தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு''

View previous topic View next topic Go down

''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' Empty ''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு''

Post by முழுமுதலோன் Wed Oct 02, 2013 10:47 am

''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' 559353_167906986697307_298884550_n
என் தகப்பனார் அடிக்கடி என்னிடம் சொல்லும் வாக்கியம் ''கோபம் குல நாசம்.'' நம் முன்னோர்கள் ''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' என்பார்கள்.
அதாவது புத்தி சரியாக இயங்காதவன் கோபப்படுவான் என்கிறார்களா ? அல்லது கோபப்படுபவனுக்கு புத்தி வேலை செய்யாது என்கிறார்களா ? என்றால் கோபப்படுபவனுக்கு மூளை சரியாக இயங்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதை இப்போது விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது. கிராமத்தில் பெரியவர்கள் கோபப்படாதே, அது உடலுக்கு நல்லதல்ல. உடலில் தேவையில்லாத இரசாயன மாற்றங்கள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லும் போது சிறுசுகள் நக்கலடிப்பார்கள். வந்துட்டாருய்யா விஞ்ஞானி என்று. அது உண்மை என்பது இன்று நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை. என் குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ''நீ கோபப்படுவதால் எதிரிக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, உனக்கு பாதிப்பு நிச்சயம் ஏற்படும்'' என்பார். 
இந்த கோபம் வந்தால் டென்சன், எரிச்சல் போன்றவைகளும் கூடவே வரும். இரத்த அழுத்தம் அதிகமாகும். அட்ரீனலின் சுரப்பி அதிகமாக சுரக்கும். எனவே ஆக்சிஜனின் தேவை அதிகரிக்கும். பற்றாக்குறை ஏற்படும் போது ப்ளேட்லெட்ஸ் என்கிற திரவம் சுரக்கும். இந்த பிசுபிசுப்பான திரவம் இரத்தக் குழாய்களில் படிவதால் அடைப்பு ஏற்படும். இதன்காரணமாக இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன் மாரடைப்பு ஏற்படக் கூடும். இது ஒரே நாளில் உருவாகுவதல்ல. அடிக்கடி கோபப்படுவது, டென்சன் ஆவது, எரிச்சல் அடைவது, மன அழுத்தத்திற்கு ஆளாவது போன்றவற்றால் சிறுகச் சிறுக படிவுகள் ஏற்பட்டு இது நிகழ்கிறது. உணவுப்பழக்கமும் ஒரு காரணமாக இருந்தாலும், கோபத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவது நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த முடிவுகளில் மேலும் அவர்கள் தரும் அதிப்படியான தகவல் என்னவென்றால், கோபத்தை வெளிக்காட்டுபவர்களைவிட, கோபத்தை அடக்குபவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதுதான். உடல் எடை அதிகமாக இருப்பது,மதுப் பழக்கம் போன்றவற்றையெல்லாம்விட அதிகமாக கோபப்படுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு இளம் வயதினருக்குக் கூட மாரடைப்பு வந்து விடுகிறது. மன அழுத்தம் ஏற்படும் போது சி - ரியாக்டிவ் புரோட்டின் என்கிற ஆபத்தான இரசாயனம் உருவாகிறது. மாரடைப்பு ஏற்படுவதில் 50% பேர் இந்த இரசாயனத்தால் ஏற்படும் மாரடைப்பால்தான் இறக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதிலும் இளம் வயதினரே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பது வேனைக்குரிய விஷயம். ஏனென்றால் நெரிசல் மிகுந்த நகர வாழ்க்கையில் இந்த பாதிப்பிலிருந்து தப்பிப்பது அபூர்வம். இதற்கெல்லாம் தீர்வாக மருத்துவர்களும், மனோதத்துவ நிபுணர்களும் இப்போது சிபாரிசு செய்வது தியானமும், அதன் மூலம் பெறப்படும் அமைதியான மனநிலையையுமே. மேலும் உணவுப் பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்துவது இன்னும் ஆரோக்யமான அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன்.

 
Via FB 
http://manakkalayyampet.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' Empty Re: ''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு''

Post by sawmya Wed Oct 02, 2013 2:15 pm

''நீ கோபப்படுவதால் எதிரிக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, உனக்கு பாதிப்பு நிச்சயம் ஏற்படும்'' 
உண்மை...உண்மை...புரிந்தது பகிர்ந்தமைக்கு நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' Empty Re: ''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு''

Post by kanmani singh Wed Oct 02, 2013 2:29 pm

அருமையான கட்டுரை..


கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' Empty Re: ''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு''

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum