Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேரா மன்னா!
Page 1 of 1 • Share
தேரா மன்னா!
கும்பகோணம் மேற்கு சன்னதி தெருவில் கோயிலுக்கு 20 அடி தள்ளி ஜானகி பாட்டியுடைய வீடு. அந்தத் தெருவில் எல்லா வீடுகளுமே தெருமட்டத்திலிருந்து 2 அடி உயரத்துக்குக் கட்டப்பட்டு இருந்தன. வீட்டுக்குச் செல்ல சின்னப் படிக்கட்டுகள் இரண்டு இருந்தன. திடீரென்று 2005ம் ஆண்டு கும்பகோணம் நகராட்சியினர் ஜானகி பாட்டி வீட்டின் முன்னால் இந்தப் படிக்கட்டுகளை இடிக்க வந்தனர். கேட்டால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்று விளக்கம் கொடுத்தனர்.
படிக்கட்டுகளை இடித்துவிட்டால் அப்புறம் பாட்டிக்கு வீட்டுச் சிறைதான். ஜானகி பாட்டி உடனே ஹைகோர்ட் மதுரை பெஞ்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த இரண்டு படிக்கட்டுகளையும் இடித்துவிட்டால் பிறகு அவரால் வீட்டுக்குள் சென்று வர முடியாது.
தனக்கு வக்கீல் வைத்து இப்படிப்பட்ட ஒரு வழக்கை நடத்த வசதியும் கிடையாது கோர்ட்டார் தலையிட்டு இப்படிக்கட்டுகளை நகராட்சியினர் இடிக்கக்கூடாது என்று உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த வீட்டு அம்பியை அக்கடிதத்தை தபாலாபீசில் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொண்டு அவர் சாரங்கபாணி பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு தமது வேலையைத் தொடர்ந்தார்.
அக்கடிதத்தை ஒரு ரிட்மனுவாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கும்பகோணம் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இரண்டரை வருடங்கள் கழித்து நகராட்சி தனது பதிலை சமர்ப்பித்தது. அதில் நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தமது கடமை என்றும், இப்படி சிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைவிதித்தால் பல பெரிய ஆக்கிரமிப்புகளை பின்னால் அகற்ற முடியாது என்று கூறியிருந்தனர்.
அவர்களது பதில் திருபதிகரமாக இல்லாததால் மேற்கு சன்னதித் தெருவின் போட்டோவையும், அந்தத் தெருவின் வரைபடம் ஒன்றையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
வரைபடத்தில் இந்த இரு படிக்கட்டுகளும் சுமார் 0.1748 சதுர அடி ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், மேற்கு சன்னதி தெரு 20 அடி அகலம் கொண்டதாகவும் காட்டப்பட்டிருந்தது. நகராட்சியினர் கொடுத்த போட்டோவில் ஜானகி பாட்டியின் முன்பு 4 அடி முன்புறம் ஒரு மின்சாரக் கம்பம் இருப்பதும் காணப்பட்டது.
இந்த வரைபடத்தையும், போட்டோவையும் பார்த்த நீதிமன்றத்துக்கு ஒரு விஷயம் விளங்கியது. நகராட்சி செய்த செயல் மிகவும் அற்பமானது. வேண்டுமென்றே சன்னதித் தெருவில் வசிப்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையைத் தவிர அதில் பொதுநலன் ஒன்றுமில்லை என்று. மேலும் சன்னதித் தெரு இரு வழிப்பாதையல்ல. அந்தத் தெருவே கோயில் கோபுரத்துடன் முடிந்துவிடுகிறது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் நகராட்சியினர் அற்பத்தனமான செயலை கடிந்து கொண்டதோடல்லாமல் ஜானகி பாட்டி வீட்டுக்குள் செல்ல வசதியான இரண்டு சிறிய படிக்கட்டுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. ஜானகி பாட்டிக்கு உத்தரவின் நகலை கோர்ட் ஸ்டாம்பு கட்டாமல் இலவசமாக அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
அந்தத் தள்ளாத வயதிலும், தனது சமயோசித்தத்தால் தபால் கார்டிலேயே நீதியை வென்ற ஜானகி பாட்டியின் செயலை எவ்வளவு மெச்சினாலும் தகும்.
- நீதிபதி சந்துரு
படிக்கட்டுகளை இடித்துவிட்டால் அப்புறம் பாட்டிக்கு வீட்டுச் சிறைதான். ஜானகி பாட்டி உடனே ஹைகோர்ட் மதுரை பெஞ்சுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த இரண்டு படிக்கட்டுகளையும் இடித்துவிட்டால் பிறகு அவரால் வீட்டுக்குள் சென்று வர முடியாது.
தனக்கு வக்கீல் வைத்து இப்படிப்பட்ட ஒரு வழக்கை நடத்த வசதியும் கிடையாது கோர்ட்டார் தலையிட்டு இப்படிக்கட்டுகளை நகராட்சியினர் இடிக்கக்கூடாது என்று உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார். அடுத்த வீட்டு அம்பியை அக்கடிதத்தை தபாலாபீசில் சேர்த்துவிடும்படி கேட்டுக் கொண்டு அவர் சாரங்கபாணி பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு தமது வேலையைத் தொடர்ந்தார்.
அக்கடிதத்தை ஒரு ரிட்மனுவாக ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கும்பகோணம் நகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இரண்டரை வருடங்கள் கழித்து நகராட்சி தனது பதிலை சமர்ப்பித்தது. அதில் நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தமது கடமை என்றும், இப்படி சிறு ஆக்கிரமிப்புகளை அகற்ற தடைவிதித்தால் பல பெரிய ஆக்கிரமிப்புகளை பின்னால் அகற்ற முடியாது என்று கூறியிருந்தனர்.
அவர்களது பதில் திருபதிகரமாக இல்லாததால் மேற்கு சன்னதித் தெருவின் போட்டோவையும், அந்தத் தெருவின் வரைபடம் ஒன்றையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
வரைபடத்தில் இந்த இரு படிக்கட்டுகளும் சுமார் 0.1748 சதுர அடி ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், மேற்கு சன்னதி தெரு 20 அடி அகலம் கொண்டதாகவும் காட்டப்பட்டிருந்தது. நகராட்சியினர் கொடுத்த போட்டோவில் ஜானகி பாட்டியின் முன்பு 4 அடி முன்புறம் ஒரு மின்சாரக் கம்பம் இருப்பதும் காணப்பட்டது.
இந்த வரைபடத்தையும், போட்டோவையும் பார்த்த நீதிமன்றத்துக்கு ஒரு விஷயம் விளங்கியது. நகராட்சி செய்த செயல் மிகவும் அற்பமானது. வேண்டுமென்றே சன்னதித் தெருவில் வசிப்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையைத் தவிர அதில் பொதுநலன் ஒன்றுமில்லை என்று. மேலும் சன்னதித் தெரு இரு வழிப்பாதையல்ல. அந்தத் தெருவே கோயில் கோபுரத்துடன் முடிந்துவிடுகிறது. நீதிமன்றம் தனது தீர்ப்பில் நகராட்சியினர் அற்பத்தனமான செயலை கடிந்து கொண்டதோடல்லாமல் ஜானகி பாட்டி வீட்டுக்குள் செல்ல வசதியான இரண்டு சிறிய படிக்கட்டுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டது. ஜானகி பாட்டிக்கு உத்தரவின் நகலை கோர்ட் ஸ்டாம்பு கட்டாமல் இலவசமாக அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டது.
அந்தத் தள்ளாத வயதிலும், தனது சமயோசித்தத்தால் தபால் கார்டிலேயே நீதியை வென்ற ஜானகி பாட்டியின் செயலை எவ்வளவு மெச்சினாலும் தகும்.
- நீதிபதி சந்துரு
Re: தேரா மன்னா!
அந்தத் தள்ளாத வயதிலும், தனது சமயோசித்தத்தால் தபால் கார்டிலேயே நீதியை வென்ற ஜானகி பாட்டியின் செயலை எவ்வளவு மெச்சினாலும் தகும்.
முயற்சி...
Similar topics
» மண்ணா மன்னா…!!
» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
» கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!”
» புலவர் பாடும்போது தாளம் தப்புகிறது மன்னா?
» மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…!
» புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
» கன்னா பின்னா காடே மாடே மன்னா தென்னா வரையா வள்ளல்!”
» புலவர் பாடும்போது தாளம் தப்புகிறது மன்னா?
» மன்னா, அமைச்சர் எதிரியுடன் சேர்ந்து விட்டார்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|