Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெளவால்கள் - விஞ்ஞான உண்மைகள்
Page 1 of 1 • Share
வெளவால்கள் - விஞ்ஞான உண்மைகள்
மிக அழகாகப் பறந்தாலும், வெளவால் பறவை இனம் கிடையாது. இதற்கு இருப்பது இறக்கைகள் அல்ல, அதன் விரல்களின் நுனியிலிருந்து உடலோடு சேர்ந்து விரிந்திருக்கும் மெல்லிய தோலின் பகுதிதான். இதை மெம்ப்ரேன் என்பார்கள். இதில் பறவைகளுக்கு இருப்பது போல் ஓர் இறகுகூடக் கிடையாது என்பது இன்னொரு வித்தியாசம்.
வெளவால்களுக்குப் பறவைகளைப் போன்ற அலகுகள் கிடையாது. எலிக்கு இருப்பது போன்ற வாயும் பற்களும்தான். கிட்டத்தட்ட ‘பறக்கும் எலி’ என்றுகூட வெளவால்களைச் சொல்லலாம்.
உலகின் குளிர்ப் பகுதிகளிலும் சில தனிமையான தீவுகளையும் தவிர, எல்லா இடங்களிலும் வெளவால்கள் உண்டு. வெளவால்களில் மொத்தம் 951 வகை உண்டு. இவை ஏறக்குறைய இருபது ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
வெளவால் இனங்களில் மிகப் பெரியது ‘பறக்கும் நரி’ (Flying Fox Bat) என்று அழைக்கப்படும் வெளவால் இனம். தலையிலிருந்து கால்வரை இதன் நீளம் நாற்பது செ.மீ. இறக்கைகளின் நீளம் இரண்டு மீட்டர். இதன் எடை ஒன்றரை கிலோ கிராமுக்கும் அதிகம்!
மிகச் சிறிய வெளவால் இனத்தின் பெயர் ‘கிட்டிஸ் ஹாக்|நோஸ்டு பேட்’ (Kitti’s Hog-nosed Bat). தலையும் உடலும் சேர்ந்து, இதன் உயரம் வெறும் 3 சென்டிமீட்டர். இறக்கைகளின் நீளம் 15 சென்டிமீட்டர். எடை 2 கிராம்தான்!
சூரிய ஒளியில் அவற்றால் சரியாகப் பார்க்கமுடியாது. வெளவால்கள் ‘இரவுப் பிராணிகள்’! பகல்நேரத்தில் இருளடைந்த பிரதேசங்களான குகைகள், மரப்பொந்துகள் போன்றவற்றில் பதுங்கித் தலைகீழாகத் தொங்கித் தூங்கும். இரவுநேரத்தில்தான் இரையைத் தேடி வெளியே வரும்.
துளிகூட ஒளியே இல்லாத இருளிலும் எதன்மீதும் மோதாமல் பறக்க இவற்றால் முடியும். காரணம் | பறக்கும்போது இவை சில ஒலிகளை வெளிப்படுத்துகின்றன (இவற்றை மனிதர்களால் கேட்க முடியாது). வழியில் ஏதேனும் பொருள் இருந்தால், வெளவால்கள் வெளிப்படுத்திய ஒலி அவற்றில் பட்டு வெளவால்களிடமே திரும்ப வரும்! இதன்மூலம் பொருள் இருப்பதை உணர்ந்து, அதைத் தவிர்த்துப் பறந்துவிடும். இதை ‘எக்கோ லொக்கேஷன்’ என்பார்கள்.
நொடிக்கு நாலு ஒலிகளை ஏற்படுத்தியபடியே பறக்கும் வெளவால்கள், வழியில் ஏதேனும் பூச்சியின்மேல் ஒலி பட்டுத் திரும்ப வந்தால், நொடிக்குச் சுமார் 200 ஒலிகளை எழுப்பி, அந்தப் பூச்சி எவ்வளவு தொலைவில் உள்ளது, என்ன சைஸ் என்றெல்லாம்கூடக் கண்டுபிடிக்கும்!
கொசுக்கள், வண்டுகள் போன்ற இரவுப்பூச்சிகளை வெளவால்கள் தின்னும். வெப்ப நாடுகளிலுள்ள வெளவால்கள், பூக்களிலுள்ள தேனை உண்ணும். சிலது, பழங்களைத் தின்னும்! மேலும் சில பெரிய வெளவால்கள் சின்ன வெளவால்களையும் எலி, தவளை, மீன் போன்றவற்றையும் உண்ணும்.
உணவு கிடைக்காத காலத்துக்காக தேவையான உணவைச் சேமிக்கும். உணவு கிடைக்காத காலங்களில் நெடும் தூக்கம் போடவோ அல்லது அதிகம் உணவு கிடைக்கும் இடங்களுக்கு மாறவோ செய்யும்!
தென் அமெரிக்க வெளவால் களில் சிலவற்றை ‘Vampire Bats’ என்பர். ஏனெனில், இவற்றின் உணவுரத்தம்தான் (மனித ரத்தம் உட்பட!). தங்களது கூரான இரண்டு முன்பற்களை வைத்து, ஆழமான வெட்டுகளை உருவாக்கி, அதன்மூலம் வெளிவரும் ரத்தத்தைக் குடிக்கும் இவை! ரத்த இழப்பு தவிர, இவற்றின் மூலம் ‘ரேபீஸ்’ போன்ற கொடிய நோய்களும் உருவாகும்.
பாம்பு, பெரிய பறவைகள் போன்றவற்றால் வெளவால்கள் கொல்லப்பட்டாலும், அவற்றின் பெரிய எதிரி மனிதர்கள்தான்! பெரும்பாலான வகை வெளவால்கள் அழியும் நிலையில் உள்ளன.
நன்றி:- சு.வி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» விந்தையான விஞ்ஞான உண்மைகள்!
» புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்
» விஞ்ஞான-ரீதியிலான-நவராத்திரி
» தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
» ஆராத்தி எடுப்பது ஏன்.? விஞ்ஞான விளக்கம்.!
» புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்
» விஞ்ஞான-ரீதியிலான-நவராத்திரி
» தமிழ் விஞ்ஞான தந்தைக்கு என் கவிதைகள்
» ஆராத்தி எடுப்பது ஏன்.? விஞ்ஞான விளக்கம்.!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|