தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மண் பானையும் ஜில் தண்ணீரும்

View previous topic View next topic Go down

மண் பானையும் ஜில் தண்ணீரும் Empty மண் பானையும் ஜில் தண்ணீரும்

Post by நாஞ்சில் குமார் Wed Jun 25, 2014 9:37 pm



கோடை வெயில் இன்னும் குறைந்தபாடில்லை. கடைக்குச் சென்று வந்த அப்பா களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

“கவின்! குடிக்க தண்ணி கொண்டு வா” என்று குரல் கொடுத்தார்.

சில்வர் குடத்தில் இருந்த தண்ணியை எடுக்கச் சென்றான் கவின்.

“கவின்! அந்த தண்ணி வேண்டாம். மண்பானையிலிருந்து எடுத்துட்டு வா” என்றார் அப்பா.

கவின் கொண்டு வந்து கொடுத்த ஜில் தண்ணியை குடித்தப் பிறகு, களைப்பு குறைந்தது அப்பாவுக்கு.

“அப்பா! ஏன் குடத்து தண்ணி வேண்டாம்னு சொன்னீங்க?” என்று கேட்டாள் ரஞ்சனி.

“ இந்த வெயிலுக்கு மண்பானையில உள்ள ஜில் தண்ணிய குடிச்சாதான் பிடிக்குது. குடத்துத் தண்ணிய குடிச்சா, தண்ணி குடிச்ச மாதிரியே இல்ல” என்றார் அப்பா.

“அப்பா! குடத்து தண்ணியவிட மண்பானையில இருக்குற தண்ணி ஜில்லுன்னு இருப்பது எப்படி?” என்று கேட்டான் கவின்.

“இதோ, உங்க அம்மா வந்துட்டாங்க. இந்த கேள்வியை எல்லாம் அவங்ககிட்ட கேட்டுக்கோங்க” என்று கூறி நழுவினார் அப்பா.

“என்ன கவின், என்ன சந்தேகம்?” என்று கேட்டபடியே வந்தார் நிலா டீச்சர்.

“மண்பானை தண்ணி மட்டும் ஜில்லுனு இருக்குதே. அது எப்படி?” என்று கேட்டான் கவின்.

“மண்பானையிலிருந்து எனக்கு ஒரு டம்ளர் தண்ணி எடுத்துட்டு வா. உன் கேள்விக்கு பதில் சொல்றேன்” என்றார் நிலா டீச்சர்.

கவின் கொண்டு வந்து கொடுத்த ஜில் தண்ணீரை குடித்த பின், பதில் சொல்லத் தொடங்கினார் நிலா டீச்சர்.

“மண்பானைல ஏராளமான நுண்துளைகள் இருக்கு. அந்த நுண்துளைகள் வழியே கொஞ்சம் தண்ணி வெளியேறி ஆவியாகிக்கிட்டே இருக்கும். அப்படி ஆவியாகத் தேவையான வெப்பத்தை பானைக்குள் இருக்குற தண்ணிலேர்ந்து எடுத்துக்கும். இதனால மண்பானைல இருக்குற நீரின் வெப்ப அளவு குறைஞ்சிடுது. அதனால மண்பானைல ஊத்துன தண்ணி கொஞ்ச நேரத்துல ஜில்லுனு ஆயிடுது” என்றார் நிலா டீச்சர்.

“அப்படியா... ஆமா, தண்ணிய கொதிக்க வெச்சு அது 100 டிகிரி செல்சியஸை அடையுறப்பதானே ஆவியாகும். மண்பானையில் இருக்குற தண்ணி, அப்படி காய்ச்சாமலேயே எப்படி ஆவியாகும்?” என்றாள் ரஞ்சனி.

“குட். நல்ல கேள்வி கேட்ட ரஞ்சனி. உன் சந்தேகம் தீரணும்னா என்னோட கேள்விக்கு நீ முதல்ல பதில் சொல்லு. தண்ணில துவைச்ச துணியை காய வைக்கிறோம். ஈரமா உள்ள துணி எப்படி காயுது?" என்று கேட்டார் நிலா டீச்சர்.

கவினும் ரஞ்சனியும் முழித்தனர்.

“சரி.. சரி.. நானே சொல்றேன்” என்ற நிலா டீச்சர், காரணத்தை விளக்கினார்.

“தண்ணியோட கொதிநிலை 100 டிகிரி செல்சியஸை அடையறப்ப ஆவியாவது உண்மைதான். ஆனால், சாதாரண வெப்பநிலையிலும் நீர் ஆவியாகிட்டுதானே இருக்கு. கடல், ஆறு, ஏரி, குளங்களோட மேல்மட்டத்துல உள்ள தண்ணி சாதாரண வெப்பநிலையில், அதன் அளவுக்கு ஏற்ப தொடர்ந்து ஆவியாகிட்டே இருக்கும். அதனாலதான் நமக்கு மழை கிடைக்குது இல்லையா?

அதே தண்ணியை பாத்திரத்துல ஊத்தி கொதிக்க வைச்சா தண்ணியோட வெப்ப நிலை உயரும்போது, ரொம்ப வேகமா ஆவியாகும். சாதாரண வெப்பநிலைல அதே ஆவியாதல் மெதுவா நடந்துகிட்டே இருக்கும்.

இப்படி சாதாரண வெப்ப நிலைல எப்போதும் ஆவியாதல் நடக்கிறதாலதான் துவைச்சுப் போடுற ஈரத் துணிகளும் காய்கின்றன. கை, கால்களை கழுவிய பின்னாடி துடைக்காவிட்டாலும்கூட கொஞ்ச நேரத்துல கை, கால்கள் உலர்ந்து போவதற்கும் இதுதான் காரணம்.

அதேபோலத்தான் மண்பானைல உள்ள நுண்துளைகளின் வழியா சின்ன அளவுல தண்ணி வெளியேறி, ஆவியாகிட்டே இருக்கும். அப்படி ஆவியாகத் தேவைப்படற வெப்பத்தை பானையில் உள்ள தண்ணிலேர்ந்து எடுத்துக்கிறதால, மண்பானை தண்ணி ஜில்லுன்னு இருக்கு” என்று சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.

“ஆஹா! நம்ம கண்ணுக்கு தெரியாம நடக்கும் ஆவியாதல்ல இத்தனை அற்புதங்களா?” என்று தன் வியப்பை வெளிப்படுத்தினாள் ரஞ்சனி.

மண்பானை தண்ணி ஜில்லுனு இருப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்ட திருப்தியோடு, அதிலிருந்து தண்ணியை எடுத்து மடக் மடக்கென்று குடித்தான் கவின்.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மண் பானையும் ஜில் தண்ணீரும் Empty Re: மண் பானையும் ஜில் தண்ணீரும்

Post by செந்தில் Sat Jun 28, 2014 12:59 pm

அறியத்தந்தமைக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மண் பானையும் ஜில் தண்ணீரும் Empty Re: மண் பானையும் ஜில் தண்ணீரும்

Post by mohaideen Sat Jun 28, 2014 2:45 pm

நாங்களும் அறிந்துகொண்டோம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மண் பானையும் ஜில் தண்ணீரும் Empty Re: மண் பானையும் ஜில் தண்ணீரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum