Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்ணீர்விட்டு அழுதால் ஆரோக்கியமாக வாழலாம்!
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1 • Share
கண்ணீர்விட்டு அழுதால் ஆரோக்கியமாக வாழலாம்!
எந்த ஒரு மனித உயிரும், தான் பூமியில் அவதரித்துவிட்டதை அழுகையின் மூலமே தெரிவிக்கிறது. குழந்தைப் பருவத்தின் எல்லா தேவைகளும் முக்கியமாகப் பசி, தூக்கம், பிரிவு, கோபம் என எல்லா உணர்வுகளும் அழுகையாகவே வெளிப்படுகின்றன. குழந்தைகள் மட்டுமே அழுகையை இயற்கையாக வெளிப்படுத்துகின்றனர். அதனாலேயே கண்களைக் கசக்கியபடி அழும் எந்தக் குழந்தையும் நம்மை வசீகரிக்கின்றன. அழுகையிலும் ஒரு அழகியல் வெளிப்படுவதற்கு குழந்தைகளின் அழுகையே சான்று.
மனிதன் வளர வளர, மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் சமுதாயக் கட்டமைப்பிற்குள் சிரமப்பட்டேனும் தன்னை அடைத்துக்கொள்ள முற்படும்போது அழுகை ஒரு அசிங்கமான செயல் என்றே நம்ப வைக்கப்படுகிறது. பொம்மை காணாமல் போனதற்காகவும், ஐஸ் வாங்கித் தரச் சொல்லியும், என்றைக்குமே வராத பூச்சாண்டிக்கும் பயந்து அழுதவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டியதும், பொங்கி வரும் அழுகையைக் கூட சிறு புன்சிரிப்பில் மறைத்துத் தானும் தைரியமானவனே என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. ஒருவகையில் எல்லா மனிதர்களும் இவ்விதமே அழுகையுடன் போராடி சிரிப்பைப் பூக்கின்றனர். பெண்களுக்கு மட்டும் அழுவதில் கொஞ்சம் சலுகை காட்டுகிறது நம் சமூகம்.
சோகங்களின் மிகச் சிறந்த வடிகாலாக இருப்பது அழுகையே.ஆயிரம் ஆறுதல் வார்த்தைகளை விடவும், அரை மணி நேர அழுகை அந்தச் சோகத்தைக் கண்ணீரகக் கரைத்து வெளியேற்றவல்லது. முன்னர் வாய்விட்டு சிரிப்பது மட்டுமே உடல் நலத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளது போல் இப்போது கண்ணீர் விட்டு அழுவதும் கூட மிகவும் ஆரோக்கியமானதுதான் என்று கண்ணீர் விட்டு உறுதிப் படுத்துகிறார்கள் விஞ்ஞானிகள்.
அழுவதன் மூலம் மனதில் உள்ள அழுத்தம் கண்ணீர் மூலம் வெளியேறிவிடுகிறது. கண்களில் உள்ள அழுக்குகளும் நீங்குகின்றன. உடலுடன் உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். கண்ணீர் வகைகள் சோகத்தில் அழுவது, சந்தோஷத்தில் அழுவது, எரிச்சலில் அழுவது, உணர்ச்சி வசப்பட்டு அழுவது என கண்ணீர் பலவகைப்படும். மனிதர்களைப்போல விலங்குகளும் கண்ணீர் விட்டு அழுகின்றன. எனவே அழுவதற்காக வெட்கப்படத்தேவையில்லை. அழுகை என்பது ஆரோக்கியமானதே என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணீர் உருவாகக் காரணமான லாக்ரிமல் சுரப்பி காய்ந்து போனால் கண் உலர்ந்து விடும். கண்ணீரின் அளவு குறைந்து விடுவதால் கண்ணில் எரிச்சல் உணர்வு உண்டாகிறது. மண் விழுந்தது போன்ற கடுமையான எரிச்சலா கவும் இது இருக்கக்கூடும். வலி அதிகமாகும். கவனித்து சரி செய்து கொள்ளாமல் நீண்ட காலம் அலட்சியப்படுத்தினால் விழித்திரை யில் பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரலாம். அதனால் அடிக்கடி அழுவது கூட நல்லது தான்.
கண்ணீர் உண்டாகவில்லையென்றால் அதற்கேற்ப மருத்துவரை நாடவேண்டும். உலர்கண்களை தடுக்க கண்ணில் உள்ள மூன்று வெவ்வேறு படலங்களின் கூட்டு முயற்சிதான் கண்ணீர். இவற்றில் வெளிப்புறமாக உள்ள மெல்லிய படலம் அங்கு சுரக்கும் நீர் (அதாவது இமை யில் உள்ள லிபிட்) ஆவியாக மாறுவதைத் தடுக்கிறது. நடுப்படலமான லாக்ரிமல் சுரப்பி களில் நீர் சுரக்கிறது. கண்ணீரில் உள்ள உப்பும் அமிலமும் ஓர் அளவுக்குள் இருப்பதையும் இது உறுதி செய்துகொள்கிறது. கண் தொற்றுகளுக்குஎதிராகச் செயற்படும் சக்தியும் கண்ணீருக்கு உண்டு. உள்ளே இருக்கும் படலம் கண்ணீரை விழித்திரையோடு ஒட்டிக்கொள்ள வைக்கிறது. அதாவது கண்ணீர் சட்டென வெளியேறிவிடுவதில்லை. இந்த மூன்று படலங்களில் எது செயற்படா விட்டாலும் விழித்திரை உலர்ந்துவிடும்.
மனபாரம் குறையும் வயதாக ஆக இந்தப் படலங்களில் இயல்பாக உள்ள எண் ணெய் சுரப்பி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுகிறது. சிலவகை ஆண்டியாடிக் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போதும் இப்படி நேரலாம். கான்டாக்ட் லென்ஸ் அணியும் சிலருக்கு அதனாலேயே கண்களில் ஒவ்வாமை ஏற்படலாம். அதாவது அந்த லென்ஸ்கள் கண்ணீர்த் திவலைகளை உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே உலர்கண் கொண்டவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணியக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சந்தோசமென்றால் மகிழ்ச்சியை சிரிப்பாக வெளிப்படுத்துவதைப்போல துக்கமென்றால் அழுது வெளிப்படுத்துங்கள். இதன் மூலம் மனபாரம் குறையும், ஆரோக்யம் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
Re: கண்ணீர்விட்டு அழுதால் ஆரோக்கியமாக வாழலாம்!
மனபாரம் குறையும் வயதாக ஆக இந்தப் படலங்களில் இயல்பாக உள்ள எண் ணெய் சுரப்பி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக கண்ணீர் விரைவில் ஆவியாகி விடுகிறது.
அழுவதற்கான வாய்ப்புகள் இப்போதெல்லாம் கிடைப்பதேயில்லை...
Re: கண்ணீர்விட்டு அழுதால் ஆரோக்கியமாக வாழலாம்!
நீங்க ஆரோக்கியமாக இரப்பதன் ரகசியம் இதுதானா? சரி சரி
( சொந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்த கொண்டதற்கு மிக்க நன்றி...)
( சொந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்த கொண்டதற்கு மிக்க நன்றி...)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: கண்ணீர்விட்டு அழுதால் ஆரோக்கியமாக வாழலாம்!
ஜேக் wrote:நீங்க ஆரோக்கியமாக இரப்பதன் ரகசியம் இதுதானா? சரி சரி
( சொந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்த கொண்டதற்கு மிக்க நன்றி...)
ஆமாம்... மின்ன... சின்னப் பஷங்களா இருக்கும் போது எல்லாத்துக்கும் அழுது அடம்பிடிச்சி சாதிப்போம்...
இப்ப என் குழந்தை அதை கடைபிடிக்கிறான்...
யார் சாவுக்குப் போனால் கூட எனக்குக் கண்ணீர் வருவது கிடையாது. என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
Re: கண்ணீர்விட்டு அழுதால் ஆரோக்கியமாக வாழலாம்!
ஜேக் wrote:நீங்க ஆரோக்கியமாக இரப்பதன் ரகசியம் இதுதானா? சரி சரி
( சொந்த அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்த கொண்டதற்கு மிக்க நன்றி...)
சரியா கண்டுபுடிச்சுட்டீங்களே!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கண்ணீர்விட்டு அழுதால் ஆரோக்கியமாக வாழலாம்!
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» அற்புதப் பழத்தை உண்டால், ஆரோக்கியமாக வாழலாம்
» நான்' அழுதால் .....
» கதறி அழுதால் நோய் தீரும்!
» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
» அழுதால் மனப் பாரம் குறையும்
» நான்' அழுதால் .....
» கதறி அழுதால் நோய் தீரும்!
» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
» அழுதால் மனப் பாரம் குறையும்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|