தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

View previous topic View next topic Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:53 pm


வேப்பமரம்....!

நீர் ஊற்றி
நான் வளர்த்து
நிழல்கொடுத்த வேப்பமரம்
சூரியனின் வெப்பத்தை
சுகமாக்கி தந்தமரம்
வீடுநோக்கி வரும் காற்றை
வேடு கட்டி தந்த மரம்
குருவிக்கு பழம் கொடுக்கும்
கூடுகட்ட இடம் கொடுக்கும்
நேசமா நான் நெனச்சமரம்
நேத்து புயலில் விழுந்திடுச்சே
விழுந்த மரம் எழுந்துவந்து
நிலைக் கதவா நின்னிருச்சே
நிலைக்கு ரெண்டுதுண்டு
கதவுக்கு நாலுதுண்டு
அதுபோக அத்தனையும்
அடுப்புக்கு வெறகாகி
விசுவாசம் காத்திருச்சு
வீட்டுக்கதவா ஆகிடுச்சு....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:55 pm

சபதம்!

எல்லோருக்கும் புடிச்ச பய
எம்.பி.பி.எஸ். படிச்ச பய..
கருணை உள்ள மனசுக்காரன்
கைராசி மொகத்துக்காரன்....
மூத்த மகன் முத்தப்பனுக்கு
மொறையில பொண்ணு இல்ல
ஊரெல்லாம் தேடிப்பாத்து
ஒலகம்பட்டியில தேர்வாச்சு
பேருபெத்த குடும்பத்துல
பெரிய புள்ள அழகம்மையை
பெரியவுக முன்பாக
பேசி முடிவாச்சு...
ஏழு இலட்சம் ரொக்கப் பணம்
எழுபது சவரனோட
காரு வண்டி கட்டில் சாமான்
கணக்கா செய்யிறதா
கைபுடிச்சு சொன்னாக
சொணங்காம வீடு வந்து
சுற்றங்களை கலந்து பேசி
கல்யாணப் பத்திரிக்கை
'கல்லல்' போயி அச்சடிக்க
நேரங்காலம் சகுணம் பாத்து
நேர்த்தியா கௌம்பயில
தந்திக்காரன் வந்து மறிச்சு
தகவல் ஒன்னு தந்து போனான்
என்ன விசயமுன்னு
ஏடெடுத்து படிச்ச போது
இடி போல இறங்கியது
இப்படி ஒரு சேதி....
"மன்னிக்கவும்
திருமணம் ரத்து
வட்டச் செயலாளருக்கு
முடிச்சுப்புட்டோம்
வருமானம் அதிகமுன்னு"
படிச்சு முடிச்ச போது
படபடப்பு ஆகிப் போச்சு....
காலம் இப்போ மாறிப் போச்சு
கஷ்ட காலமாகிப் போச்சு
கரை வேட்டி கவுரதை
கன்னா பின்னான்னு ஏறிப்போச்சு
அறிவிக்கும் டெண்டருல
அஞ்சு பர்செண்ட் வந்திருமாம்
இடமாறுதல் வேணும்னு
டாக்டருக, இன்சீனியருக
கையில பணத்தோட
வட்டம் வீட்டு வாசலில
வட்டமிட்டு கெடக்காக
சாராயம், சீட்டு கௌப்பு
மாதம் மாமூலே
மூனு டாக்டரு சம்பளமாம்
மேலும்....
மக்கள் நலப் பணியாளர்
சாலைப் பணியாளர்.....
இப்படி
வேலைக்கு ஏத்தவாரு
வெகுமதிகள் ஏராளம்
கட்டப் பஞ்சாயத்து
போலீசு ஸ்டேசன் வருமானம்
அத்தனையும் கூட்டிப் பாத்தா
அசந்து போச்சு மனசு
"இப்படி வருமானம்
பெருத்துப் போன
வட்டத்தை விட்டுப்புட்டு"
சீக்குக்காரன் எதிர்பார்த்து
விட்டத்தை பாத்திருக்கும்
டாக்டருக்கு கட்டித்தர
நமக்குத்தான் மனசு வருமா?
பெருசுக்கு ஏகத்துக்கும்
பெருமூச்சு வந்து போச்சு....
இப்படி....
முத்தப்பனை டாக்டராக்கி
மொத்தமா கெடுத்துப்புட்டோமே!
அதனால
சின்னப்பய உடையப்பனை
சீக்கிரமா....
வட்டமென்ன
மாவட்டமாக்கி
மாமூல அள்ளுறேன் பாரு!
மனசுக்குள்ள எடுத்தாச்சு
மறுபடியும் சபதத்தை!
அதுக்காக முத்தப்பனை
மொத்தமா
விட்டுறத்தான் முடியுமா?
கழுத்துல கெடக்குறத
தலையை சுத்தி எறிஞ்சுப்புட்டு
நாளையில இருந்து
நாடி பார்க்குறத விட்டுட்டு
சாதி பாக்கச்
சொல்லவேண்டியதுதான்.....
அப்படியே அவனையும் ஒரு
டாக்டர் ராமதாசு
டாக்டர் சேதுராமன்
டாக்டர் கிருஷ்ணசாமி
வரிசையில..
எங்களோட சாதிக்கு
முத்தப்பனை தலைவராக்கி
முடிக்கிறேன் பாரு
சத்தியத்தை.....
பெருசு செஞ்சாலும் செஞ்சுபுடுமப்பு......!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:56 pm

கவர்மெண்டு....?

கழுதைக்கு
கல்யாணஞ் செஞ்சு வச்சா
"கொட்டிப்புடும் மழை"
அம்பலக்காரர்
அழுத்திச் சொல்ல
மழை கொட்டாது
"குட்டிதான் போடும்"
எதிர்ப்புக்குரல் இப்படி வந்தது!
பேசாம கெழக்கே போகும்
ரெயில் கணக்கா
கன்னிப் பொண்ணு ஒண்ணு
தீப்பந்தம் ஏந்தி வந்தா.....
ஒளிஞ்சு நின்னு
எச்சி விடுவீக....
எரிஞ்சு விழுந்தாரு வாத்தியாரு!
அதெல்லாம் வேணாம்பா
ஆடு கோழி அறுத்து
அம்மனுக்கு சக்தி பூசை போட்டா.....
ஒக்காந்து சாப்பிட்டுவிட்டு
ஏப்பத்தை விட்டுட்டு
எந்திரிச்சுப் போவேன்னு
எதிர்குரல் ஒன்னு
எந்திரிக்க
அந்த தீர்மானமும்
அடிபட்டுப் போச்சு
அரிச்சந்திர 'மயான காண்டம்'
கூத்து நடத்துனா
பொத்துக்கிட்டு கொட்டும்.....
ஒண்ணும் கொட்டாது
அக்கம் பக்கத்து
ஊருச்சனமெல்லாம்
ஒக்காந்து 'ஒண்ணுக்குவிட்டுட்டு'
சந்திரமதி 'பிரகாரமில்ல'
அப்படீன்னு
சன் டிவி கணக்கா
அட்டணக் காலு போட்டு
அலுசுவாங்க - அவ்வளவுதான்
எதச் சொன்னாலும்
எதிர்பேச்சு சொல்லுறீங்க
அக்கறையிருந்தா
ஐடியா சொல்லுங்கப்பான்னு
ஊர் பெருசுக
வெடல பயலுககிட்ட
வௌரம் கேட்க
இங்க பாருங்க....
எண்ணூறு புள்ளி உள்ள
'நல்லூறு' நம்ம ஊறு
வீட்டுக்கு ஆயிரம்னா
எட்டுலட்சம் சேர்ந்து போகும்
கிணத்துக்கு லட்சம் வீதம்
எட்டுக்கிணறு வெட்டிப்புடலாம்
உடலால் உழைப்பதற்கு
ஊருச் சனமிருக்கு
வெட்டுகிற மண்ணெடுத்து
கொட்டுவதற்கு நாங்க இருக்கோம்
முப்பதே நாளில்
ஹிந்தி கற்கலாங்கிறமாதிரி
ஒரே மாசத்துல கெணறு
வெட்டி முடிச்சிடலாம்....
நட்டபயிர் காத்திடலாம்
வருணபகவான்
கண் திறக்கும் காலம் வரை
பூமி மாதா
மார்புல தான்
பால் குடிக்கும் - பயிரெல்லாம்
சொல்லி முடிச்ச போது
கொல்லாத கரகோஷம்
நமக்கு நாமே
ஆக்கிக்குவோம்
நாட்டை கரை
சேர்த்திடுவோம்
எல்லோரும் சேர்ந்துழைச்சா
எதுக்கய்யா கவர்மெண்டு?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:56 pm

இலவசமாய்!

சைக்கிள்
பஸ் பாஸ்
முட்டை
வாழைப்பழம் - இவற்றோடு
இலவச மார்க்கையும்
எதிர்பார்க்கும்
மாணவன்.....!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:57 pm

பால்மரக் காட்டில்!

தமிழனுக்கு
'பிறக்க ஒரு நாடு
பிழைக்க ஒரு நாடு'ன்னு
பராசக்தி வசனம்போல
நம்ம.... கணேசனும்
கல்யாணத்துக்கு
வாங்கிய கடன்
கழுத்தை நெறிக்க
காரைக்குடி ஏசண்டுகிட்ட
அறுபதாயிரம் கொடுத்து
கனவுகள் சுமந்து வந்தவன்
பால் வடிக்கும்
ரப்பர் தோட்டத்தில்
கண்ணீ­ர் வடிக்கும்
இந்தியத் தொழிலாளி....
மோகம் முப்பது நாள்
ஆசை அறுபது நாளாம்
ஆனால்,
அதுக்குள்ளாகவே
விசா வந்துவிட
விசும்பி அழுத
புதுப்பொண்டாட்டிக்கு
ஆறுதல் சொல்லிவிட்டு
ஆகாய விமானம் ஏறியவன்
இப்போது
செரம்பான் தோட்டத்தில்!
காலம் புரண்டோடியது.....
காதலை தன் மனைவியோடு
கடிதங்களால் தொடர்ந்தான்
சம்பளத்தேதியில் மட்டுமே
பொஞ்சாதி குரலை
ஃபோனில் கேட்பான்
உழைப்பாளிகளுக்கு
உலக உருண்டை
வேகமா சுத்தும் போல....
ரெண்டு வருசம் கழிஞ்சது....
கணேசனின்
'அந்த'
ரெண்டுமாசத்துக்கு
அங்கே மனைவி
மகனைப் பெத்தெடுக்க
இந்த
ரெண்டு வருச
உழைப்புக்கு
மேலும்
ரெண்டு வருசம்
பணி நீட்டிப்பு
பலனா கிடைச்சது!
ஆச மகனின்
அழுகை ஓசைய
தொலைபேசியில்
கேட்கும்போதெல்லாம்
வெடிச்சுக் கிளம்பும் அழுகைய
சிரிச்சு மறைப்பான்
எல்லா கடனையும் அடைச்சாச்சு....
இனிமே உழைக்கிறது
எம்பொண்டாட்டி, புள்ளைக்குத்தான்
உற்சாகமா
ரப்பரையும் வேர்வையும்
ஒன்னா வடிச்சான்
இருந்தாலும்,
ஒரே ஒரு முறை
மகனப் பாக்கணும்னு
மனசு கெடந்து அலைபாயுது
முதலாளியும் லீவு தர மாட்டாரு
ஒரு வேளை தந்திட்டாலும்
ஏரோபிளேன் சார்ஜிக்கே
ஒரு மாசம் சம்பளம்
செரிச்சுபோகும்
குழம்பிய மனசோடு
அரைத் தூக்கத்தில்
இருந்தவனை
அதட்டி எழுப்பினாரு
முதலாளி
உன்னோட அப்பா
இறந்துட்டாராம்
போன் வந்துச்சு
இந்தா பிளைட் டிக்கட்டு
ஆயிரம் ரிங்கிட்
கைச்செலவுக்கு வெச்சுக்கோ
இருபதுநாள்ல இங்கே வந்திடணும்
பரிவோடு முதலாளி
சொன்னபோது
கணேசனுக்கு
பொருமிக்கொண்டு
வந்தது அழுகை
கூட வேலை பாக்கும்
சிங்காரம் வந்து
கோலாலம்பூர்
ஏர்போட்டில் ஏத்திவிட
சென்னையில் இறங்கி
உடனே பஸ் பிடிச்சு
அதிகாலையில் சொந்த ஊரான
'உத்தங்குடி' வந்து சேர்ந்தான்
தட்டுமுன்னே
தானாய் திறந்தது கதவு!
தாப்பா போட்டு வெச்சிருந்த
ஆசைகளின் அணை திறந்து
முத்தமிட்டாள் மனைவி....
பத்து வருசத்துக்கு முன்னே
செத்துப்போன
அப்பா போட்டோவ
தொட்டு வணங்கினான்
இறந்தும் உதவுகிற
அப்பா இவர்தானோ!
முதலாளிக்கு போன்போட்டு
அரைகுறை ஆங்கிலத்தில்
அப்பா செத்ததாய்
முழுப்பொய் சொன்ன
அண்டை வீட்டுப்
புண்ணியவானுக்கு
நன்றி சொன்னான்
இரண்டு வருட பாசபாக்கியை
முத்தங்களால் இட்டுத்தீர்த்தான்
இருபதுநாள் கரைஞ்சது
கண்ணீ­ர் வழிய நின்ன
பொஞ்சாதியையும்
கையை பிடிச்சுக்கிட்டு அழுத
மகனையும்
புள்ளியாய் மறையும் தூரம் வரை
கை அசைத்துக்கொண்டே
விடைபெற்றான்
ஒரு வழியா
மீண்டும் ரப்பர் தோட்டத்திற்குள்
வந்து சேர்ந்தவனை
சக தொழிலாளிகளின்
துக்க விசாரிப்புகள்
சங்கடப்படுத்தின
மாதம் கடந்தது....
இரண்டாம் பிள்ளையை சுமக்கும்
செய்தியை இறக்கிவெச்சது
மனைவியின் கடிதாசி
இருபது நாள் விடுமுறைக்கு
இன்னொரு பரிசு
பூரிப்பா இருந்தாலும்
புதுக் கடன் ஒன்னு
புறப்பட்டாச்சு....
மூனு உசுருக்கா
உழைச்சவன்
நாளையிலிருந்து
நாலு பேருக்கு உழைக்கணுமோ
பாவம் கணேசன்
பால்மரங்களும் பரிதாபப்பட்டன!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:58 pm

தீக்குச்சி!

உரசியதால்
உள்ளே
அடைக்கப்பட்டவர் சிலர்
உரசுவதற்காகவே
உள்ளே
அடைக்கப்பட்டவர் இவர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:58 pm

ஒசந்த பனைமரம்!

அம்புட்டு
அழகா இருக்கும்னு
சொக்கம்பய
சொன்னத கேட்டு...
நம்ம உடையப்பன்
ஒசந்த பனைமரத்தில்
உசுர பிடிச்சுக்கிட்டு
ஏறி ஒக்காந்து
ஊரு மொத்தத்தையும்
உத்துப் பாக்கையில
சிதம்பரம் செட்டியார் வீடு
முத்தையா கோனார் வீடு
வடிவேல்பிள்ளை வீடு
ஷேக்பாவா ரைஸ் மில்லு
நெவலிசேர்வை பொட்டிக்கடை
எல்லாமும் தெரிஞ்சது...
எம்புட்டும் முயற்சித்தும்
தன்வீட்டு குடிசை மட்டும்
கண்ணுலயே காணல!
ஒசரநின்னு பாத்தாலும்
உத்துக்கிடந்து பாத்தாலும்
கண்ணுல தட்டாத அளவுக்கு
நாம எவ்வளவு
தாழ்ந்துகெடக்கோம்னு
நெனைச்சபோது
வெடிச்சு வந்தது அழுக
அதுல பொறந்த
வைராக்கியந்தான்
பட்டணுத்துல
இன்னக்கி
அன்னாந்து பாக்குறாப்புல
அடுக்குமாடி வீடுகளா
கட்டித்தீக்கிறான்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:59 pm

ஒளிர்றாடோய்...

பொன்னிக்கு
தேதி வச்சாச்சு!
மாப்புள
பொட்டப்பட்டியாம்
தொபாயில
வேலை பாக்குறாராம்!
ஒரு மாச லீவுல
ஊருக்கு வந்து
கல்யாணத்த முடிச்சிட்டு
போகும்போது
பொன்னிய
பொறந்த வீட்டுலயே
விட்டுட்டு
போயிடுவாராம்..,
ரெண்டு வருசத்துக்கு
ஒரு தடவ
மூனுமாச லீவுல
வந்து போவாராம்
"எலே,
ரெண்டு வருசத்துக்கு
ஒரு தடவ மூனு மாசம்
வாழுறதுக்கா
பொன்னிக்கு
கல்யாணம்?
பேசாம
உள்ளூரு மாப்புளயா
பாத்திருக்கலாம்...
எங்க ஊரு பெருசுக
அலுத்துக்கிதுக!
மச்சு வீடு,
பத்து ஏக்கர் நெலம்,
கெணறு, பம்பு செட்டு
இத்தோட
தொபாய் செண்டும்
தூக்கலா அடிக்க
பொன்னியோட
அப்பன் ஆத்தாவுக்கு
புடிச்சிப் போச்சு!
பெறகென்ன...
பிள்ளையார்பட்டி கோயில்ல
கல்யாணம் முடிஞ்சு
மாப்புள்ள வீட்டுல
இருவீட்டார் விருந்து
நல்ல கூட்டம்!
மாப்புள்ளையும் பரவாயில்ல..,
ஒரு வழியா
பொட்டப்பட்டி மாப்புள்ள
தொபாய்க்கு போயாச்சு...
ராவும் பகலுமா
எரயப்போட்டு
பசியக் கௌப்பிவிட்டுட்டு
'பய' பணம்
தேடப்போயிட்டான்
பாவம் பொன்னி
இருபத்தேழு
வயசு வரைக்கும்
எவனாவது
பொன்னுபாக்க
வருவானான்னு
காத்துக்கெடந்துச்சு!
இப்ப என்னடான்னா
போஸ்ட்டு மேன்
எப்ப வருவான்னு
வீதிய
வெறிச்சுப்பாத்துக்கிட்டு நிக்குது
"பொட்டப்பட்டியான்
விட்டத
லெட்டர் வழியா
தொடர்றானாக்கும்"
வெடலப்பயலுக கிண்டல் வேற...
கதை இப்படியிருக்க...
நேத்து தொபாயிலருந்து
தந்தி வந்துச்சாம்
சதாம புடிச்சு
செயில்ல அடைச்சதிலிருந்து
சதா குண்டு
வெடிக்குமோன்னு
பயமா கெடக்கு...
அதால,
வேலைய விட்டுட்டு
வெகு சீக்கிரம்
வரேன்னு தகவலாம்!
பொன்னிக்கு
தலகால் புரியல
சீக்குபுடிச்ச கோழியாட்டம்
சோர்ந்துகெடந்தவ
ரேசுக்கு தயாராகும்
குதிர கணக்கா
துடிப்பா திரியிறா
இப்பல்லாம் நம்ம பொன்னி
'சந்திவீரன்' சாமியவிட
சதாம் உசேனத்தான்
சதா கும்பிடுறா!
பொன்னி ஒளிர்றாடோய்!....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 12:59 pm

தாய்மாமன்!

மடியில
ஒக்கார வெச்சு
காதுகுத்தி
குத்தவெச்ச நாளில்
பச்சை ஓலை
தட்டிகட்டி
மொதமொதலா
நாங்கட்டும்
தாவணிக்கு...
எனக்கு புடிச்ச
கிளிப்பச்சை
நிறம் பாத்து
காரைக்குடி பட்டெடுத்து
பொருத்தமா எல்லாம்
எனக்கு செஞ்ச
தாய்மாமன் சாதகம்
எனக்கு
பொருந்தாம போனதால
பத்து பொருத்தம் பார்த்து
பக்கத்து ஊருக்கு
வாக்கப்பட்டேன்....
ஒத்தப்புள்ள பெத்ததுமே
ஒத்துவாழ முடியாதுன்னு
கட்டிப்போனவன்
வெட்டிவிட்டான்
அன்னைக்கி
சாதகம் பொருந்தல
இன்னைக்கி
சார்ந்தவன் பொருந்தல!
இருந்தாலும்,
வாக்கப்பட்டு போகையில
வாஞ்சையோடு
தாய்மான்
வாங்கிவிட்ட மயிலப்பசு
நெறம்மாச செனையா
நிக்குதடி எனக்காக
சொச்சகாலத்த
மாமன் தந்த
மாட்ட நம்பி
ஓட்டணுமே வாழ்க்கையை...
நாய் நரியா பொறந்தாலும்
தாய்மாமன் தொன வேணும்
மிராசா இருந்தாலும்
அந்நியன நம்பாதே
தருசா கிடந்தாலும்
தாய்மாமன் பெருசப்போய்!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:00 pm

தலை தீபாவளி!

புள்ளைக
கொண்டாடுவதற்காக
அப்பன் ஆத்தா
கெடந்து திண்டாடுறத
பார்த்ததால என்னமோ...
'தீபாவளி'ன்னாலே
சின்ன வயசிலிருந்தே
எனக்குப் புடிக்காது...
பட்டுப்புடவையை
கட்டிக் களிக்கிற
மேட்டுக்குடி ஆளுகளுக்கு
வேணும்னா தீபாவளி
பண்டிகையா இருக்கலாம்
ஆனா,
கந்துவட்டிக்கு
கடன் வாங்கி
சாலையோர
சந்தையில
தள்ளுபடியில
துணிவாங்கி
கண்­ணீர் சிந்திப்
பொழைக்கிற
ஏழை பாழைகளுக்கு
வருசம் தவறாம
வந்து போற
'தீராதவலி'தானே!
மச்சு வீட்டுக்காரங்க
கொளுத்திப்போட்ட
சரவெடியில
வெடிக்க மறந்து
உதிர்ந்த மிச்சத்த
பொறுக்கி
தங்களோட
பட்டாசு ஆசைகளை
தணிச்சுக்குது
ஒரு கூட்டம்...
அப்பல்லாம்
எங்க ஆத்தாவோட
அரைப்பவுன் தோடு
அடகுகடைக்குப்
போனாத்தான்
எங்களுக்கு
புது டிரஸ்
வீடு வந்து சேரும்
ஏற்றத் தாழ்வுகளை
ஏகத்துக்கும்
பட்டவர்த்தமா காட்டுற
பணக்கார
பண்டிகையா பட்டதால
'தீபாவளி'ன்னாலே
ஒரு பிடிப்பில்லாம போச்சு;
ஆனா,
எனக்கு
இது 'தலை தீபாவளி'
இன்ஜீனியரு
மாப்புளைன்னு
மாமனாரு
கையளவு கரைவச்ச
பட்டுவேட்டி சட்டை
எடுத்திருக்காரு!
அடுப்படியே
கெடைன்னு கெடந்து
அதிரசம் முறுக்கு
தேன்குழல் சீடைன்னு
மாமியாரு
அண்டா பூராவும்
பலகாரமா ரொப்பி
வச்சிருக்காக!
மச்சினனோ
சிவகாசி போயி
அணில் மார்க்
கம்பெனியிலேயே
அய்யாயிரம் ரூபாய்க்கு
வெடி வாங்கி
லோடு வண்டியில போட்டு
வீடு வந்து
சேந்திருக்கான்!
வீடே திருவிழாக் கோலந்தான்!
ஆனா,
எனக்கு
மனசு கெடந்து
அலை பாயுது
பொறந்ததிலிருந்து
அப்பான் ஆத்தாவோடவே
இருந்திட்டு...
புதுசா பண்டிகையும் நாளுமா
தலை தீபாவளின்னு
மாமனாரு வீட்டுல வந்து
கெடக்குறது
மனசுக்கு
சங்கடமா இருக்கு...
சலும்ப, சலும்ப
அப்பா தேச்சுவிடும்
நல்லெண்ணெய்...
அத... தலையிலிருந்து
அப்புறப்படுத்த
புலிமார்க் சீயக்காயை போட்டு
பலங்கொண்ட மட்டும்
தேய்ச்சு குளிப்பாட்டும்
எங்க ஆத்தா!
பலகாரமா
சுட்டிருக்கே!
நீ பலகாரத்தை
பார்த்ததே...
என்னையை
கட்டிக்கிட்டு இங்க வந்த
பொறகு தானேன்னு
அப்பாவோட நையாண்டியும்...
அதுக்கு ஆத்தா காட்டும்
'போலிக் கோபமும்'
இப்படி,
எங்க வீட்டை நோக்கியே
கெடந்த,
என் நெனப்பை
மாமனாரு வந்து
கலச்சு எழுப்பனாரு...
என்ன மாப்ளே!
ஒரு வருசம் ஒங்க
தாய் தகப்பனை
விட்டு இருக்கிறது
ஒங்களுக்கு கவலையா
இருக்குதாக்கும்...
ஆனா இத்தனை வருசமா
நாங்க வளர்த்த
எங்க பொண்ணு
எங்களோட கொண்டாடுற
கடைசி தீபாவளி
இதுதானே!
ஒங்களுக்கு இது
தலை தீபாவளி..
எங்களுக்கு
இது தலை போற
தீபாவளி...
ஒரு தலை
எங்களவுட்டு போற
தீபாவளி இது
அதனால தான்
பொண்ண பெத்த
ஒவ்வொருத்தனும்
கடன ஒடன
வாங்கியாவது
மொதல் தீபாவளியை
மொகம் மலர
கொண்டாடுறது வழக்கம்...
தலை தீபாவளியை
மனசுல வச்சிக்கிட்டு
ஒவ்வொரு தீபாவளியையும்
பொண்டாட்டி புருசன்
சந்தோசம் கொறையாம
கொண்டாடனும்தான்
இவ்வளவும்!...
ஒரு காலத்துல
வறுமையில
திண்டாடுனதுக்காக
வளமையில்
கொண்டாடுறது தப்பில்ல
பழச மறக்காம
புதுச பழகிக்கிறது
குத்தமில்ல
மனசால
செல்வந்தர் ஆயிட்டோம்னா
குடிக்கிற கூழும் கூட
பாதாம் அல்வா தான்
குடியிருக்கிற குடிசையும்
'கோட்டை' மாதிரிதான்
மாமனாரு
சொன்ன வாக்கியங்கள்
என் வைராக்கியத்தை
ஒடச்சிப் புடிச்சு...
மகிழ்ச்சிங்கிறது
கட்டுற
துணியில இல்லை
வெடிக்கிற பட்டாசுல
இல்லை
மத்தாப்பா சிதறுற
மகிழ்ச்சி நெறஞ்ச
மனசுல தான்னு
புரிஞ்சு போச்சு
எனக்கு
இது தலை தீபாவளி
மட்டுமில்ல
பலவருச தலைவலி
போக்குன தீபாவளியும் கூட!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:02 pm

கோடி சுகம்!

அரக்கப் பறக்க
அலுவலகம் புறப்படும்போது
'கொஞ்சம் இருங்க'ன்னு
வாசலில் நிறுத்தி
நெற்றியில் இருந்து
சிந்திச் சிதறி
மூக்கு நுனியில்
முகாமிட்டு நிற்கும்
விபூதித் துளிகளை
விரல்களால் ஒத்தி
எடுத்து விட்டுட்டு
'உஃபு'ன்னு ஊதி
உன் 'மூச்சு' காற்றால்
என் முகம் துடைத்துவிட்டு
'இப்பப் போங்க'ன்னு
உத்தரவிடுவாய்
அரைமனதோடு
அரைகிலோமீட்டர் போய்
அதற்குமேல் முடியாமல்
சிந்திய விபூதியாய்
மனசு வழிய
அசதியாய் இருக்குன்னு
வசதிக்காய் பொய் சொல்லிட்டு
வெட்கத்தோடு திரும்பிவந்து
உன்மடியில் விழுவதே
கோடி சுகம்
சட்டையை போட்டபின்
அந்துபோன பட்டனைப் பார்த்து
நான் அலற
ஊசி நூலோடு
உள்ளிருந்து ஓடி வந்து
என் 'சட்டையை'
கழற்ற வேண்டாமுன்னு
பட்டனை தைத்துவிட்டு
என் நெஞ்சோடு
நெருங்கி வந்து
பல்லால் நூல் கடித்து
'ம்' சரியாப் போச்சி
இதுக்கு எதுக்கு
டென்சன்?னு
எனக்குள் ஒரு
புதிய படபடப்பை
புறப்பட வைப்பாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
இதுக்காகவே
நானாக அத்துப்போட்ட
பட்டன்களும்
ஏராளம்தான்.....
நடுத்தர வர்க்கத்தின்
மையப்புள்ளியான
நாத்தனார், மாமியார்
பிரச்சினையில்
நானும் நீயும்
சண்டை போட்டுக்கொள்ள
ஆத்திரம் தீர
உன்னை
அறைந்துவிட்டு
அலுவலகம் சென்று
மாலையில் நான்
வீடு திரும்பும்போது
தலைநிறைய மல்லிகையை
சூடிக்கொண்டு
வாசலில் நின்றவண்ணம்
தலைக்கு மேல்
சமாதானப்புறாவை
பறக்கவிடுவாயே....
கோபம் குறையாதவன்போல்
நான் பொய்
ஜம்பத்தோடு
அறையில் நுழைவேன்
மெத்தை, தலையணையை
ஒருவிதமாய் அடுக்கி
வைத்திருப்பாய்
மெல்லிய நறுமணம் வீசும்
ஊதுபத்தி எரிந்துகொண்டிருக்கும்
ஒருவழியாய்
காலைச் சண்டையை
கட்டில் சண்டையில்
கொண்டுவந்து
சுபம் செய்யும்
உன் பெண்மையின்
லாவகம் ஒரு
கோடி சுகம்!
நான் சாப்பிடும்போது
இருமினால்
நான் இருக்கும்போது
எவ நினைக்கிறா?ன்னு
பொறை விழாம
என் தலையில் தட்டி
உன் பொறாமை
காட்டுவாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
நான் சாப்பிட்டு முடிந்ததும்
கொஞ்சம் மிச்சம்
வக்கக் கூடாதா?ன்னு
தட்டுக்கிண்ணத்தில்
ஒட்டிக்கிடக்கும்
மிச்சத்தை விரல்களால்
வழித்து
நாவில் சுவைப்பாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
ஒருமுறை....
காய்ச்சலில் நீ
படுத்துக்கிடக்க
நளனும் எங்க
சாதிதானேன்னு
அடுப்பங்கரை புகுந்து
நான் வீராவேசம் காட்ட....
குக்கர் வெயிட்டு
பிடுங்கி அடிச்சு சோறு சிதறி
நான் சிதறி ஓடி வர
அலறிக் கொண்டு ஓடி வந்து
சேலை தலைப்பால்
என் தலை துவட்டிக்கொண்டே
எனக்கெல்லாம் சுமங்கலியாப்
போய்ச் சேரணும்னு
ஆசை இல்லீங்க.
எனக்குப் பின்னாடி கெடந்து
நீங்க கஷ்டப்படக் கூடாது.
ஒரு சோறு வடிக்கிறதுக்குக்கூட
லாயக்கில்லாத மனுஷன்
உங்களை விட்டுட்டு
நான் முன்னாடி போய்
எனக்கு பின்னாடி கெடந்து
நீங்க கஷ்டப்படக் கூடாது!
உங்களை சீரும் சிறப்புமா
வழி அனுப்பிட்டுதான்
நான் சாகணும்னு
கதறி அழுதாயே....
அந்த சோகம்கூட
ஒரு கோடி சுகம்தான்!
தலையணை மீது
என் லுங்கியை மடித்து
போட்டுக்கொண்டு
படுத்து உறங்குவாய்
'ஏன்' என்று கேட்டால்....
அப்பத்தாங்க உங்க கூடவே
படுத்திருக்கிறாப்புல
ஒரு பாதுகாப்பு உணர்வுன்னு
வெட்கிச் சிரிப்பாயே
அதுவும் ஒரு கோடி சுகம்!
ஏங்க எந்திரிங்க -
ஊரு உலகத்துல
அவனவன் காலையில
காலாகாலத்துல எந்திருச்சி
வீட்டு வேலையைப் பாக்குறாங்க
'எனக்குன்னு வாச்சிருக்கீங்களே
துப்பு கெட்ட மனுசனா'
ராட்சசக் குரலின் அலறலில்
கோடி சுகக் கனவுகள்
சிதறிய கண்ணாடித்
துகள்களாயின!
"போங்க.... போங்க.....
ஆஃபீஸ் போறதுக்குள்ள,
ஒரு அஞ்சு குடம் தண்ணிய
பிடிச்சுக் குடுத்துட்டுப் போங்க,
தண்ணி லாரிகிட்ட
ஆம்பளைக போனாதான்
இந்தத் தெரு பொம்பளைக
பல்லை இளிச்சுக்கிட்டு
தண்ணி விடுவாளுக"
வழக்கமான இரைச்சலோடு
வாழ்க்கை துவங்கிடுச்சு!
இருந்தாலும்....
இந்தக் கோடிச் சுக கனவு
ஒருநாளாவது அவளுக்கு
வரப்புடாதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:02 pm

நம்பிக்கை!

கருடன் மீது
பெருமாள்
எலி மீது
பிள்ளையார்
நாயின் மீது
பைரவர்
மயில் மீது
முருகன்
புலி மீது
அய்யன்
மனிதனை
நம்பாத தெய்வங்கள்.....!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:03 pm

பாவம் ராசேந்தரு!

வீரபத்ர சாமி
தீப்பந்தத்தை
ரெண்டு கையிலயும்
புடிச்சுக்கிட்டு
நெஞ்சோடு அணைச்சு
ஆடும்போது
பாக்கவே பயமாயிருக்கும்
செகப்பட்டி
சேவுகஞ்செட்டியாரு
நேர்த்திக்கடனா
சாமியாடிக்கு
செஞ்சு போட்ட
தங்க வளையம்
காதுல மின்னும்
பட்டுத் துணியில
மொழங்கால் அளவுக்கு
தைக்கப்பட்ட
கால் சட்டை
பெருக்கல்
குறி மாதிரி
நெஞ்சுல
குறுக்கும் மறுக்குமா
கட்டியிருக்கும்
சலங்கை
சல்சல்லுன்னு
சவுண்டு கௌப்பும்
வீரபத்ர சாமிக்கு
பேருக்கேத்த மாதிரி
முறுக்கிக்கிட்டு
நிக்கும் மீசை
பொம்பளக
கூடி இடும்
குலவச்சத்தம்
பூசாரிப்பட்டிக்காரங்க
கௌப்புற
பறையோசை,
இப்படி.....
வைகாசி வந்தாவே
எங்க ஊரு
திருவிழா களகட்டும்!
பலூனு,
ஊதாங்குழலு,
இதயக்கனியில
எம்.ஜி.ஆரு போடுற
கண்ணாடி கணக்கா
விதவிதமா
கலர் கலரா
கூலிங்கிளாசுக
உருவாக்குன
நாள்லருந்து
ஒடஞ்சு
போறதுவரைக்கும்
ஒரே டயத்தைக்
காட்டும் கலர்கலரா
கைக்கடிகாரங்க
வளையல்,
பாசி பவளக்கடைகள்,
இளநீரு, நொங்கு,
சர்பத்து, விக்கிறவுக....
இப்படி....
ஒரே ஒரு
பெட்டிக் கடை
உள்ள எங்க ஊரு,
அன்னைக்கி மட்டும்
பட்டணத்து
பசாரு கணக்கா
இருக்கும்!
தேரோட்டம்
முடிஞ்சதும்
வீட்டுக்கு வீடு
ஆடு வெட்டி
விருந்து நடக்கும்
எல்லா சொந்தக்காரங்களும்
திருவிழாவுக்கு
தவறாம
வந்து போவாக
பெருசுகளெல்லாம்
பசி மருந்து சாப்புட்ட
பின்னாடிதான்
பந்தியில ஒக்காருவாக
(ஓ.... அதுவா?)
பந்தி முடிஞ்சவுடனே
பள்ளிக்கூடத்துக்குப்
பின்னாடி
ஏட்டுக்காசு
சீட்டாட்டம்
நடக்குற எடத்துக்கு
ஆம்பிளைக போவாக
போலீசுமாமா மட்டும்
விளையாடாமலே
செயிக்காமலே
காசு வாங்கிப் போவாக!
மணி அண்ணன்,
ராமு சித்தப்பா
எல்லோரும் எனக்கு
திருவிழா காசு
கொடுப்பாக
ஒரு வருஷத்துக்கு
வேண்டிய விளையாட்டுச்
சாமானையெல்லாம்
வாங்கி சேத்துப்பேன்
ஆனா....
போன வருஷம்
திருவிழாவோட
எல்லா சந்தோசமும்
போயிருச்சு
நான் ஆசை ஆசையா
வளத்த ராசேந்தர
போன வருஷம்
விருந்துக்கு
பொலி போட்டுட்டாக!
எல, தழ
அறுத்துப் போட்டு
கால, மாலையில
தண்ணி வச்சு
நானே வளத்தேன்
பள்ளிக்கூடம் போற
நேரத்தத் தவிர
பாக்கி நேரம்
அதுகூடத்தான்....
அதுக்குத் தாடி
அழகா இருக்கும்
அதனால அத
ராசேந்தருன்னு
பேரு சொல்லி
கூப்பிடுவேன்!
ஆடா நெனக்காம
ஆளாவே நெனைச்சு
பழகுவேன்!
வெளச்சல் இல்ல
காசு, பணம்
நடமாட்டம் கம்மின்னு
வெளியில இருந்து
ஆடு வாங்கி
காச கறியாக்க
வேணாமுன்னு
எங்கப்பா
ஒத்தக் கால்ல
நின்னதால....
ராசேந்தர வெட்டி
கறியாக்கி
வறுவல், ரசமுன்னு
சொந்த, பந்தங்க
எல்லாம் கூடி
தின்னுட்டு
ஏப்பம் விட்டுட்டுப்
போயிட்டாக
அன்னைலருந்து
எங்க ஊரு
திருவிழான்னாலே
எனக்கு புடிக்காது
கறி, கோழிய
விட்டுட்டு
காய்கறிக்கு மாறிட்டேன்
வளத்த கெடா
மாருல பாயும்பாங்க
ஆனா....
எங்க வீட்ட
பொறுத்தவரைக்கும்
வளத்த கெடா
எங்க சொந்தக்காரங்க
வயித்துக்குள்ள
பாஞ்சிருச்சே!
பாவம் ராசேந்தரு!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:03 pm

அடை மழை!

கண்ணடிக்கும் மின்னல்கள்
எழுதி அனுப்பும்
காதல் கடிதங்களாய்
வந்து விழுந்தன
மழைத்துளிகள்...
அவற்றை
காதலை வெறுக்கும்
தந்தையாய் மாறி
தடுத்தன குடைகள்!
மேகத்திற்குள் நிலவு
குடைக்குள் அவள்
வெறுத்துப்போன மேகங்கள்
விடாது அழுதன
அடை மழை!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:04 pm

பொம்பளைப் பெரியார்!

தப்பு அடிக்கிறது,
எழவு சொல்றது,
குழி வெட்டுறது,
பொணத்த
பொதைக்கிறது,
எரிக்கிறது,
செத்த மாட்ட
தோலை உரிச்சுட்டு
தோண்டி பொதைக்கிறது,
கூலி வாங்காம
குடியானவுக வீட்டுக்கு
ஊத்துற கூழுக்கு
உழைக்கிறது,
இப்படி....
மாடா ஒழைக்கிற
மனுசாக்கள
நாம் 'சேரி'ன்னு
ஒதுக்கி வச்சோம்.
'செருப்புப் போட்டு
நடக்கப்புடாது'ன்னு
தடை விதிச்சோம்....
'ஊரு குளத்துல
தண்ணி எடுக்கப்புடாது'ன்னு
தடுத்து வச்சோம்.
'சட்டை அணியக்கூடாது'
'இடுப்பு வேட்டிய
மொழங்காலுக்கு மேல
ஏத்தி கட்டப்படாது
கணுக்காலுக்குக் கீழ
எறக்கியும்
கட்டப்படாது'ன்னு
உடுத்தற துணிக்கும்
நாம அளவுசொல்லி
ஒடுக்கிவெச்சோம்
வெலங்குக்குக் கீழா
நடத்துனோம்
ஆனா....
தடுக்கப்படுகிற
அணையிலருந்துதான்
தண்ணி வெள்ளமா
பெருக்கெடுத்து
வேகமா பாயுங்கிற மாதிரி!
இன்னைக்கு என்னாச்சு....
முழுப் பரீட்சையில
நம்ம அழகன் மக 'சித்ரா'
மாநிலத்திலேயே
மொத மார்க் வாங்கி
முன்னாடி வந்திருக்காளாம்!
டி.வி.க்காரனும்,
ரேடியோக்காரனும்
மைக்கைத் தூக்கிக்கிட்டு
காலனிப் பக்கமா
அணிவகுத்துப் போறாங்க.
அடுத்த ஜில்லா அறியாத
நம்ம ஊரு பேரை
இன்னைக்கு நாடே
பேசுற மாதிரி
நடத்திப்புட்டா அழகன் மக,
அறிவும், ஆண்டவனும்
சாதி பாக்குறதில்ல
தெறம
செட்டியாரா,
புள்ளமாரான்னு
சோதிச்சுப் பாத்து
உருவாக்குறதில்ல.
நாமதான் கெடந்து
நான் பெருசு,
நீ பெருசுன்னு
நாயா கொரைக்கிறோம்.
அம்பேத்காரு சட்டத்த
நம்ம அக்ரகாத்து
அய்யர் வக்கீலு
எடுத்துப் பேசுறதில்லயா?
எளையராசா அடிக்கிறதுக்கு
தேவரு சிவாஜி
ஆடிப்பாடி நடிக்கலயா?
அதனால,
சாதி பாத்து
யோசிச்சு நிக்காம,
நம்ம கிராமத்து சார்பா
அஞ்சு ரூபாய்க்கு
மாலை ஒன்ன
வாங்கிட்டுப் போயி,
அழகன் மகளுக்கு
அணிவிச்சு
பாராட்டுறதுதான்
பண்பா படுதப்பா
அப்புறம் ஒங்க இஷ்டம்
மூச்சு விடாம,
முத்தையாக் கோணாறு
சொல்லி முடிச்சபோது....
ஊரு சனத்துல பாதி
உடனே ஆமோதிச்சிருச்சு.
வாலிபப் பயலுக மத்தியிலும்
வலுவான ஆதரவுதான்.
ஆனா,
பெருசுகதான் கெடந்து
பொருமுதுக....
அழகன் மக
படிச்சதுக்கு
'வாத்தி' மார்க் போடட்டும்
அரசாங்கம்
வெத்தல - பாக்க
தட்டுல வச்சு
அவுக சாதிக்குன்னு
வேல கொடுக்கட்டும்
நாம எதுக்கு
மாலை போடணும்,
மரியாதை பண்ணனும்?
முத்தையா வேணுமின்னா
அவன் மகன விட்டு
மாலையப் போட்டு
அழகனுக்கு
சம்மந்தியாக் கூட
ஆயிட்டு போகட்டும்
இப்படி....
நாராசர நடையில
சிலதுக வெடிக்க,
ஒரே கசமுசாவாகி
ஒருவழியா ஊருசனம்
ஒரு முடிவுக்கு வந்துச்சு....
ஆயிரம் இருந்தாலும்
நம்ம ஊருக்கு
நல்ல பேரு வாங்கித் தந்த
அந்தப் புள்ளக்கி
'சேரிப்புள்ள'ன்னு பாக்காம
நாமெல்லாம் சேந்து போயி
நல்ல வார்த்தை
நாலச் சொல்லி
ஊரு சார்பா
ஒரு சில்வர் தூக்குச்சட்டி
வாங்கிக் கொடுப்போம்
'மேப்படிப்புக்கு
போற புள்ளக்கி
சோறு கொண்டு போக
ஏதுவா இருக்கும்னு' முடிவாகி
ஊரே தெரண்டு
சேரிக்குள்ள
மொதமொதலா
நுழைஞ்சுச்சு
அழகன் ஓடியாந்து,
'ஐயாமாருகல்லாம்
வாங்க.... வாங்க....'ன்னு
பழகிப்போன அடிமைக்
கும்பிடு போட,
அவன் மக சித்ரா
உள்ளேயிருந்து வந்து
ஊரைக் கையெடுத்துக்
கும்பிட்டுச்சு
'சுள்ளி பொறுக்குற
கூட்டத்துல பொறந்து
பள்ளிக்கொடத்துக்கும்
நம்ம கிராமத்துக்கும்
நல்ல பேரு
வாங்கியாந்திருக்க.
நல்லா இரு புள்ள'ன்னு
ஊரு அம்பலம்
தூக்குச்சட்டிய கொடுக்க,
ஊருச்சனம் கைகொட்டுச்சு.
கண்ணுலருந்து வடிஞ்ச
கண்­ணீரோட
அழகன் மக சித்ரா
அழுதுக்கிட்டே சொல்லுச்சு
'எங்கள செருப்பு போட்டு
நடக்கப்புடாதுன்னு
சொன்னீக
அதனால,
எங்க பாதம் பலமாச்சு.
ஊரணியில தண்ணி
எடுக்கப்புடாதுன்னு
உத்தரவு போட்டீக
அதனால,
அரசாங்கம் அடி பைப்ப
எங்களுக்குன்னு தனியா
வீதிக்கு வீதி
போட்டுத் தந்துச்சு
கோயிலுக்குள்ள
நொழயப்புடாதுன்னு
தடுத்தீக
சர்ச் கட்டிக் கொடுத்து
'ஏசு சாமிய' எங்களோட
சேரிக்குள்ளயே
ஒக்கார வச்சுப்புட்டாங்க
இப்படி.....
எத்தனையோ நல்லதுக
ஒங்களாலதான் கெடச்சுச்சு
அதுமாதிரியே.....
உங்க புள்ளைகள
சேரிப்புள்ளகளோட சேர்த்து
ஒக்கார வச்சதுக்காக
வாத்தியார அடிச்சீக.
அன்னைலருந்து
அவரு என்னைய
அடிச்சி அடிச்சி
படிக்க வச்சாரு.
இன்னைக்கி நான்....
ஒசந்து நிக்கிறதுக்கும்
நீங்கதான் காரணம்.
என்ன ஒன்னு....
இந்தக் காலனியில
பொறக்காம
ரெண்டு வீதி தள்ளி,
ஒங்க சனத்துல
ஒருத்தியா பொறந்திருந்தா,
இப்பிடி
சம்பிரதாயத்துக்குன்னு
இல்லாம,
மனசார
வாழ்த்தியிருப்பீகன்னு
கண்­ணீர் வழிய
அந்தச் சின்னப்புள்ள
விம்மி அழ,
ஊருச்சனத்துக்கு
நல்லா ஒரைச்சிருச்சு.
"சோரு தூக்கிப் போக
தூக்கு வாங்கித்
தந்ததுக்கு பதிலா
சுய மரியாதைய
சொமக்குற மாதிரி
எனக்கு ஒரு சோடி
செருப்பு வாங்கித்
தரப்புடாதா"ன்னு
கேட்டப்போ,
சாதி சாதின்னு
சதா மல்லுக்கு
நிக்கிற பயலுககூட
மக்கிப்போன
குப்பையாட்டம்
சரிஞ்சுட்டான்ங்க.
சாதிங்கிறது
கால் முளைச்ச
'சதிதானே' அப்பு.
அழகன் மக 'சித்ரா'
எங்களுக்கு
பொம்பளப் பெரியாரா
தெரியறா!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:05 pm

வரிசையாய்...

சத்துணவுக்கு
சாப்பாட்டு தட்டோடு தம்பி
வேலையில்லா
பட்டதாரி உதவிக்தொகைக்கு
சான்றிதழோடு அண்ணன்
கறி விருந்துக்கும்,
கவர் பணத்திற்கும்
கையில் ஓட்டோடு
காத்திருக்கும் அப்பா
உலக வங்கியின்
உதவிக்கு காத்திருக்கும் அரசு
'எல்லோரும்
இந்நாட்டு மன்னர்கள்'
பாரதி பாடலை
மனப்பாடம் செய்யும்
ஏதும் அறியா தங்கை.....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:05 pm

விடியல்.....?

டாக்டர் சொன்ன
அளவில்
பருக்கை
வாஸ்துக்காரன்
சொன்ன திசையில்
படுக்கை
பஞ்சாங்கம்
ஒப்புக் கொண்ட
நாளில் மட்டுமே
பயணம்
எண் கணிதம்
ஏற்றுக்கொள்ளாவிட்டால்
இன்றைய எனது பெயர்
நாளைக்கு
மாறிப்போகலாம்
சோதிடர் 'எஸ்'
என்றதற்குப் பிறகே
எனக்கு
மிஸ்ஸஸ் ஆன அவள்
வெளியில்
குறித்துக் கொடுக்கப்பட்ட
நாழிகைக்குள்
அவசர அவசரமாய்....
நடந்து முடிந்த
முதலிரவு
என் ஒவ்வொரு
அசைவுகளையும்
யார் யாரோ
முடிவு செய்கிறார்கள்
என் வீட்டு
மின் கட்டணத்தை
முடிவு செய்யும்
உலக வங்கி போல
நாளைக்கு
எனக்கான விடியலும் கூட
ஒரு கடிகார
அலாரத்தின் கையில்தான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:06 pm

ஒரு விரல் ஒய்யப்பன்!

கொஞ்சம்
கொஞ்சமாய்
விழுங்கும் குஷ்டம்
விட்டு வச்சிருக்கும் மிச்சம்
ஒரு விரல்!
அதனால,
ஒய்யப்பனை
ஒரு விரல் ஒய்யப்பன்னு
ஊரு கூப்புடும்
சுழன்றடிச்ச சூறாவளியில
சுத்தமா நெனைவிழந்து
தரதட்டி நின்ன கப்பலா
அவன் வந்து நின்னது
தகரக் கொட்டகைன்னு
ஊரு சொல்லும்
எங்க ஊரு
பஸ் ஸ்டாண்டில்.....
மொத்தமா நிக்கும்
மனுசனையே
வெறிச்சுப் பாக்கும்
எங்க கூட்டம்
செல்லரிச்சுப்போய்
மிச்சமா நிக்கும்
அந்த சேதார மனுசன
உத்துப் பாத்து
உச்சு கொட்டுச்சு
காலத்தோட சுழற்சியில
புதுசா ஊருக்குள்
நுழையும் முதல் பிரவேச
மனுசங்களுக்கு
அட்ரஸ் சொல்ற
ஆட்காட்டி
ஆகிப்போனான்
ஒய்யப்பன்
நாய்க்கும் பூனைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
ஆகாரம் போடும் ஊரு
ஒய்யப்பனுக்கும்
சோத்துப் பஞ்சம்
வராம பாத்துக்கிச்சு
"ஒய்யப்பனுக்கு
கருநாக்கு.
சொன்னா வாக்கு
பலிக்கும்"
எவனோ கொளுத்திப்
போட்ட
ஒத்த வெடியில
நம்ம ஒய்யப்பன்
அருள் வாக்கு
சித்தரானான்!
அலுமினியத் தட்டுல
அஞ்சு பைசாவ போட்டுட்டு
'நான் பாஸ்ன்னு சொல்லு'
வரங்கேட்டு நிக்கும்
பள்ளிக்கூடத்துப் பயலுக
"இந்த வருசம்
நல்லா வெளையும்ன்னு
நல் வார்த்தை சொல்லுப்பா"
வெத நெல்லு
சுமந்து கொண்டு
நல்வாக்கு கேக்கும்
சுப்பம்மா
"போற காரியம்
நெறையாகணும்னு
வெளஞ்ச வார்த்தையா
சொல்லுப்பா"
வேண்டி நிக்கும்
கேசவஞ்செட்டியார்
இப்படி,
ஒய்யப்பன் நாக்குக்கு
ஊரு மரியாத
கூடிப்போச்சு
நல்வார்த்தை சொல்லும்
ஒய்யப்பனின் தட்டுல
சில்லரைகள் விழுந்துச்சு
காலப்போக்குல சில்லரை
விழுந்தா மட்டுமே
ஒய்யப்பனின் நாக்கு
நல்ல வார்த்தைகளைச்
சொல்லுச்சு
காசு போடாம
ஓசியில ஆசி கேட்டா,
'போடா தோசி'ன்னு
நாராசர நடையில
விசுவாமித்திரரா
விசுவரூபம் எடுப்பான்
அஞ்சாம் வகுப்புவர
எல்லோரையும்
பாசாக்கணும்கிறது
கவர்மெண்ட உத்தரவு!
ஆனா,
அதை அறியாத
எங்க ஊரு பொடுசுக
ஒரு விரலாரின்
கருநாக்கே காரணம்
என்றன!
மனுசன் வடிச்ச
வேர்வையும்
மானம் வடிச்ச
மாரியும்
வெளஞ்ச வெள்ளாமைக்கு
காரணங்கிறது போயி,
'ஒய்யப்பன் நாக்கே
பிரதானம்'னு
பேசப்பட்டுச்சு
எப்படியோ....
ஊரோடயும், மக்களோடயும்
ஒன்றிப்போனான்
ஒய்யப்பன்
ஆனா,
சமீபமா அவனுக்கு
சீக்கு முத்திப்போச்சு
"பட்டணத்து
ஆஸ்பத்திரியில
குஷ்டக்காரனுக்கு
வைத்தியம் கெடையாது"ன்னு
வெரட்டிட்டாங்க
'ரெண்டொரு நாள்ல
முடிஞ்சு போயிடும்'னாங்க
அன்னைக்கு
சந்திரகிரணம்
ஊரே கூடி
வேடிக்கை பாத்துச்சு
'நெலாவ பாம்பு
முழுங்குது'ன்னு
உச்சு கொட்டுச்சு ஊரு!
அப்ப....
சப்பாணி வேகமா
ஓடியாந்தான்
'ஒய்யப்பன்
செத்துட்டான்'னான்.
இங்க மிச்ச
சந்திரனையும்
பாம்பு முழுங்கிடுச்சு
நம்ம ஒய்யப்பன
முழுங்கன
குஷ்டங் கணக்கா
இருந்தாலும்,
கொஞ்ச நேரத்துல
நெலா மீண்டும் வந்துருச்சு!
ஆனா....
நம்ம ஒய்யப்பன்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:06 pm

பஞ்ச்)சாயத்து!

ஊர்தோறும்
அன்னச் சத்திரம்,
தண்­ணீர்ப் பந்தல்
வீதி தோறும்
சுமைதாங்கிகள்,
ஊருக்குள்
விழும் மழை நீரை
குடிநீராய் சேமிக்கும்
ஊருணிகள்
ஊருணிக்குள்
செல்லும்
தண்­ணீரை
தெளிய வைத்து
உள்ளுக்குள் அனுப்பும்
மதகுப் பள்ளம்
தெய்வ சாட்சியாய்
மந்தையம்மன்
பார்வை படும்படி
அமைக்கப்படும்
ஊர்ப் பஞ்சாயத்து மேடை
அதில்....
வாய்தாக்கள் இன்றி
வழங்கப்படும்
ஒத்தி வைக்கப்படாத
உடனடி தீர்ப்புகள்
எழுதப் படிக்கத்
தெரியாதவனுக்கும்
தகவல்களை
தண்டோராவால்
தெரிவிக்கும்
தகவல் தொடர்பு
காப்புக் கட்டி
கன்னியமாய்
கொண்டாடப்படும்
திருவிழாக்கள்
பொழுதுபோக்கோடு
மனித வர்க்கத்தை
பழுது பார்க்கத் தூண்டும்
அரிச்சந்திரா நாடகங்கள்
'சாவு வீட்டில்
அலங்காரம் கூடாது' என
சட்டை போடாத
சாமானியக் கலாச்சாரம்....
இன்ப துன்பங்களில்
பங்கு பெறும்
பங்காளிகளை
வரிசையில் நிறுத்தி
துக்கம் கேட்க வரும்
நட்பும், உறவும்
'நாங்கள் இருக்கிறோம்
கவலைய விடு' என
தோள் கொடுக்கும்
கை கொடுத்தல்.....
'அழும்போது
இதயத்திற்கு அழுத்தம்
நேர்ந்திடக் கூடாது'
என்று
ஒத்தி எடுக்கும்
மருத்துவ முயற்சியான
மார் அடித்தல்.....
மனதினுள் சோகத்தை
அடக்கி அடக்கி
இதயத்திற்கு
இடர் ஏதும் கூடாது என்று
முராரியில் நினைவுகளை
மூழ்த்தி இறக்கி
வைக்கும் ஒப்பாரி
"காலமானவரின்
கதாபாத்திரத்தை
இனி நீ சேர்த்தே
செய்திடல் வேண்டும்"
என்று உறவுகள் கூடி
உத்தரவிடும் உருமாக்கட்டு
என்னும்
உருக்கமான கட்டளை.....
வருந்தி வருந்தி
நினைத்து நினைத்து
நெஞ்சுருகி
உடல் ஏற்றிக் கொண்ட
சூட்டை
இறக்கி வைக்கும்
எட்டாம் நாளில்
எண்ணெய் தேய்த்துக்
குளிக்கும்
கருமாதிச் சடங்கு.....
இப்படி,
வாழ்ந்து போறவனின்
வழியனுப்பு நிகழ்ச்சியிலும்,
வாழப்போறவனுக்கு
வழிசொல்லும்
ஒப்பில்லாத் தமிழனின்
உயரிய கலாச்சாரம்....
ஆனால்,
பரவிக் கெடந்த
பண்பாடும்,
பழக்கவழக்கங்களும்
மொத்தமா அழிஞ்சு
போகுதே!
போலீசு ஊருக்குள்ள
நொழஞ்சாலே
தீட்டுன்னு கருதுன
காலம் போயி,
தடுக்கி விழுந்தாலே
போலீஸ் ஸ்டேஷன்
வாசல்ல போய்
நிக்கிறானுங்க
முன்சாமீன்
பெயிலு,
இப்படி ஏதேதோ
வக்கீல் பாஷையில
பேசுறானுக
மனுச மக்களிடையே
பிணக்கு வர்றதும்
அத ஊரு கூடி
தீர்த்து வக்கிறதும்
கிராமத்தோட
தட்டுப்பாடான பஞ்சாயத்து!
அதையும்,
'கட்டப் பஞ்சாயத்து'ன்னு
சொல்லி
அரசாங்கம் தடை
செஞ்சு புடுச்சு....
'நீதி நெறிக்கு
பொறம்பா நடந்தா
ஊர விட்டு
தள்ளி வப்போம்
தனிமைப் படுத்தும்போது
ஒருத்தன் தன்
குற்றத்தை உணர
வாய்ப்பு வருமில்ல
அப்படி,
உணர்ந்து
ஊருகிட்ட வந்து
வருந்தினாலே
மீண்டும் ஊரோடு
சேத்துப்போம்
தண்டனைங்கிறது
திருத்துறதுக்குத்தானே!
ஆனா,
இப்பல்லாம்
குத்தம் பண்ணுனவன
கோர்ட்டு தண்டிக்குது
அதுக்குள்ள....
'விடுதலை வாங்கித்
தாரேன்'னு
சொல்லிச் சொல்லியே.....
இருக்கிற சொத்தையும்
கருப்பு கோட்டு போட்டவரு
கறந்துபுடுவாரு!
கடைசியில
தப்பு செஞ்சவன்
செயில்ல கெடப்பான்
மிச்சம் உள்ள குடும்பம்
கடன்கப்பியில தத்தளிக்கும்!
அதனால,
அரசாங்கம் ரோடு
போடட்டும்
வீதிக்கு வெளக்கு
போடட்டும்
ரேசன் கடையில
அரிசி தரட்டும்
கண்மாய்க்கு மடை
கட்டட்டும்
விவசாயத்துக்கு
உரம் தட்டும்
ஆனா.....
நீதி நேர்மைய
பரிபாலனம் பண்ற
கிராமங்களோட
சுயநிர்ணய உரிமைய
பறிக்காம எங்களுக்கு
சொதந்திரம் தரட்டும்!
'எங்களை விட்டுருங்கப்பு'
கட்டுப்பாடுகளை
நாங்க
கட்டிக் காத்துக்கிறோம்
வவுத்துக்கு வழி
சொல்லுங்க
வாழ்ற வழிய
நாங்களே
வகுத்துக்கிறோம்
ஒவ்வொரு கிராமத்துப்
பெருசுகளோட
மனசாட்சிகளின்
பொருமல்தான் இது.....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:07 pm

வள்ளிக்கெழவி!

வள்ளிக்கெழவி
வெளக்கெண்ணெய் பாட்டிலோடு
வேகமா ஊருக்குள் போனா
எங்கள் ஊர் சனத்தின்
எண்ணிக்கையில்
ஒன்னு
இன்று கூடப்போகிறது
என்று அர்த்தம்....
எங்கள் கிராமத்தில்
பொறந்த பிள்ளைகளில்
நூறில் தொன்னூறை
கைபிடித்து இழுத்து வந்து
பூமிக்கு அறிமுகம் செய்தவள்....
எங்க ஊரு
புள்ளைகளை
முதலில் நிர்வாணமாய்
பார்த்தவளும்
நீராட்டியவளும்
முதல் ஆடை கட்டிவிட்டவளும்
அந்த முதிர்ந்த வள்ளிக்கெழவிதான்
பிள்ளைப் பேறு பார்ப்பதில்
அவள் ஒரு
கைதேர்ந்த மருத்துவச்சி
அடி வயித்த
தடவிப் பார்த்துட்டு
ஆணா, பெண்ணா என்று
சரியாக கணிக்கும்
சக்தியுண்டு....
ஆனா,
வெளியில் சொல்லாது
ரகசியம் காப்பாள்
இப்போது அரசாங்கம்
ஸ்கேன் சென்டருக்கு
இடும் கட்டளையை
தானாகவே கடைபிடிச்சவ....
சளி அடைச்சிருக்கேன்னு
பச்சைக் குழந்தையின்
மூக்கில் வாய் வைத்து
'பச்' என்று சளி உறிஞ்சும் சகிப்பு....
பிள்ளை அழலையேன்னு
கையை பிசைந்துகொண்டே
பாதத்தை சுண்டி
பக்குவம் செஞ்சு
குழந்தையின் வீல் சத்தம்
கேட்கும் வரை போராடும் வேகம்
பால் கட்டிக்கிருச்சே - ன்னு
தாயின் மார்பிடித்து
பால் பீய்ச்சி
சகஜநிலைக்கு கொண்டுவரும்
சாதுர்யம்....
மூக்கை நல்லா
மேல் நோக்கி இழுத்துவிடு
சப்பை மூக்கா போச்சுனா
சப்பான்ல தான்
பொண்ணு கேக்கணும்
காரியத்தின் நடுவிலும்
கெழவியின் கேலி கிண்டலுக்கு
கொறைவிருக்காது.....
பச்சப்புள்ள உள்ள வீட்டில்
பிள்ளைக் கெழங்கு
வசம்பு
வெளக்கெண்ணெய்
பக்கத்துலயே இருக்கணும்
புரிஞ்சுதா?
அறிவுறைகளை
தன் தடித்த குரலால்
கட்டளைகளாக்கும் கம்பீரம்
புள்ளதாச்சிக்கு
பத்திய லேகியம் செய்யும்
பக்குவம் சொல்லி
தொப்புள் கொடி
விழுந்தவுடன் செய்ய வேண்டியதை
பட்டியலிட்டுவிட்டு
தட்டில் வச்சித் தரும்
தட்சணையுடன்
தன் வீடு புறப்படுவாள்
போகும் போது
புள்ளத்தாச்சியின்
புருசனைக் கூப்பிட்டு
கெணத்துத் தண்ணிய
ஆறு வந்தா
அடிச்சிட்டுப் போகப் போவுது
விரதம்னு நெனச்சிக்கிட்டு
வெளி வேலையைப் பாரு
மறக்காம
நினைவுபடுத்திவிட்டு
தன் மனை நோக்கி
பயணமாவாள்....
தீட்டுக்கழிப்பதற்கு
முப்பதாம் நாள்
தப்பாம வந்து போவாள்
ஆனா...
ஊருக்கே பிள்ளைப் பேறு
பாக்கும்
வள்ளிக்கெழவிக்கோ
வாரிசு இல்லை!
நான் இழுத்துப் போட்ட
அத்தனை பிள்ளையும்
எம் பிள்ளைதாம்பா....
அவளின் பதில்
ஆணித்தரமாய் இருந்தாலும்
உள்ளே ஒரு
ஏக்கம் இழையோடும்.
சமீபகாலமாவே
வள்ளிக் கெழவிக்கு
நடையொடை இல்லை.
பேறு காலம் பாக்குறதில்லை....
ஒரு வழியா வள்ளிக்கெழவி
போனவாரம்
போய்ச் சேர்ந்துட்டா
ஊரே அழுதுச்சு -
குறிப்பா....
கெழவி கையால
புள்ளப் பெத்துக்கிட்ட
பொம்பள புள்ளக
தாயை இழந்தது போல்
ஒப்பாரி வுட்டு அழுதது
ரொம்ப மனசப் பிசைந்தது
புள்ள அழுகலைன்னு
பாதத்தை சுண்டி
அழுக வப்பியே
நாங்க நீ சுண்டாமலே
கதறுகிறோமே! சுருண்டு கிடக்கியே!
அப்படீன்னு 'ரெட்டப் புள்ளக்காரி'
சித்திரா விட்ட ஒத்த வரி
ஊருசனத்தையே
உலுக்கிப்புடுச்சு
இவ்வளவு ஏன்?
குழிக்குள்ள கெழவியை போட்டு
மண்ணுத் தள்ளுன
வெட்டியான் சுப்பன் கூட
என் ஆத்தா
வவுத்தில இருந்து
என்னை மண்ணுக்கு இழுத்தாந்தியே
ஒன்னை நான்
மண்ணுக்குள்ள
அனுப்புகிறேனே
போய்வா! ஆத்தான்னு
கும்புட்டு....அழுதபோது
ஊருச்சனம் உறைஞ்சுபோச்சு
வள்ளிக்கெழவி
எங்கள் கிராமத்திற்கு
வந்து சென்ற
அன்னை தெரசா....
இப்பவும்
பிரசவ வலி
யாருக்கு வந்தாலும்
கெழவிய நெனச்சி
காணிக்கை முடியிறது
எங்க ஊருக்கு வழக்கமாயிடுச்சு!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Dec 31, 2013 1:08 pm

கோடி சுகம்!
அரக்கப் பறக்க
அலுவலகம் புறப்படும்போது
'கொஞ்சம் இருங்க'ன்னு
வாசலில் நிறுத்தி
நெற்றியில் இருந்து
சிந்திச் சிதறி
மூக்கு நுனியில்
முகாமிட்டு நிற்கும்
விபூதித் துளிகளை
விரல்களால் ஒத்தி
எடுத்து விட்டுட்டு
'உஃபு'ன்னு ஊதி
உன் 'மூச்சு' காற்றால்
என் முகம் துடைத்துவிட்டு
'இப்பப் போங்க'ன்னு
உத்தரவிடுவாய்
அரைமனதோடு
அரைகிலோமீட்டர் போய்
அதற்குமேல் முடியாமல்
சிந்திய விபூதியாய்
மனசு வழிய
அசதியாய் இருக்குன்னு
வசதிக்காய் பொய் சொல்லிட்டு
வெட்கத்தோடு திரும்பிவந்து
உன்மடியில் விழுவதே
கோடி சுகம்
சட்டையை போட்டபின்
அந்துபோன பட்டனைப் பார்த்து
நான் அலற
ஊசி நூலோடு
உள்ளிருந்து ஓடி வந்து
என் 'சட்டையை'
கழற்ற வேண்டாமுன்னு
பட்டனை தைத்துவிட்டு
என் நெஞ்சோடு
நெருங்கி வந்து
பல்லால் நூல் கடித்து
'ம்' சரியாப் போச்சி
இதுக்கு எதுக்கு
டென்சன்?னு
எனக்குள் ஒரு
புதிய படபடப்பை
புறப்பட வைப்பாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
இதுக்காகவே
நானாக அத்துப்போட்ட
பட்டன்களும்
ஏராளம்தான்.....
நடுத்தர வர்க்கத்தின்
மையப்புள்ளியான
நாத்தனார், மாமியார்
பிரச்சினையில்
நானும் நீயும்
சண்டை போட்டுக்கொள்ள
ஆத்திரம் தீர
உன்னை
அறைந்துவிட்டு
அலுவலகம் சென்று
மாலையில் நான்
வீடு திரும்பும்போது
தலைநிறைய மல்லிகையை
சூடிக்கொண்டு
வாசலில் நின்றவண்ணம்
தலைக்கு மேல்
சமாதானப்புறாவை
பறக்கவிடுவாயே....
கோபம் குறையாதவன்போல்
நான் பொய்
ஜம்பத்தோடு
அறையில் நுழைவேன்
மெத்தை, தலையணையை
ஒருவிதமாய் அடுக்கி
வைத்திருப்பாய்
மெல்லிய நறுமணம் வீசும்
ஊதுபத்தி எரிந்துகொண்டிருக்கும்
ஒருவழியாய்
காலைச் சண்டையை
கட்டில் சண்டையில்
கொண்டுவந்து
சுபம் செய்யும்
உன் பெண்மையின்
லாவகம் ஒரு
கோடி சுகம்!
நான் சாப்பிடும்போது
இருமினால்
நான் இருக்கும்போது
எவ நினைக்கிறா?ன்னு
பொறை விழாம
என் தலையில் தட்டி
உன் பொறாமை
காட்டுவாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
நான் சாப்பிட்டு முடிந்ததும்
கொஞ்சம் மிச்சம்
வக்கக் கூடாதா?ன்னு
தட்டுக்கிண்ணத்தில்
ஒட்டிக்கிடக்கும்
மிச்சத்தை விரல்களால்
வழித்து
நாவில் சுவைப்பாயே
அதுவும் ஒரு
கோடி சுகம்!
ஒருமுறை....
காய்ச்சலில் நீ
படுத்துக்கிடக்க
நளனும் எங்க
சாதிதானேன்னு
அடுப்பங்கரை புகுந்து
நான் வீராவேசம் காட்ட....
குக்கர் வெயிட்டு
பிடுங்கி அடிச்சு சோறு சிதறி
நான் சிதறி ஓடி வர
அலறிக் கொண்டு ஓடி வந்து
சேலை தலைப்பால்
என் தலை துவட்டிக்கொண்டே
எனக்கெல்லாம் சுமங்கலியாப்
போய்ச் சேரணும்னு
ஆசை இல்லீங்க.
எனக்குப் பின்னாடி கெடந்து
நீங்க கஷ்டப்படக் கூடாது.
ஒரு சோறு வடிக்கிறதுக்குக்கூட
லாயக்கில்லாத மனுஷன்
உங்களை விட்டுட்டு
நான் முன்னாடி போய்
எனக்கு பின்னாடி கெடந்து
நீங்க கஷ்டப்படக் கூடாது!
உங்களை சீரும் சிறப்புமா
வழி அனுப்பிட்டுதான்
நான் சாகணும்னு
கதறி அழுதாயே....
அந்த சோகம்கூட
ஒரு கோடி சுகம்தான்!
தலையணை மீது
என் லுங்கியை மடித்து
போட்டுக்கொண்டு
படுத்து உறங்குவாய்
'ஏன்' என்று கேட்டால்....
அப்பத்தாங்க உங்க கூடவே
படுத்திருக்கிறாப்புல
ஒரு பாதுகாப்பு உணர்வுன்னு
வெட்கிச் சிரிப்பாயே
அதுவும் ஒரு கோடி சுகம்!
ஏங்க எந்திரிங்க -
ஊரு உலகத்துல
அவனவன் காலையில
காலாகாலத்துல எந்திருச்சி
வீட்டு வேலையைப் பாக்குறாங்க
'எனக்குன்னு வாச்சிருக்கீங்களே
துப்பு கெட்ட மனுசனா'
ராட்சசக் குரலின் அலறலில்
கோடி சுகக் கனவுகள்
சிதறிய கண்ணாடித்
துகள்களாயின!
"போங்க.... போங்க.....
ஆஃபீஸ் போறதுக்குள்ள,
ஒரு அஞ்சு குடம் தண்ணிய
பிடிச்சுக் குடுத்துட்டுப் போங்க,
தண்ணி லாரிகிட்ட
ஆம்பளைக போனாதான்
இந்தத் தெரு பொம்பளைக
பல்லை இளிச்சுக்கிட்டு
தண்ணி விடுவாளுக"
வழக்கமான இரைச்சலோடு
வாழ்க்கை துவங்கிடுச்சு!
இருந்தாலும்....
இந்தக் கோடிச் சுக கனவு
ஒருநாளாவது அவளுக்கு
வரப்புடாதா?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ் Empty Re: கைநாட்டுக் கவிதைகள் - மருது அழகுராஜ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum