Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
Page 1 of 1 • Share
மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பது எப்படி? ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தின் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.வினோத் அவர்கள் விளக்கமளிக்கிறார்.
கால் மற்றும் இடுப்பு மூட்டுகள் தேய்மானம் அடைவதால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் கவனமாகவும், தொற்று ஏற்படாதவாறும் செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை ஆகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் தொற்று ஏற்படுத்தக்கூடிய நோய் ஏதும் நமக்கு இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்க வேண்டும்.
உதாரணமாக சொத்தைப்பல், சிறுநீர் தொற்று போன்றவை இருப்பின் முதலில் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு பின் அது குணமானவுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த தொற்றானது இரத்தம் வழியாக விரைவாக பரவி ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே கவனம் தேவை. அதுபோல் அறுவை சிகிச்சை செய்யப்படும் அறுவை சிகிச்சை கூடம் நவீன வசதிகளையும், கிருமி நீக்கம் செய்யப்பட்டதாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
முன் எச்சரிக்கையாக கவனமாக பார்த்துக்கொண்டாலும் சில சமயம் தொற்று ஏற்பட்டு விடலாம். அப்படி தொற்று ஏற்பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். அதையும் சரி செய்ய முடியும். அதாவது கிருமித் தொற்று ஏற்பட்ட மூட்டை அகற்றி விட்டு அதற்கு பதிலாக மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து வேறு ஒரு மூட்டு பொருத்தப்படும். அதை இரண்டு படிகளில் சரி செய்யலாம். ஆனால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது கடினமானது தான்.
முதல்படியில் தொற்று ஏற்பட்ட மூட்டிலிருக்கும் செயற்கை மூட்டு, எலும்பு சிமெண்ட், மூட்டைச்சுற்றியுள்ள சதைப்பகுதி, மூட்டின் கடைசி பகுதி ஆகியவற்றை அகற்றி நன்றாக சுத்தம் செய்யப்படும். பின்பு பாதிக்கப்பட்ட கிருமி தொற்றுக்கு ஏற்ப கிருமி எதிர்ப்பு சக்தியுள்ள மருந்தை மூட்டில் பூசப்படும் சிறப்பு எலும்பு சிமெண்ட்டுடன் கலந்து இரண்டு எலும்புகளுக்கு நடுவில் பொருத்தி பூசப்படும். தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு கிருமி எதிர்ப்பு மருந்து இரத்தநாளம் வழியாக செலுத்தி கிருமித் தொற்று கட்டுப்படுத்தப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பின்பு சிமென்ட்டை அகற்றி விட்டு வேறு ஒரு சிறப்பான செயற்கை மூட்டு பொருத்தப்படும்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு 24 மணி நேரம் காலை அதிகமாக அசைக்காமல் வைத்திருக்கும் போது கணுக்காலிலோ அல்லது கெண்டைக்காலிலோ இரத்தம் உறைய நேர்ந்தால் அது உடனே நுரையீரலைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். அதைத் தடுப்பதற்கு தொடர்ந்து ஊசி போடப்படும். அது தவிர 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காலை அழுத்தி விட்டு இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தம் உறைந்து விடாதபடி செய்யப்படும். அதற்கு பிரத்யேக நவீன கருவி நியுமேட்டிக் கம்ப்ரஸன் டிவைஸ் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கருவியுடன் கூடிய உறை காலில் அணியப்பட்டிருக்கும். அந்த உறையானது காலை அழுத்தி பின் விரிவடையும். அவ்வாறு செய்வதால் இரத்தம் உறையாமல் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கென்றே பிரத்யேக மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். நவீன காற்றோட்டமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கூடங்கள் இருக்கின்றன.
கிருமி நீக்கம் செய்யப்பட்ட நவீன கருவிகளால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உலகத்தரம் வாய்ந்த செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுகின்றன. கிருமித் தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. மருத்துவக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பான கவச உறைகள் அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்வதால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றனர்.
கால் மற்றும் இடுப்பு மூட்டுகள் தேய்மானம் அடைவதால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டு மாற்றவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் கவனமாகவும், தொற்று ஏற்படாதவாறும் செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சை ஆகும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் தொற்று ஏற்படுத்தக்கூடிய நோய் ஏதும் நமக்கு இருக்கிறதா என்று பரிசோதித்து பார்க்க வேண்டும்.
உதாரணமாக சொத்தைப்பல், சிறுநீர் தொற்று போன்றவை இருப்பின் முதலில் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு பின் அது குணமானவுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த தொற்றானது இரத்தம் வழியாக விரைவாக பரவி ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். எனவே கவனம் தேவை. அதுபோல் அறுவை சிகிச்சை செய்யப்படும் அறுவை சிகிச்சை கூடம் நவீன வசதிகளையும், கிருமி நீக்கம் செய்யப்பட்டதாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும்.
முன் எச்சரிக்கையாக கவனமாக பார்த்துக்கொண்டாலும் சில சமயம் தொற்று ஏற்பட்டு விடலாம். அப்படி தொற்று ஏற்பட்டுவிட்டால் கவலைப்பட வேண்டாம். அதையும் சரி செய்ய முடியும். அதாவது கிருமித் தொற்று ஏற்பட்ட மூட்டை அகற்றி விட்டு அதற்கு பதிலாக மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து வேறு ஒரு மூட்டு பொருத்தப்படும். அதை இரண்டு படிகளில் சரி செய்யலாம். ஆனால் மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது கடினமானது தான்.
முதல்படியில் தொற்று ஏற்பட்ட மூட்டிலிருக்கும் செயற்கை மூட்டு, எலும்பு சிமெண்ட், மூட்டைச்சுற்றியுள்ள சதைப்பகுதி, மூட்டின் கடைசி பகுதி ஆகியவற்றை அகற்றி நன்றாக சுத்தம் செய்யப்படும். பின்பு பாதிக்கப்பட்ட கிருமி தொற்றுக்கு ஏற்ப கிருமி எதிர்ப்பு சக்தியுள்ள மருந்தை மூட்டில் பூசப்படும் சிறப்பு எலும்பு சிமெண்ட்டுடன் கலந்து இரண்டு எலும்புகளுக்கு நடுவில் பொருத்தி பூசப்படும். தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு கிருமி எதிர்ப்பு மருந்து இரத்தநாளம் வழியாக செலுத்தி கிருமித் தொற்று கட்டுப்படுத்தப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பின்பு சிமென்ட்டை அகற்றி விட்டு வேறு ஒரு சிறப்பான செயற்கை மூட்டு பொருத்தப்படும்.
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு 24 மணி நேரம் காலை அதிகமாக அசைக்காமல் வைத்திருக்கும் போது கணுக்காலிலோ அல்லது கெண்டைக்காலிலோ இரத்தம் உறைய நேர்ந்தால் அது உடனே நுரையீரலைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். அதைத் தடுப்பதற்கு தொடர்ந்து ஊசி போடப்படும். அது தவிர 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை காலை அழுத்தி விட்டு இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தம் உறைந்து விடாதபடி செய்யப்படும். அதற்கு பிரத்யேக நவீன கருவி நியுமேட்டிக் கம்ப்ரஸன் டிவைஸ் பயன்படுத்தப்படுகிறது.
இந்த கருவியுடன் கூடிய உறை காலில் அணியப்பட்டிருக்கும். அந்த உறையானது காலை அழுத்தி பின் விரிவடையும். அவ்வாறு செய்வதால் இரத்தம் உறையாமல் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். ஆர்த்தோ ஒன் எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கென்றே பிரத்யேக மருத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். நவீன காற்றோட்டமான கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கூடங்கள் இருக்கின்றன.
கிருமி நீக்கம் செய்யப்பட்ட நவீன கருவிகளால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உலகத்தரம் வாய்ந்த செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுகின்றன. கிருமித் தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. மருத்துவக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பான கவச உறைகள் அணிந்து கொண்டு அறுவை சிகிச்சை செய்வதால் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றனர்.
நன்றி தினகரன்
Re: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
டாக்டர்.வினோத் அவர்கள் விளக்கத்துக்கு நன்றி
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி முரளி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் சிக்கல்களும்?
ஸ்ரீராம் wrote:நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி முரளி
Similar topics
» சிறு துளையின் மூலம் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» ஆறு வகையான "ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்
» மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» ஆறு வகையான "ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்
» மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|