Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
Page 1 of 1 • Share
50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
நம் நாட்டில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 50 சதவீதம்பேர் தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் அவமதிக்கப் படுகிறார்கள் என 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 15-ம் தேதி 'உலக முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்பு ணர்வு தினமாக' அனுசரிக்கப்படு கிறது. இதை அனுசரிக்கும் வகை யில் கர்நாடக முதியவர்கள் சங்கம் சார்பாக சனிக்கிழமை பெங்க ளூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதியோர் அவமதிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கர்நாடக மாநில 'ஹெல்ப் ஏஜ் இந்தியா' நிறுவனத்தின் இணை இயக்குநர் ரேகா மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசுகையில், "ஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் சார்பாக, கடந்த 7 ஆண்டுகளாக நாட்டி லுள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
இந்த ஆண்டு நாட்டிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 12 பெரிய மாநகரங்களில் வாழும் 60 வயதுக்கு மேற்பட்ட 1,200 ஆண் மற்றும் பெண் முதியவர்களிடம் ஆய்வு நடத்தினோம். அதில் 50 சதவீதமான முதியவர் கள் தங்களுடைய மருமகள், பிள்ளைகள் மற்றும் உறவினர் களால் அவமதிக்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள னர். இதில் ஆண்கள் 38 சதவீத மும், பெண்கள் 53 சதவீதமும் அவமதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்த முதியவர் களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
பெங்களூர் முதலிடம்
நாட்டிலே பெங்களூரில் தான் 75 சதவீத, அதாவது அதிக அளவில் அவமதிக்கப்படுகிறார்கள். முதியவர்களை அவமதிப்பதில் சென்னை 53 சதவீதமும், டெல்லி 22 சதவீதமும், கான்பூர் 13 சதவீதமும் (கடைசி இடம்) பெற்றிருக்கிறது.
இதில் 77 % அவமதிப்புகள் குடும்ப உறவுகளால் ஏற்படுகின்றன. மற்றவை சாலை, பேருந்து நிலையம், மருத்து வமனை, கோயில் உள்ளிட்ட பொது இடங்களில் அவமதிக்கப்ப டுகின்றனர். நாட்டில் 61% முதிய வர்கள் தங்களுடைய மருமகளா லும், 59 சதவீத பெற்றோர் தங்களு டைய மகனாலும் அவமதிக்கப் படுகின்றனர். பெங்களூரை பொறுத்தவரை 65 சதவீதம் மகனாலும், 45 சதவீதம் மருமக ளாலும் அவமதிக்கப் படுகின்றனர்.
ஆண்டுதோறும் முதியவர் களை அவமதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதற்கு என்ன காரணம் என முதியவர்களிடம் கேட்டபோது, ‘‘எங்களுக்கு வயதாகி விட்டது. வேலை செய்ய முடிவதில்லை. அதனால் பணம் சம்பாதிக்கவும் முடியாது. எனவே அவர்கள் எங்களை பாரமாக நினைத்து வதைக்கிறார்கள்'' என்றார்கள்.
சட்டப்படி நடவடிக்கை
முதியவர்கள் துன்புறுத்தப் படுவதை தடுக்கும் வகையில், கடந்த 2007-ம் ஆண்டு சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் வதைபடும் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் அவசர தொலைபேசி எண்களும் கொடுக் கப்பட்டுள்ளன. இது பற்றிய விழிப்பு ணர்வு பெரும்பாலானவர்களிடம் இல்லா ததால் முதியவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கிறது. மேலும் அரசு சார்பாக முதியவர் களை பாதுகாக்கும் வகையில் மாவட்டந்தோறும் உதவி மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்றார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: 50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
எதிர்காலத்தை முன்னரே யோசிப்பவர்கள் தானும் ஒருநாள் முதியவராக ஆவோம் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: 50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
கடந்த ஆண்டு 23 சதவீதமாக இருந்த முதியவர் களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இரண்டு மடங்கு உயர்ந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
நம்மை கஷ்ட்டப்பட்டு வளர்த்த நன்றியை மறப்பவர்கள் நன்றாக இருக்கமுடியுமா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
வருத்தமான வேதனையான செய்தி
Re: 50% முதியோர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்: தன்னார்வத் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தகவல்
பழுத்து உதிராமல் போவதில்லை
ஒரு இலையும்,..
ஒரு இலையும்,..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்-ஆய்வில் தகவல்
» LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்!
» விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்
» ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல்!
» LED விளக்குகள் கண்பார்வையை பறிக்கும் - ஆய்வில் தகவல்!
» விளையாடும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகம் : ஆய்வில் தகவல்
» சின்ன கவலையும் உயிரை குடிக்கும்: ஆய்வில் தகவல்
» ஞாபக சக்தியை அதிகரிக்கும் நடைப்பயிற்சி: ஆய்வில் தகவல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|