தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாமிசம் திண்ணும் செடிகள்!

View previous topic View next topic Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by பூ.சசிகுமார் Sat Dec 01, 2012 12:47 pm

அழகான சிவப்புத் திட்டு. அதிலிருந்து அருமையான மதுவின் வாடை.
பறந்து கொண்டிருந்த ஈக்கு சபலம். இறங்கிப் பார்த்துவிடுவது என்று
முடிவெடுத்து, பிசு பிசு வென்று இருந்த மதுச் சொட்டில் இறங்கியது.
சாப்பிட நன்றாகத்தான் இருந்தது.

[You must be registered and logged in to see this image.]


உற்சாக மேலிட்டால் இப்படி அப்படி என்று நகர, எதன் மீதோ ஈயின் கால்கள் பட்டுவிட்டது. துப்பாக்கி டிரிகரைத் தட்டிவிட்டது போலிருக்கிறது. ஈயின் உலகம் இப்போது இரண்டு மாபெரும் கோட்டைச் சுவரின் இடையிலான சிறிய சந்தாக மாறிவிட்டது. தப்பிக்க வழியில்லாமல் திணறிய ஈக்கு அவமானம் பிடுங்கித்தின்றது. காரணம், அந்த ஈயை சிறைபிடித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது ஒரு இலை!

ஆனமலையில் கொண்டை ஊசி வளைவுகளில் சாலையின் ஓரமாக, சளைக்காமல் கசிந்தோடிக் கொண்டிருக்கும் ஈரத்தில் இதுவரைப் பார்த்திராத புதிய செடி ஏதாவது முளைத்திருக்கிறதா என்று கவனமானத் தேடியபடி நான் மெள்ள முன்னேறினேன். என்னுடைய சக மாணவ நண்பர்கள் வெகு தொலைவு சென்றுவிட்டனர். ட்ரில் மாஸ்ட்டரின் விசில் எல்லோரிடமும் இருக்கும். எடுத்து ஊதினேன். புதிதாக ஏதாவது தென்பட்டு விட்டால் எல்லாரையும் அழைப்பதற்கான ஏற்பாடு அது.

எனது கண்களில் பட்டது சின்னஞ்சிறு செடி. பூச்சிகளைப் பொறி வைத்துப் பிடிக்கும் யுர்ட்டிக்குலேரியா! 25 பைசா நாணயத்திற்குள் வைத்துவிடக்கூடிய சிறிய செடி. இது நடந்தது 1975 ஆம் ஆண்டு. இன்று ஆனமலையில் அங்கே அது இருக்குமா என்பது சந்தேகமே.

குற்றாலத்தின் புலியருவியைத் தாண்டி ஒரு மேடு. அனகோண்டா போன்று நீண்டு செல்லும் அதன் முதுகில் அரைமணிநேரம் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்தால் மெயின் அருவியின் மேல் முகட்டிற்கு வந்துவிடலாம். இடையில் கள்ளிச் செடிகளின் நிழலைத்தவிர வேறு அடைக்கலமே கிடையாது. அருவியின் நீர் பாறைகளின் இடுக்கில் கூந்தல் போல் இரகசியமாக ஆங்காங்கே ஒடிக் கொண்டிருக்கும்.

மனிதர்களை சற்றும் எதிர்பார்த்திராத பூச்சிகளும் செடிகளும் ஓடையருகே மண்டிக் கிடக்கும். ஈக்களைப் பிடித்துத் திண்ணும் ‘ட்ராசிரா’வைப் பார்த்தேன். காளியைபோல் நாலா பக்கமும் பல கைகளை விரித்துக் கொண்டு நடுவில் ஒற்றைக் காம்பில் ஒற்றைப் பூவைத் தாங்கிக் கொண்டிருந்தது பாறையின் மீது ஒட்டிகொண்டிருந்த பாசிகளின் இடையே அது ஒளிச்சேர்க்கை செய்து கொண்டிருந்தது. இது நடந்தது 1985 இல். பலமுறை அதே இடத்திற்கு சென்று தேடினேன் இப்போது ஒன்றைக்கூடக் காணவில்லை.

‘நான் வெஜ்' சாப்பிடும் செடிகளை முதலில் பார்த்த கார்ல் வான் லின்னேயஸ் அதை நம்ப மறுத்தார். "செடிகளாவது, மாமிசம் சாப்பிடுவதாவது... கடவுள் அப்படிப் படைத்திருக்க வாய்ப்பே இல்லை'' என்று அவர் முடிவு கட்டிவிட்டார்.

சார்லஸ் டார்வின் 1860 இல் பூச்சி சாப்பிடும் செடிகளைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். பூச்சி பிடிக்கும் செடிகளின் இலைகளின் மீது பூச்சிகள், மாமிசத் துண்டுகள், வெந்த முட்டைத் துண்டு போன்றவற்றைப் போட்டு சோதித்தார். சூறாமீனின் தாடைகளைப் போல ‘டபக்' கென்று மூடிக்கொள்ளும் இலைகளின் வேகத்தை எண்ணி வியந்து எழுதியிருக்கிறார். தலைமுடி விழுந்தாலும்கூட சடாரென்று செயல்படும் அதன் உணர்வுகளைப் பற்றி அதிசயித்து எழுதியிருக்கிறார்.

மிருகங்களுக்கு ‘விருட்'டென்று செயல்பட தசைகளும் நரம்புகளும் இருக்கின்றன; அப்படி எதுவுமே இல்லாத இலைகளால் எப்படி வெடிமருந்து வேகத்தில் செயல்பட்டு பூச்சிகளைப் பிடிக்கின்றன என்பது அவருக்குப் புரியவில்லை.

சினிமாவில் மனிதர்களையும், ஆடு மாடுகளையும் வளைத்துப் பிடித்து நசுக்கிப்பிழிந்து அருந்தும் செடி கொடிகளைக் காட்டுவார்கள். பூச்சித் திண்ணி செடிகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு சினிமாத் தனமான கற்பனைப் போக்கில் படம் எடுக்கிறார்கள். உண்மையில் அப்படியெல்லாம் செடிகள் செய்வதில்லை. நெபெந்தஸ் என்ற மிகப்பெரிய பூச்சித்திண்ணும் செடியின் ஜாடிபோன்ற இலைகளில், எலி, தவளை போன்ற சிறிய உயிரினங்கள் வேண்டுமானால் சிக்கும். பெரிய மிருகங்கள் சிக்குவதற்கு வாய்ப்பே இல்லை.

நான்கு வகைத் தந்திரங்களை பூச்சித்திண்ணி செடிகள் கையாளுகின்றன. ஒன்று ‘லபக்'கென்று உறிஞ்சும் தந்திரம். இது சில்லென்று கசிந்தோடிக்கொண்டிருக்கும் நீரோடைகளில் வசிக்கும், புல்லை விட மிகச் சிறிய செடிகளின் தந்திரம். இரண்டாவது, புஸ்தகத்தை ‘பட்'டென்று மூடுவது போல இலையின் இருபகுதியையும் மூடி, விளிம்புகளில் உள்ள விரல்களை பிணைத்துக் கொள்ளும் முஷ்டி தந்திரம்.

மூன்றாவது பிசுபிசுப்பான தேன்துளிகளைக் காட்டி ஏமாற்றி பூச்சிகளின் கால்களை ஒட்டவைத்து, பின் இலையை மூடிக்கொள்ளும் ஒட்டு தந்திரம். நான்காவது பாட்டில் போல இருக்கும் பிரத்யேக இலையில், கவனமில்லாமல் சுற்றித்திரியும் பூச்சிகள் வழுக்கி உள்ளே விழவைக்கும் வழுக்குத் தந்திரம். உள்ளே ஊறிக்கொண்டிருக்கும் பாகு போன்ற திரவத்தில் விழுந்துவிட்டால் பூச்சிகளால் மீண்டும் வெளியேறவே முடியாது. இப்படி உறிஞ்சி, மூடி, ஒட்டி, வழுக்கும் முறைகளால் நாலுவித பயிர்கள் பூச்சிகளைப் பிடித்துத் திண்கின்றன.

பூச்சிகளையும், தவளைகளயும் பிடித்து விட்டால் மட்டும் போதுமா? அவற்றை மென்று திண்பது எப்படி? செடிகள் மெல்லுவதில்லை. மூடிக் கொண்ட இலை அல்லது குப்பி வடிவ இலையே நேரடியாக வயிறு போல செயல்படுகிறது. அதில் சுரக்கும் அல்லது ஏற்கனவே நிரம்பியிருக்கும் திரவத்தில் மாமிசத்தைச் செரிமானம் செய்யும் நொதிகள் இருக்கின்றன. சில குப்பிச் செடிகளில் மழை நீர் மட்டும்தான் இருக்கும். அதில் வாழ்ந்து வரும் லார்வாக்கள், அமீபாக்கள், பேக்டிரீயாக்கள் போன்ற விருந்தாளிகள் ஒன்றுகூடி உள்ளே விழுந்த பூச்சிகளின் மாமிசத்தை ஜீரணிக்கின்றன. முடிவில் அவைகளும் இலைக்கு இரையாகின்றன.

அப்படி என்ன இந்த இலைகளுக்கு மாமிசத்தின் மீது அத்தனை மோகம்? பரிசோதனைகள் பல செய்தும், டி. என்.ஏக்களை படித்தும் பல செய்திகள் கிடைத்தன. பொதுவாக பூச்சித் திண்ணி செடிகள், நைட்ரஜ சத்து பற்றாக்குறையுள்ள நிலத்தில்தான் வாழ்கின்றன. நைட்ரஜ பற்றாக்குறையை ஈடுகட்டவே, மாமிசத்திலுள்ள நைட்ரஜனை அவை நாடுகின்றன. மற்றபடி இலைகளின் பச்சையம் மூலம் பிற செடிகளைப் போல ஒளிச்சேர்க்கை செய்து வாழ்க்கைக்கு வேண்டிய ஆற்றலையும், கார்போஹைட்ரேட்டையும் பெறுகின்றன. தோட்டம் துறவுகளில் நைட்ரஜன் பத்தாவிட்டால் யூரியா உரம் போடுகிறோம். இவற்றிற்கு யார் போடுவார்கள்? நேரடியாக மாமிசத்திலிருந்தே பெற்றுக் கொள்கின்றன.

கடந்த முப்பது வருடங்களாக நீர் நிலைகளில் மிகுதியான நைட்ரஜ உரங்கள் கலந்துவிடுவதால், பூச்சித்திண்ணி செடிகள் அதீத நைட்ரஜ சத்தினால் எரிந்து செத்து மறைந்துவிட்டன. விலங்குகளை வேட்டையாடி, கள்ளச்சந்தையில் தோலையும், தந்தங்களையும் விற்கும் போச்சர்கள், வினோதமான உயிரியான பூச்சித்திண்ணி செடிகளையும் பாடம் செய்து விற்க ஆரம்பித்துவிட்டனர். இதுவும் அவை அழிந்தொழிந்ததற்கு இன்னொரு காரணமாகும்.

விற்கிறவன் ஏன் விற்கிறான்? அதை வாங்குவதற்கு மதி கெட்ட மூடர்கள் இருப்பதால் தானே!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty Re: மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by பூ.சசிகுமார் Sat Dec 01, 2012 12:51 pm

[You must be registered and logged in to see this image.]
ஈக்களுக்கு எச்சில் ஊறவைக்கும் வாசனையை வெளியிடும் இந்த குப்பித் தாவரத்தின் இலையில் உட்காரும் பூச்சிகள் கால் வழுக்கி குப்பிக்குள்ளே விழுந்து அங்கே நிரம்பியிருக்கும் திரவத்தில் சிதைந்து ஜீரணமாகிவிடுகின்றன.

[You must be registered and logged in to see this image.]
உலகில் கிட்டத்தட்ட 675 பூச்சித்திண்ணிச் செடிகள் உள்ளன. பட்டர் வாரட் என்ற இந்த செடியின் தடித்த இலைகளில் ஊறும் பசைகளில் பூச்சிகள் சிக்கிக்கொள்கின்றன. உள்ளே ஊறும் ஜீரண நீர் அதை செரித்துவிட, இலைகள் அதை உறிஞ்சிக்கொள்கிறது.

பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty Re: மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by பூ.சசிகுமார் Sat Dec 01, 2012 12:57 pm

[You must be registered and logged in to see this image.]
பனித்துளி தாகம் தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்து வந்து அமர்ந்த பூச்சிகள் ஒட்டும் பிசினில் சிக்கிக் கொள்கின்றன.


[You must be registered and logged in to see this image.]
சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எட்டிப் பார்க்கும் பூச்சிகள் 2 அடி நீள முள்ள குப்பிக்குள் விழுகின்றன.

[You must be registered and logged in to see this image.]
பூச்சித் திண்ணி செடிகள் மற்ற செடிகளைப் போல ஒளிச்சேர்க்கை மூலம்தான் உயிர் வாழ்கின்றன. கொஞ்சம் எக்ஸ்ட்ரா நைட்ரஜ சத்துக்காக பூச்சிகளை உண்கின்றன. தென் ஆப்பிரிக்க பனித்துளி செடி இந்த இனத்திலேயே மிகப் பெரியது. சிக்கிய பூச்சிகள் அதிர்ஷ்ட்ட வசமாக தப்பித்துவிடுவதுண்டு. பெரும்பாலும் அவை செடியின் இலைகளுக்கிடையில் உள்ள சகதியில் விழுந்து மக்கி உணவாகிவிடுகின்றன.


[You must be registered and logged in to see this image.]
(இடது) அங்குஷ்ட்டம் அளவே உள்ள ஆஸ்த்திரேலிய குப்பிச் செடி. எறும்புகள் சாரி சாரியாக இதனுள்ளே போய் விழுந்துவிடுகின்றன. சென்றவை மீள வெளி வர இயலாதபடி உள்ளே நிறைய கீழ் நோக்கிய ரோமங்கள் உள்ளன. அமெரிக்க குப்பிச் செடியில் ஒரு தேனீ சிக்க இருக்கிறது. மாமிசம் உணவு செடிகளுக்கு ஏதோ கொஞ்சம் ஒத்தாசை செய்கிறதே தவிர அது நிறந்தர உணவு அல்ல; இருந்தாலும் இவை அதிசயமானவை அல்லவா!
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty Re: மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by பூ.சசிகுமார் Sat Dec 01, 2012 12:59 pm

[You must be registered and logged in to see this image.]
தோற் பாவைக் கூத்தில் நிழல் பிம்பம் தெரிவதுபோல ஒரு ஈ பிலிப்பைன் குப்பிச் செடியின் வயிற்றில் மாட்டிக்கொண்டிருக்கிறது. மெழுகுபோன்ற உள் பரப்பில் வழுக்கித் தான் விழ முடியுமே தவிர தப்பித்து வெளி வருவது என்பது கஷ்டம்தான். சிக்கி பூச்சியின் உடலிலிருந்து உணவுகளை இலையின் என்ஸைம்கள் கரைத்து எடுத்துவிடுகின்றன.


[You must be registered and logged in to see this image.]
மாமிசம் திண்ணிகள் பூச்சிகளை உணவாகக் கொண்டாலும் தமது மகரந்தச் சேர்க்கைக்கும் அவற்றையே நம்பியுள்ளன. மகரந்தம் சேகரிக்க வரும் நண்பர்கள் தவறி பொறிகளில் விழாதிருக்கும் வகையில் இவை தம் பூக்களை உயரமான தூக்கிப் பிடித்தபடி உள்ளன. என்ன சாதுர்யம்!

படங்கள்: நன்றி ‘நேஷனல் ஜியோகிராஃபி'

நன்றி:- முனைவர் க.மணி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty Re: மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by mohaideen Sat Dec 01, 2012 1:32 pm

இந்த செடிகளைகளை பார்க்கும்போதே வினோதமாக இருக்கிறது.



நேரில் பார்க்கவேண்டும் என்ற ஒரு ஆசையும் இருக்கிறது.



தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty Re: மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by ரானுஜா Sat Dec 01, 2012 2:54 pm

தகவலுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty Re: மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by பூ.சசிகுமார் Sat Dec 01, 2012 8:16 pm

ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள் அண்ணா, அக்கா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாமிசம் திண்ணும் செடிகள்! Empty Re: மாமிசம் திண்ணும் செடிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum