Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.
இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-
உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது முதிர்வு பிரச்னை வருகிறதென ஆயுர்வேதம் கூறுகிறது. உலர்ந்து போன உணவு, காரம், உப்பு, புளிப்பு மற்றும் வறுக்கப்பட்ட உணவுகள், முளை விட்ட தானியங்கள், புதிய தானியங்கள், சோடியம் பை கார்பனேட் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு, பசியில்லாத போது அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல் மற்றும் நொதிக்க வைக்கப்பட்ட பானங்களைக் குடித்தல், பகலில் தூங்குதல், முறையற்ற அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி, உடல் மற்றும் மனரீதியாக மன அழுத்தம், கோபப்படுதல் போன்றவை இந்த தோஷ காரணிகளை அதிகரித்து, இளம் வயது முதிர்வு பிரச்னை ஏற்படுகிறது.
வயது முதிர்வு தோன்றுவதற்கான அறிகுறிகள்:
முடி நரைத்தல் மற்றும் வறண்டுபோன முடி, முடி உதிர்தல், வாடிப்போன முகம், கண்களைச் சுற்றி கரு வளையம், தளர்ச்சியான தசைகள், உடலில் தேவை இல்லாமல் கொழுப்பு சேர்தல், மூட்டு வலி, முறையற்ற மாதவிடாய், சுறுசுறுப்பின்மை, அதிக இதயத் துடிப்பு மற்றும் வேகமாக மூச்சிழுக்கும் பிரச்னை, நினைவுத் திறன் தடைப்படுதல், புரிந்து கொள்ளும் தன்மை குறைதல் மற்றும் கவனக்குறைவு ஏற்படுதல் ஆகியவை இதன் அறிகுறிகள்.
தினசரி தவறாமல் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
அதிகாலையில் விழித்தல் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சிறுநீர் கழித்தலை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். முகம் மிருதுத்தன்மை பெறுவதற்கும், எண்ணெய் வடிதல் மற்றும் அழுக்கு சேர்தலை தவிர்க்கவும், எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். தலை, காது மற்றும் பாதங்களில், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பூசுவதன் மூலம், குளிர்ச்சி தன்மையைப் பெறலாம். இவை முடி கொட்டுதல் மற்றும் நரைத்தலை தடுக்கிறது.
உணவில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம் மற்றும் உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் நடுநிலையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கோதுமை, கறுப்பு கொள்ளு, தேங்காய், வேர்க் கடலை, வெல்லம், நெய் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, சருமத்தில் ஈரத் தன்மையை தக்க வைத்து, சருமம் உலர்ந்து போதல் மற்றும் தடிமனாக மாறுவதைத் தடுக்கிறது. பசு நெய், தசை மற்றும் சருமத்திற்கு நல்லது.
இரவில் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்டபின், குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்குப் பின், தூங்கச் செல்ல வேண்டும். நள்ளிரவுக்கு பின் தூங்கச் செல்வதால், கண்களுக்கு கீழே கரு வளையம், வீக்கம் உண்டாகிறது. இதைத் தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
சருமம் ஈரத் தன்மையுடன் இருக்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், எண்ணெய் மிகுந்த, காரமான, பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், தினசரி ஒன்றரை மணி நேரம், வேகமாக நடப்பது அவசியம்; இதனால், வியர்வை வெளியேறி நச்சுப் பொருள் நீக்கப்படுகின்றன.
நெல்லிக்காய், எலும்பு, தசை மற்றும் உடல் உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்கி, மூன்று வகையான தோஷ காரணிகளை நடுநிலையுடன் வைத்து, உடல் உறுப்புகளுக்கு புத்துணர்ச்சியை கொடுக் கிறது. பழங்கள் சாப்பிடுவதும் பலன் அளிக்கும்.
காய்ச்சாத பசும் பாலுடன், ஜாதிக்காய் பவுடர் சேர்த்து, களிம்பு போல செய்து, கண்களுக்கு கீழே தடவி, காய்ந்தவுடன் கழுவினால், கண்களுக்கு கீழே காணப்படும் கரு வளையம் நீங்குவதுடன், முகம் வறண்டு போவதையும் தடுக்கலாம்.
தயிருடன், சுத்தமான மா இலை சேர்த்து, களிம்பாக செய்து முகத்தில் பூசுவதால், கறுப்பு கோடு, முகப்பரு தழும்பு நீங்குகிறது. மா இலைகள் உவர்ப்பு தன்மை கொண்டிருப்பதால், அவை முகத்திலுள்ள நுண் துளைகளை சுருங்கச் செய்து, சருமத்தைச் சுத்தமாக வைக்கிறது.
- ஐடியா அம்புஜம்.
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
இன்றைய காலத்தில் மிகவும் பயனுள்ள நல்ல பதிவு
எனக்கும் பயன்படும் நன்றி அண்ணா
எனக்கும் பயன்படும் நன்றி அண்ணா
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
எனக்கு கிரதாவில் ஒரு முடி மட்டும் நரைத்திருக்கிறது!!!மகா பிரபு wrote:நன்றி நன்றி. எனக்கு 3 முடி நரைத்து இருக்கிறது.
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
முரளிராஜா wrote:தங்களுக்காக தேடிய செய்தியை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி
உங்களுக்காகதானே தேடினாராம்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
ஆமாம் மற்ற முடியெல்லாம் பயங்கர கருப்புமகா பிரபு wrote:முரளி அண்ணனுக்கு ஒரு முடிதான் கருப்பா இருக்காம்!
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
செந்தில் wrote:முரளிராஜா wrote:தங்களுக்காக தேடிய செய்தியை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி
உங்களுக்காகதானே தேடினாராம்!
பின்ன உங்க வழுக்கை தலைக்கா செந்தில் தேட முடியும் :D
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
பின்ன உங்க வழுக்கை தலைக்கா செந்தில் தேட முடியும்
முடி இல்லாதவங்க பூரா மூளை காரவங்க!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
முரளிராஜா wrote:ஆனா நீங்க அதுக்கு விதிவிலக்கு
உங்களைப்போன்ற இருளில் வாழ்வோருக்கு நான் வீதி விளக்கு!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
செந்தில் wrote:பின்ன உங்க வழுக்கை தலைக்கா செந்தில் தேட முடியும்
முடி இல்லாதவங்க பூரா மூளை காரவங்க!
ஹா ஹா ஹா ஹா..........
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
நான் எப்போதோ கைய தூக்கிட்டேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
முரளிராஜா wrote:ரானுஜா wrote:நீங்க முதல்ல கைய தூக்குங்க
இது உங்க குழந்தைகளா மு.ரா ? அழகா இருக்காங்க அவ்ங்க அம்மா போல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தலைமுடி நரைப்பதை தடுக்க முடியும்!
ஆமாம் ஆமாம்இது உங்க குழந்தைகளா மு.ரா ? அழகா இருக்காங்க அவ்ங்க அம்மா போல
நான் அழகு இல்லை பேரழகு என்பதால்தானே கேட்டிங்க
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?
» தலைமுடி வறண்டுபோனால் ?
» தலைமுடி உதிர்தல்
» தலைமுடி பராமரிக்கும் முறை
» சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி
» தலைமுடி வறண்டுபோனால் ?
» தலைமுடி உதிர்தல்
» தலைமுடி பராமரிக்கும் முறை
» சாமுத்திரிகா லட்சணம்: தலைமுடி
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: தலை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|