தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சங்க கால மகளிர்

View previous topic View next topic Go down

சங்க கால மகளிர் Empty சங்க கால மகளிர்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 7:48 pm

சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழந்தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்ககால மகளிரின் அரும்பண்புகள். ஆணும், பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு என மேற்கொள்ளப்பட்டது. மகளிருக்குத் தொல்காப்பியர் பின்வரும் பண்புகள் இன்றியமையாதன என எடுத்தோதுகின்றார்.
“உயிரினும் சிறந்தன்ற நாணே நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று” (தொல், களவியல் - 23)
“அச்சமும் நாணும் மடனுமுந் துறதல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப” (தொல், களவியல் - 8)
இதன் வழி ஆண்களுக்குப் பெருமையும் வீரமும் வேண்டப்படுவன போல பெண்களுக்கு அச்சமும் நாணமும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். எனவே சங்ககால மகளிரின் செயற்பாடுகளையும் அவர்களுடைய பண்புகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
அழகு:-
பெண்ணொருத்தியின் அழகினை மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதன் என்ற புலவர்
“பூவொடு புரையுங் கண்ணும் பேயென விறல்வனப் பெய்திய தோளும் பிறையென மதிமயக் குறூஉ நுதலும்” (குறுந். 226 1-3) என வருணித்துள்ளார்.
மென்மையான உடலமைப்பு:
மகளிர் மென்மையான உடமைப்பிற்குரியவர். புறவுலகின் பொய்மையும் சூதும் அறியாதவர். உலகின் இடையூறு நிலைகளையும் விலங்கு முதலியவற்றால் நேர்ந்திடும் இடுக்கண்களையும் உணராதவர். ஆனால் உள்ளத் திண்மையால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு இல்லறத்தினை நல்லறமாக ஒம்பும் ஆற்றல் உடையவர்கள் அவர்களேயாவர். இவ்வாறு மகளிர்பாற் காணத்தகும் மென்னீர்மையினைச் சாயல் என்ற சொல்லால் நந்தமிழர் வழங்கினார்.
“நீரோ ரன்ன சாயல் தீயோ ரன்னவென் னுரனலித் தன்றே” (குறந். 95. 4-5)
என்ற குறுந்தொகைப் பாடலின் அடிகள் இக்கருத்து நுட்பத்தினைப் புலப்படுத்துகிறது.
இசை:
பெண்களுக்கு குரல் இயற்கையாகவே இனிமை நிரம்பியிருந்தது. எனவே, இசைத்தமிழ், மகளிர் வழிப் பெரிதும் வளர்ந்தது. தாலாட்டுப் பாடல் தாய்மார் வளர்த்த இயலிசைத் தமிழ் இலக்கியம் ஆகும். யானை முதலிய காட்டு விலங்குகளும் மற்றவர்களும் அவர்தம் இசைக்கு வயப்பட்டுத் தம் கொடூரத்தன்மை மறந்து நின்றமையைச் சங்க இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.
“ஆறலை கள்வர் படைவிட அருளின் மாறுதலை பெயர்க்கும் கருவின் பாலை” (பொருநர் - 11-12) என்ற பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது.
விளையாட்டு:
மலைவாழ் மகளிர் தினைப் புனங்களில் கிளியோட்டி தினைப் புனத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.
“களைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்புனக்கிளி படியும் பூங்கட் பேதை” (குறுந். 141 1-2)
களைப்பூவினைப் பறித்து மாலைதொடுத்தாலும், தினைப் புனத்தில் கிளி ஓட்டுதலும் மலைவாணர் மகளிரின் விளையாட்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இளமகளிர் அக்காலத்தே கவலையில் தோயாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் என்பதனை நற்றினைப் பாடல் கொண்டு அறியலாம்.
“விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத்திற் சென்றிருத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேயமெனப்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்” (நற் 68. 1-5)
இந்நற்றிணைப் பகுதி கொண்டு மகளிர் வீட்டின் வெளியே சென்று விளையாடமலிருப்பது அறமாகாது என்பதும் அதனால் செல்வமும் தேய்ந்துவிடும் என்பதும் தெரியவருகின்றன. விளையாடும் மகளிர் கூட்டத்தினைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சங்க காலப் புலவர்கள் “ஒரையாமம்” என்றும் “பொய்தன் மகளிர்” என்றும் குறிப்பிடுகின்றனர். பஞ்சாயக் கோணுப்பல் கொண்டு செய்யப்பட்ட பாவை கொண்டு மகளிர் அந்நாளில் விளையாடிய விளையாட்டு ஓரை எனப்பட்டது. வண்டலயர்தல், சிற்றில் இழைத்தல், துணங்கையாடுதல், குரவையாடுதல் முதலிய விளையாட்டுகள் மகளிர் விளையாட்டுகளாகக் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெறுகின்றன.
“பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் (குறுந். 239. 1-3) என்ற குறுந்தொகைப் பாடற்பகுதியும்,
“அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி
வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்
முடந்தை நெல்லின் விளைவயல்” (பதிற். 2. 1-3)
என்ற பதிற்றுப்பத்து பாடற்பகுதியும், மகளிர் விளையாட்டினைக் குறிப்பிடுகின்றது. சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை,
“செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்” (புறம். 312 5.6)
என்ற புறநானூற்றுப் பாடற்பகுதி கொண்டு அறியலாம். சிறுமகளிர் வீட்டின் முற்றத்தில் கழங்காடுகின்றதை,
“கூரை நல்மலைக் குறுந்தொடி மகளிர் மணலொடு கழங்கு”
பருவ வயது வந்துற்ற பெண்கள் தங்களுக்கேற்ற காளைகள் மீது காதல் கொண்டனர். அக்கால ஆடவனுக்கு வீரமே வாழ்வாக விளங்கியது. பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் வயது நிறைந்த இளைஞன் ஒருவனைக் குறிப்பிடுகின்ற பொழுது,
“ஒளிறுவாள் அருஞ்சாம முருக்கிக்களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312. 5-6) என்று கூறியுள்ளார்.
முல்லை நில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சா நெஞ்சமும் ஆற்றலுமுடைய காளையரையே மணக்க விரும்பினர். இதனை,
“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” (கலி. 103. 63-64)
என்று முல்லைக்கலி குறிக்கின்றது. இந்நாளைப் போல் அல்லாமல், அக்காலத்தே மகளிரை மணந்துகொள்ள ஆடவரே மகளிர்தம் அணிகலன்களுக்கெனப் பெரும் பொருளினைப் பரிசமாகத் தந்தார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்து போற்றுகின்றோம். ஆனால் அதற்காகத் தகுதியில்லாதவன் ஒருவன் பெரும் பரிசுப் பொருளைக் கொணர்ந்து தந்தாலும் தங்கள் மகளைப் பழந்தமிழ்ப் பெருமக்கள் மணஞ்செய்து கொடுத்தார்களில்லை. இதற்குப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி சான்று கூறும்.
“முழங்கு கடன் முழவின் யன்ன
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்
தந்தையும் கொடா அன்” (புறம்.334. 10-13)
இறை நம்பிக்கை:
சங்ககால மகளிர், இறை நம்பிக்கை உடையவர்கள், மணமாகாத மகளிர், முருகனை நோக்கி, யாம் எம் நெஞ்சமர்ந்த காதலரைக் கனவிற் கூடியுள்ளோம். அது பொய்யாகாமல் நனவின் கண்ணும் எம் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என வேண்டினர். மணமான மகளிரோ, தமக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டும் என் நோன்பிருந்தனர். மேலும், தம் கணவர் மேற்கொண்ட செயல்கள் செம்மை பெறவும், போரில் வெற்றி கிட்டவும் வரம் அருள வேண்டும் என்றும் திருமுருகனை ஒருமனமாக இறைஞ்சி நிற்கின்றனர். திருப்பரங்குன்றத்திலே நடைபெறும் வழிபாடு இது.
“அருவரைச் சேரத் தொழுநர்
கனவிற் றொட்டது கைபிழை யாகாது
நனவிற்சே எப்பநின் னளிபுனல் வையை
வரு புனலணிலென வரங் கொள்வோரும்
கருவ யிறுறுகெனக் கடம் பட வோரும்
செய்பொருள் வாய்க்கெனச் செவி சார்த்துவோரும்
ஐய மடுகென வருச்சிப போரும்” (பரி. 8.102-108)
சங்க கால மகளிர் உயிரை விடவும், நாணத்தை விடவும் கற்புடைய மகளிராக விளங்கினர். மகளிர் பொழுதுபோக்காவும் மனம் மகிழ்ச்சியாகவும் விளையாடி மகிழ்ந்தனர். சங்க கால மகளிர் வீரமுடைய ஆண்மகனை மணந்தனர். சங்க காலத்தில் மகளிருக்கு இறை நம்பிக்கை மிகுந்திருந்தது.

நன்றி [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சங்க கால மகளிர் Empty Re: சங்க கால மகளிர்

Post by வனவாசி Wed Sep 11, 2013 8:13 pm

பன்முக நோக்கில் பரந்துபட்டு எழுதப்பட்ட கட்டுரை.
அறியத் தந்தமைக்கு நன்றி அண்ணா.

நாம் குரவை,துணங்கைக் கூத்து பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம்.
அது என்ன சிற்றில் இழைத்தல் மற்றும் வண்டலயர்தல்.....?
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

சங்க கால மகளிர் Empty Re: சங்க கால மகளிர்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 8:28 pm

சிற்றில் இழைத்தல்
சிற்றில் கட்டி விளையாடல்

கடற்கரை மணலில் இளம்பெண்கள் வீடு கட்டி விளையாடுவதைச் சிற்றில்கட்டி விளையாடல் என்பர்.

தலைவியை மணந்து கொள்வதில் கருத்தின்றிப் பகலில் மீண்டும் மீண்டும் தலைவியைக் காண வருகிறான் தலைவன். ‘இதனை அன்னை அறிந்தால் தலைவியை வெளியில் அனுப்பாமல் வீட்டில் இருத்தி விடுவாள். எனவே விரைவில் மணந்துகொள்’ என்கிறாள் அகநானூற்றுத் தோழி.

ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல் தைஇ
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளியென
(அகநானூறு - 60 : 9-11, குடவாயிற்கீரத்தனார்)

(ஊதை = வாடைக்காற்று; அடைகரை = நீர்க்கரை; கோதை = மாலை; ஆயம் = தோழியர்கூட்டம்; வண்டல் = சிற்றில்; தைஇ = கட்டி; ஓரை = விளையாட்டு)

“ஊதைக் காற்றால் குவிக்கப்பட்ட உயர்ந்த மணற்குன்றை உடையது நீர்க்கரை. அக்கரையில் மாலை அணிந்த தோழியருடன் சிற்றில் கட்டி விளையாடினாலும் “உன் உடம்பின் ஒளி வாடும். அங்குப் போகாதே” என்று சினப்பாள் தாய். அப்படிப்பட்ட தாய் உன் வருகையை அறிந்தால் தலைவியைக் காவலில் வைத்துவிடுவாள்” என்று தோழி கூறுகிறாள்.

அகநானூற்றுப் பாடலொன்று இளம் பெண்கள் விளையாடும் வரிமனையை (சிற்றில் அல்லது மணல்வீட்டை), கடல் அலை வந்து அழிக்கும் என்று குறிக்கிறது.

மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
(அகநானூறு - 90 : 1-2, மதுரை மருதனிளநாகனார்)

(வெண்தலை = நுரையோடு கூடிய அலைகள்; புணரி = கடல்)

தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து மணல்வீடு கட்டி விளையாடுவது நெய்தல் நில இளம் பெண்களின் உற்சாகமான பொழுதுபோக்கு எனத் தெரிகிறது.

4.4.2 கூடல் இழைத்தல்
மணலில் பெரிதாக வட்டங்கள் வரைந்து, அவை இரட்டைப் படையில் அமைந்தால் தலைவன் வருவான் என்ற நம்பிக்கை நெய்தல் நிலப் பெண்களிடம் இருந்தது. மேலும் கண்ணை மூடி வட்டம் இழைக்கும் போது மணல் வட்டம் கூடாமல் போவதுண்டு. கூடாமல் போனாலோ அல்லது வட்டங்கள் ஒற்றைப் படையில் அமைந்தாலோ தலைவனின் வருகை இல்லை என்று நம்பினர்.

கடற்கரையில் மட்டுமல்லாது இல்லத்திலும் கூடல் இழைப்பது உண்டு.

தன் இல்லத்தில் கூடல் இழைக்கின்றாள் ஒரு தலைவி. ஒரு முனை மற்ற முனையுடன் கூடவில்லை. ஆதலால் அது இளம்பிறை போல் விளங்கியது. அந்த இளம்பிறை பின்பு முழு நிலவாக மாறி வருத்தும் என்று எண்ணுகிறாள்; தான் உடுத்திருந்த ஆடையால் அதை மூடுகிறாள்; உடனே இளம்பிறையை அணியும் சிவபெருமான் பிறையைத் தேடுவான் என்று எண்ணுகிறாள். தான் சிவனுக்கு அதைக் கொடுத்து உதவி செய்தவளாக விளங்க எண்ணுகிறாள். உடனே மூடும் முயற்சியைக் கைவிடுகிறாள்.

இக்காட்சியைக் கலித்தொகையில் நல்லந்துவனார் காட்டுகின்றார் (142 : 24-29).

நன்றி [You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சங்க கால மகளிர் Empty Re: சங்க கால மகளிர்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 11, 2013 8:34 pm

வண்டலயர்தல்
வருதிரை உதைத்தல்(கடற்கரையில் எழும் அலைகளை எதிர்த்து காலால் உதைத்து விளையாடல்) வண்டலயர்தல் ( மணலைக் குவித்து, பாவை செய்து விளையாடல்)கிலிகிலி (கிளர்ப்பூட்புதல்வரோடு கிலிகிலியாடுதல்- சிறுபாணாற்றுப்படை) இவற்றோடு துணங்கைக் கூத்து( ஆடவர் கைகொடுக்க ஆடுதல்) குரவைக் கூத்து, புனல் ஆடுதல் போன்றவை எல்லாம் தமிழ்ப்பெண்கள் ஆடும் ஆட்டங்களாகும். கோலமிடுதல், கும்மியடித்தல், பூப்பந்தாடல், கோலாட்டம் முதலானவை இன்றும் பெருவழக்கிலுள்ள மகளிர் ஆட்டக் கலைகளாகும்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

சங்க கால மகளிர் Empty Re: சங்க கால மகளிர்

Post by விக்கி Wed Sep 11, 2013 8:36 pm

கைதட்டல் 
விக்கி
விக்கி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 370

http://www.alltricksinone.Com

Back to top Go down

சங்க கால மகளிர் Empty Re: சங்க கால மகளிர்

Post by வனவாசி Wed Sep 11, 2013 9:19 pm

நன்றி அண்ணா நெடிய விளக்கத்திற்கு.
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

சங்க கால மகளிர் Empty Re: சங்க கால மகளிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum