தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பழங்குடியினர் நிலங்களைப் பிடுங்கவே பச்சை வேட்டை நடவடிக்கை: அருந்ததி ராய்

View previous topic View next topic Go down

பழங்குடியினர் நிலங்களைப் பிடுங்கவே பச்சை வேட்டை நடவடிக்கை: அருந்ததி ராய் Empty பழங்குடியினர் நிலங்களைப் பிடுங்கவே பச்சை வேட்டை நடவடிக்கை: அருந்ததி ராய்

Post by Guest Thu Jun 10, 2010 5:29 pm

நமது நாட்டின் மத்திய பகுதிகளிலுள்ள தண்டகாரண்ய காடுகளில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களைக் கைப்பற்றி அவைகளை பெரு நிறுவனங்களுக்கு அளிப்பதற்காகவே அங்கு வாழ்ந்து வரும் பழங்குடியினரை விரட்டியடிக்க பச்சை வேட்டை நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன என்று எழுத்தாளர் அருந்ததி ராய் கூறினார்.

பழங்குடி மக்களைக் கொன்றொழிக்கும் இந்திய அரசின் பச்சை வேட்டை நடவடிக்கையைக் கண்டித்து உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சென்னையில் நேற்று ஏற்பாடு செய்த மாபெரும் அரங்கக் கூட்டத்தில் அருந்ததி ராய் சிறப்புரையாற்றினார்.

இலங்கையில் சிறிலங்க அரச படைகளால் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதும் பெரும் நிறுவனங்களின் நலனிற்காக நடத்தப்பட்ட போரே என்றும், அதனால்தான் இந்த நாட்டின் பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஃபிக்கி அமைப்புடன் சேர்ந்துகொண்டு இலாபம் சம்பாதிக்க இன்று கொழும்புவில் கூடியுள்ளனர் என்று கூறிய அருந்ததி ராய், கடந்த ஆண்டு ஈழத்தில் நடத்தி முடிக்கப்பட்ட போருக்கான நோக்கமே தற்போது தண்டகாரண்யக் காடுகளில் வாழும் பழங்குடியினருக்கு எதிரான கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பச்சை வேட்டையின் நோக்கமும் ஆகும் என்றார்.

“இலங்கையில் நடந்தது வெளிப்படையான இனப் படுகொலை. ஆனால் இந்திய அரசு மிகவும் தந்திரம் வாய்ந்தது, அது மிக புத்திசாலித்தனமாக தண்டகாரண்ய பழங்குடி மக்களுக்கு எதிரான போரை சாமர்த்தியமாக நடத்திவருகிறது. அங்கு மிக மெதுவான பழங்குடியினப் படுகொலை நடைபெற்று வருகிறது” என்று அருந்ததி ராய் கூறினார்.

எழுத்தாளர் அருந்ததி ராய் நிகழ்த்திய உரையின் முழு விவரம் வருமாறு:

"இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள தண்டகாரண்யத்தில் பழங்குடி மக்களுக்கு எதிரான மத்திய மாநில அரசுகள் நடத்திவரும் பச்சை வேட்டை குறித்து மத்திய அரசு கூறிவரும் காரணங்களை நாம் தெளிவாக ஆராய வேண்டும். அரசுக்கு இந்தப் போர் தேவை, மிகவும் தேவை.

பழங்குடியினர் நிலங்களைப் பிடுங்கவே பச்சை வேட்டை நடவடிக்கை: அருந்ததி ராய் Img1100605041_1_2

FILE

2004ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தவுடன் பேசிய பிரதமர் மன்மோன் சிங், மாவோயிஸ்ட்டுகளே நமது நாட்டிற்கு மிகப் பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியவுடன் பங்குச் சந்தையில் சுரங்க நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.

இதனைத் தொடர்ந்தே 2005ஆம் ஆண்டில் தண்டகாரண்ய வனப் பகுதியில் உள்ள கனிம வளங்களைத் தோண்டி எடுக்கப் பல நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே கையெழுத்தானது. கனிம வளங்கள் நிறைந்த சட்டீஸ்கரின் தென்பகுதியாக பஸ்தார் பகுதியில் சுரங்க அமைக்க எஸ்.ஆர்., மற்றும் டாட்டா நிறுவனங்கள் அம்மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.

அதன் பிறகுதான் அங்குள்ள பழங்குடியின மக்களை விரட்டியடிக்க சல்வா ஜூடும் எனும் என்றழைக்கப்படும் தனியார் அடியாள் படை அமைக்கப்பட்டது. சல்வா ஜூடும் என்றால் அமைதி வேட்டை அல்லது தூய்மை வேட்டை என்று பொருள்.

பழங்குடியினர் வாழ்ந்த கிராமங்களுக்குள் இந்த சல்வா ஜூடும் அடியாள் படை புகுந்து தீ வைத்தது, கற்பழித்தது, கொள்ளை அடித்தது. அவர்களை எதிர்க்க முடியாத பழங்குடியின மக்கள் 650 கிராமங்களை விட்டு வெளியேறினர். 50 ஆயிரம் பேர் ஆந்திரத்திற்கு தப்பியோடிவிட்டனர். மேலும் 50 ஆயிரம் பேர் மாநில அரசு முகாம்களில் அடைக்கலம் புகுந்தனர். பல இலட்சக்கணக்கான மக்கள் அடர்ந்த காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தனர். ஆயினும் மற்ற பகுதிகளில் அவர்கள் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum