Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது உங்கள் இடம்
Page 1 of 1 • Share
இது உங்கள் இடம்
இது ஆம்பளைங்க சமாச்சாரம்!
மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை பற்றி, வாய் ஓயாமல் பேசுகிறோம். ஆனால், மருமகன்கள் கொடுமை மட்டும், வெளியே தெரிவதில்லை. ஆம்பளைங்க சமாச்சாரம் என்பதாலா? "வீராதி வீரனும் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் கோழைதான்!' ஆனால், மாமனார் வீட்டுக்கு சென்று விட்டால், கோழைக்கும் வீரம் வந்துவிடும் போலிருக்கு! தன்னை ஒரு வி.ஐ.பி.,யாக நினைத்து, மாமனார் வீட்டில் உள்ள அனைவரும், தன்னை ஓடி ஓடி உபசரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சிறு தவறு நடந்து விட்டாலும், அதை பெரிதுபடுத்தி மனைவியிடம் கொட்டித் தீர்ப்பது, ஆகிய கொடுமைகளை செய்கின்றனர் மருமகன்கள்!
கணவனிடம், பொறந்த வீட்டை விட்டு கொடுக்காமல் பேசினாலும், பெற்றோரிடம் ஒப்பாரி வைப்பாள் மனைவி. அதுவும் இரண்டு, மூன்று மருமகன்கள் இருக்கும் வீட்டில் கேட்கவே வேண்டாம். "என் புருசன சரியாவே கவனிக்கல. இரண்டாவது மருமகன்னா உங்களுக்கு உசத்தி! மரியாதை இல்லாத வீட்டிற்கு இனி வரவே மாட்டேன்னு என் புருசன் சொல்லிட்டார்...' என்று மூக்கை உறிஞ்சி மகள் அழுவதும், அதைக் கேட்ட பெற்றோர், மனம் உடைந்து போவதும், அனேக குடும்பங்களில் நடக்கிற சமாச்சாரம்.
கேட்டுப் பெறுவதா மரியாதை? மனைவி மட்டும், உங்கள் பெற்றோரை, தாய், தந்தையாக நினைக்க வேண்டும். அதுபோல் நீங்களும் நினைத்தால் என்ன? மாப்பிள்ளை முறுக்குடன் அலட்டாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்களுள் ஒன்றாக, மனைவி வீட்டாரையும் நினைத்துப் பழகுங்கள். பிறகு பாருங்கள்; உண்மையான மதிப்பும், மரியாதையும் மாமனார், மாமியாரிடமிருந்து எப்படி கிடைக்கிறது என்பதை!
— ஜி.சபிதா, நெல்லை.
நன்றி : தினமலர்
மாமியார் கொடுமை, நாத்தனார் கொடுமை பற்றி, வாய் ஓயாமல் பேசுகிறோம். ஆனால், மருமகன்கள் கொடுமை மட்டும், வெளியே தெரிவதில்லை. ஆம்பளைங்க சமாச்சாரம் என்பதாலா? "வீராதி வீரனும் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் கோழைதான்!' ஆனால், மாமனார் வீட்டுக்கு சென்று விட்டால், கோழைக்கும் வீரம் வந்துவிடும் போலிருக்கு! தன்னை ஒரு வி.ஐ.பி.,யாக நினைத்து, மாமனார் வீட்டில் உள்ள அனைவரும், தன்னை ஓடி ஓடி உபசரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, சிறு தவறு நடந்து விட்டாலும், அதை பெரிதுபடுத்தி மனைவியிடம் கொட்டித் தீர்ப்பது, ஆகிய கொடுமைகளை செய்கின்றனர் மருமகன்கள்!
கணவனிடம், பொறந்த வீட்டை விட்டு கொடுக்காமல் பேசினாலும், பெற்றோரிடம் ஒப்பாரி வைப்பாள் மனைவி. அதுவும் இரண்டு, மூன்று மருமகன்கள் இருக்கும் வீட்டில் கேட்கவே வேண்டாம். "என் புருசன சரியாவே கவனிக்கல. இரண்டாவது மருமகன்னா உங்களுக்கு உசத்தி! மரியாதை இல்லாத வீட்டிற்கு இனி வரவே மாட்டேன்னு என் புருசன் சொல்லிட்டார்...' என்று மூக்கை உறிஞ்சி மகள் அழுவதும், அதைக் கேட்ட பெற்றோர், மனம் உடைந்து போவதும், அனேக குடும்பங்களில் நடக்கிற சமாச்சாரம்.
கேட்டுப் பெறுவதா மரியாதை? மனைவி மட்டும், உங்கள் பெற்றோரை, தாய், தந்தையாக நினைக்க வேண்டும். அதுபோல் நீங்களும் நினைத்தால் என்ன? மாப்பிள்ளை முறுக்குடன் அலட்டாமல், உங்கள் குடும்ப உறுப்பினர்களுள் ஒன்றாக, மனைவி வீட்டாரையும் நினைத்துப் பழகுங்கள். பிறகு பாருங்கள்; உண்மையான மதிப்பும், மரியாதையும் மாமனார், மாமியாரிடமிருந்து எப்படி கிடைக்கிறது என்பதை!
— ஜி.சபிதா, நெல்லை.
நன்றி : தினமலர்
Re: இது உங்கள் இடம்
நடத்துனர்கள் கவனத்திற்கு...
கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான நான், சமீபத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் பொருட்டு, அரசு பேருந்தில் பயணித்தேன். மாற்றுத்திறனாளர் அடையாள அட்டையை நகலெடுத்து, நடத்துனரிடம் கொடுத்தால், நாலில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அரசின் நடைமுறையிலுள்ள அறிவிப்பின் அடிப்படையில், அவ்வாறு, நகலை நடத்துனர் வசம் கொடுத்தேன்.
அதைப் பெற்றுக்கொண்ட அவர், மிகவும் கீழ்த்தரமாக, "இதையெல்லாம் எடுத்துகிட்டு வந்து, எங்க உசிரை வாங்கறீங்களே... இதை பத்திரமா கொண்டு போய் டெப்போவுல சேர்க்கலன்னா, என் சம்பளத்துலதான் பிடிப்பாங்க...' என்கிற ரீதியில், ஏக வசனம் பேசி, சக பயணியர் முன் கூனிக் குறுகச் செய்து விட்டார்.
மாற்றுத்திறனாளராய் பிறந்துவிட்ட காரணத்தால் தான், அரசின் சலுகைகளை அனுபவிக்கிறோமேயொழிய, அரசின் சலுகைகளை மனதிற்கொண்டு, யாரும் உடல் உறுப்புகளை இழந்து, மாற்றுத்திறனாளராவதில்லை. இதை, அரசுப் பேருந்து நடத்துனர்கள் உணர்ந்து கொள்வரா!
— கா.இளையராஜா, கடலூர்.
கண்பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான நான், சமீபத்தில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் செல்லும் பொருட்டு, அரசு பேருந்தில் பயணித்தேன். மாற்றுத்திறனாளர் அடையாள அட்டையை நகலெடுத்து, நடத்துனரிடம் கொடுத்தால், நாலில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற அரசின் நடைமுறையிலுள்ள அறிவிப்பின் அடிப்படையில், அவ்வாறு, நகலை நடத்துனர் வசம் கொடுத்தேன்.
அதைப் பெற்றுக்கொண்ட அவர், மிகவும் கீழ்த்தரமாக, "இதையெல்லாம் எடுத்துகிட்டு வந்து, எங்க உசிரை வாங்கறீங்களே... இதை பத்திரமா கொண்டு போய் டெப்போவுல சேர்க்கலன்னா, என் சம்பளத்துலதான் பிடிப்பாங்க...' என்கிற ரீதியில், ஏக வசனம் பேசி, சக பயணியர் முன் கூனிக் குறுகச் செய்து விட்டார்.
மாற்றுத்திறனாளராய் பிறந்துவிட்ட காரணத்தால் தான், அரசின் சலுகைகளை அனுபவிக்கிறோமேயொழிய, அரசின் சலுகைகளை மனதிற்கொண்டு, யாரும் உடல் உறுப்புகளை இழந்து, மாற்றுத்திறனாளராவதில்லை. இதை, அரசுப் பேருந்து நடத்துனர்கள் உணர்ந்து கொள்வரா!
— கா.இளையராஜா, கடலூர்.
Re: இது உங்கள் இடம்
நான் ரெடி...'
ரெடிமேட் கடையில் சேல்ஸ் - கேர்ளாக பணிபுரிகிறேன். ஒருநாள், நாலைந்து இளவட்டங்கள், டிரஸ் எடுக்க வந்தனர். அவர்கள் கேட்ட டிரஸ்சை காட்டுவதற்காக, அவர்களில் முதலில் வந்தவரை, "இந்த பக்கம் வாங்கண்ணா...' என்றேன். உடனே, அவருடைய நண்பர்களில் ஒருவர், "டேய்... நீ எனக்கு மாப்பிள்ளை... உன்னை இவங்க அண்ணன்னு சொன்னதால, எனக்கு இவங்க என்ன முறை வேண்டும் தெரியுமா?' என்று கிண்டல் செய்ய... "ஓ மச்சி... நீ அப்படி வர்றியா...' என்று சிரித்தனர் நண்பர்கள்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடைய எனக்கு, எப்படித்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. "டேய்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி... இப்பவே ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணம் முடிச்சுக்குவோம். என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? இல்ல... தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தைரியம் இருந்தா சொல்லு, இப்பவே வர்றேன்...'ன்னு ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான், அவனுடன் வந்த அத்தனை பேரும், ஏன்... என் சக ஊழியர்களும், வாயடைத்து நின்றனர், இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று!
பிரச்னை சிக்கலாகி விட்டதை உணர்ந்து, நான், அண்ணா என்று அழைத்தவர், கிண்டல் செய்த நண்பனை, என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அவனும், என்னிடம் மன்னிப்புக் கேட்டு, திரும்பி பார்க்காமல் சென்றான். நான் இந்த போடு போடவில்லை என்றால், கிண்டல் தொடர்ந்து கொண்டே போயிருக்கும். குடும்ப வறுமை காரணமாக, வேலைக்கு வருகிறோம். எங்களை போன்றவர்களை, கிள்ளு கீரையாக நினைத்து, கிண்டல் செய்பவர்கள், இனியாவது, கவுரவமாக நடத்தாவிட்டாலும், கிண்டல் செய்யாமலாவது இருப்பரா!
— வி.கன்னிகா, சென்னை.
ரெடிமேட் கடையில் சேல்ஸ் - கேர்ளாக பணிபுரிகிறேன். ஒருநாள், நாலைந்து இளவட்டங்கள், டிரஸ் எடுக்க வந்தனர். அவர்கள் கேட்ட டிரஸ்சை காட்டுவதற்காக, அவர்களில் முதலில் வந்தவரை, "இந்த பக்கம் வாங்கண்ணா...' என்றேன். உடனே, அவருடைய நண்பர்களில் ஒருவர், "டேய்... நீ எனக்கு மாப்பிள்ளை... உன்னை இவங்க அண்ணன்னு சொன்னதால, எனக்கு இவங்க என்ன முறை வேண்டும் தெரியுமா?' என்று கிண்டல் செய்ய... "ஓ மச்சி... நீ அப்படி வர்றியா...' என்று சிரித்தனர் நண்பர்கள்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடைய எனக்கு, எப்படித்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. "டேய்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி... இப்பவே ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணம் முடிச்சுக்குவோம். என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? இல்ல... தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தைரியம் இருந்தா சொல்லு, இப்பவே வர்றேன்...'ன்னு ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான், அவனுடன் வந்த அத்தனை பேரும், ஏன்... என் சக ஊழியர்களும், வாயடைத்து நின்றனர், இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று!
