Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்!...
Page 1 of 1 • Share
கர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்!...
![கர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்!... 1011194_473609216066812_300321579_n](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/1011194_473609216066812_300321579_n.jpg)
உங்களுக்கு தெரியுமா?... கர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்!...
கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது....
கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
பொதுவாக கர்ப்ப காலத்தில் தாய், சேய் என 2 உயிர்களையும் பாதுகாப்பாக, அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த கட்டத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு தாயின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் திறன் உள்ளதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
கர்ப்ப காலத்தில் கருவில் உள்ள சிசுவுக்கு உணவும் தாயின் மூலமே கிடைப்பதால் தாய் ஊட்ட சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்வது ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழிவகுக்கும். பிறந்த பின்பும் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
இந்நிலையில் கர்ப்பத்தில் உள்ள போதே சிசுவுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் உப்பு, இனிப்பு, சுவைகளை அறியும் திறன் இருக்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் போது கிடைக்கும் சுவையையே குழந்தை பிறந்து வளரும் போது அதிகம் விரும்புகிறது என்று சமீபத்திய ஆய்வில் உறுதியாகி உள்ளது. கசப்பு, துவர்ப்பு சுவைகள் கர்ப்பத்திலேயே குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை என்பதும் ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள மோன்னெல் என்ற மருத்துவ ஆராய்ச்சி மையம் இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. டாக்டர் மோனெல்லா தலைமையில் நடந்த இந்த ஆய்வில், 6 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள 46 குழந்தைகளின் பிடித்தமான உணவு சுவை குறித்து அலசி ஆராயப்பட்டது.
கர்ப்ப காலத்தில் தாயின் உணவு முறை குறித்தும் இந்த கணக்கெடுக்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் தாய் எடுத்துக் கொண்ட உணவு வகைகளில் குழந்தைகளுக்கு அதிக நாட்டம் இருந்தது உறுதியானது. குறிப்பாக அதிக அளவில் கேரட் எடுத்துக் கொண்டவர்களின் குழந்தைகளுக்கு அந்த சுவை மற்றும் நறுமணத்தில் அதிக நாட்டம் இருந்தது.
இதே போன்று பலவிதமான காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு குழந்தைகளின் பிடித்தமான சுவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் எதிர்பார்த்த வெற்றி கிட்டியது. இதன் மூலம் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கு சரிவிகித ஊட்டச்சத்து அளிக்க வேண்டியதன் அவசியம் தெளிவாகி உள்ளது.
இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என எல்லா விதமான சுவைகளையும் கர்ப்ப காலத்தில் சிசுவுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தாயின் கடமை என்கிறார் டாக்டர் மோனெல்லா.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
![-](https://2img.net/i/empty.gif)
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.
» எப்படி இருக்கும்?
» நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........
» மூச்சு இருக்கும் வரை....
» நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........
» எப்படி இருக்கும்?
» நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........
» மூச்சு இருக்கும் வரை....
» நைட்டு ஒரு 12 மணி இருக்கும் .........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|