Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று முகங்கள்
Page 1 of 1 • Share
வரலாற்று முகங்கள்
[You must be registered and logged in to see this image.]
‘ராயல் ஓட்டல்’ புதுவை வேலு முதலியார்
[You must be registered and logged in to see this image.]
பாலகிருஷ்ண பிள்ளை
[You must be registered and logged in to see this image.]
சிவானந்தபுரம் செல்வராய முதலியார்
[You must be registered and logged in to see this image.]
இறுக்கம் இரத்தின முதலியார்
வரலாற்றில் சிலவற்றை வெளிப்படுத்துதல் என்பதுகூட அகழ்வாய்வைப் போன்றதாகவே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. திருவருட்பாவை அச்சு வாகனம் ஏற்றுவதற்கு வேராக இருந்தவர்கள் குறித்த தகவல்களும் அப்படித்தான் உள்ளது. அவர்கள் யார்? அவர்களது திருமுகம் எப்படி இருக்கும்? எந்த ஒரு ஆவணமும் நம்மிடமில்லை.
வள்ளலார் தொடக்கக் காலத்தில் பாடிய பாடல்களைத் தேடித் தொகுத்ததில் குறிப்பிடத்தகுந்தவர்கள் இறுக்கம் இரத்தின முதலியாரும் சிவாநந்தபுரம் செல்வராய முதலியாரும். வள்ளலாருக்குத் தமது பாடல்கள அச்சேற வேண்டும் என்பதில் நாட்டமில்லை. எனினும், சென்னையில் பலர் வணிகநோக்கோடு அவரது பாடல்களைப் பிழைபட அச்சிட்டுச் சிறுசிறு பிரசுரமாக வெளியிட்டு வந்ததால் அப்பாடல்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளையும் தாள் சுவடிகளையும் கண்டறிந்து தருமலிங்கம் பிள்ளை முதலான அணுக்கத் தொண் டர்களிடம் கொடுத்துப் பிரதி எடுத்து அச்சிட முனைந்தவர் இறுக்கம் இரத்தின முதலியாரேயாவர். அதுபோது வள்ளலார் வடலூர் பகுதிகளில் உறையத் தொடங்கினார்.
சென்னையிலிருந்த பாடல்களை எல்லாம் திரட்டிய பிறகு, வள்ளலார் வடலூர் பகுதிகளிலிருந்து பாடிய பாடல்களையும் சேர்த்து அச்சிட விழைந்த இறுக்கம் இரத்தினம் அவற்றை எல்லாம் பங்கியில்(பார்சல்) அனுப்பிவைக்குமாறு 1860-ல் வள்ளலாருக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் வள்ளலார் அதைக் கிஞ்சித்தும் சட்டை செய்யாததனால், பாடலை அனுப்பாவிடில் தாம் ஒருவேளை போஜனம் மட்டுமே உண்டு உண்ணா நோன்பு இருக்கப் போவதாக வள்ளலாரை மிரட்டி, இறுக்கம் இரத்தின முதலியார் அனுமதி பெற்றார். “இராமலிங்கசாமி” என்று தலைப்பேட்டில் போடக் கூடாது என்ற உத்தரவாதத்துடன், இறைவன் தம்முள்ளிருந்து பாடுவித்தவற்றை மாத்திரம் அச்சிட இசைவளித்தார் வள்ளலார்.
வள்ளலாரின் அனுமதி கிடைத்த பின்னர், இறுக்கம் இரத்தின முதலியாரும் சிவாநந்தபுரம் செல்வராய முதலியாரும் புதுவையில் ராயல் என்னும் உணவு விடுதி நடத்திவந்த வேறு முதலியாருடன் இணைந்து திருவருட்பாவின் முதல் நான்கு திருமறைகள் அடங்கிய புத்தகத்தை 1867-ல் பிப்ரவரி மாதம் வெளியிட்டனர். (பாடல்களை வகை தொகைப்படுத்தி ஆறு திருமுறைகளாக வகுத்தவர் வள்ளலாரின் தலைமாணாக்கர் உபயகலாருதிப் பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார்; பொருளுதவி செய்தவர் மயிலை சிக்கிட்டி சோமசுந்தரம் செட்டியார்.)
திருவருட்பா உருவாவதற் குக் காரணமான இறுக்கம் இரத்தி்ன முதலியார், சிவாநந்தபுரம் செல்வராய முதலியார், ‘ராயல் ஓட்டல்’ புதுவை வேலு முதலியார் ஆகியோரின் திருவுருவங்களை அருட்பா ஆய்வாளர்கள் எவரும் இதுவரை கண்டதில்லை. இவர்களின் புகைப்படங்களை பழவேற்காட்டிற்கு அருகே யுள்ள இறுக்கம், கும்மிடிப் பூண்டி, திருமழிசை, சென்னை முதலிய பல இடங்களில் தேடியலைந்து நமக்கு வழங்கியிருக்கிறார் மாவட்ட துணையாட்சியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சித்தர்கள் ஆய்வாளர் பா.கமலக்கண்ணன்.
இதேபோல திருவருட் பாவை எழுத்தெண்ணிப் படித்து செம்பதிப்பாக வெளியிட்ட ஆ.பாலகிருஷ்ண பிள்ளையின் உருவத்தைப் புற உலகிற்குக் காட்டியவரும் இவரே. கள்ளக்குறிச்சி வட்டம் செல்லம்பட்டியில் வசிக்கும் பாலகிருஷ்ண பிள்ளையின் தம்பிப் பேரன் கே.சுப்பிரமண பிள்ளையின் உதவியால் அவரது கருமாதிப் பத்திரிக்கையிலிருந்து இப்படம் கண்டறியப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையின் ஆணையராகப் பணியாற்றி செல்வாக்கோடு வாழ்ந்து வந்த பாலகிருஷ்ண பிள்ளை யின் புகைப்படத்தைக் கண்டறி வதற்கே இத்தகு சிரமம் என்றால், திருவருட்பாவோடு தொடர்புள்ள மற்றவர்களைக் கண்டறிய நீண்ட நெடும் பயணம் வள்ளலார் ஆய்வாளர்களுக்குக் காத்திருக்கிறது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பொய் முகங்கள்
» மனிதனின் மூன்று முகங்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» மனிதனின் மூன்று முகங்கள்
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|