பிரச்னை சிக்கலாகி விட்டதை உணர்ந்து, நான், அண்ணா என்று அழைத்தவர், கிண்டல் செய்த நண்பனை, என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். அவனும், என்னிடம் மன்னிப்புக் கேட்டு, திரும்பி பார்க்காமல் சென்றான். நான் இந்த போடு போடவில்லை என்றால், கிண்டல் தொடர்ந்து கொண்டே போயிருக்கும். குடும்ப வறுமை காரணமாக, வேலைக்கு வருகிறோம். எங்களை போன்றவர்களை, கிள்ளு கீரையாக நினைத்து, கிண்டல் செய்பவர்கள், இனியாவது, கவுரவமாக நடத்தாவிட்டாலும், கிண்டல் செய்யாமலாவது இருப்பரா!
— வி.கன்னிகா, சென்னை.
Re: இது உங்கள் இடம்
இரண்டு கட்டணம் ஏன்?
"மிகக் குறைந்த வட்டியில் நகைக்கடன்!' என்று, அனைத்து வங்கிகளும் விளம்பரம் செய்கின்றன. வட்டி விகிதம் என்னவோ, அடகுக் கடைகளை விடக் குறைவாகத்தான் உள்ளன. ஆனால், வங்கிகள் விதிக்கும் மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்தால், அடகுக்கடையே பரவாயில்லை எனத் தோன்றும்.
வங்கிகளில் அடகு வைக்கும் அன்று, "பிராசசிங் பீஸ்' என்று ஒரு தொகையும், அன்றே, நகை மதிப்பீட்டாளர் கட்டணம் என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர். இது தவிர, நகையை மீட்கும் அன்று, "குளோசிங் சார்ஜ்' என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர்.
வட்டி விகிதம் குறைவு என பறைசாற்றும் வங்கிகள், இந்த கட்டணங்களை பற்றி, எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய நாட்டுடைமை வங்கிகளும் இதற்கு விலக்கு அல்ல. பாமரர்கள் இந்த கட்டணங்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. நகை மதிப்பீட்டாளர் தான் நகைகளை ஆய்வு செய்கிறார். அவர் பீஸ் தவிர, "பிராசசிங் பீஸ்' யாருக்காக? வங்கிகளுக்கே வெளிச்சம்!
— த.கண்ணன், கோவை.
"மிகக் குறைந்த வட்டியில் நகைக்கடன்!' என்று, அனைத்து வங்கிகளும் விளம்பரம் செய்கின்றன. வட்டி விகிதம் என்னவோ, அடகுக் கடைகளை விடக் குறைவாகத்தான் உள்ளன. ஆனால், வங்கிகள் விதிக்கும் மறைமுகக் கட்டணங்களையும் சேர்த்தால், அடகுக்கடையே பரவாயில்லை எனத் தோன்றும்.
வங்கிகளில் அடகு வைக்கும் அன்று, "பிராசசிங் பீஸ்' என்று ஒரு தொகையும், அன்றே, நகை மதிப்பீட்டாளர் கட்டணம் என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர். இது தவிர, நகையை மீட்கும் அன்று, "குளோசிங் சார்ஜ்' என்று ஒரு தொகையும் வசூலிக்கின்றனர்.
வட்டி விகிதம் குறைவு என பறைசாற்றும் வங்கிகள், இந்த கட்டணங்களை பற்றி, எந்த வித அறிவிப்பும் செய்வதில்லை. மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய நாட்டுடைமை வங்கிகளும் இதற்கு விலக்கு அல்ல. பாமரர்கள் இந்த கட்டணங்களை பற்றி அறிய வாய்ப்பில்லை. நகை மதிப்பீட்டாளர் தான் நகைகளை ஆய்வு செய்கிறார். அவர் பீஸ் தவிர, "பிராசசிங் பீஸ்' யாருக்காக? வங்கிகளுக்கே வெளிச்சம்!
— த.கண்ணன், கோவை.
Re: இது உங்கள் இடம்
அனைத்தும் உங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தியது
ஆனால் அவர்களாக திருந்தினால்தான் உண்டு
ஆனால் அவர்களாக திருந்தினால்தான் உண்டு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இது உங்கள் இடம்
இவர்கள் திருந்தவே மாட்டார்கள். அந்த பேருந்து நடத்துனர் மீது மிகுந்த கோபம் வருகிறது. இளைன்ஞர்களும் கண்ணியமாக நடக்க வேண்டும்
இந்த பகுதி நல்லாருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள் தம்பி.
இந்த பகுதி நல்லாருக்கு. தொடர்ந்து பதிவிடுங்கள் தம்பி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இது உங்கள் இடம்
மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டுட்டா....
திருமணமான புதிதில், என் இஷ்டப்படி நினைத்ததை வாங்குவதும், செய்வதுமாக இருந்தேன். இதனால், மனைவிக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டு, சண்டையில் முடியும். உடனே, தாய் வீடு சென்று விடுவாள் மனைவி. இரண்டு மாதத்திற்கு ஓட்டல் சாப்பாடுதான். பிறகு, பெரியவர்கள் சமாதானம் பேசி, சேர்த்து வைப்பது வழக்கம்.
இப்படியே ஓடியது என் வாழ்க்கை. எனக்கும் சலிப்பு ஏற்படவே, சண்டைக்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தேன். "இனி, எதை செய்தாலும், நம் இஷ்டப்படி செய்யாமல், மனைவியின் ஆலோசனைப்படி செய்வதே சரி...' என முடிவுக்கு வந்தேன். அதிலிருந்து, நண்பர்கள் ஏதாவது சொன்னால் கூட, "என் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்...' என்பேன்.
நண்பர்களோ, "பொண்டாட்டி தாசன் ஆகி விட்டாயா?' என்று கேலி செய்வர். "நம்ப லைப் பார்ட்னர் ஆச்சே... பார்ட்னர் கிட்ட கேட்காமல் செய்வது தப்பில்லையா?' என்று சொல்லி சமாளித்து விடுவேன்.
இப்போதெல்லாம், சின்ன சின்ன விஷயத்திற்கு கூட, மனைவிக்கு சம உரிமை அளிப்பதால், நான் எதைச் சொன்னாலும், ஓ.கே., சொல்லி விடுகிறாள். அதனால், எங்களுக்குள் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போது, மனைவி போற்றும் கணவனாக மட்டுமில்லை, மாமனார், மாமியார் மெச்சும் மருமகனாகவே மாறி விட்டேன்.
— வீ.சுரேந்திரன், காரைக்குடி.
திருமணமான புதிதில், என் இஷ்டப்படி நினைத்ததை வாங்குவதும், செய்வதுமாக இருந்தேன். இதனால், மனைவிக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டு, சண்டையில் முடியும். உடனே, தாய் வீடு சென்று விடுவாள் மனைவி. இரண்டு மாதத்திற்கு ஓட்டல் சாப்பாடுதான். பிறகு, பெரியவர்கள் சமாதானம் பேசி, சேர்த்து வைப்பது வழக்கம்.
இப்படியே ஓடியது என் வாழ்க்கை. எனக்கும் சலிப்பு ஏற்படவே, சண்டைக்கான காரணத்தை யோசிக்க ஆரம்பித்தேன். "இனி, எதை செய்தாலும், நம் இஷ்டப்படி செய்யாமல், மனைவியின் ஆலோசனைப்படி செய்வதே சரி...' என முடிவுக்கு வந்தேன். அதிலிருந்து, நண்பர்கள் ஏதாவது சொன்னால் கூட, "என் மனைவியிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்...' என்பேன்.
நண்பர்களோ, "பொண்டாட்டி தாசன் ஆகி விட்டாயா?' என்று கேலி செய்வர். "நம்ப லைப் பார்ட்னர் ஆச்சே... பார்ட்னர் கிட்ட கேட்காமல் செய்வது தப்பில்லையா?' என்று சொல்லி சமாளித்து விடுவேன்.
இப்போதெல்லாம், சின்ன சின்ன விஷயத்திற்கு கூட, மனைவிக்கு சம உரிமை அளிப்பதால், நான் எதைச் சொன்னாலும், ஓ.கே., சொல்லி விடுகிறாள். அதனால், எங்களுக்குள் சண்டை என்ற பேச்சுக்கே இடமில்லை.
தற்போது, மனைவி போற்றும் கணவனாக மட்டுமில்லை, மாமனார், மாமியார் மெச்சும் மருமகனாகவே மாறி விட்டேன்.
— வீ.சுரேந்திரன், காரைக்குடி.
Re: இது உங்கள் இடம்
இளநீர் குடிக்கச் செல்கிறீர்களா?
இது கோடை காலம்! நம்மில் பலர், இளநீர் கடையை நோக்கி படையெடுக்கிறோம். வெயில் கொடுமையும், தண்ணீர் தாகமும் சேர்ந்து, நம் கண்கள் இளநீரையே வட்டமிடுவதால், அதை குடிப்பதற்கு கொடுக்கும் ஸ்டிராவை கவனிப்பதில்லை.
நாம் குடித்து விட்டு தூர எறியும் ஸ்டிராக்களை, இளநீர் வியாபாரிகள் எடுத்து, தண்ணீரில் கழுவாமல், வெயிலில் காய வைத்து, மீண்டும் உபயோகிக்கின்றனர். இதனால், அந்த ஸ்டிராவின் மூலம் பலவிதமான நோய் பரவ வாய்ப்புண்டு. எனவே, இளநீர் பருகியவுடன், அந்த ஸ்டிராவை மறுமுறை உபயோகிக்க முடியாத அளவிற்கு முறுக்கியோ அல்லது முறித்தோ போட்டு விடுங்கள்.
இப்படி செய்வதால், நம் எச்சிலை பிறர் சாப்பிட வேண்டியதில்லை. அத்துடன் நோய் பரவாமலும் தடுக்கலாம்.
— எஸ்.வினோதினி, சென்னை.
இது கோடை காலம்! நம்மில் பலர், இளநீர் கடையை நோக்கி படையெடுக்கிறோம். வெயில் கொடுமையும், தண்ணீர் தாகமும் சேர்ந்து, நம் கண்கள் இளநீரையே வட்டமிடுவதால், அதை குடிப்பதற்கு கொடுக்கும் ஸ்டிராவை கவனிப்பதில்லை.
நாம் குடித்து விட்டு தூர எறியும் ஸ்டிராக்களை, இளநீர் வியாபாரிகள் எடுத்து, தண்ணீரில் கழுவாமல், வெயிலில் காய வைத்து, மீண்டும் உபயோகிக்கின்றனர். இதனால், அந்த ஸ்டிராவின் மூலம் பலவிதமான நோய் பரவ வாய்ப்புண்டு. எனவே, இளநீர் பருகியவுடன், அந்த ஸ்டிராவை மறுமுறை உபயோகிக்க முடியாத அளவிற்கு முறுக்கியோ அல்லது முறித்தோ போட்டு விடுங்கள்.
இப்படி செய்வதால், நம் எச்சிலை பிறர் சாப்பிட வேண்டியதில்லை. அத்துடன் நோய் பரவாமலும் தடுக்கலாம்.
— எஸ்.வினோதினி, சென்னை.
Re: இது உங்கள் இடம்
அடகு கடை பித்தலாட்டங்கள்!
என் கணவர், என்னுடைய ஒரு பவுன் தங்கச் செயினை, சில மாதங்களுக்கு முன், அடகு வைத்திருந்தார். அது மிகச் சரியாக, ஒரு பவுன் - அதாவது, எட்டு கிராம் இருந்தது. ஆனால், அடகு வைத்த ரசீதில், 7.900 மில்லி கிராம் என்று எழுதியிருக்க, கணவரிடம் விசாரித்தேன். "அடகு கடைக்காரர்கள் சேதாரத்தை கழித்து விட்டுதான் எழுதுவார்களாம்; நானும் விசாரித்தேன்...' என்றார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டு விட்டோம்.
சமீபத்தில் மீண்டும் பணப் பற்றாக்குறை ஏற்பட, அந்த செயினை மீட்டு, வேறு பிரபலமான, அடகு நகை வங்கியில், அதிக தொகைக்கும், குறைந்த வட்டிக்கும் வைத்தோம். அப்போது தான், அந்த அதிர்ச்சி தெரிய வந்தது. ஏற்கனவே, 100 மில்லி கிராம் குறைத்து எழுதியதோடல்லாமல், பிரபலமான அந்த வங்கியின் கம்ப்யூட்டர் தராசில் எடை போட, 7.700 மில்லி தான் இருந்தது. பித்தலாட்டத்தை விசாரித்த போது, ஏற்கனவே அடகு வைத்த நகைக்கடையின் கைவரிசை புரிந்தது. கோபப்பட்டு, அந்த கடையில் விசாரித்ததற்கு, "நகையை மீட்கும் போதே, எடை போட்டு விட்டு போக வேண்டியது தானே ...' என்று கூலாக பதில் சொல்ல, ஆடிப் போனோம்.
மிடில் கிளாஸ் மக்களே... தங்க நகை அடகு வைக்கும்போது, ஏரியாக்களில் புற்றீசல் போல் முளைத்துவிட்ட அடகு நகை கடைக்காரர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருங்கள். எங்களைப் போல் ஏமாறாதீர்கள்.
— பி.ஜெயலட்சுமி, திருப்பூர்.
என் கணவர், என்னுடைய ஒரு பவுன் தங்கச் செயினை, சில மாதங்களுக்கு முன், அடகு வைத்திருந்தார். அது மிகச் சரியாக, ஒரு பவுன் - அதாவது, எட்டு கிராம் இருந்தது. ஆனால், அடகு வைத்த ரசீதில், 7.900 மில்லி கிராம் என்று எழுதியிருக்க, கணவரிடம் விசாரித்தேன். "அடகு கடைக்காரர்கள் சேதாரத்தை கழித்து விட்டுதான் எழுதுவார்களாம்; நானும் விசாரித்தேன்...' என்றார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டு விட்டோம்.
சமீபத்தில் மீண்டும் பணப் பற்றாக்குறை ஏற்பட, அந்த செயினை மீட்டு, வேறு பிரபலமான, அடகு நகை வங்கியில், அதிக தொகைக்கும், குறைந்த வட்டிக்கும் வைத்தோம். அப்போது தான், அந்த அதிர்ச்சி தெரிய வந்தது. ஏற்கனவே, 100 மில்லி கிராம் குறைத்து எழுதியதோடல்லாமல், பிரபலமான அந்த வங்கியின் கம்ப்யூட்டர் தராசில் எடை போட, 7.700 மில்லி தான் இருந்தது. பித்தலாட்டத்தை விசாரித்த போது, ஏற்கனவே அடகு வைத்த நகைக்கடையின் கைவரிசை புரிந்தது. கோபப்பட்டு, அந்த கடையில் விசாரித்ததற்கு, "நகையை மீட்கும் போதே, எடை போட்டு விட்டு போக வேண்டியது தானே ...' என்று கூலாக பதில் சொல்ல, ஆடிப் போனோம்.
மிடில் கிளாஸ் மக்களே... தங்க நகை அடகு வைக்கும்போது, ஏரியாக்களில் புற்றீசல் போல் முளைத்துவிட்ட அடகு நகை கடைக்காரர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருங்கள். எங்களைப் போல் ஏமாறாதீர்கள்.
— பி.ஜெயலட்சுமி, திருப்பூர்.
Similar topics
» உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்கள் மனதை மாற்றுங்கள்…
» உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
» உங்கள் முடியை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளமுடியும்.
» உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும்
» உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்கள் மனதை மாற்றுங்கள்...
» உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
» உங்கள் முடியை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளமுடியும்.
» உங்கள் பார்வை உங்கள் இலக்கின்மீது இருக்கட்டும்
» உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உங்கள் மனதை மாற்றுங்கள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|