Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;2)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;2)
காசிநாதனின் அசாதாரணமான நடவடிக்கைகளைக் கண்ட அவரது தந்தை,காசிநாதனை ஏழாம்நாட்டு நம்பூதிரியிடம் அழைத்துச் சென்றார்.
"வாங்கே விஸ்வாநதர்...நன்னா இருக்கேலா....",
என்றபடி தன் வீட்டு பூஜை அறையில் இருந்த ஏழாம்நாட்டு நம்பூதிரி அவரை வரவேற்றார்.
"ஸ்வாமி,,,என் புள்ள காசிநாதனின் போக்கே சரியில்ல...கோவிலுக்குப் போயிட்டு வரச்சே,,,மையானத்துல இறந்துப்போன பக்கத்து ஆத்துப் பாட்டியைப் பார்த்ததா சொன்னான்.அந்த ஆத்துல ஒருசின்ன குழந்தை இறக்கபோறதா இறந்துப்போன அந்தப் பாட்டி சொன்னதாக சொன்னான்,...அதேபோல மறுநாள் அந்த ஆத்துல இருந்த சின்ன குழந்தை இறந்துப்போச்சு....",
என்ற விஸ்வநாதர்,
"அதான் நேக்கு மனசே சரியில்ல....காசிநாதன் சொன்னது எப்படி நடந்தது?அப்படின்னா அவன் கண்ணுக்கு அந்த இறந்துப்போன பாட்டி தெரிஞ்சது நிஜமா?பகவதியை தெய்வமா வழிபடுற நம்ம புள்ளைக்கும் இறந்துப்போனா அந்தப் பாட்டிக்கும் என்ன சம்மந்தம்?",
என அடுக்கு அடுக்காக கேள்விகளை முன்வைத்தார்.,
"இப்போ காசிநாதன் எங்கே?".
என்று ஏழாம்நாட்டு நம்பூதிரிக் கேட்டதும்,
"காசிநாதா....இங்க வா...",
என விஸ்வநாதர் குரல் கொடுத்தார்.
வாசலில் விளையாடிக்கொண்டிருந்த காசிநாதர் தந்தையின் அழைப்பைக் கேட்டதும் ஓடிவந்தான்.
பூஜை அறைக்குள் ஓடிவந்த காசிநாதன் சட்டென தன் தந்தையின் அருகே அமர்ந்தான்.
காசிநாதனையே உற்றுப்பார்த்த ஏழாம்நாட்டுநம்பூதிரி,
"உனக்கு இறந்துப்போன பக்கத்தாத்து பாட்டிக் கண்ணுக்கு தெரிஞ்சாளா?'",
என்றதும்,
"ஆமாம்.."
என்றவன்,
இப்பக்கூட உங்காத்துல,போனமாசம் இறந்துப்போன உங்க அத்திம்பேர் நேக்கு கண்ணுக்கு தெரியராரு...",
என்றான்.
அவனது பதிலைக்கேட்ட ஏழாம்நாட்டு நம்பூதிரி ஆடிப்போனார்.
"என் அத்திம்பேர் நோக்கு கண்ணுக்கு தெரியறாரா???",
என ஆச்சரியமாக கேட்டதும்,
"ஆமாம்...இன்னைக்கு சாயாங்காலாம் உங்க தங்கைக்கு ஆண் குழந்தை பிறக்கபோது.மாலை 5.34க்கு பரணி நட்சத்திரத்தில ,மாட்டுவண்டியில அந்தக் குழந்தை பிறக்கப்போகுது...",
என காசிநாதன் மீண்டும் புதிரைப் போட,
"இவையெல்லாம் நோக்கு யார் செல்றாடா அம்பி?",
என பவ்யாமாக அவனது தந்தை விஸ்வநாதர் கேட்டதும்,.
"இவாள் ஆத்துல இறந்துப்போன ,இவரோட அத்திம்போர் தான் ,நேக்கு சொன்னாரு அப்பா...",
என்றான் காசிநாதன்.
அதைகேட்ட விஸ்வநாதர்,ஏழம்நாட்டு நம்பூதிரி இருவரும் பிரம்மித்துப் போனார்கள்.
அன்று இரவு,விஸ்வநாதரின் வீட்டுக்கு பதட்டத்துடன் வந்த ஏழாம்நாட்டு நம்பூதிரி,
"விஸ்வநாதா....நேக்கு தந்தி வந்திருக்கு,
இன்னைக்கு சாயங்காலம் 5.34க்கு என் தங்கை மருத்துவமனைக்கு போற வழியிலேயே ,மாட்டுவண்டியிலேயே அவளுக்கு ஆண் குழந்தைப் பிறந்துவிட்டதாம்...உன் புள்ள காசிநாதன் சொன்னதைபோல பரணி நட்சத்திரத்துல...",
என்று முகம் வியர்க கூறினார்.
அதைகேட்ட விஸ்வநாதர் மேலும் அச்சத்திற்கு ஆளானார்.
"ஸ்வாமி...என் புள்ள காசிநாதன் யாரு?அவன் ஜெனன ஜாதகம் எப்படி இருக்கு?எனக்காக,இதையெல்லாம் ப்ரஸ்ஸன்ன வாக்குல பாருங்க....",
என கண்கள் கலங்கி கைதொழுதார் விஸ்வநாதர்.
மறுநாள்,அம்பல மண்டபத்தில் ப்ரஸன்ன பூஜைக்கான ஏற்படுகள் தயராகின.
(ப்ரஸன்னம் என்பது கேரள மாநிலத்தில் காணப்படும் ஒருவிதமான ஆரூடம். இக்கலையினை கற்றவர்கள்,ஒருவரது ஜாதகத்தை வைத்து அவரது இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்,அனைத்தையும் பகவதியின் அருளால்,தெய்வாக்காக அறிந்து சொல்வார்கள்.இது ஆதிகாலத்தில் "தேவதாஸித்தி",என்று அழைக்கப்பட்ட ஓர் அற்புதமான கலை.)
சிலமணி நேரங்களில் ,காசிநாதனின் ஜாதகம் ப்ரஸன்னம் மூலமாக கணிக்கப்பட்டது.
அதைக்கணித்த.மேல்சாந்தி காமக்கோடி நம்பூதிரிகள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்.
"விஸ்வநாதா...உன்புள்ள காசிநாதன் போன ஜென்மத்தில "நம் கேரள மாநிலம் தோரணமலையில் வாழ்ந்த ஓர் சித்தர்.அப்பிறப்பில் காசிநாதனின் பெயர் தேரையர் சித்தர் எனப்பட்டது.தற்போது அவர் காசிதானாய் உன் புள்ளையாப் பிறந்திருக்கார்.இதன் பின் வரும் அடுத்தப் பிறப்பில் அவன் இவனே சராசரி மனிதானகப் பிறப்பான்,ஆனால் இந்த அமானுஷ்ய ஷக்திகள்,விடாமல் அவனை தொடரும்,.எல்லாரையும் இப்படி குழப்பிக்கிட்டே இருப்பான் இவன்.ஆனால் அதில் அர்த்தம் இருக்கும்.அதனால் அதை யாரும் அலச்சியமாக எண்ணவும் முடியாது.",
என்றார் மேல்சாந்தி காமக்கோடி நம்பூதிரி.
"என்ன ஸ்வாமி சொல்றீங்க?இதெல்லாம் நிஜமா?",
என்ற விஸ்வநாதர்,
"இவன் பிறந்த நேரத்தில் இருந்து எனக்கு தொடர்ந்து கஷ்டங்கள் தான் வந்திருக்கு,.இவனால் எனக்கு நல்லதே நடந்ததில்லையே...கடன் தொல்லை அதிகமாகி என் பூர்வீக நிலம் வீடு வாசல் அனைத்தையும் இழந்தேன்,என் நிம்மதி போச்சு...ஆனால் நீங்க இவனை சித்தர் அது இதுன்னு சொல்றீங்களே...",
என்றதும்,
அந்த நிமிடம் யாரும் எதிர் பார்க்காவன்னம்,அனைவரு அதிரும்வன்னம்,
"நீ செஞ்ச கர்மவினைதான் என் ரூபத்தில உன்னைப் பழிதீர்க்குது...இதுக்கு நான் பொறுப்பல்ல...நான் உனக்கு பயன்படாவிட்டாலும்,ஊருக்குப் பயன்படுவேன்.....போகப்போக தெரியும் உனக்கு....",
என்று விஸ்வாநாதனின் மடியில் அமர்ந்திருந்தக் காசிநாதன் கூற
அவ்விடமே அதிர்ச்சியில் அமைதியானது
தொ.........ட.............ரு.......ம்
"வாங்கே விஸ்வாநதர்...நன்னா இருக்கேலா....",
என்றபடி தன் வீட்டு பூஜை அறையில் இருந்த ஏழாம்நாட்டு நம்பூதிரி அவரை வரவேற்றார்.
"ஸ்வாமி,,,என் புள்ள காசிநாதனின் போக்கே சரியில்ல...கோவிலுக்குப் போயிட்டு வரச்சே,,,மையானத்துல இறந்துப்போன பக்கத்து ஆத்துப் பாட்டியைப் பார்த்ததா சொன்னான்.அந்த ஆத்துல ஒருசின்ன குழந்தை இறக்கபோறதா இறந்துப்போன அந்தப் பாட்டி சொன்னதாக சொன்னான்,...அதேபோல மறுநாள் அந்த ஆத்துல இருந்த சின்ன குழந்தை இறந்துப்போச்சு....",
என்ற விஸ்வநாதர்,
"அதான் நேக்கு மனசே சரியில்ல....காசிநாதன் சொன்னது எப்படி நடந்தது?அப்படின்னா அவன் கண்ணுக்கு அந்த இறந்துப்போன பாட்டி தெரிஞ்சது நிஜமா?பகவதியை தெய்வமா வழிபடுற நம்ம புள்ளைக்கும் இறந்துப்போனா அந்தப் பாட்டிக்கும் என்ன சம்மந்தம்?",
என அடுக்கு அடுக்காக கேள்விகளை முன்வைத்தார்.,
"இப்போ காசிநாதன் எங்கே?".
என்று ஏழாம்நாட்டு நம்பூதிரிக் கேட்டதும்,
"காசிநாதா....இங்க வா...",
என விஸ்வநாதர் குரல் கொடுத்தார்.
வாசலில் விளையாடிக்கொண்டிருந்த காசிநாதர் தந்தையின் அழைப்பைக் கேட்டதும் ஓடிவந்தான்.
பூஜை அறைக்குள் ஓடிவந்த காசிநாதன் சட்டென தன் தந்தையின் அருகே அமர்ந்தான்.
காசிநாதனையே உற்றுப்பார்த்த ஏழாம்நாட்டுநம்பூதிரி,
"உனக்கு இறந்துப்போன பக்கத்தாத்து பாட்டிக் கண்ணுக்கு தெரிஞ்சாளா?'",
என்றதும்,
"ஆமாம்.."
என்றவன்,
இப்பக்கூட உங்காத்துல,போனமாசம் இறந்துப்போன உங்க அத்திம்பேர் நேக்கு கண்ணுக்கு தெரியராரு...",
என்றான்.
அவனது பதிலைக்கேட்ட ஏழாம்நாட்டு நம்பூதிரி ஆடிப்போனார்.
"என் அத்திம்பேர் நோக்கு கண்ணுக்கு தெரியறாரா???",
என ஆச்சரியமாக கேட்டதும்,
"ஆமாம்...இன்னைக்கு சாயாங்காலாம் உங்க தங்கைக்கு ஆண் குழந்தை பிறக்கபோது.மாலை 5.34க்கு பரணி நட்சத்திரத்தில ,மாட்டுவண்டியில அந்தக் குழந்தை பிறக்கப்போகுது...",
என காசிநாதன் மீண்டும் புதிரைப் போட,
"இவையெல்லாம் நோக்கு யார் செல்றாடா அம்பி?",
என பவ்யாமாக அவனது தந்தை விஸ்வநாதர் கேட்டதும்,.
"இவாள் ஆத்துல இறந்துப்போன ,இவரோட அத்திம்போர் தான் ,நேக்கு சொன்னாரு அப்பா...",
என்றான் காசிநாதன்.
அதைகேட்ட விஸ்வநாதர்,ஏழம்நாட்டு நம்பூதிரி இருவரும் பிரம்மித்துப் போனார்கள்.
அன்று இரவு,விஸ்வநாதரின் வீட்டுக்கு பதட்டத்துடன் வந்த ஏழாம்நாட்டு நம்பூதிரி,
"விஸ்வநாதா....நேக்கு தந்தி வந்திருக்கு,
இன்னைக்கு சாயங்காலம் 5.34க்கு என் தங்கை மருத்துவமனைக்கு போற வழியிலேயே ,மாட்டுவண்டியிலேயே அவளுக்கு ஆண் குழந்தைப் பிறந்துவிட்டதாம்...உன் புள்ள காசிநாதன் சொன்னதைபோல பரணி நட்சத்திரத்துல...",
என்று முகம் வியர்க கூறினார்.
அதைகேட்ட விஸ்வநாதர் மேலும் அச்சத்திற்கு ஆளானார்.
"ஸ்வாமி...என் புள்ள காசிநாதன் யாரு?அவன் ஜெனன ஜாதகம் எப்படி இருக்கு?எனக்காக,இதையெல்லாம் ப்ரஸ்ஸன்ன வாக்குல பாருங்க....",
என கண்கள் கலங்கி கைதொழுதார் விஸ்வநாதர்.
மறுநாள்,அம்பல மண்டபத்தில் ப்ரஸன்ன பூஜைக்கான ஏற்படுகள் தயராகின.
(ப்ரஸன்னம் என்பது கேரள மாநிலத்தில் காணப்படும் ஒருவிதமான ஆரூடம். இக்கலையினை கற்றவர்கள்,ஒருவரது ஜாதகத்தை வைத்து அவரது இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்,அனைத்தையும் பகவதியின் அருளால்,தெய்வாக்காக அறிந்து சொல்வார்கள்.இது ஆதிகாலத்தில் "தேவதாஸித்தி",என்று அழைக்கப்பட்ட ஓர் அற்புதமான கலை.)
சிலமணி நேரங்களில் ,காசிநாதனின் ஜாதகம் ப்ரஸன்னம் மூலமாக கணிக்கப்பட்டது.
அதைக்கணித்த.மேல்சாந்தி காமக்கோடி நம்பூதிரிகள் ஆச்சரியத்தில் மூழ்கிப்போனார்.
"விஸ்வநாதா...உன்புள்ள காசிநாதன் போன ஜென்மத்தில "நம் கேரள மாநிலம் தோரணமலையில் வாழ்ந்த ஓர் சித்தர்.அப்பிறப்பில் காசிநாதனின் பெயர் தேரையர் சித்தர் எனப்பட்டது.தற்போது அவர் காசிதானாய் உன் புள்ளையாப் பிறந்திருக்கார்.இதன் பின் வரும் அடுத்தப் பிறப்பில் அவன் இவனே சராசரி மனிதானகப் பிறப்பான்,ஆனால் இந்த அமானுஷ்ய ஷக்திகள்,விடாமல் அவனை தொடரும்,.எல்லாரையும் இப்படி குழப்பிக்கிட்டே இருப்பான் இவன்.ஆனால் அதில் அர்த்தம் இருக்கும்.அதனால் அதை யாரும் அலச்சியமாக எண்ணவும் முடியாது.",
என்றார் மேல்சாந்தி காமக்கோடி நம்பூதிரி.
"என்ன ஸ்வாமி சொல்றீங்க?இதெல்லாம் நிஜமா?",
என்ற விஸ்வநாதர்,
"இவன் பிறந்த நேரத்தில் இருந்து எனக்கு தொடர்ந்து கஷ்டங்கள் தான் வந்திருக்கு,.இவனால் எனக்கு நல்லதே நடந்ததில்லையே...கடன் தொல்லை அதிகமாகி என் பூர்வீக நிலம் வீடு வாசல் அனைத்தையும் இழந்தேன்,என் நிம்மதி போச்சு...ஆனால் நீங்க இவனை சித்தர் அது இதுன்னு சொல்றீங்களே...",
என்றதும்,
அந்த நிமிடம் யாரும் எதிர் பார்க்காவன்னம்,அனைவரு அதிரும்வன்னம்,
"நீ செஞ்ச கர்மவினைதான் என் ரூபத்தில உன்னைப் பழிதீர்க்குது...இதுக்கு நான் பொறுப்பல்ல...நான் உனக்கு பயன்படாவிட்டாலும்,ஊருக்குப் பயன்படுவேன்.....போகப்போக தெரியும் உனக்கு....",
என்று விஸ்வாநாதனின் மடியில் அமர்ந்திருந்தக் காசிநாதன் கூற
அவ்விடமே அதிர்ச்சியில் அமைதியானது
தொ.........ட.............ரு.......ம்
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;2)
பிரமமிப்பா இருக்கு.. அடுத்த அத்தியாயம் வரை காத்திருக்கிறேன்.
நன்றி அரசன்...
நன்றி அரசன்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;3)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;5)
» காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;1)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;5)
» காசிநாதன் என்கின்ற நான்; (பாகம்;6)
» காசிநாதன் என்கின்ற நான்....(பாகம்;4)
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|