தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஒளவையார் அருளிய .... நல்வழி

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 3:40 pm

First topic message reminder :

கடவுள் வாழ்த்து 

பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.


(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும் கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.

இதன் கருத்து :- விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல்,
இசை, நாடகம் என்னும் பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று.

 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:00 pm

வரவறிந்து செலவிட வேண்டும் 

25.  ஆன முதலில் அதிகஞ் செலவானான்
    மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை
    எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புத் தீயனாய்
    நல்லார்க்கும் பொல்லனாம் நாடு


(பதவுரை) ஆன முதலில் செலவு அதிகம் ஆனால்-தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், மானம் அழிந்து-பெருமை கெட்டு, மதி கெட்டு-அறிவு இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவனாவான்; நாடு (இதனை) ஆராய்ந்து அறிவாயாக.

வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ - ம். (25)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:00 pm

பசி வந்திடப் பத்தும் பறக்கும் 

26.  மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
    தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசிவந் திடப்பறந்து போம்.


(பதவுரை) பசி வந்திட-பசிநோய் வந்தால், மானம்-மானமும், குலம் - குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - ஈகையும், அறிவுடைமை-அறிவுடைமையும், தானம் - தானமும், தவம் - தவமும், உயர்ச்சி-உயர்வும், தாளாண்மை-தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப் பத்தும் விட்டோடிப்போம்.

மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ - ம்.

தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது;பதவியும் ஆம் (26)

 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:01 pm

எல்லாம் இறை செயல் 

27.  ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
    அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
    நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
    எனையாளும் ஈசன் செயல்.


(பதவுரை) ஒன்றை நினைக்கின் - ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும கிடைக்கும்; அன்றி அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்த கிடைத்தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கைகளாகும்.

இருவினைகளுக் கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ - ம். (27)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:02 pm

மனவமைதி வேண்டும் 

28.  உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
    எண்பது கோடிநினைந்து எண்ணுவன-கண்புதைந்த
    மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
    சாந்துணையுஞ் சஞ்சலமே தான்.


(பதவுரை) உண்பது, நாழி - உண்பது ஒரு நாழியரிசி யன்னமேயாகும்; உடுப்பது நான்கு முழம் - உடுப்பது நான்கு முழ உடையேயாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி - நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற. மாந்தர் குடி வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது. மண்ணின் கலம்போல - மட்கலம்போல. சாம் துணையும் - இறக்குமளவும். சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது.

உள்ளதே போதம் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள் எ - ம். (28)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:03 pm

கொடையாளருக்கு எல்லாரும் உறவினர் 

29.  மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
    இரந்தழைப்பார் யாவருமங் கில்லை-சுரந்தமுதம்
    கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
    உற்றார் உலகத் தவர்.


(பதவுரை) மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால். வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை - அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார் - உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.

கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார் எ - ம் (29)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:05 pm

விதியின் தன்மை 

30.  தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார்
    பூந்தா மரையோன் பொறிவழியே-வேந்தே
    ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
    வெறுத்தாலும் போமோ விதி.


(பதவுரை) வேந்தே - அரசனே, தாம் தாம் முன் செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அனுபவிப்பார் - தாமே அனுபவிப்பார்கள் ; ஒறுத்தாரை என் செயலாம் - (தீவினையினாலே தூண்டப்பட்டுத்) தீங்கு செய்யதவரை நான் யாது செய்யலாம்; ஊர் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போகுமா (போகாது).

தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அத தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ - ம்.(30)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:06 pm

நல்லன நான்கு 

31.  இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாதலும்
    ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
    வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
    தாரத்தின் நன்று தனி.


(பதவுரை) இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது, உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது ; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று - பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும் எ - ம். இசை - உலக வழக்காகிய சொற்றொடர். (31)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:07 pm

செல்வநிலையாமையறிந்து உதவுக 

32.  ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
    மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடுந்
    தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
    உண்ணீர்மை வீறும் உயர்ந்து.


(பதவுரை) மா நிலத்தீர் - பெரிய பூமியுலுள்ளவர்களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மேடும் பள்ளமும்போல. செல்வம் ஏறிடும் மாறிடும்-செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்; (ஆதலினால்) சோறு இடும் - (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள்; தண்ணீரும் வாரும் - (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வாருங்கள்; தருமமே சார்பு ஆக - (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும்-உள்ளத்திலே தூயதன்மை ஓங்கி விளங்கும். ஆம்: அசை.

நிலையில்லாத செல்வம் உள்ளபொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித்தால் மனம் தூய்மையுற்று விளங்கும் எ - ம். (32)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:07 pm

வன்சொல்லும் இன்சொல்லும் 

33.  வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
    பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்.


(பதவுரை) வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது - (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய) பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாரைக்கு நெக்கு விடாப்பாறை - நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் - வன்சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டாவாகும்; (இன் சொற்களே வெல்லும்)

வன் சொல் தோற்கும்; இன்சொல் செல்லும் எ - ம். (33)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:08 pm

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை 

34.  கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
    எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
    இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
    செல்லாது அவன்வாயிற் சொல்.


(பதவுரை) கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - (ஒருவன்) படியாதவனேயாயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர் - (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்; இல்லானை இல்லாளும் வேண்டாள் - (படித்தவனே யாயினும் பொருளே) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள் ; அவன் வாயில் சொல் செல்லாது - அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. அங்கு, மற்று: அசை.

கல்லாதவனே யாயினும் பொருளுடையவனை. எல்லாரும் மதிப்பர்; கற்றவனே யாயினும் பொருளில்லாதவனை ஒருவரும் மதியார் எ - ம். (34)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:09 pm

உரைப்பினும் பேதை உணரான் 

35.  பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
    ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
    விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
    உரைத்தாலுந் தோன்றா துணர்வு.


(பதவுரை) பூவாதே காய்க்கும் மரமும் உள - பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல) மக்களுளும்ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் - மனிதர்களுள்ளும், ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு ; தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து என - தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது-மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து) உண்டாகாது.

குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர் ; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர்  எ - ம். (35)
 
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:10 pm

பிறர்மனை விரும்பாமை 

36.  நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
    கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
    போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
    மாதர்மேல் வைப்பார் மனம்.


(பதவுரை) ஒள் தொடீ - ஒள்ளிய வளையலை அணிந்தவளே, நண்டு சிப்பி வேய் கதலி-நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் ; நாசம் உறும் காலத்தில் - தாம் அழிவை அடையுங் காலத்திலே ; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் - (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை ஈனுந்தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம்-ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங் காலத்திலே, அயல் மாதர்மேல் மனம் வைப்பார் - பிறமகளிர் மேல் மனம் வைப்பார்கள்.

ஒருவன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு அறிகுறியாகும் எ - ம். (36)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:11 pm

வீடடைவார்க்கு விதியில்லை 

37.  வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
    கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
    விண்ணுறுவார்க் கில்லை விதி.


(பதவுரை) வினைப்பயனை வெல்வதற்கு - இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை - வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை, (எனினும்) நெஞ்சே - மனமே, கவலைப்படேல் - கவலையுறாதே, மெய் விண் உறுவார்க்கு - மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண்உறுவது அல்லால் - (அவர்) நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை-ஊழ் இல்லையாம்.

முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது எ - ம்.

விண் - பரவெளியும் ஆம் ; இப்பாட்டிற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவாரும் உளர். (37)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:12 pm

இறைவனுடன் இரண்டற்று நில் 

38  நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
    அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
    தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
    போனவா தேடும் பொருள்
.

(பதவுரை) நன்று என்றும் - (இது) நல்லது என்றும், தீது என்றும் - (இது) தீயது என்றும், நான் என்றும் - (இது செய்தவன்) நான் என்றும், தான் என்றும் - (இது செய்தவன்) அவன் என்றும், அன்று என்றும்-(இது) அன்று என்றும், ஆம் என்றும்-(இது) ஆகும் என்றும், ஆகாதே நின்ற நிலை - பேதஞ் செய்யாமல் (இரண்டறக்கலந்து) நின்ற நிலையே, தான் அது ஆம் தத்துவம் ஆம் - ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும் ; தேடும் பொருள் - தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா - சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுதற்கு அதுவே அமையுமென்று அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும்.

உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை எ - ம். சம்பு-ஓர் வகைப் புல். (38)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:13 pm

முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி 

39.  முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
    தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
    கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
    முலையளவே ஆகுமாம் மூப்பு.


(பதவுரை) முப்பது ஆம் ஆண்டு அளவில் - முப்பது வயதினளவிலே, மூன்று அற்று-முக்குற்றமும் ஒழியப்பெற்று, ஒரு பொருளை - கேவலப்பொருளாகிய கடவுளை, தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் - (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அனுபவ உணர்வால்) அடையானாயின், காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் - அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி) முலையினை யுடையராதல் மாத்திரமே போல, செப்பும் கலை அளவே ஆகும்-(அவன் முதுமையில் பதியுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.

மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப்பொருளையடைந்தின்புற முயலல் வேணடும் எ - ம். முக்குற்றம் காம வெகுளி மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆம். இப்பாட்டிற்கு யாம் கூறிய பொருளே பொருத்தமுடைத்தாலை ஓர்ந்துணர்க. (39)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by முழுமுதலோன் Sat Jan 04, 2014 4:14 pm

ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள் 

40.  தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகமென் றுணர்.


(பதவுரை) தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்தியநான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும்-(திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக.

திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருண் முடிவு வேறு படாத மெய்ந்நூல்கள் எ - ம். 'முனிமொழியும்' என்பதற்கு 'வியாச முனிவருடைய வேதாந்த சூத்திரம், என்றும் பொருள் கூறுவர். (40)



                ***நல்வழி மூலமும் உரையும்முற்றிற்று***
 
 நன்றி - [You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ஒளவையார் அருளிய ....  நல்வழி - Page 2 Empty Re: ஒளவையார் அருளிய .... நல்வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum