தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வாழ்க்கையின் பாடங்கள்.

View previous topic View next topic Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty வாழ்க்கையின் பாடங்கள்.

Post by sawmya Mon Sep 16, 2013 11:49 am

வாழ்க்கையின் பாடங்கள்.

*
உங்களை எவருடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்
அப்படி செய்தால் உங்களை நீங்களே அவமானப் படுத்துகிறீர்கள்.

*
அடுத்தவர்களை குற்றஞ் சொல்லாதீர்கள்.
அமைதி வேண்டுமெனில் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில்
உலகத்தை கம்பளம் விரித்து மூடுவதை விட நீங்கள் உங்கள் பாதங்களை பாதணிகளால் மூடுவது சுலபம்.

*
எவராலுமே கடந்து விட்ட தவறான தொடக்கத்தை மாற்ற முடியாது. ஆனால் நிகழ் காலத்தில் சரியான பாதையை தேர்ந்த்தெடுத்து வெற்றியை நோக்கி செல்லலாம்.

*
அடுத்தவர்களின் தவறுகளை கண்டு பிடிப்பது மிகச் சுலபம். ஆனால் எங்களின் சொந்த தவறுகளை இனங் கண்டுக் கொள்வதுதான் கஷ்டம்.

*
ஒரு பிரச்சினையை தீர்க்க முடிந்தால் கவலைப்பட தேவையில்லை
ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் கவலைபடுவதால் என்ன புண்ணியம்?

*
முக மாறுதலால் ஒன்றும் மாறப்போவதில்லை
ஆனால் மாற்றங்களுக்கு முகம் கொடுப்பதால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம்.புன்முறுவல் 


நன்றி - மின் அஞ்சல் -தோழர் பாஸ்கர்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by சரண் Mon Sep 16, 2013 2:35 pm

*அடுத்தவர்களை குற்றஞ் சொல்லாதீர்கள்.
அமைதி வேண்டுமெனில் உங்களை நீங்களே மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில்
உலகத்தை கம்பளம் விரித்து மூடுவதை விட நீங்கள் உங்கள் பாதங்களை பாதணிகளால் மூடுவது சுலபம்.
சூப்பர் 
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by ஸ்ரீராம் Mon Sep 16, 2013 2:48 pm

அனைத்தும் அருமை

ஒரு பிரச்சினையை தீர்க்க முடிந்தால் கவலைப்பட தேவையில்லை
ஒரு பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால் கவலைபடுவதால் என்ன புண்ணியம்?
உண்மை கைதட்டல் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 4:55 pm

நன்று நன்று நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by mohaideen Mon Sep 16, 2013 7:10 pm

அனைத்தும் அருமையான வரிகள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by sawmya Sun Sep 22, 2013 10:25 am

1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.


3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.



நன்றி - மின் அஞ்சல் -தோழர் பாஸ்கர்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by sawmya Tue Sep 24, 2013 12:25 pm

சுவாமி விவேகானந்தர்:

உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.

வில்லியம் ஷேக்ஸ்பியர்:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் 
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

அடால்ஃப் ஹிட்லர்: 
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

ஆலன் ஸ்டிரைக்: இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.

அன்னை தெரசா:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

பான்னி ப்ளேயர்:

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

அப்ரஹாம் லிங்கன்:

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.

ஐன்ஸ்டைன்:

எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by sawmya Tue Sep 24, 2013 4:27 pm

படித்ததில் பிடித்தது.
-----------------------------------


நேரம் என்பது திரும்பி வராத அம்பு.
-
ஜோஷுவா லோத் லிப்மென்

அனைவரிடமும் கர்வம் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. பிச்சைக்காரன் கூட திருடுவதில்லை என்று கர்வம் கொள்கிறான்.
-
ஜப்பான் நாட்டுப் பழமொழி

செய்து வரும் வேலையை இடையில் நிறுத்தி விட்டு வெளியேறுபவர்களைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க முடியாது.
-
ஹெர்பெர்ட் கேஸன்

மக்களுடைய பிரதிநிதிகளுடன் பழகியதிலிருந்து நான் நாய்களை மதிக்கத் தொடங்கி இருக்கிறேன்.
-
கேம்ரடீன்

கோபத்துடன் கொதித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அருமையான பிரசங்கம் ஒன்றை உங்களால் செய்ய முடியும். ஆனால் நீங்கள் செய்த அந்தப் பிரசங்கத்தைப் பற்றி நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவீர்கள்.
-
ஸ்டேன்லி
ஜோன்ஸ்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by முரளிராஜா Tue Sep 24, 2013 6:05 pm

அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய பாடம்
மிக சிறந்த பகிர்வு
நன்றி சகோதரி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 24, 2013 9:15 pm

லியோ டால்ஸ்டாய்:

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
உண்மையான கூற்று...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by sawmya Thu Sep 26, 2013 10:25 am

நீ தனிமையில் இருக்கும்போது என்னென்ன தோன்றுகிறதோ 
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்  
                                                                           - 
சுவாமி விவேகானந்தர்
 ....................................................................................................................................

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன  
ஆனால் அனுபவமோ  
தவறான முடிவுகளிருந்து கிடைக்கிறது 
                                                                            - 
பில் கேட்ஸ்
.....................................................................................................................................

உதவும் கரங்கள் 
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
                                                                          - 
அன்னை தெரேசா
.....................................................................................................................................


நாம் அனைவரும் ஒரேயளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால் நம் திறமையை  வளர்த்துக்கொள்ள 
ஒரேயளவு வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்
                                                                           - 
அப்துல் கலாம் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by sawmya Thu Sep 26, 2013 11:38 am

 வெற்றிகரமான வாழ்க்கைக்கு முக்கியத் தேவைகள்:


எந்தக் காலக்கட்டத்திலும் நமது உணர்வுகளைத் தைரியமாகச் சொல்லுதல்.
அடுத்தவர் உணர்வுகளையும் உரிமையையும் மதித்தல்.
உதட்டளவில் இன்றி உண்மையாக அன்புடன் இருத்தல்.
மற்றவர்களின் பலவீனங்களையே கவனிக்காமல் அவர்களின் பலங்களைக் கவனித்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது.


மற்றவர்கள் நம்மைப்போலவே சிந்திக்க வேண்டும், பேச வேண்டும், பழக வேண்டும் என்று எதிர்பார்க்காமல் அவர்கள் அப்படி இருப்பது அவர்களின் உரிமை என்று நம்புதல்.



மற்றவர்கள் மீது நம்பிக்கை காட்டுதல்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by sawmya Thu Sep 26, 2013 11:39 am

கண்ணதாசனின் தத்துவங்கள்
துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான் .......



-------------------------------------------------------



எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்



------------------------------------------------------------



காலம் போனால் திரும்புவதில்லைகாசுகள் உயிரை காப்பதும் இல்லை !



---------------------------------------------------------------



பெண்கள் பூ போன்றவர்கள் , மாமிசம் சாப்பிட்டு பழக்கப்பட்ட நாய்களுக்கு பூவை கையாள தெரியாது



---------------------------------------------------------



கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ , அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன



----------------------------------------------------



ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.



-------------------------------------------------------



சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது? ---------------------------------------------------------------------



கோடையில் குளம் வற்றிவிட்டதேஎன்று கொக்கு கவலைப்படக் கூடாது:மீண்டும் மழை காலம் வருகிறது.மழைக்காலம் வந்துவிட்டதென்று நதிகுதிக்கக் கூடாது: அதோ;வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.



----------------------------------------------------



எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.



-----------------------------------------------------



உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம்.ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.



-----------------------------------------------------



ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான் , ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?



------------------------------------------------------



அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில். தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!



--------------------------------------------------------




ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வாழ்க்கையின் பாடங்கள். Empty Re: வாழ்க்கையின் பாடங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum