தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கலப்பட டீ தூள் விற்ற நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம்

View previous topic View next topic Go down

கலப்பட டீ தூள் விற்ற நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் Empty கலப்பட டீ தூள் விற்ற நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம்

Post by rammalar Tue Jul 15, 2014 1:43 pm



சென்னை,ஜூலை 09,2014
-
கலப்பட டீ தூள் விற்பனை செய்ததற்காக, தமிழ்நாடு மாநில நுகர்வோர் நல நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று தனியார் டீ தூள் நிறுவனத்தின் உரிமையாளருக்கு மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் அபராதம் விதித்தது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர்வு தீர்ப்பாயத்தில், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் ஆர்.தேசிகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:–
கலப்பட டீ தூள்

சென்னை பெரியமேட்டில் ஆசியா டீ கம்பெனியின் அலுவலகம் உள்ளது. இந்த கம்பெனியின் உரிமையாளராக ஏ.முகமது காசிம் என்பவர் உள்ளார். இவரது குடோன்களில் 2006–ம் ஆண்டு மார்ச் 31–ந் தேதி நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு பெயர்களில் 22 விதமாக பொட்டலங்களுடன் டன் கணக்கில் டீ தூள் இருந்தது.

அவற்றை சோதனை செய்தபோது, கலப்படம் செய்யப்பட்ட டீ தூள் ஏராளமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, அலுவலகம் மற்றும் குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
ரூ.11 கோடி

இதையடுத்து, நுகர்வோர் பாதுகாப்பு தென் சென்னை துணை கமிஷனர் முன்பு கடந்த 2006–ம் ஆண்டு ஏப்ரல் 3–ந் தேதி ஆசியா டீ கம்பெனி உரிமையாளர் முகமது காசிம் ஆஜராகி, டீ தூளில் கலப்படம் செய்ததை ஒப்புக்கொண்டு, எழுத்துபூர்வமாகவும் எழுதிக்கொடுத்தார்.

மேலும், இவர் மீது 1999–ம் ஆண்டு கலப்பட டீ தூள் விற்பனை செய்ததாக குடிமைப்பொருள் சி.ஐ.டி. போலீசார் கிரிமினல் வழக்கும் பதிவு செய்தனர். ஆனால், இதன்பின்னரும் இவர் கலப்பட டீ தூள் விற்பனையை செய்து வந்துள்ளார். இவர் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம், இவர் 2004–05 ஆண்டுகளில் மட்டும் ரூ.11 கோடியே 26 லட்சத்து 29 ஆயிரத்து 864 டீ தூள் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
கைவிட வேண்டும்

இதையடுத்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினோம். ஆனால், நாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை முகமது காசிம் மறுத்தார். ஆனால், அவருக்கு சாதகமான ஆதார ஆவணங்களும் அவர் சமர்ப்பிக்கவில்லை.

எனவே, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி, கலப்பட டீ தூள் விற்பனையை கைவிடவும், முகவர்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பிய கலப்பட டீ தூளை திரும்பப்பெறவும், கலப்பட டீ தூள்களை விற்பனை செய்ததற்காக ரூ.98 லட்சத்தை தமிழ்நாடு மாநில நுகர்வோர் நல நிதிக்கு வழங்கவும் முகமது காசிமுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அரசு கோரிக்கை ஏற்பு

இந்த வழக்கு 2006–ம் ஆண்டு அப்போதைய மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் கே.சம்பத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் முகமது காசிம் பதில் எதுவும் அளிக்கவில்லை.

இதையடுத்து அரசு மனுவை அப்படியே ஏற்றுக்கொண்டு நீதிபதி கே.சம்பத் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முகமது காசிம் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் வழக்கை தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறி வழக்கை திருப்பி அனுப்பிட தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
ரூ.25 லட்சம்

இதையடுத்து இந்த வழக்கை மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆர்.ரகுபதி, நீதித்துறை உறுப்பினர் ஜெ.ஜெயராம் ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதம், ஆதாரம் ஆவணம் ஆகியவைகளை பரிசீலித்ததில், எதிர்மனுதாரர் முகமது காசிம் கலப்பட டீ தூள் விற்பனை செய்து நியாயமற்ற தொழில் செய்துள்ளார் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, முகமது காசிம் ரூ.25 லட்சத்தை தமிழ்நாடு மாநில நுகர்வோர் நல நிதிக்கு வழங்கவேண்டும். இந்த வழக்கை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், இந்திய நுகர்வோர் சங்கம் ஆகியவைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரத்தை வழக்கு செலவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
=================
--தினத்தந்தி

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum