Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆழிப் புதையல்
Page 1 of 1 • Share
ஆழிப் புதையல்
[You must be registered and logged in to see this image.]
நாக்கில் ஒரே ஒரு சொட்டு விட்டாலே உப்புக்கரிக்கும் கடல் தண்ணீர் இருக்கும் பகுதிக்குக் கொஞ்சம் தள்ளி, நிலப்பகுதியில் ஊற்று தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அந்தத் தண்ணீர் கரிப்பதில்லை, இனிக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? இதற்குக் காரணம் கடற்கரையில் உள்ள மணல்குன்றுகள் கடல் நீரை உள்ளே புகவிடாமல் தடுத்துவருவதுதான். இப்படிக் கடற்கரையோர, கடல் சூழல்தொகுதி (Coastal and marine ecosystem) பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
பூமியின் முதல் உயிர் கடற்கரையில்தான் தோன்றியது. பூமியின் 97 சதவீதத் தண்ணீர், கடலில்தான் இருக்கிறது. பூமிபந்தின் 71 சதவீதப் பகுதியைக் கடல்கள்தான் சூழ்ந்திருக்கின்றன. என்றாலும், எல்லா ஊர்களிலும் கடற்கரை கிடையாது.
நம் நாட்டில் கிட்டத்தட்ட 7,500 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆரம்பித்து அப்படியே நகர்ந்துகொண்டே சென்றோம் என்றால் ஒரிசா, ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிராவைக் கடந்து குஜராத் வரை இந்தக் கடற்கரை கிழக்கில் இருந்து மேற்கு வரை நீண்டுகொண்டே செல்லும்.
இந்தக் கடற்கரைகளில் இருந்து உள்ளே நிலப்பகுதியின் முதல் 50 கி.மீ. பரப்புக்குள் நாடு முழுவதும் 25 கோடிப் பேர் வாழ்கிறார்கள். அதாவது, நான்கில் ஒருவர் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள். இந்தப் பகுதிகள் ஆபத்தும் சுவாரசியமும் ஒருசேர நிரம்பியவை.
வங்காள விரிகுடாக் கடலில் மட்டும் கடந்த 100 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகியிருக்கின்றன. பல புயல்கள் ஆபத்தானவை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தைத் தாண்டி மக்கள் ஏன் அங்கு வாழ்கிறார்கள்? அங்குள்ள சுவாரசியமான விஷயங்களால்தான்.
கடலில்தான் பவளத் திட்டுகள் உள்ளன, கடல் புற்கள் வாழ்கின்றன, கரையில் அலையாத்திக் காடுகள் (Mangroves) வளர்கின்றன, பாறைகளைக் கொண்ட கடற்கரைகள், குருணைகுருணையாய் மணல் நிரம்பிய கடற்கரைகள், மணல் குன்றுகள் எனப்
பல்வேறு அம்சங்கள் இங்கே உள்ளன. இந்த விஷயங்கள், இந்தப் பகுதிகளை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகின்றன. அல்லது அலை, புயல் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஆபத்துகளைக் குறைக்கின்றன.
இந்த அம்சங்கள் அனைத்தும் அடங்கிய குறிப்பிட்ட ஒரு பகுதி அல்லது ஒரு சூழல் தொகுதி கடற்கரை மற்றும் கடல் சூழல் தொகுதி எனப்படுகிறது. இந்தச் சூழல் தொகுதியின் முக்கியத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுதான், மேலே சொன்ன கடற்கரை அருகேயுள்ள நல்ல தண்ணீர் ஊற்று.
உலகில் வாழும் 25 நவீன உயிரினக் குழுக்களில் (Phyla) நான்கு குழுக்கள் மட்டுமே நிலப்பகுதியில் வாழ்கின்றன. அதேநேரம் பெருங்கடல்களில் 25 வகை உயிரினக் குழுக்களைச் சேர்ந்தவையும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
கடலில் வாழும் உயிரினங்களில் இல்லாத ஒரு வகை என்று தேடினோம் என்றால், நிலத்தில் பல்கிப் பெருகி வாழும் பூச்சிகளை மட்டுமே கடலில் பார்க்க முடிவதில்லை. அவற்றுக்குப் பதிலாக ஓடு உடைய இறால், நண்டு போன்றவை கடலில் கணக்கற்ற வகைகளில் உள்ளன.
இப்படிக் கடலை அடித்துக்கொள்வதற்கு, உலகில் வேறெந்த விஷயமும் இல்லை. கடல் எவ்வளவு பிரம்மாண்டமானதோ, அவ்வளவு ரகசியங்களும் ஆச்சரியங்களும் அதில் நிரம்பித் ததும்புகின்றன.
நன்றி: தினமலர்
நாக்கில் ஒரே ஒரு சொட்டு விட்டாலே உப்புக்கரிக்கும் கடல் தண்ணீர் இருக்கும் பகுதிக்குக் கொஞ்சம் தள்ளி, நிலப்பகுதியில் ஊற்று தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. அந்தத் தண்ணீர் கரிப்பதில்லை, இனிக்கிறது. இது எப்படிச் சாத்தியம்? இதற்குக் காரணம் கடற்கரையில் உள்ள மணல்குன்றுகள் கடல் நீரை உள்ளே புகவிடாமல் தடுத்துவருவதுதான். இப்படிக் கடற்கரையோர, கடல் சூழல்தொகுதி (Coastal and marine ecosystem) பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
பூமியின் முதல் உயிர் கடற்கரையில்தான் தோன்றியது. பூமியின் 97 சதவீதத் தண்ணீர், கடலில்தான் இருக்கிறது. பூமிபந்தின் 71 சதவீதப் பகுதியைக் கடல்கள்தான் சூழ்ந்திருக்கின்றன. என்றாலும், எல்லா ஊர்களிலும் கடற்கரை கிடையாது.
நம் நாட்டில் கிட்டத்தட்ட 7,500 கிலோ மீட்டர் கடற்கரை உள்ளது. மேற்கு வங்கத்தில் ஆரம்பித்து அப்படியே நகர்ந்துகொண்டே சென்றோம் என்றால் ஒரிசா, ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிராவைக் கடந்து குஜராத் வரை இந்தக் கடற்கரை கிழக்கில் இருந்து மேற்கு வரை நீண்டுகொண்டே செல்லும்.
இந்தக் கடற்கரைகளில் இருந்து உள்ளே நிலப்பகுதியின் முதல் 50 கி.மீ. பரப்புக்குள் நாடு முழுவதும் 25 கோடிப் பேர் வாழ்கிறார்கள். அதாவது, நான்கில் ஒருவர் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள். இந்தப் பகுதிகள் ஆபத்தும் சுவாரசியமும் ஒருசேர நிரம்பியவை.
வங்காள விரிகுடாக் கடலில் மட்டும் கடந்த 100 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகியிருக்கின்றன. பல புயல்கள் ஆபத்தானவை. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். இவ்வளவு ஆபத்தைத் தாண்டி மக்கள் ஏன் அங்கு வாழ்கிறார்கள்? அங்குள்ள சுவாரசியமான விஷயங்களால்தான்.
கடலில்தான் பவளத் திட்டுகள் உள்ளன, கடல் புற்கள் வாழ்கின்றன, கரையில் அலையாத்திக் காடுகள் (Mangroves) வளர்கின்றன, பாறைகளைக் கொண்ட கடற்கரைகள், குருணைகுருணையாய் மணல் நிரம்பிய கடற்கரைகள், மணல் குன்றுகள் எனப்
பல்வேறு அம்சங்கள் இங்கே உள்ளன. இந்த விஷயங்கள், இந்தப் பகுதிகளை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுகின்றன. அல்லது அலை, புயல் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, ஆபத்துகளைக் குறைக்கின்றன.
இந்த அம்சங்கள் அனைத்தும் அடங்கிய குறிப்பிட்ட ஒரு பகுதி அல்லது ஒரு சூழல் தொகுதி கடற்கரை மற்றும் கடல் சூழல் தொகுதி எனப்படுகிறது. இந்தச் சூழல் தொகுதியின் முக்கியத்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டுதான், மேலே சொன்ன கடற்கரை அருகேயுள்ள நல்ல தண்ணீர் ஊற்று.
உலகில் வாழும் 25 நவீன உயிரினக் குழுக்களில் (Phyla) நான்கு குழுக்கள் மட்டுமே நிலப்பகுதியில் வாழ்கின்றன. அதேநேரம் பெருங்கடல்களில் 25 வகை உயிரினக் குழுக்களைச் சேர்ந்தவையும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.
கடலில் வாழும் உயிரினங்களில் இல்லாத ஒரு வகை என்று தேடினோம் என்றால், நிலத்தில் பல்கிப் பெருகி வாழும் பூச்சிகளை மட்டுமே கடலில் பார்க்க முடிவதில்லை. அவற்றுக்குப் பதிலாக ஓடு உடைய இறால், நண்டு போன்றவை கடலில் கணக்கற்ற வகைகளில் உள்ளன.
இப்படிக் கடலை அடித்துக்கொள்வதற்கு, உலகில் வேறெந்த விஷயமும் இல்லை. கடல் எவ்வளவு பிரம்மாண்டமானதோ, அவ்வளவு ரகசியங்களும் ஆச்சரியங்களும் அதில் நிரம்பித் ததும்புகின்றன.
நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» புதையல்
» உங்களுக்குள் இருக்கும் மர்மப் புதையல்
» வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு
» உங்களுக்குள் இருக்கும் மர்மப் புதையல்
» வனப்பகுதியில் தங்கப் புதையல்: 744 தங்க நாணயங்கள் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|