தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லவகுசா சரித்திரம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

லவகுசா சரித்திரம்  - Page 2 Empty லவகுசா சரித்திரம்

Post by முழுமுதலோன் Wed Feb 12, 2014 2:58 pm

First topic message reminder :

லவகுசா பகுதி-1

மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்திருந்தது அயோத்தி.மக்களெல்லாம் வண்ண வண்ண உடைகளில் தெருக்களில் பவனி வந்து கொண்டிருந்த காட்சி, விண்மீன்கள் கண்சிமிட்டும் வானத்தை ஒத்திருந்தது.எங்கள் ராமபிரான் பதவியேற்று விட்டார். இனி என்றும் எங்களுக்கு இன்பமே, என்று மக்கள் ஆரவாரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். ராமபிரானை தரிசிக்க காத்திருந்த மக்களை ஒழுங்குபடுத்துவதற்கு காவலர்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஏனெனில், ராமராஜ்யம் தொடங்கி விட்டதல்லவா! ராமன் என்றாலே ஒழுக்கம் என்பது தானே பொருள். மக்கள் தாங்களே வரிசையை வகுத்துக்கொண்டு ஒழுங்குபட நின்றனர். வெளியே இப்படி என்றால், அரண்மனைக்குள் இன்னும் கோலாகலம். பட்டாபிஷேகம் காண வந்திருந்த பெண்கள் பயமின்றி நடமாடினர். சகோதரி! ராமராஜ்யம் துவங்கி விட்டது. இனி இரவு, பகல் என்ற வித்தியாசம் இங்கில்லை. நாம் எப்போது வேண்டுமானாலும், சிங்கங்கள் நிறைந்த காட்டிற்குள் கூட போகலாம். நம்மை ஏறிட்டு பார்க்கக்கூட ஆண்கள் தயங்குவார்கள். ஏனெனில், ராமராஜ்யத்தில் பண்பாடு என்பது ஊறிப்போனதாக ஆகிவிடும், என மகிழ்ச்சி பொங்க, ஒரு பெண், இன்னொருத்தியிடம் சொன்னாள். ஆம்...இயற்கை தானே! ராமபிரானின் தம்பி லட்சுமணன், தன் அண்ணனுக்கு திருமணமாகி இந்த நிமிடம் வரை, அண்ணியாரின் முகத்தை ஏறிட்டு பார்த்ததில்லை. இப்போதும், அவன் பட்டாபிராமன் முன்னால், கைகட்டி பவ்வியமாகத் தான் நின்று கொண்டிருந்தான். கோபக்காரன் தான்...மற்றவர்கள் முன்பு. அண்ணனையோ, அண்ணியாரின் திருப்பாதத்தையோ பார்த்துவிட்டால் பசுவைப் போல் ஒடுங்கி விடுவான். கோபமுள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்! அப்படிப்பட்ட தம்பியைப் போலவே தான் அயோத்தி வாழ் மக்களும், பெண்கள் விஷயத்தில் மிகுந்த அடக்கத்துடன் நடந்து கொண்டார்கள். மாமுனிவர், தமிழ்க்கடல் அகத்தியர் அங்கே வந்தார். ஸ்ரீராமனின் வெற்றிக்கு போர்க்களத்துக்கே வந்து அருளாசி செய்த மகான் அவர். ராமா! ராவணனை வெல்வோமா மாட்டோமா என சந்தேகம் கொள்ளாதே. இந்த உலகில் வெற்றி தரும் சூரிய மந்திரம் ஒன்று உள்ளது. அதை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல், வெற்றி உன்பக்கம் தான், என்றவர் ஆதித்ய ஹ்ருதயம் எனப்படும் அந்த மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். ராமன் சொன்னார், வென்றார்.

அந்த மரியாதைக்குரியவர் வந்ததும், அவையே அவையடக்கத்துடன் எழுந்து நின்று அவரை தலைபணிந்து தாழ் பணிந்து வரவேற்றது. ராமபிரானும், சீதாதேவியாரும் அந்த மாமுனிக்கு பாதஸ்நானம் செய்து, அந்த தீர்த்தத்தை தங்கள் தலையில் தெளித்து வரவேற்றனர். தங்க சிம்மாசனத்தில் அகத்தியர் அமர்ந்தார். ராமபிரான் அவரிடம், மாமுனியே! நான் பல அரக்கர்களை வனவாசத்தின் போது வென்றேன். அவர்களெல்லாம் யார்? அவர்களின் பிறப்பு என்ன? என்று கேட்டார். அகத்தியர் விலாவாரியாக அவற்றிற்கு விளக்கமளித்தார். ராமன் தன் அருகில் நின்ற அனுமானை அழைத்தார். முனிவரே! என் சீதாவை காட்டில் துறந்த வேளையில், எனக்காக வானரவீரர்கள் நாற்திசைகளிலும் சென்று தேடினர். தெற்கே சென்ற இந்த அனுமான் என்னைக் காப்பாற்றும் வகையிலான நற்செய்தி கொண்டு வந்தான். இறந்து போன வீரர்களை எழுப்ப மருந்துமாமலையைக் கொண்டு வா என்றால், வடக்கேயிருந்து அதை எடுத்து வர இவன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நாழிகை (24 நிமிடம்) தான். இது இவனால் எப்படி சாத்தியமாயிற்று? என்று கேட்டார். ராமா! மிகச்சரியானதொரு கேள்வி கேட்டாய். இந்த அனுமனின் சரித்திரம் அற்புதமானது. இவனது வரலாறு கேட்டாலே பாவங்கள் நசிந்து போகும். தன் சக்தியின் பெருமை இன்னதென அறியாதவன் இந்த ஆஞ்சநேயன். செருக்கற்றவன்; பிறர் நலம் விரும்புபவன்; கருணையும், சாந்தமும் இவனிடம் ஊறிப்போனவை. கருணை எங்கிருக்கிறதோ, அங்கே தான் வீரலட்சுமி குடியிருப்பாள். இவனது வீரம் அளவிட முடியாதது. சொல்கிறேன் கேள், என்றவர் அனுமானின் கதையை ஆரம்பித்தார். ராமா! காற்றுக்கு அதிபதியான வருணபகவான், அஞ்சனை என்ற இவனது அன்னை மீது ஆசை கொண்டான். அந்த அஞ்சனையின் வயிற்றில் இந்த அனுமன் பிறந்தான். இவன் பிறந்ததுமே, இவனுக்குரிய ஆற்றல் அதீதமாக இருந்தது கண்டு பெற்றவர்கள் ஆச்சரியமடைந்தனர், இந்த வீரனால் அரக்கர் குலம் அழியும் என தேவர்கள் ஆனந்தம் கொண்டனர்.

அவன் தன் இளம்பிராயத்தில், தன் தாயிடம், அம்மா! எனக்குரிய இனிய உணவு எது? என்று கேட்டான். மகனே! இந்த குளிர்ந்த சோலையில் எந்தக் கனியெல்லாம் சிவந்து போயிருக்கிறதோ, அதுவெல்லாம் உனக்குரியது தான் என்று சொல்லிவிட்டு இவனுக்காக பழம் பறிக்க வெளியே சென்று விட்டாள். அப்போது, வான்வெளியில் சூரியன் உதயமாக, அதை பழமெனக் கருதி இவன் மேலே பாய்ந்தான். வாயுவின் மகன் என்பதால், இவனுக்கு காற்றில் பறக்கும் சக்தி இயற்கையிலேயே வாய்த்தது. இப்படி சூரியனையே பழமாக நினைத்தவனுக்கு, இலங்கை ஒன்றும் பெரியகாரியமாக படவில்லை, என்றார் அகத்தியர். பின்னர் விபீஷணன், சுக்ரீவன், அனுமான், அங்கதன், சேது அணை கட்டிய நளன் உள்ளிட்ட பலருக்கும் பரிசுகளை வழங்கினார் ராமன். அனைவரும் ராமனைப் பிரிய மனமின்றி கண்ணீருடன் அவரவர் ஊர் திரும்பினர். அனுமான் ரொம்பவே கண்ணீர் வடித்து விட்டான். சுக்ரீவனின் நிலைமை கருதி, அவனுடேயே தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்ட ராமன், அனுமானை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். பின்னர் சீதாதேவியுடன் அந்தப்புரத்துக்குள் நுழைந்தார். அவருக்கு திருமணம் நடந்த போது வயது 12. சீதாவுக்கு 6 வயது. 18 வயதில், 12 வயது சீதாவுடன் காட்டுக்குப் போய் விட்டார். 32 வயதில் திரும்பியிருக்கிறார். சீதாவுக்கு இப்போது 26 வயது. இவர்கள் தங்கள் இளமையை காட்டில் கழித்து விட்டனர். அரண்மனை சுகத்தை அனுபவிக்க இப்போது தான் நேரம் வாய்த்திருக்கிறது. இன்ப வானில் அந்த தம்பதிகள் சிறகடித்துப் பறந்தனர். ஆனால், விதி என்னும் விரோதி அந்த இன்பத்தை நீண்டநாள் நீடிக்க விடவில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


லவகுசா சரித்திரம்  - Page 2 Empty Re: லவகுசா சரித்திரம்

Post by முழுமுதலோன் Wed Feb 12, 2014 3:18 pm

லவகுசா பகுதி-26



அண்ணா! கைகேயி தாயை எல்லோரும் தவறாகப் பேசுகிறார்கள். நம் தந்தையார், அவளது தந்தை கேகயனுக்கு ஒரு சத்தியவாக்கு கொடுத்திருந்தார். கைகேயிக்கும், அவளது குழந்தைகளுக்கும் முக்கியத்துவம தருவதென! ஆனால், தங்களுக்கு முடிசூட்டுவதை அறிந்த அவள், உங்கள் மீது கொண்ட வெறுப்பாலோ, மந்தரையின் தூண்டுதலாலோ தன்னிலையை மாற்றிக் கொள்ளவில்லை. கேகயராஜன், சத்தியவேந்தனான தன் மருமகன் சொன்னது போல் செய்யவில்லையே என நினைத்துக் கொள்வானே என பயந்தே, தன் பர்த்தா சத்தியம் தவறாதவர் என்பதை வெளியுலகுக்கு காட்டவே அப்படி செய்தாள். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த முயற்சியில் நம் தந்தை மறைந்தார். விதி அங்கே விளையாடி விட்டது. அதுபோல், இப்போது என் விதியும் முடிகிறது. தங்களைக் காண நான் வைகுண்டத்தில் காத்திருப்பேன், என்றான். எனினும், ராமபிரான் மிகவும் துன்பப்பட்டார். இந்நேரத்தில் அவருக்கு வசிஷ்டரின் நினைவு வந்தது. அவரிடம், லட்சுமணனை மரணத்தில் இருந்து தடுக்க முடியாதா? எனக் கேட்டார். வசிஷ்டர் ராமனிடம், ராமா! விதி வலியது. ஒரு யாகம் செய்தால் உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவன் இறக்க நேர்ந்தால், மற்ற மூவரும் அவனோடு சேர்ந்து மடிவார்கள் என நான் உன் தந்தையிடம் முன்பே சொன்னதை உனக்கு நினைவுபடுத்துகிறேன். எனவே, லட்சுமணனுக்கு மட்டுமே மரணம் சம்பவிக்கிறது என நினைக்காதே. ராமா! நீயின்றி அயோத்தி இல்லை. அயோத்தியே இப்போது மரணத்தின் பிடியில் இருக்கிறது, என்றார்.

வசிஷ்டர் கூறியது கேட்ட லட்சுமணன், அண்ணா! நம் குரு வசிஷ்டரே சொன்னபிறகும் என்ன யோசனை? எனக்கு விடை கொடுங்கள், எனக்கூறி சிரித்த முகத்துடன் ராமனை வணங்கினான். அண்ணன் மரணமடையச் சொன்னாலும், அதை இன்முகத்துடன் ஏற்ற தம்பி நம் லட்சுமணன். இவனைப் போன்ற உயர்ந்த மனிதர்களையெல்லாம் இந்த பாரதம் பெற்றிருந்ததால் தான், இந்த கலியுகத்திலும், இந்த தேசத்தில் மட்டும் கலாச்சாரமும், பண்பாடும் இன்றும் நிலைத்து நிற்கிறது. அங்கிருந்து விடைபெற்று அயோத்தியின் எல்லைக்குச் சென்றான். சரயுநதி சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அண்ணன் தன்னை மரணமடையச் சொல்லி கடைசிவரை உத்தரவிடவில்லை என்பதால், அந்த நதியில் மூழ்கி எழுந்து கரையோரத்தில் யோகத்தில் அமர்ந்தான். அப்போது, இந்திரன் தன் விமானத்தில் வந்தான். லட்சுமணனை ஏற்றிக்கொண்டு வைகுண்டம் ஏற்றிப் பறந்தான். இதையறிந்த ராமபிரான், மனம் கலங்கினார். என்னை விட்டு கணநேரமும் பிரியாதவனே! எப்படி உனக்கு என்னைப்பிரியும் மனம் வந்தது? என சொல்லி கண்ணீர் சிந்தினார். அவன் செய்த செயல்களைப் பற்றி அரற்றினார். அவனது பிரிவைத் தாளாமல் பரதனை அழைத்தார். பரதா! இந்த அரசாங்கம் எனக்கு வேண்டாம். லவகுசரிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கும் மனநிலையில் நான் இல்லை. நம் தந்தையின் விருப்பப்படி நீயே மன்னனாக இரு. லட்சுமணனைப் பிரிந்து என்னால் வாழ முடியாது. அவன் போன இடத்துக்கே நான் போகின்றேன், என்றார்.

அண்ணா! என்ன சொன்னீர்கள்? எனக்கதறிய பரதன், இறந்தவன் கீழே விழுவது போல தடாலென விழுந்தான். அண்ணா! என்ன சொன்னீர்கள். கேவலம் இந்த ஆட்சியையா நான் விரும்பினேன்? தாங்கள் காட்டில் வசித்த காலத்திலேயே தங்கள் பாதுகைகளே இந்நாட்டின் ராஜாவாயின. அப்போதும் நான் பதவியை விரும்பவில்லை. இப்போது நீங்கள் கேட்பது, கைகேயி தங்களை காட்டிற்கு அனுப்பக் கேட்ட வரத்தை விட கொடுமையானது. நான் அம்மிக்கல். நீங்கள் மாமலை. நான் மின்மினிப்பூச்சி, நீங்கள் சூரியன். உங்கள் ஆண்மையும் தயாளமும் லவகுசரைத் தவிர வேறு யாருக்குமில்லை. அவர்களுக்கே தாங்கள் முடிசூட்டுங்கள். நானும் உங்களோடு வைகுண்டம் வருவேன், என்றான் கோவென கதறியபடி.பரதனை அப்படியே வாரியணைத்த ராமபிரான், அவனை உச்சி மோந்தார். தம்பி! நம்மில் ஒருவரை ஒருவர் யாராலும் பிரிக்க முடியாது. இருப்பினும், நம் சின்னத்தம்பி சத்ருக்கனன் இங்கே வாழட்டும். அவன் சிறுவன். என்ன பாவம் செய்தான்? வாழ வேண்டிய பருவம் அவனுக்கு, என்ற ராமன், சத்ருக்கனனுக்கு தானும், பரதனும் வைகுண்டம் செல்லப்போகும் செய்தியை ஒரு தூதனிடம் சொல்லியனுப்பினார். லவகுசர்களை வரவழைத்தார். அவர்களுக்கு காப்புநாண் அணிவித்தார். குசாபதி என்னும் நகரைத் தலைமையாகக் கொண்ட பகுதிக்கு குசனையும், சிராபதி என்ற நகரைத் தலைமையாகக் கொண்ட உத்தரகோசல நாட்டிற்கு லவனையும் அரசனாக்குவதாக அறிவித்தார். இருவருக்கும் பட்டம் சூட்டப்பட்டது. இதற்குள் சத்ருக்கனனினஜ் மதுகை நகருக்குச் சென்ற தூதுவன், ராமபிரானின் அறிவிப்பைச் சொல்லவே, அந்தக்கணமே தன் தேரில் ஏறி அயோத்தி வந்து சேர்ந்தான் சத்ருக்கனன்.

அண்ணா! நானின்றி தாங்கள் மட்டும் வைகுண்டம் செல்வதா? அண்ணா லட்சுமணர் ஏற்கனவே வைகுண்ட பிராப்தி அடைந்து விட்டாரா? நானின்றி நீங்கள் நிச்சயமாக வைகுண்டம் அடைய முடியாது, என கதறினான். தம்பி! நீ வந்துவிட்டால் மதுகை மக்கள் என்னாவார்கள்? நாடாளும் நீ யோசிக்க வேண்டாமா? என்றதும், அண்ணா! நான் என் மனைவி சுருதகீர்த்தியின் பொறுப்பில் என் மக்களான சுபாகுவையும், சத்துருக்காதியையும் விட்டு வந்தேன். சுபாகுவை மதுகையின் மன்னனாகவும், சத்துருக்காதியை விதிகையை தலைநகராகக் கொண்ட பகுதிக்கும் அரசனாக்கி விட்டேன். மொத்தத்தில், நம் பிள்ளைகளின் பொறுப்பில் இந்த தேசம் வந்துவிட்டது. நாம் மகிழ்வுடன் புறப்படுவோம், என்றான். ராம சகோதரர்கள் வைகுண்டம் செல்லப்போவதை எப்படித்தான் அறிந்தார்களோ தெரியவில்லை! இலங்கையில் இருந்து விபீஷணன் வந்து விட்டான். வாயு புத்திரன் அனுமானின் உள்ளம் ஏதோ காரணத்தால் கலங்கவே அவனும் அடுத்த கணமே அயோத்திக்கு வந்து சேர்ந்தான். கரடிகளின் அரசன் சாம்புவன், ராமேஸ்வரம் கடலில் சேதுபந்தனம் கட்டிய நளன், துமிந்தன், நீலன், மயிந்தன், தேவர்களின் அம்சமான வானர வீரர்கள், சுக்ரீவன்...எல்லாரும் வந்து சேர்ந்து விட்டனர். இவர்களில் சுக்ரீவன், ராமா! தாங்கள் இன்றி ஒரு கணமும் உயிர் தரியேன். என் மகன் அங்கதனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வந்துவிட்டேன். புறப்படுவோமா வைகுண்டத்துக்கு, என்றான். அப்போது அயோத்தி மக்கள் கூட்டமாக வந்தனர்.

எங்கள் ஸ்ரீராமா! நாங்களும் தங்களோடு வைகுண்டம் வருவோம், என்று கோஷமிட்டனர். மரணத்தைச் சந்திக்க எப்படி ஒரு ஆர்வம் பாருங்கள். ஒரு நல்லவன் மரணமடைந்தால், அந்த நாடே மரணமடைகிறது. ராமனுக்காக உயிரையே கொடுத்தவர்கள் நம்மவர்கள். ராமபிரான் அந்த சோகமான நேரத்திலும் தன்னைச் சார்ந்தவர்கள் தன் மீது காட்டிய விசுவாசம் கண்டு பெருமிதமடைந்தார். அனுமானை அழைத்தார். நீ என்னோடு வர வேண்டாம். என்னிடம் ஏற்கனவே, வைகுண்டத்தை விட பூலோகத்தில் ராமநாமம் சொல்வதையே விரும்புவதாகச் சொல்லியிருக்கிறாய். சிரஞ்சிவீயே! நீ இங்கேயே தங்கியிரு. இது என் கட்டளை, என்றார். கண்ணீருடன் ஒப்புக்கொண்டார் அனுமான். பின்னர் மக்கள் புடைசூழ அனைவரும் சரயுநதியில் இறங்கினர். லவகுசர் கண்ணீர் வடித்தனர். பிரம்மா வானில் தோன்றி நாராயணனாய் உருமாறிய ராமனை வரவேற்றார். தன்னுடன் வந்தவர்களுக்கு தேவலோகத்தில் ஒரு நகரை நிர்மாணிக்க உத்தரவிட்டார் பகவான். சந்தானம் என்ற அந்த நகரில் அவர்கள் தங்கினர். ஸ்ரீமன் நாராயணன், புன்சிரிப்புடன் சீதையாய் வடிவெடுத்து தனக்காக காத்திருந்த லட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்து அனைவருக்கும் அருள் செய்தார்.

—முற்றும். 


நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum