Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எப்படி வந்தேன் தெரியுமா ?
Page 1 of 1 • Share
எப்படி வந்தேன் தெரியுமா ?
எப்படி வந்தேன் தெரியுமா ?
மெழுகுவத்தி
வணக்கம் நண்பர்களே, பரீட்சை நேரத்தில் கரன்ட் கட் ஆகுதா? உடனே என் ஞாபகம் வந்துருமே. நான்தாங்க மெழுகுவத்தி பேசுறேன்.
ஒரு காலத்தில் இந்த மின்சார விளக்குகள் வராதபோது, முழுக்க முழுக்க உங்க வீட்டை நான்தான் ஒளி ஏற்றினேன். நான் எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தேன்னு தெரியுமா?
இப்போது, என்னை உற்பத்தி செய்ய பெரிய தொழிற்சாலைகள் வந்துவிட்டன. ஒரு காலத்தில் வீட்டிலேயே என்னைத் தயாரித்தார்கள். இப்போதும் பல வீடுகளில் குடிசைத் தொழிலாக உருவாகிறேன். நான், மூன்று வகையான உருகுத் திரவத்தால் ஆனவன். மிருகக் கொழுப்பு கெட்டிப்படும்போது, அதை எரிபொருளாகக்கொண்டு என்னைச் செய்கிறார்கள். தேன்கூடுகளை உருக்கிக் கிடைக்கும் தேன்மெழுகு எனும் எரிதிரவத்திலும் என்னைச் செய்வது உண்டு. மூன்றாவதாக இப்போது வேதி முறையிலும் உருவாகிறேன்.
என்னைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் முதல் பகுதி, பர்னேஸ் எனப்படும் கொதிகலன்களால் ஆனது. இங்கேதான் என் உடலை அமைப்பதற்கான எரிதிரவத்தை முதலில் கொதியேற்றுகிறார்கள். திரவ நிலை அடைந்த மெழுகை, குழாய்கள் வழியே அடுத்த நிலையான அச்சுக் குழல்களுக்கு மோட்டார் மூலம் வரவைக்கிறார்கள். இந்த அறையில், பல வகை அச்சுக் குழல்கள் ஏற்கெனவே திரியோடு இருக்கும்.
எனது திரி, ஆரம்பக் காலத்தில் ஒற்றை இழை அல்லது, மெல்லிழைப் பருத்தி நூலாக இருந்தது. இப்போது, பின்னல் இழைத் திரிகளே பெரும்பாலும் பயன்படுகின்றன. இவை, நின்று எரியும். அந்தத் திரிகளைத் தயாரிக்கும் பகுதி தொழிற்சாலையிலேயே தனியாக உள்ளது. இவற்றை, அந்த அச்சுக் குழலின் மையம் வழியே செலுத்துவார்கள்.
உருகிய மெழுகுத் திரவம், இந்த அச்சுக் குழல்களில் செலுத்தப்பட்டு, கூலர்ஸ் எனப்படும் குளிர் ஊட்டும் பகுதியில், குளிர் நீரில் வைக்கப்படும். அச்சுக் குழலின் வடிவம், அதன் அகலம், அதன் நீளம், இதுவே எனது வடிவமாகிறது. இதில் பல நிறங்களில் எனக்கு கவர்ச்சி அளிக்கப்படும். சில சமயம், வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டு, 'கமகம’ என்று நான் ஒளிவிடவும் வழி செய்கிறார்கள்.
அச்சுக் குழல்கள் தங்களைத் தாங்களே கழற்றிக்கொண்டு என்னை விடுவிக்கும் இடம், தொழிற்சாலையின் அடுத்த பகுதி. இங்கே, பல தொழிலாளர்கள் எனக்கு இறுதி வடிவம் தருகிறார்கள். பிசிறுகளை நீக்கியும், எனது திரியைச் சரியாக 'கிராப்’ செய்தும் அனுப்புகிறார்கள்.
பேக்கிங் எனப்படும் கடைசிப் பகுதியில், என்னை அழகான அட்டைப் பெட்டிகளிலோ, கொஞ்சம் தடிமனான காக்கி, நீலம், சிவப்புக் காகிதத்திலோ அடைத்து, கடைக்கு அனுப்புகிறார்கள்.
எனது உடலையே உருக்கி, உங்களுக்காக ஒளி தந்து, சில மணி நேரங்களே வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் நான்தான் கடிகாரம் போல நேரத்தைக் காட்டினேன். 24 சம பாகங்களாக என்னைப் பிரித்து, ஒரு மணிக்கு ஒன்றாய் நான் உருக, மன்னர்கள்கூட அதைக்கொண்டே நேரத்தை அறிந்தனர்.
சரி, என்னைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருங்கள். நான் எரிந்துகொண்டு இருக்கும்போது, கொதி மெழுகை கை கால்களில்சொட்டிக் கொள்ளாமலும், என் ஜ்வாலையில் சுட்டுக்கொள்ளாமலும் ஜாக்கிரதையாக இருங்கள்.
http://www.thamilworld.com/
மெழுகுவத்தி
வணக்கம் நண்பர்களே, பரீட்சை நேரத்தில் கரன்ட் கட் ஆகுதா? உடனே என் ஞாபகம் வந்துருமே. நான்தாங்க மெழுகுவத்தி பேசுறேன்.
ஒரு காலத்தில் இந்த மின்சார விளக்குகள் வராதபோது, முழுக்க முழுக்க உங்க வீட்டை நான்தான் ஒளி ஏற்றினேன். நான் எப்படி உங்களிடம் வந்து சேர்ந்தேன்னு தெரியுமா?
இப்போது, என்னை உற்பத்தி செய்ய பெரிய தொழிற்சாலைகள் வந்துவிட்டன. ஒரு காலத்தில் வீட்டிலேயே என்னைத் தயாரித்தார்கள். இப்போதும் பல வீடுகளில் குடிசைத் தொழிலாக உருவாகிறேன். நான், மூன்று வகையான உருகுத் திரவத்தால் ஆனவன். மிருகக் கொழுப்பு கெட்டிப்படும்போது, அதை எரிபொருளாகக்கொண்டு என்னைச் செய்கிறார்கள். தேன்கூடுகளை உருக்கிக் கிடைக்கும் தேன்மெழுகு எனும் எரிதிரவத்திலும் என்னைச் செய்வது உண்டு. மூன்றாவதாக இப்போது வேதி முறையிலும் உருவாகிறேன்.
என்னைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் முதல் பகுதி, பர்னேஸ் எனப்படும் கொதிகலன்களால் ஆனது. இங்கேதான் என் உடலை அமைப்பதற்கான எரிதிரவத்தை முதலில் கொதியேற்றுகிறார்கள். திரவ நிலை அடைந்த மெழுகை, குழாய்கள் வழியே அடுத்த நிலையான அச்சுக் குழல்களுக்கு மோட்டார் மூலம் வரவைக்கிறார்கள். இந்த அறையில், பல வகை அச்சுக் குழல்கள் ஏற்கெனவே திரியோடு இருக்கும்.
எனது திரி, ஆரம்பக் காலத்தில் ஒற்றை இழை அல்லது, மெல்லிழைப் பருத்தி நூலாக இருந்தது. இப்போது, பின்னல் இழைத் திரிகளே பெரும்பாலும் பயன்படுகின்றன. இவை, நின்று எரியும். அந்தத் திரிகளைத் தயாரிக்கும் பகுதி தொழிற்சாலையிலேயே தனியாக உள்ளது. இவற்றை, அந்த அச்சுக் குழலின் மையம் வழியே செலுத்துவார்கள்.
உருகிய மெழுகுத் திரவம், இந்த அச்சுக் குழல்களில் செலுத்தப்பட்டு, கூலர்ஸ் எனப்படும் குளிர் ஊட்டும் பகுதியில், குளிர் நீரில் வைக்கப்படும். அச்சுக் குழலின் வடிவம், அதன் அகலம், அதன் நீளம், இதுவே எனது வடிவமாகிறது. இதில் பல நிறங்களில் எனக்கு கவர்ச்சி அளிக்கப்படும். சில சமயம், வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டு, 'கமகம’ என்று நான் ஒளிவிடவும் வழி செய்கிறார்கள்.
அச்சுக் குழல்கள் தங்களைத் தாங்களே கழற்றிக்கொண்டு என்னை விடுவிக்கும் இடம், தொழிற்சாலையின் அடுத்த பகுதி. இங்கே, பல தொழிலாளர்கள் எனக்கு இறுதி வடிவம் தருகிறார்கள். பிசிறுகளை நீக்கியும், எனது திரியைச் சரியாக 'கிராப்’ செய்தும் அனுப்புகிறார்கள்.
பேக்கிங் எனப்படும் கடைசிப் பகுதியில், என்னை அழகான அட்டைப் பெட்டிகளிலோ, கொஞ்சம் தடிமனான காக்கி, நீலம், சிவப்புக் காகிதத்திலோ அடைத்து, கடைக்கு அனுப்புகிறார்கள்.
எனது உடலையே உருக்கி, உங்களுக்காக ஒளி தந்து, சில மணி நேரங்களே வாழ்ந்தாலும், ஒரு காலத்தில் நான்தான் கடிகாரம் போல நேரத்தைக் காட்டினேன். 24 சம பாகங்களாக என்னைப் பிரித்து, ஒரு மணிக்கு ஒன்றாய் நான் உருக, மன்னர்கள்கூட அதைக்கொண்டே நேரத்தை அறிந்தனர்.
சரி, என்னைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருங்கள். நான் எரிந்துகொண்டு இருக்கும்போது, கொதி மெழுகை கை கால்களில்சொட்டிக் கொள்ளாமலும், என் ஜ்வாலையில் சுட்டுக்கொள்ளாமலும் ஜாக்கிரதையாக இருங்கள்.
http://www.thamilworld.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: எப்படி வந்தேன் தெரியுமா ?
சரி, என்னைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருங்கள். நான் எரிந்துகொண்டு இருக்கும்போது, கொதி மெழுகை கை கால்களில்சொட்டிக் கொள்ளாமலும், என் ஜ்வாலையில் சுட்டுக்கொள்ளாமலும் ஜாக்கிரதையாக இருங்கள்.
ஒளி்... பெருவோம்...
Similar topics
» உங்களுக்கு எப்படி சாப்பிடவேண்டும் என்று தெரியுமா ??
» செயற்கை மழை சாத்தியமே! எப்படி தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா ? எப்படி சாப்பிடுவது !!!
» தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
» லிவிங் ரூம் எப்படி இருக்கணும் தெரியுமா!!!
» செயற்கை மழை சாத்தியமே! எப்படி தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா ? எப்படி சாப்பிடுவது !!!
» தேங்காய் பூ எப்படி வருகிறது ... யாருக்காவது தெரியுமா?
» லிவிங் ரூம் எப்படி இருக்கணும் தெரியுமா!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|