Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வசந்தமான வாழ்வை தரும்-தை அமாவாசை
Page 1 of 1 • Share
வசந்தமான வாழ்வை தரும்-தை அமாவாசை
ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், பட்சம், மாதம், வாரம், நாள், ராசி, நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும்போது ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன் - சந்திரன் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த மாதம் தை. இதற்கு உத்தராயன காலம் என்று பெயர். சனீஸ்வர பகவான் வீடாகிய மகர ராசியில் இருக்கும் சூரியனுடன் சந்திரன் சேரும்போது தை அமாவாசை பிறக்கிறது, இது இந்த உத்தராயன காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும்.
திதிகளிலே மிகவும் பிரசித்தி பெற்றது, மகத்துவம் நிறைந்தது அமாவாசை. இந்த நாளில் இறந்த முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இறந்தவர்களை நினைத்து வழிபடுவதால் அவர்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வழிபாடுகளால், மறைந்துவிட்ட முன்னோரை கண்ணால் காணும் பாக்யமும் கிடைக்கும்.
பொதுவாக அமாவாசையன்று புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். இஷ்ட தெய்வ ஆலயங்களில் வழிபாடு செய்து இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வார்கள். மறைந்த தாய், தந்தையர் படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கிய ஊர்களில் திதி கொடுத்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தகுளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி ஆகிய தலங்கள் முக்கியமானவை. வடநாட்டில் காசி, கயா, பத்ரிநாத், அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் கேரளாவில் ஐவர் மடம் பிரசித்தி பெற்றது.
அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது சிறப்பு. பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தான தருமங்களுக்கான பலன்களை பிதுர் தேவதைகளிடம் வழங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். பிதுர் வழிபாட்டில் காகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, பசு மாட்டுக்கும், காகத்துக்கும் முதலில் உணவளிப்பது மிகவும் சிறப்பானதும், புண்ணியம் சேர்ப்பதும் ஆகும்.
புதிய செயல்கள் தொடங்கலாமா?
அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கிற வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால் சாஸ்திரத்தில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்க கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது, ஆகையால் அமாவாசையன்று புதிய தொடக்கங்கள், அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அமாவாசையன்று கோயில்களில் வழிபாடு செய்வது உத்தமமாகும். குறிப்பாக குலதெய்வ வழிபாடு, கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், உக்கிர தெய்வங்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். அமாவாசையன்று சிவ ஸ்தலங்களில் அன்னதானம், வஸ்திரதானம் செய்வது விசேஷமானது.
‘அமாவாசை’ - ‘பவுர்ணமி’ திருமணம் செய்யலாமா?
அமாவாசை கும்மிருட்டு. பவுர்ணமி பூரண வெளிச்சம். அமாவாசையில் பிறந்தவர்கள், அமாவாசையில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம். அதேபோல பவுர்ணமியில் பிறந்தவர்கள், பவுர்ணமியில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம். ஒரே மாதத்தில் வரும் அமாவாசையில் பிறந்த ஆண், பெண் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக சித்திரை அமாவாசையில் பிறந்த ஆணும், சித்திரை அமாவாசையில் பிறந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது. இது பவுர்ணமிக்கும் பொருந்தும். அமாவாசையில் பிறந்தவர்கள் பவுர்ணமியில் பிறந்தவர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பதும் நல்லது. இந்த கருத்துகள் பழமையான ஜோதிட நூல்களின் சாராம்சமாகும்.
‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
ஜோதிட சாஸ்திரத்தில் அயனம், பருவம், பட்சம், மாதம், வாரம், நாள், ராசி, நட்சத்திரம், திதி என பல அம்சங்கள் உள்ளன. இவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வரும்போது ஒவ்வொரு விரதங்கள், பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. வான சாஸ்திரம், ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன் - சந்திரன் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் பிரவேசிக்கிறார். இந்த மாதம் தை. இதற்கு உத்தராயன காலம் என்று பெயர். சனீஸ்வர பகவான் வீடாகிய மகர ராசியில் இருக்கும் சூரியனுடன் சந்திரன் சேரும்போது தை அமாவாசை பிறக்கிறது, இது இந்த உத்தராயன காலத்தில் வரும் முதல் அமாவாசையாகும்.
திதிகளிலே மிகவும் பிரசித்தி பெற்றது, மகத்துவம் நிறைந்தது அமாவாசை. இந்த நாளில் இறந்த முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து வழிபடுவது இந்துக்களின் வழக்கம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற நூல்களில் அமாவாசையின் சிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இறந்தவர்களை நினைத்து வழிபடுவதால் அவர்கள் செய்த பாவ வினைகள் நீங்கி அவர்களுக்கு முக்தி கிட்டும் என்றும், அவர்களின் பரிபூரண ஆசிர்வாதம் சந்ததியினருக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற வழிபாடுகளால், மறைந்துவிட்ட முன்னோரை கண்ணால் காணும் பாக்யமும் கிடைக்கும்.
பொதுவாக அமாவாசையன்று புண்ணிய நதிகள், கடல் போன்ற நீர் நிலைகளில் நீராடி திதி கொடுப்பார்கள். இஷ்ட தெய்வ ஆலயங்களில் வழிபாடு செய்து இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வார்கள். மறைந்த தாய், தந்தையர் படங்களுக்கு வீட்டில் மாலை அணிவித்து அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தலை வாழை இலையில் படைத்து வணங்குவார்கள். சில முக்கிய ஊர்களில் திதி கொடுத்து வழிபடுவதை விசேஷமாக கருதுகிறார்கள். தமிழகத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திலதர்ப்பணபுரி, திருவெண்காடு, மகாமக தீர்த்தகுளம், காவேரி சங்கமம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், முக்கொம்பு, திருவையாறு, கன்னியாகுமரி ஆகிய தலங்கள் முக்கியமானவை. வடநாட்டில் காசி, கயா, பத்ரிநாத், அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் கேரளாவில் ஐவர் மடம் பிரசித்தி பெற்றது.
அமாவாசை வழிபாடுகளில் சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானது. அன்றைய தினம் சூரியனை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்து சூரிய காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குவது சிறப்பு. பிதுர்க்காரகனாகிய சூரியன் நாம் செய்யும் தான தருமங்களுக்கான பலன்களை பிதுர் தேவதைகளிடம் வழங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோதுமையில் செய்த உணவுகளை தானம் செய்வதால் கூடுதல் பலன் கிடைக்கும். பிதுர் வழிபாட்டில் காகம் மிக முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, பசு மாட்டுக்கும், காகத்துக்கும் முதலில் உணவளிப்பது மிகவும் சிறப்பானதும், புண்ணியம் சேர்ப்பதும் ஆகும்.
புதிய செயல்கள் தொடங்கலாமா?
அமாவாசை நிறைந்த நாள் என்று சொல்லி நல்ல காரியங்களை ஆரம்பிக்கிற வழக்கம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆனால் சாஸ்திரத்தில் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமாவாசை என்பது இருட்டு நாள், நீத்தார் நினைவு நாள் என்றே பல சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரயோதசி திதி முதல் பிரதமை திதி வரை எந்த புதிய விஷயங்களும் ஆரம்பிக்க கூடாது என பிரதோஷ வழிபாடு என்ற நூல் வலியுறுத்துகிறது, ஆகையால் அமாவாசையன்று புதிய தொடக்கங்கள், அக்ரிமென்ட் போடுவது, வண்டி வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அமாவாசையன்று கோயில்களில் வழிபாடு செய்வது உத்தமமாகும். குறிப்பாக குலதெய்வ வழிபாடு, கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், உக்கிர தெய்வங்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். அமாவாசையன்று சிவ ஸ்தலங்களில் அன்னதானம், வஸ்திரதானம் செய்வது விசேஷமானது.
‘அமாவாசை’ - ‘பவுர்ணமி’ திருமணம் செய்யலாமா?
அமாவாசை கும்மிருட்டு. பவுர்ணமி பூரண வெளிச்சம். அமாவாசையில் பிறந்தவர்கள், அமாவாசையில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம். அதேபோல பவுர்ணமியில் பிறந்தவர்கள், பவுர்ணமியில் பிறந்தவர்களை திருமணம் செய்யலாம். ஒரே மாதத்தில் வரும் அமாவாசையில் பிறந்த ஆண், பெண் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும். உதாரணமாக சித்திரை அமாவாசையில் பிறந்த ஆணும், சித்திரை அமாவாசையில் பிறந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது. இது பவுர்ணமிக்கும் பொருந்தும். அமாவாசையில் பிறந்தவர்கள் பவுர்ணமியில் பிறந்தவர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பதும் நல்லது. இந்த கருத்துகள் பழமையான ஜோதிட நூல்களின் சாராம்சமாகும்.
‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மாங்கல்ய பலத்தை தரும் ஆடி அமாவாசை?
» மகிமைகள் தரும் மகாளய அமாவாசை.
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» அதிகதூக்கம் அழிவை தரும் , குறைவான தூக்கம் வாழ்வில் பொலிவை தரும் !!!!
» மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!
» மகிமைகள் தரும் மகாளய அமாவாசை.
» வண்ணங்கள் ஆடைகளுக்கு எழில் தரும் நல்ல எண்ணங்கள் வார்த்தைகளுக்கு அழகு தரும்
» அதிகதூக்கம் அழிவை தரும் , குறைவான தூக்கம் வாழ்வில் பொலிவை தரும் !!!!
» மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|