியேறி சமநிலைக்கு வந்துவிடும்.

* பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது.

* வெள்ளைச் சர்க்கரை கெடுதல் தரும். வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

* அரிசியோடு சோளம், கேழ்வரகையும் சேர்த்து இட்லி தயாரித்தால் சத்து கூடுதலாக கிடைக்கும்.

• காய்கறிகள், கீரை வகைகளை கூடுதலாக எடுத்துக் கொண்டு உணவை குறைத்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:43 pm

காஸ் அடுப்பு டிப்ஸ

நைலக்ஸ் புடவைக் கட்டிக்கொண்டு சமைக்க கூடாது.மேலும் குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று காஸ் குழாய்களை  திருப்பாமல்    பார்த்துக் கொள்ள வேண்டும். 

சுய ரிப்பேர் வேலை ஆபத்தானது.விற்பனையாளரிடமே இதை விட்டு விட வேண்டும். மேலும் ரப்பர் குழலில் வெடிப்பு, துளை  இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பு எப்போதும் தரை மட்டத்தில் இருந்து இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.

பிளாஸ்டிக் சாமான்களை அடுப்பின் அருகில் வைக்ககூடாது.  

இரவில் படுக்கப் போகும் முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் சரியாக மூடி இருக்கிறதா எனக் கவனிக்கவும். 

அடுப்பில் காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவற்றை வேக வைக்கத் தேவையான அளவு தண்ணீரையே பயன்படுத்த வேண்டும்.  

பாத்திர அலமாரிகளோ, மற்றவைகளோ எரியும் அடுப்பிற்கு மேல் இருக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை எடுக்க முற்படும் போது புடவையில் தீப் பிடிக்க வாய்ப்பு உண்டு. 

அடி கனமான, அகலமான, வாய் அகன்ற, உயரம் குறைந்த பாத்திரங்களில் கூட்டு, குழம்பு வைப்பதால் எரிசக்தியை கணிசமாகச் சேமிக்க முடியும்.  

ஆடையில் நெருப்பு பற்றி விட்டால் உடனே ஒரு ஜமுக்காலம் அல்லது கம்பளியை உடலைச் சுற்றி போர்த்துவதால் நெருப்பை அணைக்க முடியும். 

அடுப்பின் மீது நீரைக் கொட்டி கழுவக்கூடாது. இதனால் பர்னர்கள், பட்டன்கள் இவற்றில் துருவும், அடைப்பும் ஏற்பட வாய்ப்பு உண்டு.  

சிறிதளவு நீரில் உப்பைக் கலந்து அதில் ஒரு நியூஸ் பேப்பரை முக்கி அதைக் கொண்டு காஸ் அடுப்பைத் துடைத்தால் பளிசென்று தோன்றும்.  

குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றை சூடாக இருக்கும் போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும். 

அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்து சுத்தப்படுத்திய பின் உபயோகிக்கவும்.

காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெண்ணையில் ஊறவைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம். 

காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக தெரிந்தால் உடனடியாக கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறக்கவும். அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும்.சிலிண்டருடன் இணைத்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிவதைத் தடுக்கும்.

மாற்று சிலிண்டர் இணைக்கும் போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். 

அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும். 

அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருட்கள் அடுப்பை அணைத்து வெளிவரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்ப்பட்டு தீ விபத்து ஏற்படலாம். 

அடுப்பை அணைக்கும் போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடி விட்டு பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.  

ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்தவேண்டும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:44 pm

குக்கர் பராமரிப்பு

இன்றைக்கு பெரும்பாலோனோர் வீடுகளில் குக்கர் சமையல்தான். எரிபொருளும் சிக்கனமாகிறது,சமையல் எளிதாக முடியும் என்பதால் கிராமங்களிலும் குக்கர்தான் உபயோகிக்கின்றனர். குக்கரை சரியாக பராமரித்தால் அதன் ஆயுள் நீடிக்கும், நமக்கும் பாதுகாப்பாக இருக்கும். ப்ரசர் குக்கர் பராமரிப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

சுகாதாரம் அவசியம்

சமைத்து முடித்த உடன் குக்கரின் கேஸ்கட், விசில் போன்றவைகளை தனித்தனியாக கழுவி துடைக்க வேண்டும். ப்ரஸ் கொண்டு விசில் உள்ள உணவு துணுக்குகளை நன்றாக கழுவவேண்டும்.

குக்கரின் அடிப்பகுதியில் விளக்கி கழுவ வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். நாம் அதிக அளவில் ஸ்க்ரப் கொண்டு தேய்க்காமல் மென்மையான ஸ்பாஞ்ச் வைத்து குக்கரின் அடிப்பகுதியை கழுவலாம்.

குக்கரில் அடி பிடித்து விட்டாலோ, கரை படிந்து விட்டாலோ ஸ்க்ரப்பர் ப்ரஸ் கொண்டு கிளீன் செய்யலாம். ஒரு கப் குளிர்ந்த நீரில் சில துளிகள் சோப் நீர் விட்டு குக்கரில் ஊற்றவும். அதை லேசா சூடாக்கி பின்னர் கழுவினால் தீய்ந்து போன உணவுகள் ஈசியாக வந்து விடும்.

கறுப்பு வெள்ளையாகும்

குக்கரின் உட்புறம் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோல் அல்லது வினிகர் கொஞ்சம் போட்டுப் பின்பு அதில் வைக்கக் கூடிய பாத்திரங்களை அடுக்கிவைப்பதால் அதன் உட்புறம் கறுப்பாகாமல் இருக்கும். கறுப்பாக இருந்தாலும் இந்த முறையின் மூலம் கறுப்பு நீங்கி விடும்.

குக்கரின் ரெகுலேட்டர், விசில் போன்றவைகளை குழாயில் காண்பித்து கழுவுவது பழைய முறை. தற்போது தனித்தனியாக கழுவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே விசில் பகுதியை தனித்தனியாக உரசி கழுவி நன்றாக உலர்ந்த துணி கொண்டு துடைத்து வைக்கலாம் நீண்ட நாட்களுக்கு வரும்.

கேஸ்கட் பராமரிப்பு

சிலர் குக்கர் மூடியைத் திறந்தபின்பு கேஸ்கெட்டை எடுக்காமல் அப்படியே வைத்துவிடுவார்கள். சிலர் கேஸ்கெட்டை இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒரு முறைதான் சுத்தம் செய்வார்கள். இது மிகவும் தவறு. சூட்டோடு அப்படியே போடுவதால் ரப்பர் அப்படியே இறுகிப்போய்விடும். இதனால் கேஸ்கெட் அதிக நாள் உழைக்காது.

சமையல் முடிந்தவுடனேயே குக்கரின் மூடியைத் திறந்து ரப்பர் கேஸ்கட்டைக் கழற்றி அதை நன்கு சுத்தமாகக் கழுவி நன்கு இழுத்துவிட்டுப் பின்பு உரிய இடத்தில் மாட்டவேண்டும். இப்படிச் செய்தால் ரப்பர் கேஸ்கெட் அதன் ஒரிஜினல் சைஸில் இருக்கும். நீண்ட நாள் உழைக்கும்.

நீண்ட ஆயுள் கிடைக்கும்

தற்போது காப்பர் பாட்டம், நான் ஸ்டிக் சாண்ட்விட்ச் போன்ற வகைகளைப் பயன்படுத்துகிறார்கள். கேஸ் அடுப்பில் தீயை அதிகமாக வைத்து இவற்றைப் பயன்படுத்தக் கூடாது. தண்ணீர் அதிகம் இல்லாமல், தீயும் அதிகமாக இருந்தால் பாத்திரம் சீக்கிரம் கெட்டுவிடும். இவ்வகைப் பாத்திரங்களைப் பயன்படுத்தும்போது அடுப்பில் தீயை ரொம்பவும் குறைத்து "சிம்'மில் வைத்தாலே போதும். சமையலும் சீக்கிரம் முடியும், கேஸ் மிச்சப்படும்.

நமக்கு பாதுகாப்பு

வருடத்திற்கு ஒருமுறை குக்கரை அதற்குரிய கடைகளில் கொடுத்து இன்ஸ்பெக்சன் செய்யவேண்டும். கேஸ்கட், விசில், போன்றவைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை பார்க்கவேண்டும். சின்னதாக ஏதாவது பிரச்சினை என்றாலும் குக்கர் வெடித்து விடும் ஜாக்கிரதை. குக்கரின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். லூசாக இருந்தால் உடனே மாற்றவேண்டும். அடிக்கடி எண்ணெய் ஊற்றி பராமரித்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

குக்கர் பராமரிப்பு குக்கரின் ஆயுளை மட்டும் நீட்டிப்பதில்லை. குக்கர் வெடிக்காமல் இருந்தால் நம் ஆயுளும் நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இவைகளைப் பராமரிக்கும் விதத்தைப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். சிக்கனமும் ஆகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:45 pm

சமையலறையை சுத்தமாக வைத்திருக்க சில ஆலோசனைகள்
 
ஒரு வீட்டின் அழகையும் சுத்தத்தையும் தீர்மானிப்பதில் சமயலறை பிரதான பங்கு வகிக்கின்றது. ஆனால், பரபரப்பான உலகில் சமயலறைச்  சுத்தம் என்பது இன்று பலருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அவசர உலகில் அவசர அவசரமாக சமைத்து எடுத்துக்கொண்டு செல்வோரையே இப்போது அதிகம் காணமுடியும். விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டை துப்புரவு செய்வதை வழக்கமாகக் கொண்ட 'நவநாகரீக' காலத்திலேயே நாம் வாழ்கிறோம்.

ஒரு வீட்டின் சமயலறை என்பது சுத்தமாக இருப்பது மிக அவசியமானது. ஏனெனில் நமது நீண்ட ஆயுளை தீர்மானிப்பதில் நாம் உண்ணும் உணவுகளும் பிரதான பங்கு வகிக்கின்றன. அந்த உணவுகளை தயார்படுத்தும் சூழல் சுத்தமாக இருந்தால் மட்டுமே அங்கு சமைக்கப்படும் உணவுகளும் சுத்தமாக இருக்கும்.

சமயலறயை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்களுக்கு கீழ்வரும் படிமுறைகள் ஓரளவில் உதவக்கூடும்.

முதலில் சமையலறையில் முடுக்குகளை சுத்தம் செய்ய வேண்டும். அவசர பாவனைக்குத் தேவையற்றது என நீங்கள் கருதும் பொருட்களை முகப்பில் வைக்ககூடாது. பாத்திரங்களை அதிகமாக குவித்து வைக்கும்போது அவை சில நேரங்களில் அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். அதைவிட சமயலறையின் சுத்தத்திற்கும் அது தடையாக அமைந்துவிடும்.

அதன்பின் சுத்தம் செய்வதற்கான திரவங்களைப் பயன்படுத்தி சமயலறையில் முகப்பு, முடுக்குகளில் படிந்திரும் தூசுகளையும், கறைகளையும் அகற்றவேண்டும்.

கேஸ் அடுப்பை, இரவில் சமையல் வேலைகள் முடிந்தபின் சுத்தம் செய்யவேண்டும். அடுப்பின் சுத்தத்தை பார்த்து எம்மைப் பற்றி மதிப்பிடுபவர்கள் அதிகம். சமைக்கும் போது சாதத்தின் கஞ்சி, கறிகள், கரி போன்றவை வாயு அடுப்பில் படிந்து பார்ப்பதற்கு அலங்கோலமாக இருக்கும்.  எனவே சமைத்து முடிந்தபின் முதலில் வாயு அடுப்பை பளபளக்கும் வகையில் சுத்தம் செய்துவிடுவது நல்லது. எவ்வளவுதான் சமயலறையை சுத்தம் செய்தாலும் அடுப்பினை சுத்தம் செய்யாமல் இருந்தால் அது சமயலைறையின் அழகையே கெடுத்துவிடும்.

குளிர்சாதனப்பெட்டியையும்  நன்கு சுத்தம் செய்தல் மிக முக்கியமானது. குளிர்சாதனப்பெட்டியின் வெளித்தோற்றத்தில் படிந்துகிடக்கும் தூசுகாளனது குளிர்சாதனப்பெட்டியின் உண்மை நிறத்தையே மாற்றிவிடுகின்றது. எனவே அவற்றை நீக்கி குளிர்சாதனப் பெட்டியை புதுப்பொலிவுடன் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது.  
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:45 pm

ஆனால்,  அதைவிட முக்கியமானது குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தை சுத்தமாக வைத்திருப்பது. குளிர்சாதனப் பெட்டியை திறந்தவுடனே எழும் துர்நாற்றத்தை முற்றிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது. குளிர்சாதனப்பெட்டியில் தேவைக்கு உதவாத வகையில் அடுக்கிவைத்திருக்கும் வெற்றுப்போத்தல்கள் பழைய பொருட்கள் என்பவற்றை அகற்றிவிட வேண்டும்.

உணவுத் தட்டுக்கள், பானங்கள் அருந்தப் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை அப்படியே குவித்து வைக்காமல் அந்தந்த வேளைகளிலேயே கழுவி அடுக்கி விடுவது நல்லது.     

சமயலைறையில் காணப்படும் 'ஸிங்க்' இல் உணவுத் துகள்கள், எண்ணை மற்றும் கழிவுபொருட்கள் என்பன தேங்கிக் கிடக்கும். இவற்றை சுத்தம் செய்யாமல் விடுவதால் அதனூடாக கிருமிகள் தொற்றுகின்றன. சில நேரங்களில் இவை துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே ஸிங்கை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஸிங்கில் பாத்திரங்களை கழுவி முடித்தபின்பு ஸிங்கில் படிந்துள்ள எண்ணையை சவர்க்கார கரைசல், ஸ்பொஞ்ச் ஆகியவற்றைக் கொண்டும் சுத்தம் செய்துவிடவேண்டும். 

சமையலைறயிலுள்ள போத்தல்கள் மற்றும் பலசரக்கு பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் இராக்கைகள், அலுமாரிகளையும் சுத்தம் செய்யவேண்டும். இவற்றின் வெளித்தோற்றத்தில் படிந்துகிடக்கும் தூசுகள் ஒட்டடைகளை அகற்றிவிட்டு அவற்றையும் பளிச்சிடும் வகையில் வைத்திருந்தால் சமையலறை அழகாக காட்சியளிக்கும்.

சமயலைறையின் தரையில் அழுக்குகள் தேங்கியிருந்தால் துர்நாற்றம் ஏற்படுவது இயல்பு. எனவே அழுக்கு நீக்கி கரைசல்களை பயன்படுத்தி பளபளக்கும் வகையிலும் தரையில் நீர் இல்லாத வகையிலும் சுத்தம் செய்துவிடவேண்டும்.

அதேவேளை தரையில்  நீர் முதலான திரவங்கள் சிந்தப்பட்டிருந்தால் அதை உடனே துடைத்துவிட வேண்டும். அது சுத்தத்திற்கு மட்டுமல்ல, வழுக்கி விழுதல் போன்ற ஆபத்துகளையும் தவிர்க்க உதவும்.

இவையனைத்தையும் செய்து முடித்தபின்பு குப்பைக் கூடை, தும்புத்தடி, சவல், பாத்திரங்களை பிடிப்பதற்கு பயன்படுத்திய துணிகள் என்பவற்றையும் கழுவி உலர விடுவது சிறந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:46 pm

சமையலறை சுத்தமாகத் திகழ…!

* காபி குடித்த கப் மற்றும் தம்ளர்களில் காபி கறை போகவில்லையா? துணிச்சோடா மாவு கலந்த தண்ணீரில் அவற்றை 3 மணி நேரம் ஊறவைத்து பின் தண்ணீர் ஊற்றிக் கழுவுங்கள். கறை நீங்கி கப் மற்றும் தம்ளர்கள் சுத்தமாக பளிச்சிடும்!

* சமையலறையில் கை தவறி முட்டையைக் கீழே போட்டு உடைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம். உடைந்து சிதறிக்கிடக்கும் முட்டைக்கருவின் மீது உப்புத்தூளைபோட்டு மூடுங்கள். இரண்டு நிமிடம் கழித்து ஒரு துண்டு பேப்பரால் அள்ளுங்கள். சமையலறை சுலபமாகச் சுத்தமாகும்!

* அலுமினிய கடாய் மற்றும் பிரஷர் குக்கர் பாத்திரங்களின் அடியில் படிந்துள்ள கறை நீங்க அவற்றின் உள்ளே சில ஆப்பிள் தோல்களை போட்டு சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வையுங்கள். கொதித்த தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யுங்கள் கறை நீங்கி பாத்திரங்கள் பளிச்சிடும்!

* உங்கள் சமையல் மேடை மற்றும் சமையலறையின் தரையில் அழுக்கு அதிகமாக படிந்து விட்டதா? கவலை வேண்டாம். ஒரு பாத்திரத்தில் கால்பங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 4 மேஜைக்கரடி புளிக்கரைசல் வினீகர் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்த கலவையை 10 நிமிடம் கொதிக்கவைத்து இறக்குங்கள். அக்கலவையினை அழுக்குபடிந்த சமையல் மேடை மற்றும் சமையலறையின் தரையின் மூலை முடுக்குகளில் ஊற்றி ஸ்டீல் உல் சோப் பேடினால் துடைக்கவும். பின்பு தண்ணீர் ஊற்றிக் கழுவினால் சமையலறை பளிச்!

* பாட்டிலில் வீசும் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்பாட்டிலில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மேஜை கரடி கடுகு அல்லது ஆப்பச்சோடா போட்டு நன்றாக குலுக்குங்கள். ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் கழுவுங்கள். பாட்டில் துர்நாற்றம் நீங்கி பளீரிடும்!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:47 pm

சமையலறை டிப்ஸ்கள்

சின்ன சமையல் டிப்ஸ்கள் இதன் மூலம் வேலையை சுலபமாக்கி கொள்ளலாம்.

1. எல்லா அசைவ சமையலுக்கும், குருமாக்களுக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் அவசியம் அதை இஞ்சி அரை கிலோ , பூண்டு கால் கிலோ அளவில் உரித்து சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளலாம். அரைத்ததும் அதனுடன் சிறிது உப்பு தூள்,கலந்து வைக்கவேண்டும்.
சின்ன பேமிலிக்கு ஒரு மாதம் வரை போதும். நல்ல ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். வேண்டுமானால் நாலில் ஒரு பங்கை எடுத்து பிரீஜரிலும் வைக்கலாம்.
ச‌மைய‌லை ரொம்ப‌ சுல‌ப‌மாக‌ முடிக்க‌லாம், நேர‌த்தையும் மிச்ச‌ப்ப‌டுத்த‌லாம்

2. புளிவிட்டு செய்யும் சமயலுக்கு வேலைக்கு சொல்பவர்கள் சுடு நீரில் ஊற போட்டு கரைக்கனும் என்ற அவசியம் இல்லை சிறிது உப்பு சேர்த்து இரவே ஊறபோட்டு விடலாம்.

3. தேங்காய் நிறைய‌ இருந்தால் அதில் உப்பை த‌ட‌வி வைப்பார்க‌ள், அத‌ற்கு ப‌தில் ப‌த்தைக‌ளாக‌ போட்டோ (அ) பொடியாக‌ அரிந்தோ அதை ஒரு பாக்கெட்டில் போட்டு பிரீஜ‌ரில் வைத்து கொள்ள‌லாம். தேவையான‌ போது ச‌ட்னிக்கு,குருமாவிற்கு கொஞ்சம் எடுத்து சிறிது நேர‌ம் த‌ண்ணீரில் போட்டுவைத்தால் உட‌னே க‌ழ‌ண்டு வ‌ந்துவிடும்.

4.ஆப்ப‌த்துக்கு, இடியாப்பத்துக்கு தேங்காய்பால் ஊற்றி சாப்பிட‌ பால் எடுக்கும் போது அத்துட‌ன் ஏலாக்காய் சேர்த்து அரைத்தால் ந‌ல்ல‌ ம‌ண‌மாக‌ இருக்கும்.

5. தின‌ம் இஞ்சி டீ குடிப்ப‌வ‌ர்க‌ள் அதை போட்டு த‌ட்டி கொண்டு இருக்காம‌ல் ஒரு பெரிய‌ துண்டு அள‌விற்கு கொர‌ கொர‌ப்பாக‌ ஏல‌க்காய் சேர்த்து அரைத்து ஒரு ட‌ப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொண்டால் தின‌ம் டீ கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் அள‌விற்கு எடுத்து போட்டு கொள்ள‌லாம்.அல்ல‌து கேர‌ட் துருவியில் தின‌ம் ஒரு துண்டு துருவிக்கொள்ள‌லாம்

6.பொரித்த‌ எண்ணை ம‌றுப‌டி ப‌ய‌ன் ப‌டுத்தும் போது அதை வ‌டிக‌ட்டி கொள்ளுங்க‌ள். முடிந்த‌ வ‌ரை கொஞ்ச‌மா எண்ணை ப‌ய‌ன் ப‌டுத்தி பொரிக்க‌வும். மீதியை முன்று நாட்க‌ளுக்குள் முடிக்க‌ பாருங்க‌ள்.

7.அடுத்த நாள் என்ன சமைக்க போகிறோம் என்பதை ஒரு நாள் முன்பே யோசித்து தேவையானதை வாஙகி வைத்து கொள்ளுங்கள்.காலையில் சமைக்கும் போது டென்ஷன் இல்லாமல் இருக்கும்.

8. முருங்கக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்ப்டியே பிரிட்ஜில்வைத்து காயவிடாதீர்கள்.அதை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு பிரீஜரில் போட்டு வையுங்கள். முருங்கக்காய் சேர்த்து சமைக்கும் போது அப்ப எடுத்து அப்படியே கழுவி சேர்த்து கொள்ளலாம், இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:47 pm

9. குருமாக்களில் தேங்காயின் அளவை குறைத்து கொண்டு பாதம் சேர்த்து அரைத்து ஊற்றலாம். இது கொலஸ்ராயிலின் அளவை கட்டுபடுத்தும் குழந்தைகளுக்கும் மூளை வளர்சி அதிகரிக்கும். ரிச் டேஸ்டும் கிடைக்கும்.

10 . கருவேப்பிலை பிரெஷாக வாங்கி அதை கழுவி தண்ணீரை வடித்து ஒரு பேபப்ரில் சுருட்டி பிரிட்ஜில் வைத்தால் கொஞ்சம் நாள் ஆனதும் பொடித்தால் தூளாகிவிடும், அதை பிஸிபேளாபாத் இட்லி பொடி, மற்றும் பொடித்த கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கும் சமையலுக்கு பயன் படுத்தலாம்.

11.சேமியா ,ரவை போன்றவைகளை தேவைக்கு வறுத்து வைத்து கொண்டால் நிமிஷத்தில் உப்புமா, சேமியா பிரியாணி ஈசியாக தயாரித்து விடலாம்.

12. ஒரு கிலோ அளவிற்கு தோசைமாவு அரைத்து வைத்து கொண்டால் அந்த வாரம் முழுவதும் இட்லி, தோசை, ஆப்பம், ஊத்தாப்பம், குழிபணியாரம் என வாரமுழுவதும் டிபன் டென்ஷன் இருக்காது. அவசரத்துக்கு கை கொடுக்கும் தோசை மாவு.

13.கொண்டைக்கடலையை நிறைய ஊறவைத்து வேகவைத்து பிரீஜரில் போட்டு வைத்தால் சுண்டல், பூரிக்கு சென்னா, சாலட் , ஹமூஸ் போன்றவை எளிதாக தயாரிக்கலாம்.

14.மோர் குழம்புக்கு வறுத்து அரைக்க வேண்டியவைகளை நிறைய செய்து வைத்து முன்று பாகமாக பிரித்து பிரீஜரில் வைத்தால் சட்டுன்னு மோர்குழம்பும் ரெடி.

15. புளி பேஸ்ட் தயாரித்து ஐஸ் கியும் செய்து வைத்தால் புளி குழம்பு, வத்தல் குழம்பு, மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு, ரசம் எல்லாவற்றிற்கும் பயன் படும்.

16.தினம் சப்பாத்தி சாப்பிடுபவர்கள் மாவு நிறைய குழைத்து பாக்கெட்டுகளாக போட்டு ஃபீரிஜரில் வைக்கலாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:48 pm

சமையலுக்கான டிப்ஸ்
 
வெண்டைக்காய் வதக்கும் போது நூல்நூலாக வரும்
அதற்கு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஊற்றி
கிளறினால் நூல்நூலாக வராது.

மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் முன்
2சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டிப் போட்டு
இறக்கவும் நல்ல மனமாக இருக்கும்

மீன் குழம்பு அடுப்பில் இருந்து இறக்கும் போது வெந்தயம்
பெருங்காயம் இரண்டையும் வருத்து தூள் பண்ணி 1/4 டீஸ் பூண் போட்டு இறக்கினால் நல்ல மனமாக இருக்கும்.

காப்பி மணக்க
வெளியில் வாங்கும் பால் தண்ணீராகத்தான் இருக்கும்.
பால் கெட்டியாகவும், சுவையாகவும் மாறி காப்பி மணக்க
ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது ஜவ்வரிசியை முடிந்து,
காய்ச்சும் பாலில் போட்டு விட்டால் அது கரைந்து,
பாலைக் கெட்டியாக்கி காப்பிக்கு சுவையை கூட்டும்

குழந்தைகளின் பால் பட்டில், டம்ளர் இவற்றை கழுவ
புளித்த இட்லி மாவை பயன் படுத்துங்கள். பளபளக்கும்
கெடுதல் கிடையாது.

உளுந்த வடைக்கு சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்தால்
வடை மெதுவாக இருக்கும். ருசி மாறாது.

நம் சமைக்கும் சமையலில் உப்பு அதிகமாக போட்டுவிட்டால் அதில்
உருளைகிழங்கை கட் பன்னி போட்டால் உப்பை எடுத்து விடும்,

துவரம்பருப்பை வேகவைக்கும் போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றினால் சீக்கிரம் பருப்பு வெந்துவிடும்.

கடலைபருப்பு,மல்லி,பெருங்காயம்,வெந்தயம்.அரிசி,வற்ற்ல் இவற்றை தனித்தனியாக வருத்து பொடியாக்கி கொள்ளவும்
புளியோதரைக்கான புளிக்கரைசலை செய்யும் போது இந்தப்பொடியை
சேர்க்கவும்.அடுப்பை அனைத்தபின் சேர்க்கவும். 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:49 pm

சமையல் டிப்ஸ்: ருசியான சமையல் – சில ரகசியங்கள்

சாம்பாரை  இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.

மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு  ருசியாகவும்  வாசனையாகவும் இருக்கும்.

நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு,  நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.

  வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி  ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.

இட்லிப்பொடி  அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.

ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.

      எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான  வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.

இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:50 pm

சமையல் டிப்ஸ்.

சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. 

துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து வைத்துக்கொண்டால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். கேஸ் மிச்சமாகும். 

பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும். 

மளிகைக் கடையில் ‘தையல் இலை’ என்ற பெயரில் விற்கப்படும் மந்தார இலையை பானையில் போட்டு, அதன் மேல் புளியை வைத்தால் நெடுநாட்களுக்குக் கெடாமல் இருக்கும். 

சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது... நீர்த்தும் போகாது. 

உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.

பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும். 

பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது. 

தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும். 

நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.

பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள். அட்டகாசமான சுவை கிடைக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:50 pm

சமையல்,டிப்ஸ் டிப்ஸ், வீட்டு குறிப்புக்கள்

. *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

 *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

 *கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

 *கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

 *வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

 *கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

 *காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

 *மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

 *இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:51 pm

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

 *உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

 *காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்

. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

 *காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

 *புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:52 pm

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

 *சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

 *தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

 *ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

 *ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

 *கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

 *தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

 *தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

 *வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

 *இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:53 pm

கிச்சன் டிப்ஸ்

< இட்லி, தோசைக்கு தனித் தனி மாவாக அரைப்பதற்கு பதிலாக ஒரே மாவைப் பயன்படுத்தியே மென்மையான இட்லி, முறுகலான தோசை தயாரிக்கலாம். நாலு கப் புழுங்கல் அரிசி முக்கால் கப் உளுந்தம் பருப்பு, கால் கப் ஜவ்வரிசி, இரண்டு தேக்கரண்டி வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்தநாள் எடுத்து மொத்தமாக கிரைண்டரில் போட்டு அரைத்துப் புளிக்க வைத்தால், மொறு மொறு தோசைக்கும், பூப்போன்ற இட்லிக்கும் மாவு ரெடி. 

 < வீட்டில் உள்ள காய்கறிகளை சிறிது எடுத்து வதக்கி அதனுடன் காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், சிறிது புளி, உப்பு சேர்த்து அரைத்தால் திடீர் "சட்னி ரெடி'.

 < அரிசி பருப்பு ஊறவைக்கும் போதே அத்துடன் ஒரு டீஸ்பூன் ஜவ்வரிசியை ஊறவைத்து அரைத்தால் தோசை மொறு மொறுவென்று வரும்.

 < ஹோட்டலில் செய்யும் கிரேவி போன்று வீட்டிலும் கிரேவி ருசியாக வருவதற்கு கிரேவியை அடுப்பிலிருந்து எடுப்பதற்கு முன் சிறிது முந்திரியுடன் பால் சேர்த்து அரைத்து கிரேவியில் விட்டு கொதிக்கவிட்டு எடுத்தால் போதும்.

 < பச்சை மிளகாய்களை மிக்ஸியில் அரைக்கும் போது துண்டுகளாக்கிப் போட்டாலும் பல சமயங்களில் நைஸôக அரைபடாமல் அப்படியே நறுக்நறுக்கென்று இருக்கும். மிளகாய்களை நீளவாக்கில் இரண்டாக வெட்டி அரைத்தால் நன்கு மசிந்து வரும். மிளகாய் ரொம்ப நீளமாக இருந்தால் கூடுதலாக குறுக்காகவும் வெட்டிப் போடுங்கள்.

 < பாயசம், இனிப்பு வகைகள் செய்யும்போது குங்குமப்பூ சேர்ப்போம். பால் அல்லது தண்ணீர்விட்டுக் கரைக்கும்போது குங்குமப்பூ லேசில் கரையாது. இதோ ஒரு யோசனை: வாணலியைச் சூடாக்கி, அடுப்பை அணைத்துவிடுங்கள். அந்த வாணலியில் குங்குமப் பூவைப் போட்டு சிலநொடிகள் புரட்டினால். மொறு மொறுவென்று ஆகிவிடும். அதைக் கையால் நொறுக்கி பவுடராக்கி டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தலாம்.
 
< நெய் சேர்க்காமல் பொட்டுக் கடலை உருண்டை செய்ய விரும்புகிறவர்கள் மூன்று கப் பொட்டுக் கடலை, ஒரு கப் சர்க்கரை ஐந்தாறு உரித்த ஏலக்காய் இவற்றை மிக்ஸியில் நைஸôகப் பொடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். தேவையான போது இந்த மாவில் கொஞ்சம் எடுத்து இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பால் தெளித்து உருண்டை பிடித்துக் கொடுத்தால் வீட்டிலுள்ள குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:53 pm

பிளவர் வாஷ், தேனீர் கோப்பை, தண்ணீர் டம்ளர் போன்ற கண்ணாடி மற்றும் பளிங்கினால் ஆன பொருட்களை பயன் படுத்தினால் அதன் அழகே தனிதான். ஆனால் அந்த பளிங்கு பொருட்களை தொடர்ந்து பளபளப்பாக வைத்திருப்பது என்பது கடினமான விஷயம். அவற்றை பராமரிப்பதற்கான சில டிப்ஸ் இதோ…

* கண்ணாடி பொருட்களை அலம்பிய பின், கடைசியாக கழுவும் தண்ணீரில் சிறிது வினிகர் மற்றும் போராக்ஸ் பவுடர் கலந்து கழுவ வேண்டும். அப்படி செய்தால் அவை எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

* கண்ணாடி பொருட்களை கழுவும் போது, கையில் அணிந்திருக்கும் மோதிரத்தை கழட்டி வைத்து விட்டால், கண்ணாடி பொருட்களில் உராய்ந்து கீறல் விழுவதை தவிர்க்கலாம்.

* பளிங்கு மற்றும் கண்ணாடி பாத்திரங்களை, ஷெல்புகளில் நியூஸ் பேப்பரின் மேல் வைப்பதை தவிர்ப்பது நல்லது. நியூஸ் பேப்பர் இங்க்களில் காணப்படும் ரசாயனம், நாளடைவில் பளிங்கு பொருட்களின் பளபளப்பை மங்கச் செய்து விடும்.

* ஷெல்புகளில் பீங்கான் தட்டுக்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைப்பதால் உராய்ந்து கீறல் விழுகிறதா? அடுக்கி வைக்கும் போது, ஒவ்வொரு தட்டை அடுக்கிய பின்னும், ஒரு துணியை போட்டு பின் அதன் மேல் மற்றொரு தட்டு என அடுக்கலாம். இவ்வாறு செய்வதால் இரு தட்டுக்களுக்கு இடையே உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படும்.

* கண்ணாடி ஜன்னல்கள் மீது பெயின்ட் கறை படிந்து விட்டால், சிறிது வினிகரை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி, ஒரு துணியில் நனைத்து, பெயின்ட் கறை மீது தேய்த்தால் கறை காணாமல் போய்விடும்.

* கண்ணாடி பாட்டில்களில் துர்நாற்றம் அடிக்கிறதா… கவலையே வேண்டாம். அந்த பாட்டிலில்சிறிதுகடுகைபோட்டு, வெந்நீர் ஊற்றி, சிறிது நேரம் வையுங்கள். பின், வெந்நீரை கீழே ஊற்றி விட்டு துடைத்து காய வைத்தால் துர் நாற்றம் காணாமல் போய்விடும். கடுகுக்குப் பதிலாக உப்பை போட்டு ஊற வைத்தும் கழுவலாம்.

* கண்ணாடி மற்றும் பீங்கானாலான பவுல்கள், டம்ளர்கள் போன்றவற்றில் காணப்படும் கறைகளை அகற்ற, எலுமிச்சம்பழச்சாறு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கறையுள்ள இடத்தில் தேய்த்து கழுவினால் கறை அகன்று விடும்.

* வாஷ் பேசினில் மஞ்சள் கறை படிந்திருந்தால், அவற்றின் மீது வினிகரை தெளித்து, சிறிது நேரம் தண்ணீர் ஊற்றி தேய்த்து கழுவினால் கறை காணாமல் போய்விடும்.

* வெள்ளை நிறத்தாலான வாஷ் பேசினை சுத்தம் செய்த பின், அதில் சிறிதளவு துணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீலம் கலந்த தண்ணீரை ஊற்றி கழுவினால் மிகவும் பளபளப்பாக இருக்கும்.

* கண்ணாடியாலான பிளவர் வாஷ்கள், எண்ணெய் ஊற்றி வைக்கும் ஜாடி, தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றில் அதிக நாட்கள் எண்ணெய் மற்றும் தண்ணீர் வைத்திருப்பதால் கறை ஏற்படும். அதை போக்க அதில் சிறிது வினிகரை ஊற்றி, கறையின் தன்மையை பொறுத்து 30 நிமிடங்கள் முதல் ஒரு நாள் இரவு வரை ஊற விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் அலச வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முழுமுதலோன் Fri Oct 09, 2015 3:54 pm

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.



http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by செந்தில் Fri Oct 09, 2015 6:00 pm

பயனுள்ள சமையல் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by முரளிராஜா Sat Oct 10, 2015 1:24 pm

செந்தில் wrote:பயனுள்ள சமையல் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்  Empty Re: சமைக்கும் பெண்களுக்கு - சமையல் டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum