Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கார் மீது லாரி மோதல்: 6 பேர் நசுங்கி சாவு
Page 1 of 1 • Share
கார் மீது லாரி மோதல்: 6 பேர் நசுங்கி சாவு
கார் மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் நீலகிரி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 6 பேர் உடல் நசுங்கி செத்தனர்.
நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 38). இவர் மனித நேய மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த சையது சாதிக் (37), அப்துல் கனி (42), யாசான் (22), மத்தின் (32), சபியுல்லா (32). ஆகியோர் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள்.
இவர்கள் 6 பேரும் ஷேக் அப்துல்லாவிற்கு சொந்தமான காரில் திருச்சிக்கு நிலம் வாங்க வந்தனர்.
பின்னர் வேலை முடிந்து திருச்சியில் இருந்து கரூர் மாவட்டம் பாளையம் வழியாக ஊட்டி செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை சபியுல்லா ஓட்டி வந்தார்.
இந்த கார், கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி போலீஸ் சரகம் சரசம்பட்டி அருகே வந்த போது எதிரே பாளையத்தில் இருந்து அரியலூர் செல்வதற்காக ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.
லாரியை திருச்சி மாவட்டம் கள்ளக்குடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (35) ஓட்டி வந்தார். திடீர் என்று லாரியின் அச்சு முறிந்தது. இதனால் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் அங்கும், இங்குமாக தறிகெட்டு ஓடியது. இதில் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரை சிறிது தூரம் லாரி இழுத்து சென்றது. பின்னர் ரோட்டின் ஓரம் உள்ள ஒரு கிணற்றின் அருகே கார் மீது லாரி ஒரு பக்கமாக ஏறி நின்றது. கார் கிணற்றின் ஓரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி விட்டது. காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்-பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே ஷேக் அப்துல்லா, சையது சாதிக், அப்துல் கனி, யாசான், மத்தின், சபியுல்லா ஆகிய 6 பேரும் துடி,துடித்து செத்தனர்.
லாரி இழுத்து சென்றதால் கார் சுக்குநூறாக நொறுங்கி கிடந்தது. இதனால் பலியான 6 பேரின் உடல்களை மீட்பதற்கு சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரை உடைத்து அதில் இருந்த 6 பேரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த உடன் காரில் இருந்த ஒரு செல்போனை எடுத்து தொடர்பு கொண்ட போது தான் பலியானவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மாலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முன்னிலையில் நேரில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 38). இவர் மனித நேய மக்கள் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்தார்.
அதே பகுதியை சேர்ந்த சையது சாதிக் (37), அப்துல் கனி (42), யாசான் (22), மத்தின் (32), சபியுல்லா (32). ஆகியோர் மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள்.
இவர்கள் 6 பேரும் ஷேக் அப்துல்லாவிற்கு சொந்தமான காரில் திருச்சிக்கு நிலம் வாங்க வந்தனர்.
பின்னர் வேலை முடிந்து திருச்சியில் இருந்து கரூர் மாவட்டம் பாளையம் வழியாக ஊட்டி செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை சபியுல்லா ஓட்டி வந்தார்.
இந்த கார், கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி போலீஸ் சரகம் சரசம்பட்டி அருகே வந்த போது எதிரே பாளையத்தில் இருந்து அரியலூர் செல்வதற்காக ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.
லாரியை திருச்சி மாவட்டம் கள்ளக்குடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (35) ஓட்டி வந்தார். திடீர் என்று லாரியின் அச்சு முறிந்தது. இதனால் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் அங்கும், இங்குமாக தறிகெட்டு ஓடியது. இதில் எதிரே வந்து கொண்டிருந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரை சிறிது தூரம் லாரி இழுத்து சென்றது. பின்னர் ரோட்டின் ஓரம் உள்ள ஒரு கிணற்றின் அருகே கார் மீது லாரி ஒரு பக்கமாக ஏறி நின்றது. கார் கிணற்றின் ஓரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி விட்டது. காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்-பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே ஷேக் அப்துல்லா, சையது சாதிக், அப்துல் கனி, யாசான், மத்தின், சபியுல்லா ஆகிய 6 பேரும் துடி,துடித்து செத்தனர்.
லாரி இழுத்து சென்றதால் கார் சுக்குநூறாக நொறுங்கி கிடந்தது. இதனால் பலியான 6 பேரின் உடல்களை மீட்பதற்கு சிரமம் ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காரை உடைத்து அதில் இருந்த 6 பேரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த உடன் காரில் இருந்த ஒரு செல்போனை எடுத்து தொடர்பு கொண்ட போது தான் பலியானவர்கள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் மாலையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முன்னிலையில் நேரில் சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
mohamed- புதியவர்
- பதிவுகள் : 40
Similar topics
» ரஷியாவில் ரெயில்–பஸ் மோதல் 19 பேர் பரிதாப சாவு
» பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» மெக்சிக்கோ சிறையில் மோதல் : 28 பேர் கொலை!
» கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
» பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி
» ஆந்திராவில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து: 11 பேர் சாவு
» மெக்சிக்கோ சிறையில் மோதல் : 28 பேர் கொலை!
» கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|