தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள

View previous topic View next topic Go down

நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள Empty நிதி வசதி ஏற்படும்போது வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடனை முன்கூட்டியே செலுத்துவது நல்லது நிபுணர்கள

Post by நாஞ்சில் குமார் Sat Apr 19, 2014 9:01 pm

[You must be registered and logged in to see this image.]

நிதி வசதி ஏற்படும்போது மோட்டார் வாகனம், தனிநபர், கிரெடிட் கார்டு கடன்களை முன்கூட்டியே செலுத்துவது சிறந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அபராத கட்டணம்

மாறுபடும் வட்டி விகிதத்திலான வீட்டுக்கடனை முன்கூட்டியே திரும்ப செலுத்தினால் அதற்கு வாடிக்கையாளர்களிடம் அபராத கட்டணம் விதிப்பதை ரிசர்வ் வங்கி ஏற்கனவே ரத்து செய்துள்ளது. இதேபோன்று மோட்டார் வாகனம், கல்விக் கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களை முன்கூட்டியே செலுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என ரிசர்வ் வங்கி இம்மாதம் 1–ந் தேதி வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் வங்கிகளுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது. இதனை வங்கிகள் செயல்படுத்த தவறினால் இது கட்டாய சட்டமாக்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது, தனிநபர் கடனிற்கான வட்டி விகிதம் 13–20 சதவீதமாக உள்ளது. முன்கூட்டியே கடனை செலுத்தினால் 0.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை அபராத கட்டணம் விதிக்கப்படுகிறது. கார் கடனிற்கான வட்டி விகிதம் 5 முதல் 15 சதவீதமாகவும், முன்கூட்டியே செலுத்தினால் விதிக்கப்படும் அபராத கட்டணம் 3 முதல் 5 சதவீதமாகவும் உள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் ஆலோசனை ஏற்கப்பட்டு அபராத கட்டணம் ரத்து செய்யப்படும் நிலையில் மோட்டார் வாகனம், கல்வி, தனிநபர் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள். அவர்கள் குறைந்த வட்டிக்கு கடன் வழங்கும் வேறு வங்கிக்கு கடனை எளிதில் மாற்றி விடலாம்.

அதேசமயம், அபராத கட்டணம் ரத்து செய்யப்படும் வரை காத்திருக்காமல் வாகன, தனிநபர், கிரெடிட் கார்டு கடன்களை முன்கூட்டியே திரும்ப செலுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல், மே மாதங்களில் பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் போனஸ் வழங்க உள்ளன. இந்த தொகையை கடனை முன்கூட்டியே செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். அதேசமயம், ஆறு மாதங்களுக்கான அவசர தேவைக்கான நிதியை ஒதுக்கி வைத்துவிட்டு அதன் பிறகுதான் கடனை திரும்ப செலுத்த வேண்டும். மேலும், காப்பீட்டு வசதி போதுமான அளவிற்கு இல்லையென்றால் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளையும் வாங்கிய பிறகு கடனை திரும்ப செலுத்தலாம்.

கல்விக் கடன்

அதேசமயம் வீடு, கல்விக் கடன், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத சொத்துக்களை வாங்குவதற்காக பெறப்படுகிறது. இந்த கடன்களுக்கு வருமான வரியிலும் சலுகை கிடைக்கிறது. தனிநபர், கார், கிரெடிட் கார்டு கடனைக் காட்டிலும் இந்த கடன் சற்று ஆக்கப்பூர்வமானது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வீடு, கல்விக் கடனை முன்கூட்டியே செலுத்துவதற்கு முன்னர் வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடனை முன்கூட்டியே செலுத்தும்போது உரிய முறையில் வங்கிக்கு கடிதம் கொடுத்து கடன் பாக்கி முழுவதும் தீர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

நன்றி: தினத்தந்தி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum